என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Weekly Rasipalan"

    • கடகம் நன்மைகள் நடக்கும் வாரம்.
    • கன்னி நீண்ட கால லட்சியங்களும், குறிக்கோள்களும் நிறைவேறும் வாரம்.

    மேஷம்

    எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும் வாரம்.ராசிக்கு 4-ம் மிடமான சுகஸ்தானத்தில் நிற்கும் அதிசார குரு பகவான் வக்ரகதியில் வெற்றி ஸ்தானத்திற்கு செல்கிறார். இதனால் தனவரவில் தன்னிறைவு உண்டாகும். ஆயுள் ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும்.அறுவை சிகிச்சை வரை சென்ற நோய் பாதிப்பு சற்று குறையும். எதிர்பாராத சில பண வரவுகள் இருக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலைகள் நிலவும். எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளால் ஏற்பட்ட மனச்சங்கடம் அகலும்.சுப மங்கள விசேஷங்கள் நடக்கும். புதிய தொழில் சிந்தனை அதிகரிக்கும்.இது ஏழரைச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதக பரிசீலனைக்கு பிறகு புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது நல்லது. சிக்கனத்தை கடைபிடித்தால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். மனக்கவலை மறந்து நிம்மதியாக தூங்குவீர்கள்.திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவ வழிபாடு செய்யவும்.

    ரிஷபம்

    நல்லவிதமான மாற்றங்கள் உருவாகும் வாரம்.ராசிக்கு 6-ல் ஆட்சி பலம் பெற்று நின்ற ராசி அதிபதி சுக்கிரன் வார இறுதியில் 7-ம் மிடத்திற்கு சென்று ராசியை பார்ப்பார். இது ரிஷப ராசியி னருக்கு இழந்த இன்பங்களை மீட்டு தரக்கூடிய அமைப்பாகும். எதையும் தைரியத்தோடு செய்யக் கூடிய மன பலம் அதிகரிக்கும். திறமையான பேச்சால் மற்றவர்களை வசீகரம் செய்யக்கூடிய தன்மை உருவாகும். திறமைகள் அதிகரிக்கும். செயல் திறன் கூடும். கடந்த காலங்களில் ஏற்பட்ட கடன் சுமைகள் படிப்படியாக குறையும். திருமண தடை அகலும்.காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் கிடைக்கும்.வேலைப்பளு குறையும்.புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். புத்திர பிராப்தத்தில் நிலவிய குறைபாடுகள் சீராகும். பூர்வீகச் சொத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும்.அழகு ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.திருக்கார்த்திகை நாளில் விரதம் இருந்து சிவனுக்கு பன்னீர் பூக்களால் அர்ச்சனை செய்யவும்.

    மிதுனம்

    மறைமுக எதிர்ப்புகள் குறையும். வாரம்.ராசிக்கு 5-ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசி அதிபதி புதன் வார இறுதி நாளில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். பூர்வீ கத்திற்கு சென்று வரும் எண்ணம் அதிகமாகும். பூர்வீக சொத்தால் ஏற்பட்ட பிரச்சிினைகள் குறையத் துவங்கும்.பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் அகலும். இழுபறி யாக கிடந்த பணிகளை அறிவாற்றலால் சரி செய்வீர்கள். குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். முக்கிய பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் கூடும். திருமணம் குழந்தைப் பேரு போன்றவற்றில் ஏற்பட்ட தடைகள் விலகும்.தொழில் வியாபாரத்தில் லாபகரமான சூழ்நிலை இருக்கும். மேலதிகாரியிடம் பாராட்டுக்கள் கிடைக்கும்.தடைபட்ட பதவி உயர்வு இப்பொழுது சாதகமாகும். சிலர் நடந்ததை நினைத்து கற்பனை கவலைகள் பய உணர்வை அதிகரிப்பார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து வில்வ அர்ச்சனை செய்து சிவ வழிபாடு செய்யவும்.

    கடகம்

    நன்மைகள் நடக்கும் வாரம்.ராசியில் குரு பகவானும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரனும் பாக்கியஸ்தானத்தில் சனிபகவானும் சஞ்சரிப்பதால் திரிகோணங்கள் பலம் பெறுகிறது. இது கடக ராசிக்கு நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு நின்றாலும் ராகுக்கு வீடு கொடுத்த சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.மனதில் நிலவிய கவலைகள் கஷ்டங்கள் விலகும். குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம் தோன்றும்.அனைத்து செயல்களிலும் கண்ணும் கருத்துமாக செயல்படுவீர்கள்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.புதிய வீடு கட்டுதல் கட்டிய வீட்டை விரிவு செய்தல் போன்றது தொடர்பான சிந்தனைகள் இருக்கும்.கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். போட்டி பந்தயங்களில் அமோகமாக வெற்றி பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.குலதெய்வ அருளுடன் சகல பாக்கியங்களும் கைகூடும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து புனித நீரால் அபிஷேகம் செய்து சிவபெருமானை வழிபடவும்.

    சிம்மம்

    சாதகமான வாரம்.ராசி அதிபதி சூரியன் 4-ம்மிடமான சுகஸ்தானத்தில் சுகஸ்தான அதிபதி செவ்வாயுடன் சேர்ந்து இருக்கிறார். எதிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். தாராள தன வரவால் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.வீட்டிலும் வெளி இடத்திலும் உள்ள நிலைமைகளை சமாளித்து வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் தேடி வரும். புதிய சொத்துக்கள் சேரும். சொந்தத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.பொறுப்புகள் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.உங்களின் ஆராய்ச்சி திறன் உயரும்.உயர் கல்வி வாய்ப்புகள் தேடி வரும்.தந்தையின் ஆசியுடன் குலதெய்வ அருள் கடாட்சம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த சாதகமான பலன்கள் நடக்கும்.விவசாயிகளுக்கு அரசாங்க உதவிகள் கிடைக்கும். 1.12.2025 அன்று இரவு 11.18 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீண் விரயங்கள் ஏற்படலாம். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவனுக்கு பஞ்சகவ்ய அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.

    கன்னி

    நீண்ட கால லட்சியங்களும், குறிக்கோள்களும் நிறைவேறும் வாரம்.ராசி அதிபதி புதன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரே பத்தாம் அதிபதியாக இருப்பதால் தொழில் மூலமாக தன வரவு அதிகமாகும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும்.இதுவரை உங்களுக்கு இருந்த பிரச்சிினைகள் எல்லாம் சூரியனை கண்ட பணி போல் விலகும்.சிந்தனைகள் தெளிவாகும். தடைபட்ட கனவுகள் லட்சியங்களை நிறைவேற்ற உகந்த காலமாகும். நிதானமாக செயல்படுவீர்கள். புதிய வீடு வாங்குதல் வாகனம் வாங்குதல் போன்ற செயல்களில் ஆர்வம் கூடும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இடமாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். அரசு மற்றும் அரசாங்க பணிகளால் ஆதாயங்கள் கிடைக்கும். சிலர் புதிய ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுப்பார்கள்.1.12.2025 அன்று இரவு 11.18 முதல் 3.12.2025 அன்று இரவு 11.14 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற ஆசைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் விபரீத விளைவுகளை தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவபுராணம் படித்து சிவபெருமானை வழிபடவும்.

    துலாம்

    சங்கடங்கள் விலகும் வாரம்.ராசி அதிபதி சுக்கிரன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி செவ்வாய் மற்றும் லாப ஸ்தான அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெறுகிறார். கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வெளியே சொல்ல முடியாத பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். சிலர் கடன் பெற்று புதிய வாகனம் சொத்துக்கள், வாங்குவார்கள். அலுவலக பணிச் சுமையும் அலைச்சலும் உங்களுக்கு சிரமம் தரும். எனினும் உத்தியோகத்தின் மீது முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். பூர்வீகச் சொத்துக்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். 3.12.2025 அன்று இரவு 11.14 முதல் 5.12.2025 அன்று இரவு 10.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வார்த்தைகளில் வேகம் இருக்கும் ஆனால் விவேகம் இருக்காது.குடும்ப உறவினர்களை கடுமையான சொற்களால் பேசக்கூடாது. திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவனுக்கு சந்தன அபிஷேகம் செய்து வழிபடவும்.

    விருச்சிகம்

    திறமைகளால் மதிப்பு உயரும் வாரம்.ராசியில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை உள்ளது. ஆன்ம பலம், ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். உடல் தேஜஸ் கூடும்.கவுரவப் பதவிகள் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சுய திறமையால் நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அலைச்சல் மிகுந்த பயணங்கள் அதிகரிக்கும். இடப்பெயர்ச்சியால் சில நன்மைகள் ஏற்படும். நோய் தொந்தரவுகள் அகலும்.சில பெண்களை அச்சுறுத்திய மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். கடன்தர நிதி நிறுவனங்கள், வங்கிகள் தேடி வரும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.உயர் கல்வியில் நிலவிய தடைகள் அகலும்.5.12.2025 அன்று இரவு 10.15 முதல் 7.12.2025 அன்று இரவு 10.38 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நட்புகளிடம் விவேகமான வார்த்தைகளை பேச வேண்டும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகளிடம் கவனமாக பழகவும்.திருக்கார்த்திகை நாளில் விரதம் இருந்து சிவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட இன்னல்கள் விலகும்.

    தனுசு

    எதிர்கால வாழ்க்கை பற்றிய புதிய நம்பிக்கை பிறக்கும் வாரம்.ராசி அதிபதி குரு பகவான் வார இறுதியில் வக்கிர கதியில் சம சப்தமஸ்தானம் செல்கிறார்.திடீர் வருமானம், பெயர், புகழ் என யோகமான நிலை உண்டாகும். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் காணாமல் போவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தினர் தொழிலில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிப்பார்கள். பணவரவு நன்றாக இருக்கும். பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை கண்ணில் காட்டும். உடல் ஆரோக்கி யத்தில் சிறிய பாதிப்பு தோன்றினாலும் சமாளித்து விடுவீர்கள். ஆன்லைன் வர்த்தகர்கள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். திருமணத் தடை அகலும். வரவு செலவு சீராக இருக்கும். தம்பதிகளிடையே இணக்கமான சூழல் நிலவும். பெண்களுக்கு அழகிய நவீன பொருட்கள் சேர்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபட அனைத்தும் சுப பலன்களும் வந்து சேரும்.

    மகரம்

    வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் வாரம்.ராசி அதிபதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.சிலர் தொழில், வேலைக்காக இடம் பெயரலாம். விரும்பிய அரசு, தனியார், வெளிநாட்டு வேலை கிடைக்கும். விவசாயிகளுக்கு வறண்ட நிலம் செழிப்பாகும். வீடு, வாகன பராமரிப்பு செலவு மிகுதியாகும். சொத்து விசயத்தில் இருந்த வழக்குகள் சாதகமாகும். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். அரசு ஊழியர்கள், அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். இதுவரை வராமல் இருந்த தொகை கைக்கு வந்து சேரும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் சீராகும்.கடன் சுமை குறைய புதிய வழி பிறக்கும்.பெண்களுக்கு கருவுருதலில் இருந்த பிரச்சினைகள் நீங்கி புத்திர பிராப்தம் உண்டாகும். வயோதிகர்களுக்கு தாத்தா, பாட்டி யோகம் உண்டு. ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பும், முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். திருமணம் மற்றும் சுப காரியங்களுக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றியுண்டு. திருக்கார்த்திகை அன்று விரதம் இருந்து சிவனுக்கு புனுகு சாற்றி வழிபடவும்.

    கும்பம்

    பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம்.தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.ராசியில் உள்ள ராகுக்கு குரு பார்வை கிடைக்கிறது. வாக்கு வன்மை பெருகும்.எதிர்பார்த்த அனைத்து வகையிலும் வருமானம் உண்டாகும்.வரா கடன்கள் வசூல் ஆகும்.பணவரவு தாராளமாக இருப்பதால் வீடு வாகனம் வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் கூடும். சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டிற்குச் சென்றவர்கள் மீண்டும் சொந்த வீட்டிற்குச் சென்று குடிபுகுவீர்கள். அடமானச் சொத்து மற்றும் நகைகளை மீட்பீர்கள்.மருமகனால் ஏற்பட்ட நிம்மதியின்மை சீராகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமா வார்கள். தொழில் வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சியில் அவசரம் காட்டாமல் யோசித்து செயல்படவும். அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு தொழிலுக்கு சிக்கலை ஏற்படுத்தாமல் உண்மையாக உற்சாகமாக, உழைக்க வேண்டும்.ஆரோக்கியத்தை பேணுவது அவசியம். உடன் பிறந்தவர்களின் திருமணத்தை நடத்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருக்கார்த்திகை நாளில் விரதம் இருந்து சிவனுக்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்து வழிபடவும்.

