என் மலர்
நீங்கள் தேடியது "Anushka Shetty"
கதைக்களம்
ஒரிசா மலைப்பகுதிகளில் காட்டி என்று அழைக்கப்படும் மலைவாசிகள் உயர் ரக கஞ்சா பயிரிட்டு, அதை சமவெளி பகுதிக்கு அனுப்புவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள். அடிமை வாழ்க்கை வாழும் காட்டி சமூகத்தில் பிறந்த அனுஷ்காவும், விக்ரம்பிரபுவும் மற்றவர்களை போல கஞ்சா சுமக்கும் வேலையை செய்கிறார்கள்.
ஒரு போலீஸ் ரெய்டில் தந்தையை இழக்கும் விக்ரம்பிரபு லேப் டெக்னிஷியனாக மாறுகிறார். ஒரிசா பஸ் கன்டக்டராக அனுஷ்கா மாறுகிறார். இருவரும் திருமணம் செய்ய இருக்கும் நேரத்தில் விக்ரம் பிரபுவை கொடூரமாக கொலை செய்து, அனுஷ்காவை மானபங்கபடுத்துகிறார்கள் வில்லன்களான அண்ணன், தம்பி ரவிந்திரவிஜய், சைதன்யாராவ்.
இதனால் கோபமடையும் அனுஷ்கா வில்லன்களை பழிவாங்க நினைக்கிறார். மேலும் கஞ்சா சுமக்கும் தொழிலை விட்டு, காட்டிகள் நல்ல பாதைக்கும் திரும்ப வேண்டும் என ஆசைப்படுகிறார். இறுதியில் அனுஷ்கா நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அனுஷ்கா, ஆரம்பத்தில் துறுதுறு பெண்ணாக நடித்து பின்னர் எதிரிகளை துவம்சம் செய்யும் பெண்ணாக மாறி அசத்தி இருக்கிறார். காதலன் கொல்லப்பட்ட பிறகு காரணமானவர்களை தேடி சென்று ஆக்ரோசமாக கொல்லும் காட்சிகள் சிலிர்க்க வைக்கிறது.
அனுஷ்கா காதலனாக, காட்டி மக்களுக்கு நல்லது செய்பவராக நன்றாக நடித்து இருக்கிறார் விக்ரம்பிரபு. இடைவேளை காட்சியில் அவரின் உருக்கமான நடிப்பு படத்துக்கு பலம். சைதன்யாராவ், ரவீந்திரவிஜய் வில்லன்களாக மிரட்டியிருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் ஜெகபதிபாபு மனதில் நிற்கிறார்.
இயக்கம்
ஒரிசா பின்னணியில் காட்டிகள் என்ற மலைவாழ் மக்களை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கிரிஷ். மலைவாழ் மக்களை அடிமையாக்கி பலர் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதை சொல்லி இருக்கிறார். மக்கள் சந்திக்கும் துயரங்களை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். முழுக்க முழுக்க அனுஷ்காவை முன்னிலைப்படுத்தி கதையை நகர்த்தி இருப்பதால் பல சீன்கள் போரடிக்கின்றன.
ஒளிப்பதிவு
மலைகாட்சிகள், கஞ்சா கடத்தும் காட்சிகள் என தத்ரூமாக காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ்.
இசை
நாகவல்லி வித்யாசாகர் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை சிறப்பு.
தயாரிப்பு
First Frame என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
ரேட்டிங்- 2.5/5
நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற "Miss ஷெட்டி MR பொலிஷெட்டி" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
அதைத் தொடர்ந்து அனுஷ்கா காட்டி (Ghaati) என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார். இத்திரைப்படம் நாளை தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாக இருக்கிறது. படத்தின் முன்பதிவுகள் தொடங்கி வேகமாக நடைப்பெற்று வருகிறது. படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற "Miss ஷெட்டி MR பொலிஷெட்டி" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
அதைத் தொடர்ந்து அனுஷ்கா காதி (Ghaati) என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.
- 13 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா மலையாள சினிமா படத்தில் நடிக்கிறார்
- இந்த படம் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது
மலையாள 'திகில்' படம் கத்தனார். இந்த படத்தில் கதாநாயகனாக ஜெயசூர்யா- பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்கின்றனர்.காட்டு மந்திரவாதி வேடத்தில் ஜெய சூர்யாவும், பேய் வேடத்தில் அனுஷ்காவும் நடிக்கின்றனர்.
இந்த படத்தை ரோஜின் தாமஸ் இயக்குகிறார். அமானுஷ்ய சக்திகள் தொடர்பான ஒரு கற்பனைத் திரைப்படம் ஆகும்.அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக நம்பப்படும் கேரளப் பாதிரியார் கடமட்டத்து கத்தனார் பற்றிய கதைகளை அடிப்படையாக கொண்டது.இந்த படத்திற்கு ராகுல் இசையமைக்கிறார். நவீன தொழில்நுட்ப உதவியை பயன்படுத்தி இப்படம் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகரும் -திரைப்பட தயாரிப்பாளர்-நடன இயக்குனருமான பிரபுதேவா கத்தனார் - தி வைல்ட் சோர்சரர் நடிகர்களுடன் இணைந்து உள்ளார்.பிரபு தேவாவை முன்னணி நடிகர் ஜெயசூர்யா, தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் மற்றும் நிர்வாகத் தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வரவேற்கும் புகைப்படங்களை இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார்.
சந்தோஷ் சிவன் இயக்கிய உறுமி படத்திற்குப் பிறகு13 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா மலையாள சினிமா படத்தில் நடிக்கிறார். இந்த படம் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.
- நல்ல வரவேற்பை பெற்ற Miss ஷெட்டி MR பொலிஷெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
- அனுஷ்கா அடுத்ததாக காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை அனுஷ்கா. கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற Miss ஷெட்டி MR பொலிஷெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
அதைத் தொடர்ந்து அனுஷ்கா அடுத்ததாக காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.அனுஷ்கா அடுத்ததாக காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார். அனுஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று காதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது.
மலைப்பிரதேசத்தில் கதைக்களம் அமைந்துள்ளது. ஒரு பேருந்தில் அனுஷ்கா கத்தியால் ஒருவரை கழுத்தை அறுத்து கொன்று. வெட்டிய தலையை ரத்தம் சொட்ட சொட்ட கையில் ஏந்தியடி. மறுக்கையில் சிகரெட்டை புகைப்பிடித்தபடியான காட்சிகள் அமைந்துள்ளது. கிளிம்ப்ஸ் வீடியோ மிகவும் மாஸாக உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வேதம் படத்தை தொடர்ந்து இயக்குனர் கிருஷ் இயக்கத்தில் இரண்டாம் முறை அனுஷ்கா நடித்துள்ளார். இப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது. திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






