search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RadhaRavi"

    • கடந்த ஆண்டு பெண் டப்பிங் கலைஞர் சங்கீதா என்பவரை ஆபாசமாக பேசி தாக்கியதாக, நடிகர் ராதாரவி மீது புகார் எழுந்தது.
    • இந்த புகாரில் நடிகர் ராதாரவி இயக்குனர் கதிரவன் பாலு உள்பட 8 பேர் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    சென்னையை சேர்ந்த சங்கீதா என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு டப்பிங் யூனியனில் உறுப்பினராக சேர்ந்து சினிமா டப்பிங் ஆர்டிஸ்டாக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற டப்பிங் சங்கத்தின் 35ஆவது ஆண்டு பேரவை கூட்டத்தின் போது, பெண் டப்பிங் கலைஞர் சங்கீதா என்பவரை ஆபாசமாக பேசி தாக்கியதாக, நடிகர் ராதாரவி மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சங்கீதா விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பின்னர் நடிகர் ராதாரவி, இயக்குனர் கதிரவன் பாலு உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


    ராதாரவி

    ராதாரவி

    இந்நிலையில், பெண் டப்பிங் கலைஞர் சங்கீதாவை ஆபாசமாக பேசி தாக்கிய புகாரில் நடிகர் ராதாரவி இயக்குனர் கதிரவன் பாலு உள்பட 8 பேர் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 294 பி ஆபாசமாக பேசுதல், 323 சிறுகாயம் ஏற்படுத்துதல், 354 பெண்களின் மானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல், 506(2) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • தமிழ் திரையுலகின் பன்முகத்தன்மை கொண்ட நடிகராக வலம் வருபவர் ராதாரவி.
    • ராதாரவி புதிய வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்து வருகிறது.

    கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான மன்மத லீலை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ராதாரவி. கதாநாயகன், வில்லன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், டப்பிங் ஆர்டிஸ் என பன்முகத்தன்மை கொண்ட ராதாரவி தற்போது வரை தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 500 படங்களுக்கு மேல் ராதாரவி பிசியாக நடித்து வருகிறார்.

    ராதாரவி

    ராதாரவி

    இந்நிலையில் ராதாரவி புதிய வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்து வருகிறது. கோட் சூட் அணிந்து வில்லன் போன்று காட்சியளிக்கும் ராதாரவியின் புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

    • தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படங்களை இயக்கிய ராகேஷ் இயக்கும் 'சாமானியன்' படத்தின் கதாநாயகனாக ராமராஜன் நடிக்கிறார்.
    • இப்படத்தில் ராமராஜனுடன் இணைந்து ராதாரவி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கின்றனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த ராமராஜன் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக சாமானியன் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கிய ராகேஷ் இயக்குகிறார். இதனை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.

    சாமானியன்

    சாமானியன்

     

    இதன் கதாநாயகியாக நக்சா சரண் நடிக்கிறார். மேலும் முக்கிய வேடங்களில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியிலும் என ஐந்து மொழிகளில் தயாராகிறது.

    எம்.எஸ்.பாஸ்கர் 

    எம்.எஸ்.பாஸ்கர் 

     

    இப்படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இவ்விழாவில் எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது, 'பாண்டவர்கள் 12 வருடம் வனவாசம் சென்றார்கள். ராமாயணத்தில் ராமன் 14 ஆண்டுகள் காட்டுக்கு சென்றான். அதேபோல இந்த ராமராஜன் பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்திருக்கிறார். அப்படி வனவாசம் சென்று வந்தவர்கள் அனைவருமே அரசாண்டதுபோல, இவரும் நிச்சயமாக அரசாள்வார்.