    மீனம்

    தடை தாமதங்கள் அகலும் வாரம். ஜென்ம ராசியில் நின்ற சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கும். விலகிச் சென்ற உறவுகள் வந்து இணைவார்கள். திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தப் போகிறது. எந்த தொழிலாக இருந்தாலும் ஏற்றமும் வருமானமும் அதிகரிக்கும். வியாபாரத்திலும் தொழிலிலும் புதிய சாதனை படைப்பீர்கள். கழுத்தை நெரித்த கடன்களை கவனமாக அடைப்பீர்கள். பொய்யான கெட்ட வதந்திகளால் ஏற்பட்ட அவமானம் அகலும். மனதை வருத்திய கோர்ட், கேஸ் பிரச்சினை சுமூகமாகும்.பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும்.சிலருக்கு அரசின் நலத்திட்டத்தில் வீடு, மனை கிடைக்கும். தாய்மாமன் உதவியால் தாய் வழிச் சொத்தில் நிலவிய குழப்பங்கள் சுமூகமாகும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.ஓய்வு, நிம்மதியான தூக்கம், சந்தோஷம் என இந்த வாரத்தை மகிழ்ச்சியாக கடப்பீர்கள். பெண்களுக்கு மாமியார், மாமனாரின் ஒத்துழைப்பால் மன நிம்மதி உண்டாகும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    • ரிஷபம் சிந்தித்து நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரம்.
    • கன்னி சிக்கல்கள் மற்றும் சிரமங்களிலும் இருந்து விடுபடும் காலம்.

    மேஷம்

    வேகத்துடன், விவேகத்தையும் கடைபிடிக்க வேண்டிய வாரம்.ராசி அதிபதி செவ்வாய் 2,7ம் அதிபதி சுக்ரன் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனுடன் சேர்ந்து அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராசி அதிபதி செவ்வாய்க்கு 2, 5,8 எனும் பணபரஸ்தான சம்பந்தம் இருப்பதால் பணத் தேவைகள் பூர்த்தியாகும். வராக் கடன்கள் வசூல் ஆகும். பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சனைகள் அகலும்.தன வரவு திருப்தி தரும். ஆடம்பர செலவினை குறைத்து சேமிப்பிற்கு முயற்சி செய்வீர்கள்.குடும்ப முன்னேற்றம் கூடும். பழைய கடன்களை அடைப்பீர்கள். புதிய உத்தியோக முயற்சிகள் பலிக்கும். ஆரோக்கியத் தொல்லைகள் அகலும்.சகோதர சகோதரிகளால் நன்மைகள் உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து தொடர்பான வம்பு வழக்குகள் உருவாக லாம்.வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.சில பெண்களுக்கு மாங்கல்ய தோஷத்தால் திருமணத்தடை இருக்கும்.வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். சிறிய முதலீட்டில் அதிக லாபம் பார்ப்பீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு நட்புக்கரம் நீட்டுவார்கள். காலபைரவர் வழிபாடு நன்மையை அதிகரிக்கும்.

    ரிஷபம்

    சிந்தித்து நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரம்.ராசிக்கு சூரியன், செவ்வாய், சனி, சுக்ரன் பார்வை உள்ளது. சனி பகவான் வக்ர நிவர்த்தி பெறுவதால் புதிய தொழில் ஒப்பந்தம் மூலமாக அதிகமான வருவாய் பெருக்கம் ஏற்படும். சிலர் புதிய கூட்டுத் தொழில் முயற்சியில் ஈடுபடலாம். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். அசுப கிரகங்களின் பார்வை ராசிக்கு உள்ளதால் இனம் புரியாத மனசஞ்சலம் இருக்கும்.ஓய்வின்றி உழைக்க நேரும். பல புதிய மாற்றங்கள் உண்டாகும். வீடு, வேலை மாற்றம் அல்லது திடீர்ப் பயணங்கள் உருவாகும். உடன் பிறந்தவர்களுடன் சிறு சிறு மனத்தாங்கல் உருவாகும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் லாபகரமா இருந்தாலும் விரயங்கள் அதிகரிக்கும்.திருமண வயதினருக்கு வரன்பார்க்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். 25.11.2025 அன்று காலை 4.27 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் எழலாம். எனவே, அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு இன்னல்களை நீக்கும்.

    மிதுனம்

    எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறும் வாரம்.வார இறுதியில் புதன்,சனி வக்ர நிவர்த்தி பெறுகிறார்கள். தன ஸ்தானத்தில் குரு பகவான் என முக்கிய கிரக நிலவரங்கள் மிதுன ராசிக்கு மிக சாதகமாக உள்ளது. சிலரது பிள்ளைகளுக்கு திருமண யோகம் உண்டாகும். பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சையில் மூத்த சகோதரத்தின் ஆதரவு மகிழ்ச்சியைத் தரும். சுக, போக பொருட்களின் சேர்க்கை இரட்டிப்பாகும். சிலரின் வாழ்க்கைத் துணைக்கு அரசு வேலை கிடைக்கும். திருமணத் தடை அகன்று நல்ல வரன்கள் வீடு தேடி வரும். விண்ணப்பித்த வீடு, வாகனக் கடன் இந்த வாரம் கிடைக்கும். 25.11.2025 அன்று காலை 4.27 மணி முதல் 27.11.2025 அன்று மதியம் 2.07 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்களை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது.மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வதை குறைத்தால் எந்தவித இன்னல்களும் வராது.நவகிரக அங்கார கனை வழிபடவும்.ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சீனிவாச பெருமாளை வழிபடுவதால் நன்மைகள் உண்டாகும்.

    கடகம்

    புதிய நம்பிக்கை பிறக்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை உள்ளது.அனுகூலமற்ற காரியங்களைக் கூட சுமூகமாக முடித்துக் காட்டுவீர்கள். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும்.உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.மன உளைச்சலைத் தந்த பணியிலிருந்து விடுபட்டு புதிய நல்ல பணியில் சேருவீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிரமங்கள் படிப்படியாக குறையும்.வீடு, வாகன வசதிகள் மேம்படும். அரசு ஊழியர்கள் தடைபட்ட பதவி உயர்விற்கு முயற்சிக்கலாம். வழக்குகள், பஞ்சாயத்துகள் சாதகமாகும். மாமன், மைத்துனன் வழி மனக்கசப்புகள் மாறும். சுபமங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். வீண் விரயங்கள் மட்டுப்படும். வைத்தியச் செலவு குறையும். பிள்ளைகளின் எதிர் காலம் குறித்த திட்டங்கள் வெற்றியில் முடியும். 27.11.2025 அன்று மதியம் 2.07 மணி முதல் 29.11.2025 அன்று இரவு 8.33 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பச் சுமை கூடும். வரவை விட செலவு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். சிவ வழிபாடு செய்வதால் நிம்மதி கூடும்.

    சிம்மம்

    விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலம். சனி பகவான் வக்ர நிவர்த்தி பெற்று அஷ்டம ஸ்தானத்தை நோக்கி நகர்ந்து செல்கிறார்.சிலருக்கு விபரீத ராஜயோகமாக அதிர்ஷ்ட சொத்து அல்லது பணம் கிடைக்கும்.சிலர் பூமியை விற்று கடன் அடைக்கலாம். சிலருக்கு தேவையற்ற வம்பு, வழக்குகள் வாசல் கதவை தட்டும். நல்ல வாய்ப்புகள் தடைபடும்.சிலர் பணியில் ஏற்பட்ட வீண் பழியால் வேலையில் இருந்து விலகலாம். நண்பர்களும் பகைவர்களாக மாறும் காலம் என்பதால் யாரிடமும் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. சிரத்தை மற்றும் கடின உழைப்பால் தொழில் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் பெற முடியும்.சனி, செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் விவசாயிகள் பயிர்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். கூட்டுக் குடும்பம் அல்லது கூட்டுத் தொழிலில் பிரிவினை உண்டாகலாம்.29.11.2025 அன்று இரவு 8.33 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் மேலதிகாரி அதிக பணிச்சுமையை வழங்கலாம்.சிலர் ஆரோக்கியத்தை சீராக்க மாற்று மருத்துவ முறையை நாடலாம். விநாயகரை வழிபடுவதால் தீயவினைகள் அகலும்

    கன்னி

    சிக்கல்கள் மற்றும் சிரமங்களிலும் இருந்து விடுபடும் காலம். ராசி அதிபதி புதன் வக்ர நிவர்த்தி பெறுகிறார். லாப ஸ்தானத்தில் நிற்கும் குரு பகவான் என கிரக நிலைகள் மிக மிக சாதகமாக உள்ளது.பண வரவு திருப்தியாக இருக்கும்.பொருளாதாரத்தில் நிலவிய ஏற்ற இறக்க மந்த நிலை மாறும். தடைபட்ட திருமண முயற்சிகள் துரிதமடையும். விலகிச் சென்ற உறவுகள், உடன் பிறந்தவர்கள் மீண்டும் வந்து இணைவார்கள்.ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.உயர் அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். சிலருக்கு நீண்ட தூரத்திற்கு இடமாற்றம் ஏற்படும். அல்லது வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.வர வேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபம் அதிகரிக்கும். வயோதிகர்களுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கும்.புதிய எதிர்பாலின நட்பால் அசவுகரியங்கள் ஏற்படும். தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்கவும்.

    துலாம்

    புத்தி தெளிவு ஏற்பட்டு செயல்திறன் அதிகரிக்கும் வாரம்.ராசியில் வக்ர நிவர்த்தி பெற்ற புதன் உள்ளார்.புதிய நம்பிக்கை பிறக்கும். எதிர்காலத் தேவைகளுக்கு இப்பொழுதே சேமிப்பீர்கள்.சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் தங்கம், வெள்ளி, அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். சுய தொழில் பற்றிய ஆர்வம், எண்ணம் அதிகரிக்கும்.திருமண முயற்சி சாதகமாகும்.பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாமல் வருந்தியவர்களுக்கு ஊதிய உயர்வு உண்டாகும். கலைத்துறையினர் கடுமையாக உழைத்தால் நல்ல பலனை அடைய முடியும். கணவன் மனைவி கருத்தொற்றுமை சிறப்படையும். பிள்ளைகளிடம் இருந்து எதிர்பாராத அன்பு பரிசு கிடைக்கும்.எட்டாம் இடத்திற்கு சனி செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் தேவையில்லாமல் யாருக்கும் வாக்கு கொடுக்க கூடாது. ஜாமின் போடக்கூடாது.தந்தையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. மகாலட்சுமி வழிபாட்டால் அபிவிருத்தி பெற முடியும்.

    விருச்சிகம்

    தடை, தாமதங்கள் விலகும் வாரம். ராசியில் உள்ள சூரியன் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கைக்கு குரு பார்வை உள்ளது. நல்ல எண்ணங்கள் சிந்தனைகள் மூலம் முன்னேற்ற பாதையை நோக்கிச் செல்வீர்கள். தடைபட்ட அனைத்து பாக்கியங்களும் கூடிவரும்.வீடு, வாகன யோகம்,புத்திர பாக்கியம் உண்டாகும்.வீட்டில் திருமணம் போன்ற சுப வைபவங்களை எதிர்பார்க்கலாம். பூமி, மனையின் மதிப்பு கூடும். தந்தை வழிச் சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. அண்டை அயலாருடன் இருந்த சண்டை சச்சரவுகள், பிணக்குகள் மறையும். ஏழாம் இடத்திற்கு சனி செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையா ளர்கள், வாழ்க்கை துணையை அனுசரித்துச் செல்வது நல்லது. ஓரிரு வாரங்களுக்கு திருமணம் முயற்சியை ஒத்தி வைப்பது நல்லது.சிலருக்கு பருவநிலை மாற்றம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும்.முருகன் வழிபாட்டால் நினைத்ததை அடைய முடியும்.

    தனுசு

    நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் உச்சம் பெற்று தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளா தாரத்தில் மேன்மையான பலன்கள் உண்டாகும்.குடும்பத்தில் நிம்மதியும் அமைதியும் நிலவும்.பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.மனமகிழ்ச்சி தரும் சுப நிகழ்வுகள் நடக்கும்.ஆடம்பர விருந்து உபசரணைகளில் கலந்து கொள்ளக்கூடிய அமைப்பு உள்ளது. எண்ணங்களில் தெளிவு ஏற்பட்டு எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுவீர்கள்.மதிப்பு மிகுந்த கவுரவப் பதவிகள் தேடி வரும்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சிரத்தையுடன் செயல்படுவீர்கள். இது அர்த்தாஷ்டமச் சனியின் காலம் என்பதால் புதிய ஒப்பந்தங்களில் புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பிள்ளைகள் தொழில், கல்விக்காக இடம் பெயரலாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் தற்போது கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி நிம்மதியாக பணிபுரிய முடியும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மைகளுக்கு உதவியாக இருக்கும்.

