என் மலர்
நீங்கள் தேடியது "ராபர்ட்"
- கணவன் மனைவி இடையே உருவாகும் பிரச்சனைகளை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் வனிதா.
- ராஜபாண்டி பாங்காக்கை மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.
கதைக்களம்
வனிதா மற்றும் ராபர்ட் மாஸ்டர் காதலித்து திருமணம் செய்துக்கொண்டு பேங்காக்கில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு வருகின்றனர். ஆனால் வனிதா தன்னுடைய அழகு போய்விடும் என்பதற்காக குழந்தை இப்பொழுது பெற்றுக்கொள்ள வேண்டாம் என கண்டிஷன் போடுகிறார். இப்படியே 10 வருடங்கள் சென்றுவிடுகிறது.
இப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்ளாவிட்டால் பின்னால் மிகவும் கடினமாகிவிடும் என முடிவெடுத்து வனிதா தாயாக விரும்புகிறார். ஆனால் இம்முறை குழந்தை வேண்டாம் என ராபர்ட் மறுக்கிறார். ஆனால் வனிதா விடாமல் பல ரொமான்ஸ் முயற்சிகளில் ஈடுப்படுகிறார். கடைசியில் இவர்கள் இருவரும் சேர்ந்து குழந்தை பெற்றுக்கொண்டார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
அம்மாவாகும் ஏக்கம், அதற்காக போடும் திட்டங்கள், நகைச்சுவை, நடனம் என அனைத்து காட்சிகளிலும் முடிந்தளவுக்கு உழைப்பை கொடுத்து நடித்துள்ளார்.
ராபர்ட் கொடுத்த கதாப்பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார். நண்பர்களாக வரும் கணேஷ், ஆர்த்தி, நகைச்சுவை காட்சிகளில் ஸ்கோர் செய்துள்ளனர். அம்மாவாக நடித்து இருக்கும் ஷகிலா மற்றும் அவருடைய நண்பர்களாக வரும் பாத்திமா பாபு, கும்தாஜ், சர்மிளா, வாசுகி என பலரும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இயக்கம்
நாற்பது வயது பெண்ணின் குழந்தை பெறும் கனவு. கரு உருவாக ஏற்படும் சிக்கல். அதனால் கணவன் மனைவி இடையே உருவாகும் பிரச்சனைகளை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் வனிதா. படத்தின் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கவேண்டும். நகைச்சுவை காட்சிகள் வொர்க் அவுட் ஆகாதது படத்தின் மைனஸ்.
ஒளிப்பதிவு
ராஜபாண்டி பாங்காக்கை மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.
இசை
ஸ்ரீகாந்த் தேவா இசை கேட்கும் ரகம். சிவராத்திரி பாடலின் ரீமிக்ஸ் வெர்ஷன் சிறப்பாக அமைந்துள்ளது.
தயாரிப்பு
ஜோவிகா விஜயகுமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.
- இப்படம் திரில்லர் அனுபவத்தைத் தரும் வகையில் உருவாகியுள்ளது.
- இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராயல் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் நான்சி ஃப்ளோரா தயாரிப்பில், இயக்குநர் டிஶ்ரீ அரவிந்த் தேவ் ராஜ் இயக்கும் புதிய படம் "நெவர் எஸ்கேப்." புதுமுக நட்சத்திரங்கள் நடிப்பில், அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகி இருக்கிறது.
பல ஹாலிவுட் படங்கள் தரும், இதயம் அதிர வைக்கும் அதிரடியான ஹாரர் கலந்த திரில்லர் அனுபவத்தைத் தரும் வகையில் நெவர் எஸ்கேப் படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் ஆதி பிருத்வி, ஹர்ஷினி முதன்மைப்பாத்திரங்களில் நடிக்க, நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் முதன்முறையாக எதிர்மறை பாத்திரத்தில் மிரட்டியுள்ளார். இவர்களுடன் கவி ஜெ சுந்தரம், உவைஸ் கான், ராஜி, அகிலா சுந்தர், ஜெபின் ஜான், பிரணேஷ்வர், சஷ்டி பிரணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சந்தோஷ் குமார் எஸ்.ஜே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகரும், நடன இயக்குநருமான ராபர்ட், "இப்படத்தின் கதை சொன்ன போது, யார் சார் டைரக்டர் என்று கேட்டேன், அரவிந்தைப் பார்த்தால் இயக்குநர் என்றே நம்பமுடியவில்லை. மூச்சு விடாமல் கதை சொன்னார். கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது."
"மொட்டை அடிக்க வேண்டும் என்றார்கள் தாடி எடுக்க வேண்டும் என்றார்கள். நான் வேறு ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தேன், அவர்களிடம் அனுமதி வாங்கி இப்படத்தில் நடித்தேன். அதற்குக் காரணம் இவர்கள் மீதுள்ள அன்பு தான். நல்ல டீம் கடுமையாக உழைத்துள்ளனர். இப்படத்தில் என்னை வித்தியாசமாக பார்ப்பீர்கள், படம் நன்றாக வந்துள்ளது, படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்," என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தில் நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் முதன்முறையாக எதிர்மறை பாத்திரத்தில் மிரட்டியுள்ளார்
- இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது
ராயல் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் நான்சி ஃப்ளோரா தயாரிப்பில், இயக்குநர் டிஶ்ரீ அரவிந்த் தேவ் ராஜ் இயக்கும் புதிய படம் "நெவர் எஸ்கேப்." புதுமுக நட்சத்திரங்கள் நடிப்பில், அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகி இருக்கிறது.
பல ஹாலிவுட் படங்கள் தரும், இதயம் அதிர வைக்கும் அதிரடியான ஹாரர் கலந்த திரில்லர் அனுபவத்தைத் தரும் வகையில் நெவர் எஸ்கேப் படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் ஆதி பிருத்வி, ஹர்ஷினி முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் முதன்முறையாக எதிர்மறை பாத்திரத்தில் மிரட்டியுள்ளார். இவர்களுடன் கவி ஜெ சுந்தரம், உவைஸ் கான், ராஜி, அகிலா சுந்தர், ஜெபின் ஜான், பிரணேஷ்வர், சஷ்டி பிரணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு சந்தோஷ் குமார் எஸ்.ஜே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகரும், நடன இயக்குநருமான ராபர்ட், "இப்படத்தின் கதை சொன்ன போது, யார் சார் டைரக்டர் என்று கேட்டேன், அரவிந்தைப் பார்த்தால் இயக்குநர் என்றே நம்பமுடியவில்லை. மூச்சு விடாமல் கதை சொன்னார். கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது."
"மொட்டை அடிக்க வேண்டும் என்றார்கள் தாடி எடுக்க வேண்டும் என்றார்கள். நான் வேறு ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தேன், அவர்களிடம் அனுமதி வாங்கி இப்படத்தில் நடித்தேன். அதற்குக் காரணம் இவர்கள் மீதுள்ள அன்பு தான். நல்ல டீம் கடுமையாக உழைத்துள்ளனர். இப்படத்தில் என்னை வித்தியாசமாக பார்ப்பீர்கள், படம் நன்றாக வந்துள்ளது, படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்," என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு தியேட்டருக்குள் மாட்டி கொண்ட நண்பர்களை ஒரு சைக்கோ கொலைகாரன் கொலை செய்ய திட்டமிடுகிறான். அந்த கொலைகாரனிடம் இருந்து அவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதை என்பது இப்படத்தின் ட்ரைலரை பார்க்கையில் யூகிக்கமுடிகிறது.
வரும் ஏப்ரல் 19-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






