search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுழற்பந்தில் இந்தியாவை விட நாங்கள் சிறந்தவர்கள்- ஆப்கன் கேப்டன் சொல்கிறார்
    X

    சுழற்பந்தில் இந்தியாவை விட நாங்கள் சிறந்தவர்கள்- ஆப்கன் கேப்டன் சொல்கிறார்

    சுழற்பந்து வீச்சில் இந்தியாவை விட நாங்கள் சிறந்தவர்கள் என்று ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணி கேப்டன் தெரிவித்துள்ளார். #INDvAFG
    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அந்தஸ்து பெற்றதுடன், வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்டில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்தியாவை சந்திக்கிறது. இந்த போட்டி வருகிற 14-ந்தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது.

    நம்பர் ஒன் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறோம் என்ற அச்சம் துளியளவு கூட ஆப்கானிஸ்தான் வீரர்களிடம் இல்லை. மேலும், சுழற்பந்து வீச்சில் இந்தியாவை விட நாங்கள் சிறந்தவர்கள் என்று அந்த அணியின் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்சாய் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்சாய் கூறுகையில் ‘‘நாங்கள் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், மொகமது நபி, ரஹ்மத் ஷா, ஜகிர் கான் போன்ற தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளோம் என்பதை உலகமே அறியும். இவர்களை பின்பற்றி ஏராளமான சுழற்பந்து வீச்சாளர்கள் உருவாகி வருகிறார்கள். இது சிறப்பான விஷயம். என்னுடைய கருத்தின்படி, இந்தியாவை விட நாங்கள் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை வைத்துள்ளோம்.



    அயர்லாந்து தனது முதல் டெஸ்டில் பாகிஸ்தானை எதிர்த்து சொந்த மண்ணில் விளையாடியது. இதனால் அவர்களால் நெருக்கடி கொடுக்க முடிந்தது. நாங்கள் இந்தியாவில் விளையாட இருக்கிறோம். இங்கு சுழற்பந்து வீச்சு சிறப்பானதாக இருக்கும். நாங்கள் இந்தியாவிற்கு நெருக்கடி கொடுப்போம். அதேபோல் எங்களுக்கும் நெருக்கடி இருக்கும். இந்தியாவிற்கு எதிரான போட்டி சிறந்ததாக இருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×