     

    எம்.எஸ்.பாஸ்கர் 

    எம்.எஸ்.பாஸ்கர் 

    இவர் நடித்த சோலை புஷ்பங்கள் படத்திலேயே நான் டப்பிங் கலைஞராக பணியாற்றி உள்ளேன். ஆனால் இப்போதுதான் முதன்முறையாக இவருடன் இணைந்து நடிக்கிறேன். இவர் எல்லாம் எதற்கு திரும்பவும் நடிக்க வருகிறார் என்று ராமராஜனை பார்த்து பலர் மீம்ஸ் போடுவதாக இங்கே சொன்னார்கள். நீங்கள் ஏன் சுவாசிக்க வேண்டும் என்று ஒருவரை பார்த்து கேள்வி கேட்பது எவ்வளவு அநாகரீகமான கேள்வியோ, ராமராஜனை பார்த்து இப்படி ஒரு கேள்வியை கேட்பதும் அதுபோலத்தான்" என்றார்.

    • நீண்ட இடைவேளைக்கு பிறகு ராமராஜன் மீண்டும் 'சாமானியன்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்குகிறார்.
    • இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி படக் குறித்தும், ராமராஜன் குறித்தும் பேசியுள்ளார்.

    தமிழ் சினிமாவின் 90 காலகட்டங்களில் கிராமத்து படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ராமராஜன்தான். இவர் நடித்த பல படங்கள் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் படங்கள் வெற்றி பெற்றன. 'எங்க ஊரு பாட்டுக்காரன்', 'எங்க ஊரு காவல்காரன்', 'என்ன பெத்த ராசா', 'கரகாட்டக்காரன்', 'பாட்டுக்கு நான் அடிமை' போன்ற படங்கள் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடக்கூடிய படங்களாக பார்க்கப்பட்டு வருகின்றன.

    சாமானியன்

    சாமானியன்

     

    தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு ராமராஜன் மீண்டும் கதாநாயகனாக சாமானியன் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கிய ராகேஷ் இயக்குகிறார். இதனை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார். இதன் கதாநாயகியாக நக்சா சரண் நடிக்கிறார். மேலும் முக்கிய வேடங்களில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியிலும் என ஐந்து மொழிகளில் தயாராகிறது.

    ராமராஜன்

    ராமராஜன்

     

    இப்படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இவ்விழாவில் பேசிய ராதாரவி, "இது வேற ரூட்டில் போயிருக்க வேண்டிய படம். இதன் நல்ல நேரமோ என்னவோ ராமராஜன் இந்த படத்தில் வந்து இணைந்து விட்டார். நான் ராம.நாராயணன் இயக்கத்தில் பேய்வீடு படத்தில் நடித்த சமயத்திலேயே ராமராஜனை அந்தப்படத்தின் உதவி இயக்குனராக எனக்கு தெரியும். அப்போதே அவரிடம் சில விஷயங்களை கவனித்து சீக்கிரமாக நீ நடிகன் ஆகிவிடுவாய் என்று சொன்னேன். அதன்பிறகு அவருடன் சில படங்களில் இணைந்து நடித்துள்ளேன்.

     

    ராதாரவி

    ராதாரவி

    ராமராஜன் என்றைக்குமே ரஜினி கமலுக்கு போட்டியாக இருந்ததில்லை. அவரது படங்கள் அந்த இருவரின் படங்களை விட நன்றாக ஓடின அவ்வளவுதான். ஆனால் மற்ற ஹீரோக்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தினார் என்பதை மறுக்க முடியாது. ஒருமுறை நடிகர் கமல் விமானநிலையத்தில் இவரை பார்த்துவிட்டு இவரது ஹேர்ஸ்டைல் ஒரிஜினல் தானா, இல்லை விக் வைத்திருக்கிறாரோ என்கிற சந்தேகத்தில் தொட்டு பார்த்தாராம். ஆனால் இப்போதும் அதேபோன்ற ஹேர்ஸ்டைலுடன் தான் காட்சியளிக்கிறார்.

    ராதாரவி

    ராதாரவி

     

    அவருக்கு மனசு சுத்தம். அதனால் தான் முடி கொட்டவில்லை என்று நினைக்கிறேன். இயக்குநர் ராகேஷ் இதற்கு முன்பு இயக்கிய மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படத்தில் கூப்பிட்டு ஒருநாள் மட்டும் வேலை கொடுத்தார். இப்போது கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகி இந்த படத்தில் ஏழு நாட்கள் வேலை கொடுத்தார். எல்லாரும் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும். ஆனால் தியேட்டருக்கு வந்தால் செலவாகிறது என்று சொல்லக்கூடாது. படம் பார்க்க வந்தால் டிக்கெட் மட்டும் வாங்குங்கள். பாப்கார்ன், கூல்ட்ரிங்க்ஸ் எல்லாம் வாங்கி நீங்களாக செலவை இழுத்துவிட்டுக்கொண்டு அதற்கு விலைவாசியை காரணம் காட்டாதீர்கள்" என்று பேசினார்.