    மகரம்

    முன்னேற்றமான வாரம்.ராசிக்கு உச்ச குருவின் பார்வை உள்ளது. ஆன்ம பலம் பெருகும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.ஆழ்ந்த அறிவும் சிந்திக்கும் திறனும் கூடும். சமூக அந்தஸ்து நிறைந்த முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும்.விலகி சென்ற உறவுகள், நட்புகள் தேடி வருவார்கள். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும்.மனச் சங்கடம் மறையும். செயற்கை கருத்தரிப்பு முறையை நாடுபவர்கள் சுய ஜாதகத்தின் படி செயல்படவும். சுப விரயங்கள் அதிகரிக்கும்.சிலர் தொழில், உத்தியோகத்திற்காக வெளிநாடு வெளி மாநிலத்திற்கு இடம் பெயரலாம்.சொத்து வாங்கும், விற்கும் முயற்சி ஈடேறும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கடன் தொகை வெகுவாக குறையும்.வாழ்க்கைத் துணைக்கு விரும்பிய வேலை கிடைக்கும் வியாபாரிகளுக்கு கூட்டாளிகளால் ஏற்பட்ட மறைமுக எதிர்ப்புகள் அகலும். அழகான ஆடம்பரமான ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். அஷ்டலட்சுமி வழிபாட்டால் அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகும்.

    கும்பம்

    சுமாரான வாரம்.ராசி அதிபதி சனி பகவான் வக்ர நிவர்த்தியாகிறார். ராசிக்கு செவ்வாய் ராகு சம்பந்தம் உள்ளது.முன்னோர்களின் சொத்தில் முறையற்ற பங்கீடு கிடைக்கும். உடல் சோர்வு, அலுப்பு ஏற்படும். பணியில் சிறு தொய்வு ஏற்படும். வேலையில், தொழிலில் விரைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.புதிய தொழில் முயற்சிகளைத் தவிர்க்கவும். பொருளாதார விஷயத்தில் நிதானமும் கவனமும் அவசியம். சிலரின் பிள்ளைகளுக்கு தொழில் முன்னேற்றமோ, அரசாங்கப்பணியோ தேடி வர வாய்ப்புள்ளது. கடன் வாங்குவதை தவிர்க்கவும். ஏழரைச் சனியால் எவ்வளவு இடையூறுகள் நெருக்கடியான சூழ்நிலை வந்தாலும் வாழ்க்கைத் துணையின் ஆதரவு ஆறுதலாக இருக்கும். குழந்தை பேற்றில் உள்ள குறைபாட்டை நீக்க மருத்துவ உதவியை நாடலாம். சிலருக்கு சிறு சிறு ஆரோக்கிய தொல்லை ஏற்படும். பெண்களுக்கு விரும்பிய வேலையில் சேர உத்தரவு வரும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும்.கார்த்திகை மாத சோம வார சங்கு பூஜையில் கலந்து கொள்ள சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும்.

    மீனம்

    தெளிவும், நம்பிக்கையும் உண்டாகும் வாரம்.ராசிக்கு உச்ச குருவின் வக்கிர பார்வை உள்ளது.ராசி அதிபதி குரு தனது ஒன்பதாம் பார்வையால் ராசியை பார்ப்பதால் காலமும், நேரமும் உங்களுக்கு மிகச் சாதகமாக உள்ளது. ஜனன கால ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருந்தால் ஜென்மச் சனியால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது.வீடு, மனை வாங்கும் சிந்தனை மேலோங்கும். விடாமுயற்சி ஒன்றே வெற்றி தரும் என்ற தாரக மந்திரத்தை மனதில் குறிக்கோளாக வைத்து செயல்படுவீர்கள். சில நன்மைகளும், மாற்றங்களும் நடக்கும்.தகப்பனார் வழியில் ஆதரவும், அனுகூலமும் உண்டாகும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வயதிலும் அனுபவத்திலும் சிறியவர்கள் கூட அறிவும், ஆலோசனை வழங்கிய நிலைமாறும். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்ப டுத்துவது புத்திசா லித்தனம். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகளும் துயரங்களும் விலகும். ஆண் வாரிசு உருவாகும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். வாழ்க்கை துணை மூலம் சொத்துக்கள் சேர வாய்ப்புள்ளது. தினமும் குரு கவசம் கேட்க வேண்டும் அல்லது படிக்க வேண்டும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    • கடகம் கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட இன்னல்கள் குறையும் வாரம்.
    • கன்னி முயற்சிகள், எண்ணங்கள் நிறைவேறும் வாரம்.

    மேஷம்

    நல்ல வாய்ப்புகள் தேடி வரும் வாரம். ராசிக்கு 2,7-ம் அதிபதி சுக்ரன் பார்வை உள்ளது. லட்சியம் நிறைவேற சில கொள்கைகளை பின்பற்றுவீர்கள். தொட்டது துலங்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். ராசி அதிபதிக்கு குரு பார்வை இருப்பதால் புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும்.தொழில் துறையில் புதிய முதலீடுகள் செய்ய இது உகந்த காலமாகும். தொழில் மூலம் நல்ல வருவானம் கிடைக்கும். சுயஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும். திருமண தடை அகலும். குடும்பத்தில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்வுகள் நடைபெறும். பெண்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். கடன் தொல்லை குறையும். 20.11.2025 அன்று அதிகாலை 4.14 முதல் 22.11.2025 மாலை 4.47 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கிரடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை கவனமாக கையாள வேண்டும். உலக வாழ்வில் பற்றற்ற நிலையை அடையச் செய்யும் பக்தி மார்க்கத்தில் மனம் லயிக்கும். பாவம், புண்ணியம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அமாவாசை அன்று சிவப்பு துவரை தானம் வழங்கவும்.

    ரிஷபம்

    விரும்பிய மாற்றங்கள் நிகழும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் தனது மற்றொரு வீடான துலாம் ராசியில் ஆட்சி பலம் பெற்றிருக்கிறார். சிலருக்கு பதவி மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம். தந்தை வழி உறவுகளிடம் முக்கிய பேச்சு வார்த்தையை நடத்த உகந்த நேரம். பெண்களுக்கு பிறந்த வீட்டு விசேஷத்திற்கு சீரும் அழைப்பும் வரும். தாய், தந்தை உடன் பிறப்புகளுடன் கூடி மகிழ்வீர்கள்.தாய்க்கும் மூத்த சகோதரிக்கும் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும். உடல் நலக் குறைபாடு இருப்பவர்கள் உரிய மருத்துவரை அணுகவும். நெருங்கிய உறவில் திருமண முயற்சி கைகூடும். வீடு, மனை தொடர்பாக நீங்கள் எதிர்பார்த்த நற்செய்திகள் உங்களை திக்கு முக்காடச் செய்யும். தகவல் தொடர்பு சாதனங்களான வாட்ஸ் அப், பேஸ்புக் போன்றவற்றை முக்கிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது நல்லது.22.11.2025 மாலை 4.47 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். இதனால் சிலருக்குக் காரியத்தடைகள், கால தாமதங்கள் ஏற்பட்டாலும் வெற்றி நிச்சயம்.ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் வழிபாட்டால் நிம்மதியை அதிகரிக்க முடியும்.

    மிதுனம்

    சுமாரான வாரம். ராசி அதிபதி புதன் 6-ம் இடத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். சரியான திட்டங்கள் தீட்டி செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம். சொத்து வாங்குவது, விற்பது, திருமணம் போன்ற முக்கிய முடிவுகளை புதன் வக்ர நிவர்த்தி வரை ஒத்திப் போடவும். வேலை இழந்தவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.சிலர் வெளியூர், வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு இடம் பெயர நேரும். அரசுப் பணியாளர்கள் தங்கள் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றித் திசையை நோக்கிச் செல்லும். கமிஷன் தொழில், தரகு, பங்குச் சந்தை, ஜோதிடம் போன்ற தொழிலில் இருப்பவர்களுக்கு பெயர், புகழ், அந்தஸ்து அதிகரிக்கும்.சிலர் ரிலாக்சாக மன மாற்றத்திற்காக சொந்த ஊர் சென்று உற்றார் உறவுகளைக் கண்டு வரலாம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். சுபகாரிய நிகழ்ச்சிகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். உயர்ந்த வாகன வசதி அமையும். சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.

    கடகம்

    கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட இன்னல்கள் குறையும் வாரம். ராசியில் உள்ள வக்ர குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாயையும் பாக்கியாதிபதி சனிபகவானையும் பார்க்கிறார். பூர்வீகம் தொடர்பான பிரச்சினைகள் சர்ச்சைகள் அகலும். பல வருடங்களாக விற்க முடியாமல் கிடந்த பூர்வீகச் சொத்துக்கள் விற்கும். அரசியல்வாதிகளிடமும், அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும்.சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் கிடைக்கும். பிள்ளைகள் கல்வி, வேலை விசயமாக இடம் பெயர நேரும். திருமணத்திற்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். கலைஞர்களுக்கு வேலைப்பளு மிகுதியாகும். மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கலாம். முதியவர்களுக்கு அரசின் உதவித்தொகை, பென்சன் கிடைக்கும். பங்குச் சந்தை முதலீட்டில் நல்ல ஆதாயம் கிடைக்கும். அம்மன் வழிபாட்டால் மேன்மை அடைய முடியும்.

    சிம்மம்

    லாபகரமான வாரம். ராசி அதிபதி சூரியன் தனலாப அதிபதி புதனுடன் சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கும் அற்புதமான வாரம். புதுப்புது முயற்சிகளில் ஈடுபட்டு நல்ல யோகமான பலனை பெறக்கூடிய நேரம். நிதி நிலையை நன்கு திடப்படுத்திக் கொள்வீர்கள். புதிய வெளிநாட்டு தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். பங்குதாரர் மூலம் புதிய தொழில் முதலீடு உண்டாகும். வியாபாரிகள் நல்ல வாய்ப்புகள் மூலம் லாபத்தை அதிகரித்துக் கொள்வர். தொழிலாளர்கள் ஆதரவால் உற்பத்தி பெருகி, லாபமும் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். வேலை இழந்தவர்கள் புதிய வேலையில் சேரும் அமைப்பு உள்ளது. மதிப்பு மிகுந்த நல்ல சொத்துக்கள் சேரும். புதிய இரண்டு, நான்கு சக்கர வாகனம் வாங்குவீர்கள். அனைத்து விதமான சாதகமான பலன்களும் சிம்ம ராசியினருக்கு உண்டு. வங்கித் தொழில், ஜோதிடம், புத்தக விற்பனை, ஆலோசனை வழங்கும் கன்சல்டிங் நிறுவனங்கள், காலி மனை விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வளர்ச்சி பெறும். சிலருக்கு சுகர், பிரஷர், மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் ஆரம்பமாகும். தனலட்சுமியை வழிபட தனசேர்க்கை கூடும்.

    கன்னி

    முயற்சிகள், எண்ணங்கள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி புதன் வெற்றி ஸ்தானத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். நல்லவர்களுடன் நட்பு ஏற்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். அரசு உத்தியோகத்திற்கு பணி நியமன ஆணை கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த அனைத்து சிக்கலும் தீரும். குடும்ப உறவுகளுடன் கருத்து ஒற்றுமை அதிகமாகும். நீண்ட நாட்களாக உங்கள் எதிர்பார்ப்பிற்கு கிடைக்காத வரன் இப்பொழுது கிடைக்கும். சில விவாகரத்தான தம்பதிகள் மீண்டும் சேரும் வாய்ப்பு உருவாகும். சிலருக்கு அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு உண்டாகும். கண்டகச் சனியினால் ஏற்பட்ட பாதிப்புகள் சீராகும்.பங்குச் சந்தையில் அதிக முதலீடு வைத்து இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இழுபறியில் இருந்து வந்த நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். வெகு நாட்களாக பாதித்த கடன் தொல்லையில் இருந்து மீள தேவையான நிதி உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியகேடு வைத்தியத்தில் சீராகும். புதன் கிழமை சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.

    துலாம்

    இன்னல்கள் அகலும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுகிறார். மனதில் திடமான சிந்தனைகள் தோன்றும். வெற்றி புகழ் மதிப்பு, மரியாதை கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். செல்வச் செழிப்பில் மிதப்பீர்கள். தீய பழக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மன சங்கடங்கள் குறையும். பாக்கிய பலத்தால் அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். தொழில் துறையினருக்கு அபிவிருத்தி உண்டு. பரம்பரை குலத் தொழிலில் மாற்றமும் ஏற்றமும் உண்டு. அரசுப் பணியாளர்கள் பேச்சை மூலதனமாகக் கொண்டவர்களின் தனித்திறமை வெளிப்படும். தந்தை பூர்வீகச் சொத்துக்கு உயில் எழுதுவார்கள். சிலர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களின் பிடியில் கவுரத்திற்காக வழியச் சென்று அகப்படுவார்கள். பணவசதி சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். ஶ்ரீ ரங்கநாதரையும் தாயாரையும் வணங்கி வர நலம் பெருகும்.

