என் மலர்
நீங்கள் தேடியது "Vanitha Vijaykumar"
- கணவன் மனைவி இடையே உருவாகும் பிரச்சனைகளை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் வனிதா.
- ராஜபாண்டி பாங்காக்கை மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.
கதைக்களம்
வனிதா மற்றும் ராபர்ட் மாஸ்டர் காதலித்து திருமணம் செய்துக்கொண்டு பேங்காக்கில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு வருகின்றனர். ஆனால் வனிதா தன்னுடைய அழகு போய்விடும் என்பதற்காக குழந்தை இப்பொழுது பெற்றுக்கொள்ள வேண்டாம் என கண்டிஷன் போடுகிறார். இப்படியே 10 வருடங்கள் சென்றுவிடுகிறது.
இப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்ளாவிட்டால் பின்னால் மிகவும் கடினமாகிவிடும் என முடிவெடுத்து வனிதா தாயாக விரும்புகிறார். ஆனால் இம்முறை குழந்தை வேண்டாம் என ராபர்ட் மறுக்கிறார். ஆனால் வனிதா விடாமல் பல ரொமான்ஸ் முயற்சிகளில் ஈடுப்படுகிறார். கடைசியில் இவர்கள் இருவரும் சேர்ந்து குழந்தை பெற்றுக்கொண்டார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
அம்மாவாகும் ஏக்கம், அதற்காக போடும் திட்டங்கள், நகைச்சுவை, நடனம் என அனைத்து காட்சிகளிலும் முடிந்தளவுக்கு உழைப்பை கொடுத்து நடித்துள்ளார்.
ராபர்ட் கொடுத்த கதாப்பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார். நண்பர்களாக வரும் கணேஷ், ஆர்த்தி, நகைச்சுவை காட்சிகளில் ஸ்கோர் செய்துள்ளனர். அம்மாவாக நடித்து இருக்கும் ஷகிலா மற்றும் அவருடைய நண்பர்களாக வரும் பாத்திமா பாபு, கும்தாஜ், சர்மிளா, வாசுகி என பலரும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இயக்கம்
நாற்பது வயது பெண்ணின் குழந்தை பெறும் கனவு. கரு உருவாக ஏற்படும் சிக்கல். அதனால் கணவன் மனைவி இடையே உருவாகும் பிரச்சனைகளை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் வனிதா. படத்தின் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கவேண்டும். நகைச்சுவை காட்சிகள் வொர்க் அவுட் ஆகாதது படத்தின் மைனஸ்.
ஒளிப்பதிவு
ராஜபாண்டி பாங்காக்கை மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.
இசை
ஸ்ரீகாந்த் தேவா இசை கேட்கும் ரகம். சிவராத்திரி பாடலின் ரீமிக்ஸ் வெர்ஷன் சிறப்பாக அமைந்துள்ளது.
தயாரிப்பு
ஜோவிகா விஜயகுமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.
- வனிதா விஜயகுமார் நடித்துள்ள 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் பாடலுக்கு எதிராக இளையராஜா முறையீடு செய்துள்ளார்
- 'ராத்திரி சிவராத்திரி' என்ற பாடலை நீக்க வேண்டும் என்று இளையராஜா முறையீடு செய்துள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள படம் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்'. இந்தப் படத்தை அவரே எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். அவருடன் ராபர்ட் மாஸ்டர் இணைந்து நடித்துள்ளார்.
வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியானது.
இந்த நிலையில் வனிதா விஜயகுமார் படத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் சரவணன் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் அவசர முறையீடு செய்துள்ளார்.
அதில், வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' திரைப்படத்தில், என்னுடைய பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த படத்தில் இருந்து 'ராத்திரி சிவராத்திரி' என்ற பாடலை நீக்க வேண்டும் என்று இளையராஜா தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய வனிதா விஜயகுமார், "இளையராஜா எனக்கு கடவுள் மாதிரி, அந்த கடவுளே கோவிச்சுகிட்டா எவ்ளோ கஷ்டமா இருக்கும். சம்பந்தப்பட்ட இசை நிறுவனத்திடம் இந்த பாடலுக்கான உரிமையை வாங்கியுள்ளோம். அவர் வழக்கு தொடர்வதாக இருந்தால் அந்த நிறுவனத்தின் மீது தான் தொடர வேண்டும். சில விஷயம் இங்க பேச முடியாது.. உண்மைய சொன்னா தப்பா ஆகிடும்.. இளையராஜா வீட்டுக்கு மருமகளா போக வேண்டியது" என்று அழுதபடி தெரிவித்தார்.
- இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் சரவணன் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் அவசர முறையீடு செய்துள்ளார்.