    .

    கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ரியோ ராஜ் - ஷிரின் கஞ்ச்வாலா நடிப்பில் உருவாகி இருக்கும் `நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் தணிக்கை சான்றிதழ் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது.
    கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் அடுத்த படத்திற்கு `நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என தலைப்பு வைத்துள்ளனர்.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு `யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர். படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.


    கார்த்திக் வேணுகோபால் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ரியோ ராஜ் நாயகனாக நடிக்க, ஷிரின் கஞ்ச்வாலா நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ராதாரவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் யூடியூப் பிரபலங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள். ஷபீர் இசையமைக்க, யூ.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

    டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் `கொரில்லா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராகுல் தாத்தா, இயக்குநர் டான் சாண்டி, சாதாரண டான் கிடையாது, டானுக்கு எல்லாம் டான் கூறினார்.
    ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரிப்பில், டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா - ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கொரில்லா'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

    விழாவில் ராகுல் தாத்தா பேசியதாவது,

    "இந்த படத்தில் நான் ஒரு சாதாரண கேரக்டர் பண்ணிருக்கேன். இந்த காலத்தில் கொரில்லாவை வைத்து படமெடுப்பது ரொம்ப கஷ்டம். நிறைய செலவு செய்திருக்கிறார்கள். அற்புதமா படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் டான் சாண்டி. எனக்கு அற்புதமான கேரக்டர் கொடுத்திருக்கிறார்கள். இந்த படம் ஓகோன்னு ஓடணும். படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்கள் அனைவரும் ஹிந்தி, தெலுங்கு, என ஒவ்வொன்றையும் வாங்கி கொண்டுப் போய்விட்டார்கள்.



    இந்த இயக்குநர் டான் கிடையாது, டானுக்கு எல்லாம் டான். சாம்.சி.எஸ் பிரமாதமாக வேலை செய்திருக்கிறார். இந்தப் படத்திற்குப் பின் இப்படக்குழு அனைவரும் வேறு லெவலுக்கு செல்வார்கள்" என்றார்.

    ராகுல் தாத்தா பேசிய வீடியோ:

    டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் `கொரில்லா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராதாரவி, இந்த படத்தில் விருப்பமில்லாமல் ஒரு வசனம் பேசியிருப்பதாக கூறினார்.
    ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரிப்பில், டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா - ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கொரில்லா'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

    விழாவில் நடிகர் ராதாரவி பேசியதாவது,

    "என்னை அன்பாக அழைத்த இயக்குநர் சாண்டி அவர்களுக்கும், கதாநாயகன் ஜீவா அவர்களுக்கும் நன்றி. அவர் அப்பா கொடுத்த பணத்தில் தான் நாங்கள் வாழ்ந்திருக்கோம். ஜீவாவிற்கு யாரும் காம்படிஷனே கிடையாது. அது அவரது பெரிய பலம். அவர் அற்புதமான நடிகர். அவரை முதல் படத்தில் இருந்தே பார்த்து வருகிறேன். 



    மனிதர்களை வைத்தே படமெடுப்பது பெரிய கஷ்டம். இவர்கள் மிருகத்தை வைத்து மிக அழகாக எடுத்திருக்கிறார்கள். நான் சில காட்சிகளைப் பார்த்தேன் நன்றாக இருக்கிறது. எனக்கும் ஒரு நல்ல வேடம் தந்திருக்கிறார்கள். படத்தில் ஒரு வசனம் எனக்குப் பிடிக்காமல் பேசி இருக்கிறேன். யோகிபாபு நெகட்டிவ் விசயங்களை பாஸிட்டிவாக எடுத்துக் கொள்ளும் நடிகர். 