    விருச்சிகம்

    தடைபட்ட நல்ல முயற்சிகள் துரிதமாகும் வாரம். ராசியில் உள்ள சூரியன் செவ்வாய், புதனுக்கு குரு பார்வை உள்ளது. சூரியனை குரு பார்ப்பதால் எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் உருவாகும். ஆன்மபலம் பெருகும். பூர்வீக குலத் தொழிலில் ஏற்றமான பலன் உண்டு. வழக்கத்தைவிட உபரி வருமானம் அதிகளவில் உண்டாகும். கூட்டுத் தொழில் நல்ல வளர்ச்சி அடையும். புதியதாக தொழில் தொடங்குபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். அலுவலகப் பணி அதிகரிக்கும். புதிய பொறுப்புகள், பதவிகள் கிடைக்கும். சிலர் வேலையை மாற்றலாம். வீடு கட்டும் பணி துரிதமாகும். சிலர் வீடு, மனை அல்லது புதிய வாகனம் வாங்கலாம். குடும்ப சுப விசேஷங்களுக்கு எதிர்பார்த்த தொகை ஓரிரு நாட்களில் கிடைக்கும். பெண்களுக்கு கணவரிடம் இருந்து எதிர்பாராத வெளிநாட்டு பரிசுகளும் அன்பளிப்புகளும் கிடைக்கும். அழகு ஆடம்பர துணி நகைகள் கிடைக்கும். குல இஷ்ட தெய்வ வழிபாடு நன்மைகளை மிகைப்படுத்தும்.

    தனுசு

    செல்வாக்கு உயரும் வாரம். ராசிக்கு தன ஸ்தான அதிபதி சனியின் பார்வை உள்ளது. வெகு சில நாட்களில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைகிறார். வருமானம் தரக்கூடிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கைவிட்டுப் போனது எல்லாம் தேடி வரும். பங்குச் சந்தை லாபம், அதிர்ஷ்ட பணம், சொத்துக்கள் என எதிர்பாராத ராஜ யோகங்கள் ஏற்படலாம். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். வீடு வாகன யோகம் சிறப்பாக அமையும். சிலர் பழைய வேலையை விட்டு புதிய வேலைக்கு செல்லலாம். சுறுசுறுப்புடன் செயல்பட்டாலும் அலைச்சல், அசதி மன சஞ்சலம், பய உணர்வு மிகுதியாக இருக்கும். ஒரு சில நேரங்களில் சின்ன சின்ன சங்கடங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் சமாளித்து விடுவீர்கள். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். மனமும், உடலும் உற்சாகமாக இருக்கும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். பிள்ளைகளின் கல்வி ஆர்வம், முன்னேற்றம் மன நிம்மதி தரும். கார்த்திகை மாதம் சிவனை வழிபட அனைத்து விதமான சுப பலன்களும் கூடி வரும்.

    மகரம்

    தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாரம். ராசிக்கு அதிசார வக்ர குருவின் சமசப்தம பார்வை உள்ளது. இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்ம பலம் கூடும். வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருமணம், குழந்தை பேறு, வேலை வாய்ப்பு சொத்துச் சேர்க்கை போன்றவற்றில் நிலவிய தடைகள் அகலும். புதிய பொறுப்புகளையும் சவால்களையும் சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட இன்னல் தீரும். தொழில், உத்தியோக நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். பத்திரிக்கை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளின் பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்ய உகந்த காலம். பூர்வீகச் சொத்தில் நிலவி வந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும். வாலிப வயதினர் காதல் போன்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது. கடந்து வந்த காலங்களில் நடந்த எதிர்மறையான சம்பவங்களை மறந்து நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொண்டால் வாழ்க்கை வளமாகும். குல தெய்வ, இஷ்ட தெய்வ பிரார்த்தனைகளை நிவர்த்தி செய்வீர்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் துர்க்கை அம்மனை வழிபடவும்.

    கும்பம்

    சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசியில் ராகு பகவான் உள்ளார். தன, லாப அதிபதி குரு பகவான் ராசிக்கு 6ல் வக்ர கதியில் உள்ளார். குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடு நிலவும். சில நேரங்களில் உறவுகளுக்காக சூழ்நிலைக் கைதியாக வாழலாம். கண் திருஷ்டி மற்றும் காரியத் தடை உண்டாகும். வாழ்க்கையை பாதிக்கும் புதிய முயற்சிகளை தவிர்த்தல் நன்மை தரும். எந்த செயலையும் பல முறை யோசித்து திட்டத்தை செயல்படுத்தும் தைரியம் இருந்தாலும் கோபம் கூடவே இருந்து குழி பறிக்கும். உடன் பிறந்தவர்களுடன் குறிப்பாக இளைய சகோதரத்துடன் கருத்து வேறுபாடு வரும். விட்டுக் கொடுத்து செல்லும் போது பின்நாட்களில் வரும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். குடும்ப உறவுகளிடம் பழைய கதையைப் பேசி வம்பை வளர்க்காமல் இருந்தால் மன நிம்மதி நிலைக்கும். கணவன், மனைவி குடும்ப பிரச்சினைகளை தங்களுக்குள்ளே தீர்த்து கொள்தல் நலம். வீடு மாற்றம், ஊர் மாற்றம் நாடு மாற்றம் வரலாம்.17.11.2025 அன்று மதியம் 3.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நடந்ததை நினைத்து மனம் வருந்துவார்கள் அல்லது நடக்காததை நடப்பது போல் நினைத்து பயப்படுவார்கள். சிவ வழிபாடு செய்யவும்.

    மீனம்

    தடை தாமதங்கள் அகலும் வாரம். ராசி அதிபதி குருபகவான் தன் வீட்டைத் தானே பார்க்கிறார். அனுபவ அறிவு, தன்னைத்தானே உணரும் சக்தியும் கூடும். தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களையும் அடைவீர்கள். சகோதர, சகோதரிகளின் ஒற்றுமை பலப்படும். திருமணம், குழந்தை பேறு, பேரன், பேத்தி, வீடு, வாகன யோகம், பொன், பொருள் சேர்க்கை என பல்வேறு பாக்கிய பலன்கள் நடக்கும். தேவைக்கேற்ற தன வரவால் குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தாய்வழிச் சொத்து தேடி வரும். தேவையற்ற கற்பனை, பயங்கள் அகலும். மன சஞ்சலமின்றி நிம்மதியாக தூங்குவீர்கள். தாய் வழிச் சொத்தை பிரிப்பதில் இருந்த குறுக்கீடுகள் அகலும். அடகு வைத்த நகைகள், சொத்துக்களை மீட்பீர்கள். 17.11.2025 அன்று மதியம் 3.35 முதல் 20.11.2025 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உழைப்பவர் நீங்களாக இருந்தால் ஊதியம் பெறுபவர் வேறொருவராக இருப்பார்கள். நிறைய அலைச்சலும், விரயச் செலவும் உண்டாகும். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாது போன்ற மன வருத்தம், சங்கடங்கள் நீடிக்கும். வேலையில் மந்தத்தன்மை நிலவும். சிவபுராணம் படித்து சிவ, சக்தியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    • கன்னி தடைபட்ட அனைத்து சுப பலன்களும் தேடிவரும் வாரம்.
    • துலாம் சீரான முன்னேற்றம் உண்டாகும் வாரம்.

    மேஷம்

    வெற்றி மேல் வெற்றி உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் அஷ்டமஸ்தானத்தில் 3,6ம் அதிபதி புதனுடன் குரு பார்வையில் சஞ்சரிக்கிறார். தைரியம் வெற்றியைத் தரும். உடல் நலம் வைத்தியத்தில் சீராகும். கடன் பெற்று வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது பற்றி திட்டமிடுவீர்கள்.பத்திரப் பதிவு சுமூகமாகும்.சொத்துக்களின் மதிப்பு உயரும்.இழப்புகளை ஈடு செய்யக் கூடிய நல்ல சந்தர்ப்பங்கள் கூடி வரும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வு கிட்டும். சிலருக்கு தந்தையின் வாரிசு அரசு வேலை கிடைக்கும். திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப நிகழ்வுகள் நல்ல முறையில் நடக்கும். வழக்குகளில் தீர்ப்பு தள்ளிப் போகும். பெண்களுக்கு வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் மதிப்பு, மரியாதை உயரும். விலை உயர்ந்த ஆபரணங்களை கவ னமாக பாதுகாக்க வேண்டும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். சகோதர வகையில் நல்லது நடக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.வெற்றி மேல் வெற்றி உண்டாக விநாயகரை வழிபடவும்.

    ரிஷபம்

    மகிழ்ச்சியும் மனபலமும் கூடும் வாரம். ராசிக்கு செவ்வாய் மற்றும் வக்ர புதனின் பார்வை உள்ளது.இதுவரை உங்களை சூழ்ந்திருந்த வெறுமை அகலும். மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும். எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றியைத் தேடித் தரும். புதிய வாய்ப்புகள் உருவாகும். திருமணம், குழந்தை பேறு, வீடு, வாகன யோகம், பொன், பொருள் சேர்க்கை என பல்வேறு பாக்கிய பலன்கள் நடக்கப் போகிறது. காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும்.வருமானப் பற்றாக்குறைகள் அகலும். சொத்து வாங்கும், விற்கும் முயற்சி ஈடேறும். பிரமாண்டமான வீடு, வாகனம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி சிறக்கும்.பொருள் வரவு அதிகமாகும். வாராக்கடன் வசூலாகும்.இனிமை தரும் இடமாற்றங்களை சந்திப்பீர்கள். கற்ற கல்விக்கு ஏற்ற வேலை கிடைக்கும். பிள்ளைகளின் சுப நிகழ்வுப் பேச்சுக்கள் முடிவாகும். தடைபட்ட பத்திரப் பதிவுகள் நடக்கும். ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட அனைத்து விதமான நன்மைகளும் கூடிவரும்.

    மிதுனம்

    திட்டமிட்டு வெற்றி பெற வேண்டிய வாரம்.ராசி அதிபதி புதனும் 6,11-ம் அதிபதி செவ்வாயும் இருப்பது சற்று ஏற்ற இறக்கமான பலன்களை தரக்கூடிய அமைப்பாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்து முடிக்க கூடிய சூழல் உருவாகும். வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறைய துவங்கும். தொழில், உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயர வாய்ப்பு உள்ளது. விண்ணப்பித்த கடன் தொகை கிடைக்கக்கூடிய அமைப்பு உள்ளது. வைத்தியம் பலன் தரும். நோய் தாக்கம் குறையும். கூட்டுத் தொழிலில் இருப்ப வர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப திருமணத்திற்கு வரன் அமையும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். சித்தப்பா, மூத்த சகோதர, சகோதரி உதவியால் சில நல்ல காரியங்கள் நடக்கும்.போட்டி பந்தயங்களில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. பணம், கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். புதிய சொத்துக்கள், வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். தினமும் கந்த சஷ்டிகவசம் கேட்கவும்.

    கடகம்

    முன்னேற்றமான வாரம்.ராசியில் அதிசார குரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார்.நல்ல முன்னேற்றம் ஏற்படும். எல்லோரும் பாராட்டக் கூடிய நல்ல புண்ணிய காரியம் செய்வீர்கள். தொழில் மூலம் நல்ல பலன்கள் தேடிவரும். வெளிநாட்டு வேலை அல்லது தொழில் மூலம் பணவரவு கிடைக்கும். புதிய தொழில் கூட்டாளிகள் இணைவார்கள். கடக ராசியினர் வாழ்க்கையில் செட்டிலாகும் காலம். திருமணம் கூடி வரும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் போகிறது. அன்றாடம் கூலி வேலை செய்து சம்பாதித்த வர்கள் சொந்த தொழில் செய்து பெரும் வருமானம் ஈட்டும் நேரம். அடமானத்தில் இருந்த நகைகள்,சொத்துக்கள் மீட்கப்படும். புதிய அணிகலன்கள் ,அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். ராகு/கேதுக்களின் சஞ்சாரத்தால் சிறு மன சஞ்சலம் இருக்கும்.திருமண முயற்சி வெற்றி தரும்.சொந்த வீடு,வாகன கனவு நிறைவேறும்.ஜாமீன் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும். நீண்ட காலமாக தடைபட்ட உயர் ஆராய்ச்சி கல்வி வாய்ப்பு சாதகமாகும்.ஆரோக்கியம் சீராகும். தீர்த்த யாத்திரை சென்று வருவதன் மூலம் ஆன்ம பலம் பெருகும்.

    சிம்மம்

    தொட்டது துலங்கும் வாரம். ராசி அதிபதி சூரியன் நீச்சபங்க ராஜயோகம் பெறுகிறார்.சிம்ம ராசிக்கு மிகப் பெரிய யோகமாகும். கடந்த சில மாதங்களாக பட்ட கஷ்டத்திற்கு விடிவு காலம் பிறக்கப்போகிறது. சுகமும், சந்தோஷமும் அதிகரிக்கும். வெளியில் சொல்ல முடியாமல் இருந்த துக்கங்களும் துயரங்களும் விலகும்.வீடு அல்லது அலுவலகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படும். சிலர் வெளி மாநிலம் , வெளிநாட்டிற்கும் இடம் பெயரலாம். சகோதர சகோதரி மேல் அன்பு அதிகரிக்கும். வீடு, வாகன யோகம் சிறப்பாக உள்ளது. குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். ஆரோக்கியம் சீராகும்.கடன் பிரச்சினை குறையும்.தந்தையின் அனுசரணை கூடும். பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சைகள், வழக்குகள் ஏதேனும் இருந்தால் அவற்றில் சாதகமான முடிவு வரும். புத்தி சாதுர்யமான பேச்சுக்களால் காரியம் சாதிப்பீர்கள். சம்பள பாக்கிகள் வந்து சேரும்.வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும்.எதிரிகளை வெல்லும் வலிமை ஏற்படும்.படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும். கோபுர தரிசனம் செய்வதால் கோடி புண்ணியம் உண்டாகும்.