- 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' திரைப்படத்தில், என்னுடைய பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள படம் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்'. இந்தப் படத்தை அவரே எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். அவருடன் ராபர்ட் மாஸ்டர் இணைந்து நடித்துள்ளார்.
வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியானது.
இந்த நிலையில் வனிதா விஜயகுமார் படத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் சரவணன் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் அவசர முறையீடு செய்துள்ளார்.
அதில், வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' திரைப்படத்தில், என்னுடைய பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த படத்தில் இருந்து 'ராத்திரி சிவராத்திரி' என்ற பாடலை நீக்க வேண்டும் என்று இளையராஜா தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
- நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, கதையின் நாயகியாக நடித்திருக்கும் Mrs & Mr திரைப்படம்.
- இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.
நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் ( Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சில வாரங்களுக்கு முன் வெளியானது.
வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டி. ராஜபாண்டி - விஷ்ணு ராமகிருஷ்ணன் - டி.ஜி. கபில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.

பாலகுரு படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜோவிகா விஜயகுமார் தயாரித்திருக்கிறார்.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி கொண்ட போஸ்டரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். திரைப்படம் வரும் ஜூலை 4 ஆம் தேதி வெளியாகிறது.
வனிதா விஜயகுமார் அவரது மகள் ஜோவிகா மற்றும் படக்குழு நடிகர் ரஜினிகாந்தை நேரில் சென்று வாழ்த்து பெற்றனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
- நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் மிஸஸ் & மிஸ்டர் ( Mrs & Mr)
- இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் ( Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி. ராஜபாண்டி - விஷ்ணு ராமகிருஷ்ணன் - டி.ஜி. கபில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். பாலகுரு படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜோவிகா விஜயகுமார் தயாரித்திருக்கிறார்.
ஜூனில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் நடிகர் அன்பு மயில்சாமி, நடிகை ஃபாத்திமா பாபு, கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், அம்பிகா, பிரவீண் லால் வாணி, ஷகீலா, தனஞ்ஜெயன், வசந்தபாலன், ஸ்ரீகாந்த் தேவா, வனிதா விஜயகுமார், ஜோவிகா விஜயகுமார், தயாரிப்பாளர் மதியழகன், கிரண், ஷார்மிளா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஷகீலா பேசுகையில், ''வனிதா நன்றாக பேசுவார். அக்கா என்று அன்பாக பேசுவார். ஆனால் கோபம் வந்து விட்டால், குரலை உயர்த்துவார்.
பாங்காக்கில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் உழைத்தோம். 30 ஆண்டுகளுக்கு முன் கடினமாக உழைத்த காலகட்டங்கள் இந்த படப்பிடிப்பின் போது நினைவுக்கு வந்தன.
எனக்கு குடும்பம் இல்லை என்று இணையம் வழியாக நிறைய முறை அழுது புலம்பி இருக்கிறேன். வனிதாவால் எனக்கு மிகப் பெரிய குடும்பம் கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
எங்களுடன் வந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் அன்புடன் பணியாற்றினார்கள். பாங்காக்கில் சுற்றிப் பார்க்க இரண்டு நாள் மட்டும் அனுமதி அளித்தார் வனிதா.
அதன் பிறகு சென்னை வந்து இங்கும் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். படப்பிடிப்பு முடிவடைந்த பிறகும் இப்படத்திற்காக கடுமையாக உழைத்தார். இந்த தருணத்தில் தயாரிப்பாளர் மதியழகனுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படம் நன்றாக இருக்கிறது, நான் நடித்திருக்கிறேன். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நான், வனிதா போன்றவர்கள் எல்லாம் உரிமைகளை கேட்பதில்லை எடுத்துக் கொள்வோம்," என்றார்.
- கடைசி தோட்டா படம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கிறது.
- இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது.
'லோக்கல் சரக்கு' படத்தை தொடர்ந்து ஆர்.வி.ஆர். ஸ்டுடியோஸ் சார்பில் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்து தயாரிக்கும் படம் 'கடைசி தோட்டா'. அறிமுக இயக்குநர் நவீன் குமார் எழுதி இயக்கும் இப்படத்தில் டத்தோ ராதாரவி, வனிதா விஜயகுமார், ஸ்ரீகுமார் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஸ்ரீஜா ரவி, யாஷர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
மோகன் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு நீலு குமார் வசனம் எழுதியிருக்கிறார். லோகேஷ்வர் படத்தொகுப்பு செய்ய, சரவணன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். சினேகன் மற்றும் பாலு பாடல்கள் எழுதியுள்ளனர். வேலண்டினா மற்றும் யுகேஷ் ராமலிங்கம் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளனர்.
இந்த படம் தொடர்பான விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய டத்தோ ராதாராவி நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை வரவேற்றார். மேலும், அவர் அழைத்தால் அவரது கட்சியில் இணைய தயார் என்றும் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், "கடைசி தோட்டா ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர். ஒரு ரிசார்ட்டில் நடக்கும் கதையை இயக்குநர் நவீன் குமார் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார். படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது."