    இந்தப்படத்தில் அவரையும் மிகச்சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்கள். தயவுசெய்து தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்தப்படத்தை ஆதரிக்க வேண்டும்" என்றார்.

    ராதாரவி பேசிய வீடியோ:

    ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ என்ற குறும்பட விழாவில் கலந்துக் கொண்ட ராதாரவி, நான் நடிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார். #RadhaRavi
    நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் திரைப்பட விழாவில் ராதாரவி கலந்துகொண்டு பேசியது சர்ச்சையானது. நயன்தாரா குறித்து அவரது பேச்சு பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது. அதன் தொடர்ச்சியாக திமுகவிலிருந்து அவர் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தார்.

    இந்தப் பிரச்சினை குறித்து ராதாரவி மீண்டும் பேசியுள்ளார். சென்னையில் ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ என்ற குறும்படம் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு, ராதாரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ராதாரவி பேசும் போது, பயம் என்பது எங்களுடைய குடும்பத்திலேயே கிடையாது. எதற்கு பயப்பட வேண்டும்? சிலர் நடிப்பதை நிறுத்திவிடுவோம் என்கிறார்கள். அது முடியாது, நான் நாடகத்தில் நடித்தால் உங்களால் எப்படி நிறுத்த முடியும்.



    நான் சந்தித்தது ஒரு பிரச்சினையே இல்லை. இதைப் பற்றியெல்லாம் பேச வேண்டும் என்பதே கிடையாது. ஏனென்றால் இதெல்லாம் தற்காலிகப் பிரச்சினை. இவர் ஒன்றும் தப்பாக சொல்லவில்லையே என்று சிந்திக்கக்கூடிய அளவுக்கு இது என்ன ஐ.நா. சபை பிரச்சினையா? நம்ம பேசினதில் உண்மை இருக்கா இல்லையா. அவ்வளவுதான். உண்மை என்றவன் ஏத்துக்குட்டு போ, இல்லை என்றவன் விட்டுவிடு” என்று பேசினார்.
    நயன்தாரா பற்றி ராதாரவி கூறிய சர்ச்சை கருத்துக்கு நடிகை சமந்தா கண்டனம் தெரிவித்து பதிவு செய்துள்ளார். #Nayanthara #RadhaRavi #Samantha
    நயன்தாரா குறித்து ராதாரவி தெரிவித்த கருத்துக்கு திரையுலகினர் பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

    முன்னணி நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-



    ‘அய்யோ பாவம், ராதாரவி அவர்களே, உங்களை நிலைநிறுத்திக் கொள்ள நீங்கள் படும் பாடு இருக்கிறதே... நாங்கள் எல்லோரும் உங்களைப் பார்த்து பரிதாபப் படுகிறோம். பாவமான மனிதர் நீங்கள் உங்கள் ஆன்மாவோ அல்லது உங்களுக்குள் மிச்சமிருக்கும் ஏதோ ஒன்றோ அமைதியை தேடிக் கொள்ளட்டும். நயன்தாராவின் அடுத்த சூப்பர் ஹிட் படத்துக்கு உங்களுக்கு டிக்கெட் அனுப்புகிறோம். பாப் கார்ன் சாப்பிட்டுவிட்டு இளைப்பாறுங்கள்’.

    இவ்வாறு சமந்தா தெரிவித்துள்ளார்.
    நயன்தாரா விவகாரம் தொடர்பாக தி.மு.க. என்னிடம் விளக்கம் கேட்டு இருக்கலாம் என்று ராதாரவி தெரிவித்துள்ளார். #RadhaRavi #Nayanthara #DMK
    சென்னை:

    ராதாரவி நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    இது பற்றி ஒரு இணையதளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ‘தி.மு.கவில் இருந்து நீக்கி விட்டதாக சொன்னார்கள். நீங்கள் என்ன நீக்குவது, நானே விலகிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இதுக்கெல்லாம் நான் வருத்தப்பட மாட்டேன். அரசியலில் இதெல்லாம் சகஜம்.