    கன்னி

    தடைபட்ட அனைத்து சுப பலன்களும் தேடிவரும் வாரம். குரு லாப ஸ்தானத்தில் அதி சாரமாக வக்கிரகதியில் சஞ்சரிப்பதால் வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் வழங்கக் கூடிய உப ஜெய ஸ்தானம் வலுப்பெ றுகிறது. உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டு. எதிர்பாராத வீடு, வாகனம் போன்ற சுப செலவு மிகுதியாகும். எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள். நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருந்த நிலை மாறும். மனத் தடுமாற்றம் நீங்கி காரியசித்தி உண்டாகும். புகழ், அந்தஸ்தை உயர்த்த அதிகம் உழைக்க நேரும். மனம் இலகுவாக இருக்கும். முகப் பொலிவு உண்டாகும்.பெண்களுக்கு மன உளைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும்.தாயின் அன்பும் ஆசீர்வாதமும் உங்களை மகிழ்விக்கும்.விரும்பிய கடன் தொகையை அரசுடைமை வங்கிகளில் பெறுவது உத்தமம். மந்தமாக இருக்கும் தொழில் மளமளவென வளரும்.அரசின் இலவச வீட்டு மனைத் திட்டத்தில் வீடு, மனை கிடைக்கும். பிள்ளைகளின் திருமணம்,உத்தியோகம்,தொழில், உயர்கல்வி போன்ற கவலைகள் நீங்கும்.கண்டகத்தில் சனி பகவான் நிற்பதால் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு முடிந்த உதவிகளை வழங்க தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி


     

    துலாம்

    சீரான முன்னேற்றம் உண்டாகும் வாரம்.ராசி அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுகிறார்.எடுத்த செயலில் இறுதிவரை போராடி வெற்றி பெறுவீர்கள். இதுவரை அனுபவித்து வந்த சங்கடங்கள் விலகி நிம்மதி பிறக்கும்.நிதானமாக சிந்தித்து திட்டமிட்டு செயல்படுவீர்கள். வாழ்நாள் லட்சியங்கள் கனவுகளை நிறைவேறக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும்.வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.தொழிலில் ஸ்திரத்தன்மை உண்டாகும். கோட்ச்சார கிரகங்கள் சாதகமாக இருக்கும் காலங்களில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். பெண்கள் குடும்பத் தகவல்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும்.கலைத்துறையினர் மற்றும் அரசியல்வாதிகளுக்கு மிகச் சாதகமான நேரம்.ஆண்களுக்கு மாமனார் மூலம் அசையும், அசையாச் சொத்துக்கள் கிடைக்கும்.உடன் பிறந்தவர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் மாறும். பெண்களுக்கு வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.கல்யாணக் கனவு நனவாகும்.திருமணம் புத்திர பாக்கியம் போன்றவற்றில் நிலவிய தடைகள் அகலும்.குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு சென்று வரவும்.

    விருச்சிகம்

    அனுகூலமான வாரம்.ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெறுகிறார். உடன் இணைந்த 8, 11-ம் அதிபதி புதன் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். பணபரஸ்தான இயக்கம் வலுவாக உள்ளதால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.லாட்டரி, பங்குச் சந்தை, உயில் சொத்து, பாலிசி முதிர்வு தொகை மூலம் பெரும் பணம் கிடைக்கும்.மூத்த சகோதர வழியில் சில பொருள் வரவு ஏற்படலாம். புதிய தொழில் முயற்சிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். குலத் தொழில் விருத்தியடையும். சிலர் புதிய இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை சீராகும். சிலர் கூட்டுக் குடும்பத்தில் இருந்து பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்தில் கிடைத்த பங்கு புகுந்த வீட்டில் கவுரவப்படுத்தும். 10.11.2025 அன்று பகல் 1.03 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய பணிகளை ஒத்தி வைக்கவும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.கோட்சார கிரகங்கள் சாதகமாக இல்லாத காலத்தில் மனிதனுக்கு பொறுமையும் தன்னம்பிக்கையும் மிக அவசியம். தினமும் முருகனை வழிபட வினைகள் தீரும்.

    தனுசு

    லட்சியமும், எண்ணங்களும் நிறைவேறும்.ராசியை தனம் வாக்கு குடும்பஸ்தான அதிபதி சனிப கவான் பார்க்கிறார்.லட்சியமும், எண்ணங்களும் கனவுகளும் நிறைவேறும்.மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும்.தைரியத்துடன் மனம் விரும்பும் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். புகழ், அந்தஸ்து, கவுரவம், பொன், பொருள், செல்வம், செல்வாக்கு என எல்லாவி தமான பாக்கிய பலன்களையும் சனி பகவான் பெற்றுத் தருவார். இடமாற்றம் இருந்தாலும் பதவி உயர்வும்,ஊதிய உயர்வும் கிடைக்காது.மேலதிகாரியின் தொல்லை அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள், நண்பர்களின் உதவி பக்க பலமாக இருக்கும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். எதிர்பாலினத்தவரிடம் கவனமாக பழக வேண்டும். 10.11.2025 அன்று பகல் 1.03 முதல் 12.11.2025 அன்று மாலை 6.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உறவுகளிடம் அமைதிப் போக்கினை கையாளவும். ஆரோக்கி யத்தை பேணவும்.ஆன்மீக வழிபாட்டில் கவனம் செலுத்தினால் மலை போல் வந்த துன்பம் பனி போல விலகும். தினமும் தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

    மகரம்

    மனச் சங்கடம் குறையும் வாரம். ராசிக்கு வக்ரகதியில் உள்ள அதிசார குருவின் பார்வை உள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டா கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும். வேற்று மொழி பேசுபவர்கள், வேற்று மதத்தினரின் நட்பு மற்றும் உதவிகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். வேலை மாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது புத்திசாலித்தனம். வீட்டில் மங்களகரமான சுப நிகழ்வுகள் நடக்கும்.திருமணத் தடை அகலும். உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி படிக்க முயற்சிப்பவர்களுக்கு நல் வாய்ப்பு உண்டாகும். பேரன், பேத்தி யோகம் கிடைக்கும்.கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். தந்தை தொழில் அல்லது உத்தியோகம் நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்வர். தொழிலில் பிரமாண்ட வளர்ச்சி உண்டாகும். நம்பிக்கையான, விசுவாசமான வேலை ஆட்கள் கிடைப்பார்கள். 12.11.2025 அன்று மாலை 6.35 முதல் 15.11.2025 அன்று அதிகாலை 3.51 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அலைச்சல் மிகுந்த பயணங்கள் மற்றும் மன சஞ்சலம் அதிகமாகும். ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.

    கும்பம்

    தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டிய வாரம்.ராசியில் உள்ள ராகுவிற்கு செவ்வாயின் 4-ம் பார்வை உள்ளது. கும்பத்திற்கு 3,10-ம் அதிபதியான செவ்வாய் ராசியை பார்ப்பது சுபமான பலன் அல்ல. கோபுர கலசம் போல உயர்வான எண்ணம் கொண்ட கும்ப ராசியினருக்கு இது சவாலான காலமாகும்.தைரியம் மிகுதியாக இருக்கும். மனபலம், நிம்மதி கூடும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.

    காது, மூக்கு, தொண்டை தொடர்பான ஆரோக்கிய கேடுகளை அறுவை சிகிச்சையால் சரி செய்ய உகந்த நேரம். சிலருக்கு பரம்பரை நோய்களான சுகர் பிரஷர் கை கால் மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் அதிகமாகும்.பாகப்பிரிவினையால் மன பேதம் மிகுதியாகும். ஒரு சிலர் உயில் எழுதுவார்கள். சிலர் எழுதிய உயில், ஆவணங்களில் திருத்தம் செய்வார்கள். 15.11.2025 அன்று அதி காலை 3.51 வரை சந்திராஷ்டமம் ஆரம்பிக்கிறது. சிலர் மன அமைதி மற்றும் நிம்மதிக்காக தீர்த்த யாத்திரை செல்ல திட்டமிடுவார்கள். இல் வாழ்க்கையில் பற்று குறையும். தினமும் ராகு காலத்தில் கால பைரவரை வழிபடுவதால் ஆயுள் ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும்.

    மீனம்

    மனதிற்கு நிம்மதியும் தன் நம்பிக்கையும் தரும் நிகழ்வுகள் நடக்கும் வாரம். ராசிக்கு அதிசார குருவின் ஒன்பதாம் பார்வை உள்ளது. ஆளுமை திறன் கூடும்.வெளியூர், வெளிநாட்டு வேலை வாய்ப்பை விரும்பியவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் ஆரம்பமாகிவிட்டது. புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். உத்தியோகஸ்தர்கள் ஒப்படைக்கப்பட்ட பணிகள் அனைத்தையும் எளிதில் முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள்.சிலர் தொழிலை ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு மாற்றலாம். 3,8-ம் அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவதால் அழகு, ஆடம்பர பொருட்கள் விற்கும் சில்லறை வியாபாரிகளுக்கு வியாபாரம் அமோ கமாக இருக்கும். சிலருக்கு ஆன்மீக நாட்டம் அதிகமாகும். தொலைந்து போன, திருடு போன, கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும். கடன் தொகையை சமாளிக்க தேவையான பொருள் உதவி கிடைக்கும். இளைய சகோதரருக்கு திருமணம் நடக்கும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

    செல்: 98652 20406

    • கடகம் அமோகமான மாற்றங்கள் உண்டாகும் வாரம்.
    • மீனம் எதிர்பாராத பணவரவு உண்டாகும் வாரம்.

    மேஷம்

    எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும் வாரம். ராசிக்கு 8ம்மிடமான அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்ற ராசி அதிபதி செவ்வாய் 3,6ம் அதிபதி புதனுடன் இணைந்து உள்ளார். பிறர் புகழ வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். சாமர்த்தியமாகப் பேசி முக்கிய காரியங்களை சாதிப்பீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டு. வங்கிக் கடன் கிடைப்பதில் இருந்த தடை, தாமதம் அகலும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக இருக்கும். கூட்டுத் தொழிலில் சற்று விட்டுக் கொடுத்து செல்லவும். கணவன் மனைவி விசயத்தில் சம்பந்தமில்லாத நபர்களின் குறுக்கீடு வரலாம். பங்குச் சந்தை ஆதாயம் மகிழ்ச்சி தரும். அடமான நகைகள் மீண்டு வரும். வாடகைக்கு போகாமல் இருந்த அசையாச் சொத்துக்களுக்கு புதிய வாடகைதாரர் கிடைப்பார்கள். அசையாச் சொத்துகளின் மதிப்பு உயரும். 7ம் அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவதால் திருமணத் தடை அகலும். காதல் திருமணம் முயற்சி வெற்றி தரும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். பவுர்ணமி அன்று திருச்செந்தூர் முருகனை வழிபடவும்.

    ரிஷபம்

    பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவதால் சூரியன் நீச்ச பங்கு ராஜயோகம் பெறுகிறார். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி தரும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் குறையும். உண்ண, உறங்க நேரம் இல்லாமல் உழைக்க நேரும். தொழிலில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வீர்கள். ஒரு சிலர் மனைவி பெயரில் வீடு, நிலம் வாங்கலாம். விரும்பிய உயர் கல்வி வாய்ப்பு சாதகமாகும். பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்வது சற்று கடினமாக இருக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையை பொறுமையாக கையாளவும். பார்த்துச் சென்றவரனிடம் இருந்து சாதகமான பதில் வரும்.திருமண முயற்சி சாதகமாகும். விவாகரத்து வழக்குகள் ஒத்திப் போகும். நிதானமும், நம்பிக்கையும் அனைத்து இன்னல்களிலும் இருந்து உங்களை காப்பாற்றும். குடும்ப பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். பவுர்ணமி அன்று மகாலட்சுமியை வழிபட பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும்.

    மிதுனம்

    நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம். ராசிக்கு 6-ம்மிடமான ருண,ரோக,சத்ரு ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்ற செவ்வாயுடன் ராசி அதிபதி புதன் சேர்ந்து நிற்பது சுபித்துச் செல்லக்கூடிய பலன் அல்ல. பங்குச் சந்தை வர்த்தகத்தை தவிர்க்கவும். குடும்ப உறவுகளுக்கு நண்பர்களுக்கு ஜாமின் பொறுப்பு ஏற்பதை தவிர்க்கவும். பணம் கொடுக்கல் வாங்கலுக்கு உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். வீடு, வாகன முயற்சி சித்திக்கும். புதிய வேலை வாய்ப்பு மன நிறைவைத் தரும். தாய்வழிச் சொத்து தேடி வரும். குடும்ப நிர்வாகச் செலவு மற்றும் சொந்த பந்தங்களின் இல்ல சுபச் செலவு என செலவுகளின் பட்டியல் கூடும். பிள்ளைகளின் திருமண முயற்சி வெற்றியைத் தரும். காதல் திருமணம் கைகூடும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கிடைக்கும்.கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் கிரகங்களின் இயக்கம் பாதிப்பை தராது. செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனை வழிபடவும்.

