search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anushka shetty"

    • அமானுஷ்ய சக்திகள் தொடர்பான ஒரு கற்பனைத் திரைப்படமாக இது உருவாக உள்ளது
    • இந்த படம் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டு ள்ளது.

    மலையாள 'திகில்' படம் கத்தனார். இந்த படத்தில் கதாநாயகனாக ஜெயசூர்யா- பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்கின்றனர்.

    காட்டு மந்திரவாதி வேடத்தில் ஜெய சூர்யாவும், பேய் வேடத்தில் அனுஷ்காவும் நடிக்கின்றனர். இந்த கதாபாத்திரங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.

    மேலும் பேய் கதாப்பாத்திரத்தில் 'கள்ளியங்கட்டு நீலி' ஆக அனுஷ்கா நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து உள்ளன. சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில், அனுஷ்கா இருக்கும் 'கத்தனார் - தி வைல்ட் சோர்சரர்' படத்தின் வசீகரிக்கும் மோஷன் போஸ்டரை ஜெயசூர்யா பகிர்ந்துள்ளார். அதில் இந்த படத்தில் நடிக்கும் அனுஷ்காவை வரவேற்கிறேன் எனக் கூறி உள்ளார்.




     


    இந்த படத்தை ரோஜின் தாமஸ் இயக்குகிறார்.அமானுஷ்ய சக்திகள் தொடர்பான ஒரு கற்பனைத் திரைப்படமாக இது உருவாக உள்ளது.மேலும் இந்த படத்திற்கு ராகுல் இசையமைக்கிறார். நவீன தொழில்நுட்ப உதவியை பயன்படுத்தி இப்படம் தயாரிக்கப்படுகிறது.

    இந்த படம் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டு ள்ளது.

    • தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை அனுஷ்கா.
    • இவர் இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை அதிகரித்தார்.

    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் அனுஷ்கா. அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி, பாகுபலி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா.

    இவர் இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றி அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.


    இஞ்சி இடுப்பழகி

    இந்நிலையில், அனுஷ்கா மீண்டும் உடல் எடையை அதிகரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இவர் தமிழில் ஒரு படமும் தெலுங்கில் ஒரு படமும் நடிக்க தயாராக இருந்த நேரத்தில் தெலுங்கு இயக்குனர் ஒருவர் சொன்ன கதை பிடித்து போய் அந்த கதாபாத்திரத்திற்காக உடல் எடையை அதிகரிக்க சம்மதித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த அப்டேட் அனுஷ்கா ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நடிகை அனுஷ்கா நடிக்க உள்ள புதிய படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தயாராக உள்ளது.
    தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் அனுஷ்கா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நிசப்தம் படம் தோல்வியடைந்தது. இதனால் இரண்டு வருடங்களுக்கு மேலாக அவர் படங்களில் நடிக்கவில்லை. இதனிடையே நடிகை அனுஷ்கா, திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும் கிசுகிசுக்கள் பரவி வந்தன.

    இந்த நிலையில், அனுஷ்கா நடிக்க உள்ள 48-வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தயாராக உள்ள இந்த படத்தை பி.மகேஷ்பாபு எழுதி இயக்குகிறார். யூவி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. 

    அனுஷ்கா, இயக்குனர் பி.மகேஷ்பாபு
    அனுஷ்கா, இயக்குனர் பி.மகேஷ்பாபு

    இதில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்தில் தயாராக உள்ளதாகவும் இதில் அனுஷ்கா மாடர்ன் பெண்ணாக வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
    இயக்குநர் மணிரத்னமின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா ஷெட்டியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படக்குழு நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

    விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ளனர். கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நாயகிகளாக நடிக்க, சத்யராஜ், மோகன் பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.



    ஆதி, அமலாபாலிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விளையாட்டு படமொன்றில் நடிக்கும் ஆதி அதற்காக தனது உடல் எடையை குறைத்து வருவதால் அவர் படத்தில் ஒப்பந்தமாகவில்லை என்று கூறப்படுகிறது.

    மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீசுடன் பிரபல தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்திற்கான முதற்கட்ட பணிகளில் மணிரத்னம் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் நிலையில், படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்க இருக்கிறது. 

    அனுஷ்கா நடிப்பில் ‘பாகமதி’ படம் கடைசியாக வெளியான நிலையில், தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனுஷ்கா புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார்.
    நடிகை அனுஷ்கா மாதவன் ஜோடியாக ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நாயகர்கள் பலருடன் இணைந்து நடித்து தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகியானார்.

    ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார். கடைசியாக அவரது நடிப்பில் ‘பாகமதி’ படம் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியானது. அதன்பின்னர் அனுஷ்கா படங்களில் நடிக்கவில்லை.

    இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்த போது ஏற்றிய தனது உடல் எடையை வெளிநாடு சென்று குறைத்துவிட்டு வந்திருக்கிறார். சமீபத்தில் தான் ஒல்லியாக இருக்கும் தோற்றத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீண்டும் நடிக்க வருகிறார்.



    ஹேமந்த் மதுகர் இயக்கும் சைலன்ஸ் படத்தில் மாதவனுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். நம்பி நாராயணன் வாழ்க்கைப் படத்தில் பிசியாகி இருந்த மாதவன், தனது புதிய தோற்றத்தை சமீபத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சைலன்ஸ் படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது.

    இதுதவிர அனுஷ்கா சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அனுஷ்காவுடன் நட்புடன் பழகி வருவதாக பிரபாஸ் கூறியுள்ள நிலையில், இருவரும் மீண்டும் நெருக்கமாகியுள்ளதாகவும், ஜோடியாக ஜப்பான் புறப்பட்டு செல்வதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. #Prabhas #AnushkaShetty
    அனுஷ்காவுக்கும், தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் மலர்ந்ததாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளனர் என்றும் தொடர்ந்து தகவல்கள் பரவின. பிரபாஸ் தற்போது மெகா பட்ஜெட்டில் தயாராகும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் திருமணம் நடக்கும் என்று கூறப்பட்டது.

    சமீபத்தில் இருவரும் ஜோடியாக தெலுங்கு டைரக்டர் ராஜமவுலி இல்ல திருமணத்தில் கலந்துகொண்டது காதலை உறுதிப்படுத்துவதாக இருந்தது என்று பட உலகில் கிசுகிசுத்தனர். அனுஷ்கா சமீபத்தில் வெளிநாடு சென்று உடல் எடையை குறைத்துவிட்டு வந்தார். மெலிந்த அவரது புதிய தோற்றத்தை சமூக வலைத்தளங்களில் பார்த்து ரசிகர்கள் வியந்தனர்.



    காதல் கிசுகிசுக்களை இருவரும் உறுதிப்படுத்தாமலேயே உள்ளனர். பிரபாஸ் கூறும்போது, “ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் ஒரு நடிகரும், நடிகையும் இணைந்து நடித்தால் அவர்கள் காதலிப்பதாக பேசுவார்கள். நாங்கள் நட்பாகத்தான் பழகுகிறோம்” என்றார். இதன்மூலம் காதலில் விரிசல் ஏற்பட்டதாகவும் பேச்சு கிளம்பியது.

    இந்த நிலையில் பிரபாசும், அனுஷ்காவும் ஜோடியாக ஜப்பான் புறப்பட்டு செல்கிறார்கள். இருவரும் சேர்ந்து நடித்துள்ள படங்களை விளம்பரப்படுத்த அங்கு செல்கின்றனர். இதனால் இருவரும் காதலில் மீண்டும் நெருக்கமாகி இருப்பதாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கள் பரவி உள்ளன. #Prabhas #AnushkaShetty

    ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் சைலண்ட் த்ரில்லராக உருவாகும் புதிய படத்தில் மாதவனுடன் அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி, ஷாலினி பாண்டே இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். #Madhavan #AnushkaShetty
    இரண்டு படத்தில் மாதவன் ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அனுஷ்கா. சுமார் 12 வருடங்களுக்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைகிறது.

    தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் சைலண்ட் திரில்லராக உருவாகும் இந்த படத்தை ஹேமந்த் மதுகர் இயக்குகிறார். கோபி மோகன், கோனா வெங்கட் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் சுப்பாராஜு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் பணியாற்றவிருக்கும் இந்த படத்திற்கு, கோபி சுந்தர் இசையமைக்கிறார்.