    ஆனால், கட்சி எனக்கு ஒரு ஷோ காஸ்ட் நோட்டீஸ் அனுப்பி, ‘உன் மேல் இந்த தப்பு இருக்கு. உன்னை ஏன் கட்சியோட அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கக்கூடாது’ன்னு கேட்டு இருக்கலாம். அது மட்டும்தான் மனதுக்கு வருத்தமாக இருக்கிறது.

    கே.ஆர். விஜயாம்மா சாமி வேடம் போடும்போது, அப்படியே அம்மன் மாதிரியே ஆகிவிடுவார். அந்த மாதிரி, நயன்தாராவும் தெலுங்குல சீதா வேடம் பண்றாங்க, இங்கே வேற வேற வேடம் எல்லாம் பண்றாங்க. என்ன வேடம் பண்ணினாலும் அவங்க சக்சஸ் பண்றாங்க. இதை நாம பாராட்டணும் அப்படி என்கிற அர்த்தத்தில் தான் பேசினேன்.


    ஒருவர் நயன்தாராவை எம்.ஜி.ஆர்., ரஜினிகாந்த் அளவுக்கு உயர்த்தி பேசினார். நான் அதை அங்கேயே கண்டித்தேன். காரணம், அவர்கள் 2 பேரும் சினிமாவில் லெஜண்ட்ஸ். நயன்தாரா உழைப்பால் உயர்ந்த நடிகை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், எம்.ஜி.ஆர்., ரஜினிகாந்த்தோட ஒப்பிட்டு பேசுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

    சில வருடங்களுக்கு முன்பு சில கதாநாயகிகள் தவறான தொழில் செய்கிறார்கள் என்று அவர்கள் படத்துடன் செய்தி வந்தது. அப்போது அவர்களுக்காக வழக்கு போட்டு ஜெயித்து கொடுத்தேன். நடிகைகள் பற்றி ஒரு வார பத்திரிகையில் தொடர் வந்தபோது, நான், ரேவதி, வாசுகி அம்மா மூணு பேரும் போய் சண்டை போட்டு அந்த தொடரை நிறுத்தவில்லையா?

    இதையெல்லாம் மறந்து விட்டார்கள். கடைசியாக ஒன்று சொல்கிறேன். நயன்தாராவை பற்றி நான் பேசியது அவர்களையும் அவர்களை கட்டிக்கப் போறவரையும் வருத்தப்பட செய்திருந்தால் அதற்கு நான் மனவருத்தப்படுகிறேன்.’

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #RadhaRavi #Nayanthara
    பட விழாவில் நடிகை நயன்தாராவை விமர்சித்த ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்த நடிகர் சங்கம், தொடர்ந்து இதுபோன்ற விமர்சனங்கள் வருமாயின், ராதாரவி நடிக்க தடை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. #RadhaRavi
    பட விழாவில் நயன்தாராவை விமர்சித்த ராதாரவிக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது. ராதாரவிக்கு நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் நாசர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    “கொலையுதிர் காலம்” பட விழாவில் பெண்களை கொச்சைப்படுத்துவது போல் நீங்கள் பேசிய இரட்டை அர்த்த வசனங்களை கேட்டு மனது மிகவும் வருந்துகிறது. இதை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த மேடையில் மட்டும் அல்ல, பல காலங்களாக இதுபோல் இரட்டை அர்த்த வசனங்களையும், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறீர்கள். இது ஊடகங்களின் மூலம் உலகெங்கும் பரவி இருக்கிறது.

    இது ஒட்டுமொத்த திரைத்துறைக்கும், மற்ற நடிகர்களுக்கும், அதில் பங்காற்றக்கூடிய பெண்களுக்கும், ஒரு அவமானமான சூழ்நிலையையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்தித் தருகிறது என்பதை ஏன் தாங்கள் உணரவில்லை. திரைத்துறையில் தங்களது தந்தையாருக்குப் பிறகு தொடர்ச்சியாக ஐம்பது வருடங்கள் நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கக்கூடிய தாங்கள் தங்களுடைய அனுபவங்களை நல்வழியில் பயன்படுத்தினால் அது வருகின்ற தலைமுறைக்கு வழிகாட்டுதலாக இருக்கும்.