    கடகம்

    அமோகமான மாற்றங்கள் உண்டாகும் வாரம். ராசிக்கு 5ம் மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி பலம் பெற்றிருக்கிறார். அதிர்ஷ்ட பணம், பூர்வீகச் சொத்து கிடைக்க வாய்ப்புள்ளது.உயர் கல்வியில் இருந்த தடை தாமதங்கள் விலகும்.உபரி வருமானம் கிடைப்பதால் தாராளமாக செலவு செய்து சந்தோஷமாக இருப்பீர்கள். பங்குச் சந்தை ஆதாயமும் சேமிப்பும் அதிகரிக்கும். தாய்,தந்தை, சகோதரியிடம் இருந்த கருத்து வேற்றுமை அகலும்.ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மனதை மகிழ்விக்கும் சம்பவங்கள் நடக்கும். வேலையில் பதவி உயர்வு, பாராட்டு, இடப்பெயர்ச்சியும் கிடைக்கும். சிலர் கூட்டுத் தொழில் அல்லது சுய தொழில் துவங்கும் முயற்சியில் ஈடுபடலாம். பழைய பாக்கிகள்இ வசூலாகும். குலதெய்வத்திடம் ஒரு முக்கிய கோரிக்கை வைப்பீர்கள். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். புத்திர பாக்கியம் வாரிசு உருவாகும். புதிய சொத்துக்கள் சேர வாய்ப்புள்ளது. பொதுக் காரியங்களில் ஈடுபடும் ஆர்வம் கூடும். ஆலய தரிசனமும் புனித நதிகளில் நீராடும் பாக்கியமும் கிட்டும்.பவுர்ணமி அன்று குல தெய்வ வழிபாடு நல்லது.

    சிம்மம்

    தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வாரம்.ராசி அதிபதி சூரியன் நீச்சபங்க ராஜயோகம் பெறுகிறார். இதுவரை நிலையான வேலை, தொழில் இல்லாதவர்களுக்கு கூட வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் கிடைக்கும். அஷ்டமச் சனி உள்ளதால் வியாபாரம் சார்ந்த விசயத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணம் அறிந்து செயல்பட வேண்டும்.முதலீட்டாளர்களுக்கு வெளியூர், வெளிமாநில வேலை தொடர்புகளால் ஆதாயம் உண்டு. தொழிலில் வாக்கு சாதுர்யத்தால் லாபம் உண்டாகும். சேமிப்புகள் உயரும். அடமான நகைகள் வீடு வந்து சேரும். வராக்கடன் வசூலாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்ப உறவுகளின் அனுசரணையும் ஆதரவும் மகிழ்வைத் தரும்.சிலருக்கு புதிய வீடு, நிலம் போன்ற அசையாச் சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சையில் இருந்தவர்களுக்கு நோயின் தாக்கம் படிப்படியாக குறையும். திருமண வயதினருக்கு காலதாமதத் திருமணம் நல்லது. 4.11.2025 அன்று பகல் 12.34 மணி வரை சந்தி ராஷ்டமம் இருப்பதால் எதிர்மறை விவாதங்களைத் தவிர்த்து விடாமுயற்சி, வைராக்கியத்துடன் செயல்பட வேண்டும்.பவுர்ணமி அன்று சிவ வழிபாடு செய்யவும்.

    கன்னி

    வெற்றிகரமான வாரம்.ராசி அதிபதி புதன் வெற்றி ஸ்தானத்தில் வெற்றி ஸ்தான அதிபதி செவ்வாயுடன் சேர்க்கை பெற்றுள்ளார்.ஆட்சி பலம் பெறும் சுக்கிரனால் தனம், வாக்கு மற்றும் குடும்ப ஸ்தானம் பலப்படுகிறது. காழ்ப்புணர்ச்சியால், தவறான புரிதலால் பிரிந்த குடும்ப உறவுகள் உங்களை புரிந்து கொள்வார்கள். சில திட்டங்களை செயல்படுத்த போராடினாலும் முடிவில் வெற்றி வாகை சூடுவீர்கள். நீச்ச பங்க ராஜயோக சூரியனால் அரசின் சலுகைகளில் முன்னுரிமை உண்டு. விவசாயிகளுக்கு தடைபட்ட குத்தகைப் பணம் கிடைக்கும்.காலி மனை வியாபாரிகளுக்கு நல்ல ஆதாயம் உண்டு. இழுபறியில் நின்ற தந்தைவழிப் பூர்வீகச் சொத்துக்களின் முடிவு சாதகமாகும்.அசையாச் சொத்தை அடமானம் வைத்து தொழிலுக்கு பயன்படுத்துவீர்கள். 4.11.2025 அன்று பகல் 12.34 முதல் 6.11.2025 பகல் 11.47 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையைச் சோதிக்கும் பல்வேறு அனுபவங்களை சந்திக்க நேரும். எனவே பிறரிடம் பேசும் போது பொறுமை, நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. காவல் தெய்வங்களை வழிபடுவதால் அனைத்து விதமான சுப பலன்களும் உண்டாகும்.

    துலாம்

    சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படும் வாரம். ராசியில் ஆட்சி பலம் பெற்ற சுக்கிரனுடன் நீச்சபங்க ராஜயோகம் பெற்ற சூரியன் சஞ்சரிக்கிறார்.ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.மன அமைதி கூடும். வளர்ச்சிக்கான பாதை தென்படும்.முக்கிய தேவைகளுக்கு பண வரவு இருக்கும்.விரும்பிய கடன் தொகை கிடைக்கும்.குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் குறையும். உடன் பிறந்த வர்கள் உதவியாக இருப்பார்கள்.பாகப்பிரி வினை சுமுகமாகும். கலைத் துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும்,கவுரவமும் கிடைக்கும். பெண்களுக்கு புதிய தொழில் சிந்தனை உதயமாகும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். வழக்குகளில் திருப்பம் உண்டாகும். 6.11.2025 பகல் 11.47 முதல் 8.11.2025 பகல் 11.14 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நெருங்கிய நண்பர்கள் உறவுகளிடம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். அதனால், தேவையற்ற பிரச்சினைகள் மற்றும் கருத்து வேறுபாட்டை தவிர்க்கலாம். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் ஆத்ம பலம் கூடும்.

    விருச்சிகம்

    கற்பனைகள், கனவுகள் நனவாகும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்று 8,11ம் அதிபதி புதனுடன் சேர்க்கை பெற்றிருக்கிறார்.பணபர ஸ்தானங்கள் வலிமையாக இயங்குவதால் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவைப் பொறுத்தவரை பிரச்சினை இல்லாத வாரம். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். எதிர் கொள்ளும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்ற மும் உறுதி. இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அரசியல் பிரமுகர்களுக்கு தலைமையிட ஆதரவு உண்டு.தொழில் மாற்றம் செய்யும் சிந்தனை அதிகரிக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும்.சிலர் தவணை முறையில் புதிய வாகனம் வாங்கலாம். வீடு, மனை, திருமணம், மகப்பேறு போன்றவற்றின் மூலம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். 8.11.2025 அன்று பகல் 11.14 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் அக்கம் பக்கத்தினரின் தீய பார்வை யால் ஆரோக்கியம் குறையும். தினமும் விநாயகரை வழிபடுவதால் சகல ஐஸ்வர்யங்களும் கூடும்.

    தனுசு

    முன்னேற்றமான மாற்றங்கள் ஏற்படும் வாரம். ராசியை சனி பகவான் பார்க்கிறார். அஷ்டமஸ் தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி குரு பகவான் சனி பகவானை பார்க்கிறார். வியாபாரத்தில் எதிர் பார்க்கும் லாபம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். உழைப் பிற்கேற்ற ஊதியம் உண்டு. தொழிலில் ஏற்படும் போட்டியை சமாளிப்பீர்கள். சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கு சாத்தியமுண்டு. இரண்டாவது திருமண முயற்சி கைகூடும். அர்த்தாஷ்டமச் சனியின் காலம் என்பதால் புதிய முயற்சிகளை ஒரு முறைக்குப் பல முறை யோசித்து செய்ய வேண்டும். . பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் நன்மைகள் உண்டு.மாணவர்கள் ஆர்வமாக படிப்பார்கள். தான தர்மங்கள் செய்வ தால் நிம்மதி அதிகமாகும். பெண்க ளுக்கு சொத்துக்கள் மற்றும் சொந்தங்க ளால் மகிழ்ச்சி கூடும். தடைபட்ட புத்திர பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். பங்குச் சந்தை முதலீடு லாபம் தரும்.ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் நீங்கும். பவுர்ணமி அன்று சித்தர்களை ஜீவசமாதியில் வழிபடவும்.

    மகரம்

    இடப்பெயர்ச்சி பற்றிய சிந்தனை அதிகரிக்கும் வாரம். ராசிக்கு அதிசார குருவின் பார்வை உள்ளது. வீடு மாற்றம் வேலை மாற்றம் ஊர்மாற்றம் பற்றிய சிந்தனைகள் கூடும். விரும்பிய வேலை மாற்றம் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு சாதகமாகும்.அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். பணியில் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் வாங்கும் போது முக்கிய பத்திரங்களை படித்துப் பார்ப்பது அவசியம். நீண்டநாளாக நிறைவேற்ற முடியாமல் தடைபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் சந்தர்ப்பம் அமையும். பிள்ளைகள் கல்விக்காக இடம் பெயரலாம். கலைத் துறையினருக்குப் பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசியல்வாதிகள் மேலிடத்தின் சொல்படி கேட்டு நடக்க வேண்டும். தாய்வழிச் சொத்தில் இளைய சகோதரத்தால் ஆதாயம் உண்டு. இல்லத்தில் நடைபெறும் சுப நிகழ்வுகள் மன மகிழ்ச்சியை அதிகரிக்கும்.மருமகளால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும்.வருமானம் மகிழ்ச்சியை தரும் விதத்தில் இருக்கும்.ஆஞ்சநேயர் வழிபாட்டால் இன்னல்கள் அகலும்.

    கும்பம்

    திட்டமிட்ட காரியங்கள் வெற்றியில் முடியும் வாரம்.ராசியில் உள்ள ராகுவை 3,10ம் அதிபதி செவ்வாய் பார்க்கிறார். எந்த ஒரு செயலும் தொடங்கும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு கிடைக்கும் வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சிரமங்கள் படிப்படியாக குறையும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும்.பழைய கடன்களைத் தீர்க்க திட்டம் தீட்டிச் செயல்படுவீர்கள்.அரசியல்வாதிகள் எதிர்காலம் பற்றிய முடிவு எடுக்க சாதகமான காலம்.ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வயோதிகர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி சுயமாக மருந்து சாப்பிடக்கூடாது. குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். வெகு நாட்களாக தாமதப்பட்ட பணிகள் இந்த வாரம் சாதகமாகும். அனைத்து பாக்கியங்களும் தேடி வரும். சிலர் ரசனைக்கு ஏற்ப வீட்டின் அமைப்பை மாற்றுவார்கள்.போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும்.பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக சிறிய தொகை கடன் வாங்க நேரும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஏற்பட்ட தடைகள் அகலும்.சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடுவதால் நன்மைகள் கூடும்.

    மீனம்

    எதிர்பாராத பணவரவு உண்டாகும் வாரம். 3, 8-ம் அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவதால் அதிர்ஷ்டத்தை நீங்கள் விரும்பாவிட்டாலும் அதிர்ஷ்டம் உங்களை விரும்பும் நேரம்.பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பெண்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்கக் கூடாது. அதே போல் விலை உயர்ந்த ஆபரணங்களை இரவல் மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலக பணிச் சுமை அதிகரிக்கும். இடமாற்றம்,வீடு மாற்றம்,வாகன மாற்றம் போன்றவை ஏற்படலாம். ராசிக்கு குருப்பார்வை இருப்பதால் வெற்றி நிச்சயம்.மனத் தடுமாற்றம் இருக்காது.குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்குச் சென்று நீண்ட நாட்களாக நினைத்திருந்த பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கலாம். தியானம்,யோகா போன்ற ஆழ்மன எண்ணங்களை சீராக்கும் பயிற்சியில் ஈடுபடுவீர்கள்.பிரதோஷ வழிபாட்டால் மேன்மை பெற முடியும்.

    • ரிஷபம் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும் வாரம்.
    • சிம்மம் செயல்பாடுகளில் நிலவிய தடைகள் அகலும் வாரம்.