    ஷானியேல் டியோ ஒளிப்பதிவு செய்ய, யனா ருசனோவா கலை பணிகளை கவனிக்கிறார். காஸ்மோஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ், கிரண் ஸ்டுடியோஸ் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. #Madhavan #AnushkaShetty #Anjali #ShaliniPandey

    பாகுபலி படத்தில் இணைந்து நடித்த பிறகு நடிகர் பிரபாஸ் - அனுஷ்கா காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவிய நிலையில், வேறு ஒருவருடன் அனுஷ்கா டேட்டிங் செய்வதாக கிசுகிசு பரவி வருகிறது. #AnushkaShetty
    அனுஷ்கா உடல் எடையை குறைத்த படத்தை வெளியிட்டதுதான் தென்னிந்திய சினிமாவின் பரபரப்பாக இருந்து வருகிறது. பிரபாசை அனுஷ்கா காதலிப்பதாக நீண்ட காலமாக செய்தி வருகிறது. சமீபத்தில் நடந்த ராஜமவுலி வீட்டு திருமணத்தில் இருவரும் இணைந்து பங்கேற்றது இந்த கிசுகிசுவை வலுவாக மாற்றியது. ஆனால் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இன்னொரு கிசுகிசு கிளம்பியுள்ளது.

    அனுஷ்கா வெளிநாட்டு பாய் பிரெண்ட் ஒருவருடன் கடற்கரையில் அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டிருப்பதுபோல் இருந்தது பல்வேறு கிசுகிசுக்களை உருவாக்கி உள்ளது. இவர்தான் அனுஷ்காவின் புது காதலரா என்றும் பாய் பிரெண்ட்டுடன் அனுஷ்கா டேட்டிங் செய்கிறார் என்றும் வெவ்வேறு செய்திகள் தெலுங்கு மீடியாக்களில் வெளிவருகிறது.



    இதுபற்றி விசாரித்ததில்,’அனுஷ்கா உடல் எடை குறைப்பதற்காக உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். அந்த பயிற்சிகளை அளித்த உணவு ஆலோசக மருத்துவர்தான் அனுஷ்காவுடன் பேசிக்கொண்டிருக்கும் நபர் என்றும், அவரது பெயர் லுக் கவுன்டின்ஹோ என்றும் தெரியவந்தது. இந்த விவரம் வெளியான பிறகு அனுஷ்கா, பிரபாஸ் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். #AnushkaShetty

    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். #Anushka #AnushkaShetty
    ‘பாகுபலி 2’ படத்துக்கு பிறகு அனுஷ்கா எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. பிரபாசுடன் `சாஹோ’ படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, கேரக்டருக்காக உடல் இளைக்க, பல சிகிச்சைகளையும் துபாயில் மேற்கொண்டார் எனத் தகவல்கள் வெளியாயின. ஆனாலும் அதிகமான ஆக்‌‌ஷன் காட்சிகள் இருப்பதால் அந்த படத்திலிருந்து அவரே விலகினார் என கூறப்பட்டது.

    இதற்கு உடல் இளைப்பதற்கான சிகிச்சைகள் பலனளிக்காததும் ஒரு காரணம் என தெரிவித்தனர். அனுஷ்காவை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாய் இருந்தபோதும் தனக்கு வந்த படங்களை தவிர்த்து வந்தார் அனுஷ்கா. உடல் எடை காரணமாக பொது நிகழ்வுகளிலும் பங்கேற்பதை தவித்து வந்தார்.



    நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மாதவனுடன் இணைந்து ‘சைலன்ட்’ என்ற திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அனுஷ்காவின் புகைப்படங்கள் நேற்று மாலை முதல் சமூக வலைதளத்தில் கலக்கி வருகிறது. நடிகரும் புகைப்படக்கலைஞருமான சுந்தர் ராமு இப்படங்களை எடுத்துள்ளார். இந்த படங்களில் அனுஷ்கா உடல் எடையை குறைத்து பழைய தோற்றத்தில் காணப்படுகிறார்.
    சரிப்பட்டு வராததால் திரிஷாவுடனான காதலை முறித்துக் கொண்டதாக ராணா கூறிய நிலையில், ராணாவையும், திரிஷாவையும் சேர்த்து வைப்பேன் என்று பிரபாஸ் கூறினார். #Prabhas #RanaDaggubati #Trisha #Rajamouli
    பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் இணைந்த பிரபாசும், ராணாவும் அந்த படத்துக்கு பின்னர் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான இருவரும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் காலத்தை கடத்தி வருகிறார்கள்.

    பிரபாஸ் அனுஷ்காவுடனும், ராணா திரிஷாவுடனும் சிலகாலம் கிசுகிசுக்கப்பட்டவர்கள். இருவரில் யார் முதலில் திருமணம் செய்துகொள்வார் என்பது தெலுங்கு சினிமாவின் பெரிய கேள்வியாக இருந்து வந்தது.