    ஆனால் இதுபோன்ற கொச்சையான, கீழ்த்தரமான பேச்சுக்கள் உங்களுடைய மேன்மையை உயர்த்தாது அது மட்டுமல்லாமல், திரைத்துறையின் மேல் மக்களுக்கு இருக்கக்கூடிய நம்பிக்கையையும் சீரழிக்கும் என்பதை ஏன் உணரவில்லை. இனிவரும் காலங்களில் நீங்கள் இதை உணர்ந்து, இதுபோன்ற வக்கிரமான பேச்சைத் தவிர்த்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறோம்.

    அதை தவிர்த்து, இது போன்ற செயல்களில் நீங்கள் தொடர்ந்து செயல்படுவீர்கள் என்றால் தென்னிந்திய நடிகர் சங்கம் திரைத்துறையில் தங்களுக்கு தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றி, தீவிரமாக முடிவு செய்ய வேண்டி இருக்கும் என்பதை முன்னரே தங்களுக்கு இக்கடிதத்தின் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

    நடிகர் விஷால் டுவிட்டரில், “ராதாரவி பெண்களை பற்றி இழிவாக பேசியது கண்டிக்கத்தக்கது. இனிமேல் நீங்கள் ரவி என்று மட்டுமே அழைத்துக் கொள்ளுங்கள். ராதா என்பது பெண்ணின் பெயர்” என்று கூறியுள்ளார்.



    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சமீபத்தில் நடைபெற்ற “கொலையுதிர் காலம்” படவிழாவில் திரையுலகின் மூத்த கலைஞரான நடிகர் ராதாரவி, திரைப்பட கதாநாயகியான நயன்தாராவை மிகவும் கொச்சைப்படுத்தி பேசியதும், மேலும் மற்ற நடிகைகளையும் கொச்சைப்படுத்துவது போல் இரட்டை வசன அர்த்தத்துடன் பேசியதும், ஒட்டுமொத்த திரையுலகம் மற்றும் மூத்த நடிகர்-நடிகைகளுக்கு மிகுந்த மனவருத்தம் அளிக்கிறது.

    திரைத்துறையில் நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கும் ராதாரவி நகைச்சுவை என்ற பெயரில், கைதட்டலுக்காக இதுபோன்ற கொச்சையான பேச்சுகளை பேசி வருகிறார். அது திரைத்துறை மட்டுமின்றி, பொது வாழ்க்கையிலும் ராதாரவி மேல் உள்ள மதிப்பையும், மரியாதையும் குறைக்கிறது. அது மட்டுமின்றி, திரைத்துறையின்மேல் மக்களுக்கு உள்ள நம்பிக்கையை சீரழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செயலுக்காக ராதாரவிக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. #KolaiyuthirKaalam #Nayanthara #RadhaRavi #NadigarSangam #ProducersCouncil

    நயன்தாரா பற்றிய ராதாரவியின் சர்ச்சை கருத்து திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தான் நயன்தாராவை இழிவாக பேசவில்லை என்றும் பாராட்டி பேசியதாகவும் ராதாரவி வருத்தம் தெரிவித்துள்ளார். #Nayanthara
    கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி பேசும்போது, நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது பேச்சுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன், விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி, மிலிந்த் ராவ் உட்பட திரையுலகை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ராதாரவி தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

    ராதாரவியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நடிகை நயன்தாரா நேற்று அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சுக்கு ராதாரவி வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-



    “நான் நயன்தாராவை இழிவாக பேசவில்லை. அவரை பாராட்டித்தான் பேசினேன். எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது. இதற்காக நயன்தாரா வருத்தப்பட்டார் என்று சொன்னார்கள். நானும் வருந்துகிறேன். அப்படி பேசியதற்காக நயன்தாராவிடம் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    நான் யாரையும் புண்படுத்தி பேசியது இல்லை. நயன்தாரா குறித்த எனது பேச்சு தி.மு.க.வுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிடக்கூடாது என்ற காரணத்தினால் நானே தி.மு.க வில் இருந்து விலகிக்கொள்கிறேன்.”

    இவ்வாறு ராதாரவி கூறியுள்ளார். #Nayanthara #RadhaRavi #KolaiyuthirKaalam

    ×