    மேஷம்

    அதிர்ஷ்டமான வாய்ப்புகள் தேடி வரும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் அஷ்டமஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். இது விபரீத ராஜ யோகத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். குடும்ப உறவுகளிடம் நிலவி வந்த சங்கடங்கள் மறையும். தன வரவு தாராளமாக இருக்கும்.கடன் தொல்லைகள் குறையும். சேமிப்பு உயரும். பங்குச் சந்தை ஆதாயம் உபரி வருமானத்தை பெற்றுத்த ரும். அதிர்ஷ்ட பொருள் வரவு ஏற்படும். குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும்.வியாபார சூட்சுமங்களை புரிந்து செயல்படுவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவி யால் சில காரியங்களை முடிப்பீர்கள். படித்து முடித்த இளைஞர்களின் தகுதிக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கும். கலைப் பொருட்கள் வாங்கு வீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். கணவரின் ஆரோக்கிய கேட்டால் வருந்திய பெண்களுக்கு நிம்மதி கிடைக்கும். ஜனன கால ஜாதகத்தில் எட்டாமிடம் வலிமையாக இயங்கினால் வெளிநாட்டிற்கு சென்று பிழைப்பு நடத்தும் சூழல் உருவாகும். வழக்குகளின் தீர்ப்பு சாதகமாகும். சஷ்டியன்று இளநீர் அபிசேகம் செய்து முருகனை வழிபடவும்.

    ரிஷபம்

    ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் நீச்சம் அடைந்தாலும் ராசியை செவ்வாயும் புதனும் பார்க்கிறார்கள்.வெற்றியின் திசையை நோக்கி பயணிக்க துவங்குவீர்கள்.வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். பங்குதாரர்கள் ஆதரவால் தொழிலில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க முடியும். அரசின் நலத்திட்டங்களால் ஆதாயம் உண்டாகும்.பூர்வீக நிலம் சம்பந்தமாக சகோதரருடன் கருத்து வேறுபாடு வரலாம்.உத்தியோகம் அல்லது தொழில் மாற்றங்களை சந்திக்க நேரும். அண்டை அயலாருடன் நல்லி ணக்கம் உண்டாகும்.மழையால் ஏற்பட்ட சேதத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். விருப்ப விவாகம் நடைபெறும். பொருளாதாரத்தில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் சமாளிக்கும் சூழ்நிலை உண்டாகும். 28.10.2025 அன்று இரவு 10.14 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் குழந்தைகளை சிரத்தையோடு கண்காணிக்கவும்.புதிய எதிரிகள் தலை தூக்குவார்கள். சஷ்டி திதி அன்று முருகனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபடவும்.

    மிதுனம்

    கடனை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் ஆட்சி பலம் பெற்ற 6ம் அதிபதி செவ்வாயுடன் சேர்க்கை பெற்றுள்ளார்.உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஏற்றமான பலன் கிடைக்கும்.புதிய தொழில் வாய்ப்புகள், முயற்சிகள் மன நிறைவு தரும். அரசு வேலைக்கு முயற்சியில் வெற்றி உண்டாகும். சிலருக்கு தந்தையின் அரசு வேலை கிடைக்கும். நீண்ட காலமாக விற்க முடியாத சொத்துக்கள் விற்கும். குலதெய்வம், முன்னோர்க ளின் நல்லாசி கிடைக்கும். சிலருக்கு அரசின் இலவச வீட்டுமனை கிடைக் கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருப்பது நன்மையை தரும்.தம்பதிகளின் உறவில் அன்யோன்யம் நீடிக்கும். 28.10.2025 அன்று இரவு 10.14 மணி முதல் 31.10.2025 காலை 6.48 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் வீண் மனக்கவலை, முக்கிய பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதில் தடை, தாமதம் போன்ற அசவுகரியங்கள் இருக்கும். சஷ்டி திதியில் முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

    கடகம்

    வாழ்க்கைத் தரம் உயரும் வாரம். ராசியில் குரு உச்சம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் ஆட்சி என உலவுகின்ற கிரக நிலை ஓரளவு உதவிகரமாக உள்ளது. நிறைந்த அறிவு, திறமை இருந்தும் சாதிக்க முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். உண்மையான உழைப் பிற்கான பலனை அறுவடை செய்யும் நேரம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். தடைபட்ட அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும்.கூட்டுத் தொழிலில் திருப்பம் உண்டாகும். சிலர் பழைய வேலை பிடிக்காமல் புதிய வேலை தேடுவார்கள். பழைய கடன்களை யும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும். பெற்றோர் வழியில் சில உதவிகள் கிடைத்து வாழ்க்கைத் தரம் உயரும். 31.10.2025 காலை 6.48 மணி முதல் 2.11.2025 அன்று பகல் 11.27 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் பிடிவாதத் தினை குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டும்.கந்த சஷ்டியன்று வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

    சிம்மம்

    செயல்பாடுகளில் நிலவிய தடைகள் அகலும் வாரம்.ராசிக்கு 4ம்மிடமான சுகஸ்தானத்தில் செவ்வாய் புதன் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. இது சிம்ம ராசிக்கு இழந்த இன்பங்களை மீட்டுத் தரும் அமைப்பாகும்.மனதில் புத்துணர்வு உண்டாகும்.தாய்வழி உறவுகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சீராகும். தாய் வழி சொத்தில் நிலவிய சர்ச்சைகள் அகலும். புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்களின் மதிப்பு உயரும். மாணவ-மாணவிகளுக்கு படிக்கும் ஆர்வம் கூடும். அஷ்டம சனியை மீறி சில நல்ல பலன்கள் நடக்கும். அஷ்டமச்சனியின் காலமே சொத்துக்க ளில் முதலீடு செய்வதற்கு உகந்த நேரமாகும். கடன் பிரச்சனைகளை கட்டுப்படுத்து வீர்கள். புத்திரப் பிராப்த்தம் உண்டாகும்.உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும்.2.11.2025 அன்று பகல் 11.27 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்ப தால் உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது.மன சஞ்சலத்தை கட்டுப்படுத்த வேண்டும். உறவுகளிடம் பொறுமையை கடைபிடிப்பதால் நல்லிணக்கம் உண்டாகும். கந்த சஷ்டி அன்றுநெய் அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

    கன்னி

    தடை தாமதங்கள் அகலும் வாரம். ராசி அதிபதி புதன் 3ம்மிடமான வெற்றி ஸ்தானத்தில் 3ம் அதிபதி செவ்வாயுடன் குருவின் பார்வையில் சேர்க்கை பெற்றுள்ளார். போட்டி பொறாமைகளை சமாளித்து முன்னேற கூடிய வகையில் தைரியமும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். தாய் வழிச் சொத்தில் சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறையும்.மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். காணாமல் போன உயில் பத்திரம் கிடைக்கும். நண்பர்கள், நிதி நிறுவனங்கள் மூலம் பண உதவி கிடைக்கும்.இது வரை ஒத்தி வைத்த அறுவை சிகிச்சைக்காக மருத்துவ மனைக்குச் செல்ல நேரும். கமிஷன் அடிப்படையில் தொழில் புரிபவர்களுக்கு மிகைப்படுத்தலான நன்மைகள் உண்டு.ஜாமீன் சார்ந்த பிரச்சினைகள் நீங்கும். வீடு வாகனங்களை பழுது நீக்கம் செய்வீர்கள். நல்ல வேலை கிடைக்கும். திருமணத்தடை அகலும்.மறு விவாக முயற்சிகள் சாதகமாகும். லவுகீக வாழ்வில் நாட்டம் மிகும். கந்த சஷ்டி அன்று தயிர் அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

    துலாம்

    விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம்.ராசியில் நீச்ச சூரியன். ராசி அதிபதி நீச்சம் என முக்கிய கிரகங்கள் சுமாராக உள்ளது.மன சஞ்சலம் அதிகரித்து உச்ச கட்ட கோபத்தை வெளிக்காட்டுவீர்கள். வேலையில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் சிறப்பாக இருந்தாலும் சேமிக்க முடியாத நிலை உருவாகும்.லாபம் நிற்காது அல்லது வருமானம் குறைவுபடும். மாணவ- மாணவிகள் கல்வியில் ஆர்வத்தை அதிகப்படுத்த வேண்டும். பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.காதலர்கள் பெற்றோரின் நல்லாசியுடன் திருமணம் செய்வது உத்தமம்.சில தம்பதிகள் உத்தியோகத்திற்காக பிரிந்து வாழலாம்.தந்தை வழியில் சில பொருள் விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.சிலர் முன் கோபத்தால் உறவுகளை பகைத்துக் கொள்வார்கள். அதனால் மன சஞ்சலம் ஆரோக்கியக் கேடு உண்டாகும்.ஆத்மார்த்தமான முருகன் வழிபாட்டால் உங்கள் ஜாதக ரீதியான தோஷங்களையும் சாபங்களையும் தீர்க்க முடியும்.

    விருச்சிகம்

    தன வரவில் தன்னிறைவு உண்டாகும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்றுள்ளார். 8,11ம் அதிபதி புதனுடன் குரு பார்வையில் சேர்ந்து உள்ளார்.திட்டமிட்ட பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். இழந்த அனைத்து சுகங்களையும் மீட்டுப்பெறுவீர்கள்.எதிலும் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் நன்மதிப்பை பெறுவீர்கள். வர வேண்டிய பணங்களில் ஏதேனும் தடை தாமதங்கள் இருந்தால் இந்த வாரத்தில் முயற்சி செய்யலாம். கடன் பிரச்சனைகள் குறையும்.புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் நிறைவேறும்.உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில பொறுப்புகள் கிடைக்கும். திறமை வெளிப்படும். வழக்குகள் சாதகமாகும்.சமுதாய அந்தஸ்து நிறைந்த பெரியோர்களின் நட்பு கிடைக்கும்.பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகன கனவு நனவாகும்.தாய் வழி முன்னோர்களிட மிருந்து நில, புலன், பணம் கிடைக்கும். கந்த சஷ்டி அன்று செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்து முருகனை வழிபடவும்.

    தனுசு

    தன்னம்பிக்கையால் காரியம் சாதிக்கும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் அடைகிறார்.எதிர்பார்த்த செயல்கள் நன்மையில் முடியும்.தடைபட்ட சில செயல்கள் தாமாக நடக்கும். வியாபாரிகள் தொழிலை விரிவுபடுத்த ஏற்ற காலம். மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரியில் ஏற்பட்ட மனசங்கடங்கள் அகலும். மாநில, மாவட்ட அளவிளான போட்டி பந்தயங்களில் கலந்து வெற்றி பெறுவார்கள். கலைத்துறையினர் ஏற்றம் பெறுவர். வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடக்கும். பணப் புழக்கம் மிகுதியாக இருக்கும். கடன் தொல்லை குறையும். வெளியூர் பயணத்தின் மூலம் ஆதாயம் உண்டு. திருமண வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும். வீட்டில் சிறுசிறு சுப மங்கல நிகழ்வுகள் நடக்கும்.வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். ஆரோக்கி யத்தில் அதிக கவனம் தேவை.சிலருக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உண்டாகும்.கந்த சஷ்டி அன்று 36 முறை கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வழிபடவும்.

    மகரம்

    குரு பலத்தால் காரியம் சாதிக்க வேண்டிய வாரம்.ராசிக்கு 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சூரியன் நீச்சமாக உள்ளார்.சூரியனுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் நீச்சம். மகர ராசியினருக்கு தற்போது குரு மற்றும் செவ்வாயின் சஞ்சாரம் மிகச் சாதகமாக உள்ளது. இதனால் திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் அதிகரிக்கும். இடமாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். வீடு மாற்றம் ஊர் மாற்றம் ஏற்படும்.புதிய வெளிநாட்டு ஒப்பந்தம் கிடைக்கும். இளைய சகோதரத்திற்கு கொடுத்த பணம் வசூலாகும். அடமான நகை களை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும். அசை யும், அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். பழைய வீட்டை புதுப்பித்து பொலிவு பெறச் செய்வீர்கள். கைமறதியாக வைத்த நகைகள், முக்கிய ஆவணங்கள் தென்படும்.திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடைவீர்கள். ராசிக்கு குருப் பார்வை கிடைப்பதால் தலைக்கு வந்த அனைத்தும் தலைப்பாகையோடு சென்று விடும். கந்த சஷ்டி அன்று முருகனை வழிபட்டு தேவையற்ற எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

    கும்பம்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் யோகமான வாரம். தொழில் ஸ்தானத்தில் 3,10ம் அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்று 5,8ம் அதிபதியான புதனுடன் குரு பார்வையில் இருப்பதால் பண வரவு அமோகமாக இருக்கும்.அடிப்படைத் தேவைகளுக்கு திணறியவர்களுக்கு கூட சரளமான பண புழக்கம் உண்டாகும். குலத் தொழிலில் பங்குதாரராக இணைவீர்கள்.அல்லது குலத்தொழில்களை எடுத்து நடத்து வீர்கள்.இழந்த பதவி தேடி வரும்.உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டு. உடன் பிறந்தவர்கள் மூலமாக வருமான உயர்வுக்கான பாதை தென்படும். பிள்ளைகள் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையை ஏற்படுத்துவீர்கள். காதல் கல்யாண கனவுகள் நனவாகும்.சிலருக்கு வெளியூர் அல்லது வெளி மாநிலம் சென்று வேலை பார்க்கும் அமைப்பு ஏற்படும். பிள்ளைகளின் சுப நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும்.கந்த சஷ்டி அன்று சந்தன அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

    மீனம்

    விடா முயற்சிகள் வெற்றி தரும் வாரம்.ராசியில் உள்ள சனிக்கு குரு மற்றும் சுக்ரனின் பார்வை உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகமாகும். இது வரை ஏதாவது காரணம் கூறி திருமணத்தை தள்ளியவர்கள் கூட திருமணத்திற்கு ஒத்துக் கொள்வார்கள். வெளிவட்டார செல்வாக்கு, சொல்வாக்கு அதிகரிக்கும். தொழிலை இழுத்து மூடிவிட்டு வேறு வேலைக்கு சென்று விடலாமா? என்று நம்பிக்கை இழந்து இருந்தவர்கள் கூட வாழ்வில் செட்டிலாக்கி விடும் வகையில் மாற்றமான நல்ல சுப பலன்கள் உண்டாகும். வீடு, நிலம், தோட்டம், வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது.சொத்துக்கள் விற்பனையின் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும். ஆண் குழந்தை பாக்கியம் கிட்டும். வாரிசு களுக்கு விரும்பிய அரசு வேலை கிடைக்கும். சிறை தண்டனை அனுபவிப்பவர்களுக்கு நன் நடத்தை காரணமாக விடுதலை கிடைக்கும். ஆன்மீகப் பெரியவர்கள் நட்பு கிடைக்கும்.கந்த சஷ்டி அன்று மஞ்சள் அபிஷேகம் செய்து முருகனை வழிபட பொருளாதார மேன்மை உண்டாகும்.