"இந்த படத்தில் நான் தான் நாயகன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் நாயகன் அல்ல, கதையின் நாயகன். அனைவருக்கும் நல்ல கதாபாத்திரம் தான், ஆனால் கதை கரு என் பக்கம் இருப்பதால், என்னை நாயகன் என்று சொல்கிறார்கள். வனிதா விஜயகுமாருக்கும் சிறப்பான வேடம். படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்."
"நடிகைகள் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும், இதை நான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறேன், ஆனால் அதை யாரும் கேட்பதில்லை. இந்த நிகழ்ச்சியில் கூட வனிதா கலந்துக்கொள்ளவில்லை என்பது படக்குழுவுக்கு வருத்தம் தான்."
"சினிமாவில் எனக்கு 50 வது ஆண்டு, நான் இதையும் தாண்டி நடித்துக் கொண்டிருப்பேன். நடிகன் என்பவன் இறந்தும் நடிப்பவன். அவன் இறப்பு வீடியோவை வெளியிட்டு பணம் சம்பாதிக்கிறார்கள் அல்லாவா, அதேபோல் அவன் இறந்தாலும் அவன் நடித்த கதாபாத்திரங்களும், காட்சிகளும் அடிக்கடி ரசிகர்கள் கண் முன் வந்துக்கொண்டு தான் இருக்கும். அதனால், என்னுடைய நடிப்பு பயணம் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கும். தற்போது நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. விஜய் அரசியலுக்குள் நுழைந்திருப்பது வரவேற்க வேண்டியது தான். அவர் என்னை அழைத்தால் நிச்சயம் நான் அவருடன் இணைவேன்.," என்று தெரிவித்தார்.
விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் திரைப்படமான இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சின்னதிரை மற்றும் வெள்ளிதிரையிலும் மிகவும் பரீட்சையமானவர் வனிதா விஜயகுமார்.
- ராபர்ட் மாஸ்டரும் வனிதா விஜயகுமாரும் காதலித்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையிலும் மிகவும் பரீட்சையமானவர் வனிதா விஜயகுமார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப் பெரிய அளவில் ரீச் கிடைத்தது. ராபர்ட் மாஸ்டரும் வனிதா விஜயகுமாரும் காதலித்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர். பின் மனகசப்பால் பிரிந்து விட்டனர்.
தற்பொழுது அவர்கள் இருவரும் இணைந்து Mr&Mrs என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று வனிதா விஜயகுமார் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதில் வனிதா கடலோரத்தில் ராபர்ட் மாஸ்டருக்கு ப்ரொபோஸ் செய்வது போல் சேவ் தி டேட் என்ற தலைப்பில் காட்சி அமைந்துள்ளது.

இதனால் நெட்டிசன்கள் மீண்டும் வனிதா திருமணம் செய்துக் கொள்ள போகிறாரா. என ப்லவாறு கமெண்டுகளை கொட்டித்தீர்த்து வருகின்றனர். ஆனால் இது அந்த படத்திற்கான ப்ரோமோஷன் என சிலர் கூறி வருகின்றனர். எது உண்மை என்று அக்டோபர் 5 ஆம் தேதி பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையிலும் மிகவும் பரீட்சையமானவர் வனிதா விஜயகுமார்
- அவர்கள் இருவரும் இணைந்து Mr&Mrs என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையிலும் மிகவும் பரீட்சையமானவர் வனிதா விஜயகுமார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப் பெரிய அளவில் ரீச் கிடைத்தது. ராபர்ட் மாஸ்டரும் வனிதா விஜயகுமாரும் காதலித்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர். பின் மனகசப்பால் பிரிந்து விட்டனர்.
தற்பொழுது அவர்கள் இருவரும் இணைந்து Mr&Mrs என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் ப்ரோமோ விடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன் வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் கடற்கரையில் ஒன்றாக இருப்பது போல மற்றும் சேவ் தி டேட் என்ற போஸ்டர் வெளியாகு இணையத்தில் வைரலானது.
இதனால் நெட்டிசன்கள் மீண்டும் வனிதா திருமணம் செய்துக் கொள்ள போகிறாரா. என பலவாறு கமெண்டுகளை கொட்டித்தீர்த்தார்கள். ஆனால் இன்று படத்தின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
படத்தை வனிதா விஜயகுமாரின் நிறுவனமனான வனிதா பிலிம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இப்படத்தை வனிதா விஜயகுமார் எழுதி இயக்கியுள்ளார். படத்தை பற்றிய பிற செய்திகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திரைப்படம் விரைவில் திரையரங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






