என் மலர்
நீங்கள் தேடியது "ஷாலினி பாண்டே"
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இட்லி கடை படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இப்படத்தில் அருண் விஜய் அஷ்வின் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகர் சத்யராஜ் விஷ்ணு வர்தன் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகர் ராஜ்கிரன் சிவனேசனாக நடிப்பதாகவும் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர் வெளியானது.
'இட்லி கடை' படத்தில் கயல் என்ற கதாப்பாத்திரத்தில் நித்யா மேனன் நடித்துள்ளார். மேலும் நடிகை ஷாலினி பாண்டே மீரா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது.
- அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் படத்தில் தெலுங்கு நடிகையான ஷாலினி பாண்டே தனுஷின் தங்கை கதாப்பாத்திரத்திலும் மற்றும் அருண் விஜய்-க்கு ஜோடியாக நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஷாலினி பாண்டே அண்மையில் டப்பா கார்டெல் என்ற வெப் தொடரில் நடித்து இருந்தார்.

திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் ஆடியோ உரிமையை சரிகம இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
'இட்லி கடை' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை என்ன சுகம் பாடலை படக்குழு வெளியிட்டது அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஷாலினி பாண்டே.
- தமிழில் 2019 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடித்த 100% காதல் படத்தில் நடித்து அறிமுகமானார்.
2017 ஆம் ஆண்டு சந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஷாலினி பாண்டே. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இவரது நடிப்பு பலரால் பேசப்பட்டது.
அதை தொடர்ந்து மஹாநதி திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் 2019 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடித்த 100% காதல் படத்தில் நடித்து அறிமுகமானார்.
அதை தொடர்ந்து பல இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அவர் திரைத்துறையின் தொடக்கத்தில் நடந்த கசப்பான அனுபவத்தை பற்றி பகிர்ந்தார். அதில் அவர் " நான் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் நடித்து முடித்துவிட்டு ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடித்தேன். அப்பொழுது எனக்கு 23 வயதே ஆனது. அப்பொழுது அந்த படத்தின் இயக்குனர் நான் கேரவனில் உடை மாற்றிக் கொண்டு இருக்கும் போது அவர் கதவை தட்டாமலே உள்ளே நுழைந்தார்.
எனக்கு என்ன செய்வது என தெரியாமல் அவரை கண்மூடித்தனமாக திட்டினேன். இந்த திரைத்துறையில் அதன் பிறகுதான் என்னை காப்பாற்றிக் கொள்ள யார் யாருக்கு எந்த இடத்தை தரவேண்டும் என புரிந்தது. அதை நானே கற்றுக் கொண்டேன். நான் நல்ல மனிதர்கள் மற்றும் ஆண்களுடன் பணியாற்றியுள்ளேன். பல மோசமான மனிதர்களுடனும் வேலை செய்துள்ளேன்" என அவரது அனுபவத்தை பகிர்ந்தார்.
சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற டப்பா கார்டல் வெப் தொடரில் நடித்து இருந்தார். அடுத்ததாக தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் இட்லிக் கடை திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






A Valentine's day 2019 release it is for @gvprakash's #100percentkaadhal! Stay tuned for more updates 🥰
— Sony Music South (@SonyMusicSouth) December 20, 2018
➡️ https://t.co/JGz4cByCfMpic.twitter.com/vynSkIUNl2
#AgniSiragugal@vijayantony@arunvijayno1@TSivaAmma@shalinipandeyyy@Natarajanmusic
— Naveen.M (@NaveenFilmmaker) November 1, 2018
Thnx @ikamalhaasan sir pic.twitter.com/eFKfMQNfGm