    ராணாவும், திரிஷாவும் ஒரு படத்தில் இணைந்து நடித்த போது நெருக்கமானார்கள். பட விழாக்களுக்கு சேர்ந்தே வந்தார்கள். இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின. திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து திரிஷா கருத்து சொல்லாமல் இருந்தார். ராணாவிடம் கேட்டபோது நட்பாகத்தான் பழகுகிறோம் என்று மறுத்து வந்தார்.

    எனினும் இருவரையும் இணைத்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்த வண்ணமாகவே இருந்தது. இந்த நிலையில் நடிகர்கள் பிரபாஸ், ராணா, இயக்குனர்கள் ராஜமவுலி ஆகியோர் கரண் ஜோஹருடன் டி.வி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டனர். இதில் திரிஷாவுடனான காதல் பற்றி ராணாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.



    அதற்கு பதில் அளித்த ராணா, எனக்கு திரிஷா 10 வருடங்களுக்கு மேலாக தோழியாக இருந்தார். அவர் எனது நீண்ட நாள் தோழி. கொஞ்ச காலம் அவரை காதலிக்கவும் செய்தேன். பின்னர் சரிப்பட்டு வராது என்பதை உணர்ந்து காதலை முறித்துக் கொண்டேன்.’’ என்றார். 

    பிரபாஸ் பேசும்போது, ‘‘ராணாவையும் திரிஷாவையும் நான் சேர்த்து வைப்பேன் என்றார். அனுஷ்காவுடன் கிசுகிசுக்கப்படுவது பற்றி கேட்ட போது, எனக்கும் அனுஷ்காவுக்கும் காதல் என்று வெளியாகும் தகவலில் உண்மை இல்லை’’ என்றார்.

    இருவரில் யார் முதலில் திருமணம் செய்துகொள்வார் என்ற கேள்விக்கு, பிரபாசுக்கு முன்பே ராணா தான் திருமணம் செய்துகொள்வார் என்று ராஜமவுலி கூறி இருக்கிறார். #Prabhas #RanaDaggubati #Trisha #Rajamouli

    இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டிய அனுஷ்கா அதனை குறைக்க கடுமையாக பாடுபட்ட நிலையில், ஆயுர்வேத சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்துவிட்ட அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகின்றன. #AnushkaShetty
    இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றிய அனுஷ்கா அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

    தற்போது பிரபாசுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், கோனா வெங்கட் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இடையில் நடிக்காமல் இருந்ததற்கு காரணம் எடையை குறைக்க ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டது தானாம். எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி இருப்பதால் அனுஷ்காவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் செல்கின்றன. 



    எடை ஏறியதால் இனி அனுஷ்கா சினிமாவில் நடிக்க முடியாது. விரைவில் திருமணம் செய்துகொண்டு ஒதுங்கிவிடுவார் என்று பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

    ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தில் அனுஷ்காவும் ஒரு முக்கிய தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #AnushkaShetty

    இஞ்சி இடுப்பழகி படத்துக்காக ஏற்றிய உடல்எடையை குறைத்து இளமை தோற்றத்திற்கு மாறுவதற்காக நடிகை அனுஷ்கா ஆஸ்திரியா சென்றிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #AnushkaShetty
    இஞ்சி இடுப்பழகி படத்துக்காக அனுஷ்கா குண்டாக வேண்டி இருந்தது. படத்தின் கதையே குண்டாக இருக்கும் பெண் அடையும் சிரமங்கள் பற்றியது என்பதால் அதை சவாலாக எடுத்துக்கொண்டு உடல் எடையை ஏற்றினார்.

    ஆனால் ஏற்றிய எடையை குறைக்க முடியாமல் அவதிப்படுகிறார். அனுஷ்கா கைவசம் புதிய படங்கள் எதுவுமில்லை. அவருடைய குண்டான உடலமைப்பைக் காரணம் காட்டி அவரை நடிக்கவைக்க பலர் தயங்குகிறார்கள் என்று தகவல் வெளியானது.



    இதனால் ஆஸ்திரியாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்பா கிளினிக் ஒன்றிற்கு அனுஷ்கா சென்றுள்ளார். சில வாரங்கள் அங்கு தங்கி உடல் எடையைக் குறைக்கும் சிகிச்சை, இளமை தோற்றத்திற்கான சிகிச்சை ஆகியவற்றை அனுஷ்கா மேற்கொள்ள உள்ளார்.

    ஏற்கனவே தெலுங்கு திரையுலகத்தின் பிரபலங்கள் பலர் அங்கு சென்று சிகிச்சை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் ஆலோசனையின் பேரில்தான் அனுஷ்கா அங்கு சென்றுள்ளார். #AnushkaShetty

    ×