    • சுப பலன்களால் மனம் மகிழும் வாரம்.
    • திருமண முயற்சிகள் வெற்றியில் முடியும்.

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்

    மேஷம்

    தன வரவில் தன் நிறைவு உண்டாகும் வாரம். மேஷ ராசிக்கு ஆறாம் அதிபதி புதன் வார இறுதியில் அஷ்டம ஸ்தானத்தில் மறைய போகிறார். இது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோக அமைப்பாகும். அதிர்ஷ்டம் அரவணைக்கும். தொட்டது துலங்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பல்வேறு சுப பலன்கள் உண்டாகும். தொழிலில் உன்னத நிலையை அடைய முடியும். செல்வாக்கு, திறமை மற்றும் கவுரவத்தோடு செயல்பட்டு சிறப்பும் பெருமையும் அடைய முடியும். திறமைகளின் மூலம் பணியில் பொறுப்புகள் உயரும்.

    அசையும், அசையாச் சொத்து வாங்கத் தேவையான கடன் தொகை கிடைக்கும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் வரனை தேர்வு செய்வதில் சற்று நெருடல் இருக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். 23.10.2025 இரவு 10.06க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் உடல் சோர்வால் எண்ணிய பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகளில் தடை, தாமதங்கள் ஏற்படலாம். மனக்குழப்பம், பதட்டம் அதிகரிக்கும்.தொழில் உத்தியோகத்தில் நிதானம் தேவை. குல, இஷ்ட தெய்வத்தை மனம் தளராது வழிபட அனைத்தும் சுபமாகவே இருக்கும்.

    ரிஷபம்

    எதிர்பாராத நல்ல திருப்பங்கள் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நீச்சம் பெற்று சனி பார்வையில் உள்ளார். இந்த கிரக சம்பந்தம்தன வரவை அதிகரிக்கும். திருமணத்தடையை அகற்றும். காதல் திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தம்பதிகள் ஒற்றுமையாக இருப்பார்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை தீபாவளி ஆபரில் வாங்குவதால் சுப விரயங்கள் அதிகமாகும்.

    வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் பிறரின் பெயரில் சொத்து வாங்குவதை தவிர்க்கவும். திருமண முயற்சிகள் இழுத்தடிக்கும். கண் திருஷ்டி, போட்டி, பொறாமை போன்றவற்றால் வைத்தியச் செலவு உருவாகும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் மன தடுமாற்றம் ஏற்படலாம். பிறவிக்கடன், பொருள் கடன் தீர்க்க உகந்த காலம். அமாவாசையன்று முன்னோர்களுக்கு உரிய வழிபாடு செய்வதன் மூலம் பாக்கிய பலம் அதிகரிக்கும்.

    மிதுனம்

    விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் வார இறுதியில் ருண, ரோக சத்ரு ஸ்தானம் செல்கிறார். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். தொழில் பங்காளிகளை சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். அரசாங்க வேலையில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். குடும்ப

    பெரியோர்களின் நட்பும் நல் ஆசியும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். புத்திர பிராப்த்தம் உண்டாகும். வீடு, வாகன முயற்சி ஜெயமாகும். திருமணம் கைகூடும். மாமியார் நாத்தனாரால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் வெற்றி தரும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தந்து மகிழ்வீர்கள். தீபாவளி போனசில் முக்கிய குடும்பத் தேவைகளை நிறைவு செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் மாற்றம் ஏற்படலாம். நண்பர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்க்கவும். தீபாவளி விடுமுறையில் ஆன்மீக யாத்திரை சென்று வருவீர்கள். முன்னோர்கள் வழிபாட்டில் மனநிறைவு கூடும்.

    கடகம்

    சுப பலன்களால் மனம் மகிழும் வாரம். ராசியில் உள்ள அதிசார உச்ச குருபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானத்தை பார்வையிடுகிறார். சிரமமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். முக்கிய குடும்பத் தேவைகள் செய்வீர்கள். மனதில் இருந்த கவலைகள் சஞ்சலங்கள் குறைய துவங்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். அடுத்த 48 நாட்களுக்குள் உங்களுக்கு திருமணம் நிச்சயமாகும். பூர்வீகம் சார்ந்த செல்களில் ஏற்பட்ட தடைகள் அகலும்.

    பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் செய்து மகிழ்வீர்கள். தொழில் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும்.வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் சீராகும். ஞாபக மறதி பிரச்சினை குறையும். நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையால் ஆதாயம் உணடாகும். ஜென்ம குருவின் காலம் என்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. ஆன்மீகப் பெரியோர்களை வழிபடவும்.

    சிம்மம்

    மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் மூன்றாம் இடமான வெற்றி ஸ்தானத்தில் நீச்சமடைகிறார். நல்ல மாற்றங்களை தரக்கூடிய 3ம் இடத்திற்கு சூரியன் செல்வதால் வீடு மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம் என பல்வேறு மாற்றத்தை சந்திப்பீர்கள். சிலருக்கு இடமாற்றம் கவலையைத் தரும். வரவும், செலவும் சீராக இருக்கும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் ஒன்றுகூடி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வு மற்றும் போனஸ் மனதை மகிழ்விக்கும். பதவி உயர்வும் நல்ல சம்பளமும் கிடைக்கும். புத்திர பிராப்த்தம் சித்திக்கும். மன வேதனையைத் தந்த பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்வார்.

    வயோதிகர்களுக்கு முழங்கால் வலி, மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் கட்டுக்குள் இருக்கும். வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. காதல் விவகாரங்கள் அவமானத்தை தரும். ஆன்மீக வழிபாட்டில் ஈடுபட மலைபோல் வந்த துன்பம் பனி போல விலகும். விரய ஸ்தானத்தில் அதிசார குரு இருப்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. தினமும் ஸ்ரீ ருத்ரம் கேட்கவும்.

    கன்னி

    சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டா கும் வாரம். ராசி அதிபதி புதன் சகாய வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் பணப்புழக்கமும் நன்றாக இருக்கும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் முயற்சியை துவங்குவீர்கள். வியாபாரத்தை விரிவு செய்யும் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். சுப விசேஷங்களில் இருந்த தடைகள் விலகும். வெளியில் சொல்ல முடியாமல் தவித்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

    திருமண முயற்சிகள் வெற்றியில் முடியும். கண்டகச் சனியின் காலம் என்பதால் மனம் மற்றும் உடலை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது நல்லது. மனதிற்கு பிடித்த வரன் அமையும். தீபாவளிக்கு விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.பூர்வீக சொத்து தொடர்பான முயற்சியில் சகோதரரின் ஆதரவு மகிழ்ச்சியை தரும்.மன அமைதிக்கு தீபாவளி விடுமுறைக்கு பூர்வீகம் சென்று வர திட்டமிடுவீர்கள். கணவன், மனைவி உறவு மேம்படும். தீபாவளி அன்று இனிப்பு தானம் வழங்கவும்.

    துலாம்

    புதிய மாற்றம் ஏற்படப் போகும் வாரம். ராசியில் சூரியன் செவ்வாய் சேர்க்கை இருப்பதால் புகழின் உச்சிக்கு செல்லப் போகிறீர்கள். வீண் அலைச்சல், துக்கம் விலகும்.தடைகள் தகறும். நிறைய நன்மைகள் நடைபெறும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிம்மதி நிறைந்து இருக்கும். வழக்கறிஞர், அரசியல்வாதிகள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை, ஊடகங்கள், குலத் தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு சுப பலன்கள் இரட்டிப்பாகும். நீண்டநாள் பிரச்சனைகள் முடிவிற்கு வரும். சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய வீடு வாங்குவார்கள்.

    தீபாவளி ஆபரில் பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையில் மாற்றம் முன்னேற்றம் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் வெற்றிகள் உண்டாகும். கூட்டுக் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவினைகள் சுமூகமாகும். திருமணத் தடை அகலும். புதிய எதிர்பாலின நட்பை தவிர்ப்பது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்பட்டால் வெற்றி மேல் வெற்றி உண்டாகும். அமாவாசை அன்று தயிர் சாதம் தானம் வழங்கவும்.

    விருச்சிகம்

    தன்னம்பிக்கையும் தைரியமும் மேலோங்கும் வாரம்.ராசியில் உள்ள புதனுக்கு குரு பார்வை உள்ளது. முயற்சிகளில் முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய்மாமன் வழி ஆதாயம் உண்டாகும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். குலதெய்வம், முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.

    மறு திருமண முயற்சி சாதகமாகும். இளவயதினருக்கு புத்திர பிராப்தி உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும்.செயற்கை முறை கருத்தரிப்பு வெற்றி தரும்.இல்லத்தில் தடைபட்ட சுப நிகழ்வுகள் இனிதே நடைபெறும். தம்பதிக ளிடையே இணக்கமான சூழல் நிலவும். தீபாவளி யன்று உணவு உடை தானம் வழங்கவும்.

    தனுசு

    உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும் வாரம். ராசி அதிபதி குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குடும்ப ஸ்தானத்திற்கு உச்ச குருவின் பார்வை இருப்பதால் திருமண வாழ்க்கையில் சாதகமான நிலையைத் தருவார். இதனால் பெண்களுக்கு மன நிம்மதியும், முன்னேற்றமும் உண்டாகும். சுய ஜாதக தசா புக்திக்கு ஏற்ப வீடு, வாகன முயற்ச்சியில் ஈடுபடுவது நல்லது.

    மாணவர்கள் கல்விக்காக வெளியூருக்கு செல்லும் வாய்ப்பு அதிகம். சிலர் பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளை சந்திக்க நேரும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட தன லாபம் கிடைத்து அதன் மூலம் சட்ட நெருக்கடியும் ஏற்படலாம். வைத்தியத்தில் ஆரோக்கியம் சீராகும். இழந்த வேலை மீண்டும் கிடைக்கும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கியும் போனசும் கைக்கு வரும். உங்களின் வெற்றிக்கு வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். தீபாவளி அன்று வயது முதிர்ந்தவர்களின் தேவை அறிந்து உதவவும்.

    மகரம்

    புண்ணிய பலன்கள் மிகுதியாகும் வாரம். ராசிக்கு குருவின் சம சப்தம பார்வை உள்ளது.தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புண்ணிய காரியங்கள் தான தர்மங்களில் ஈடுபடுவீர்கள். போட்டி பொறாமைகள் இருந்தாலும் சமாளித்து வெற்றி நடை போடுவீர்கள். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். பணி சார்ந்து சில பயணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் வரும். வீண் செலவுகள் கட்டுப்படும். கடன்பட்டு சொத்து வாங்குவீர்கள். கை மறதியாக வைத்த பொருட்கள், காணாமல் போன பொருட்கள் கிடைக்கும்.

    திருமண விஷயங்கள் சித்திக்கும். தந்தையின் ஆரோக்கியத்தால் ஏற்பட்ட மன சஞ்சலம் அகலும். வீட்டிற்கு அடங்காமல் இருந்த பிள்ளைகளின் நடவடிக்கை மன நிம்மதி தரும். வட்டித் தொழில், அடகு பிடித்தல், படப்பிடிப்பு தொழில் செய்பவர்கள் தொழிலில் உன்னத நிலையை அடைய முடியும். புத்திர பிராப்தம், திருமணம், சொத்துச் சேர்க்கை என தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் நடைபெறும். அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் வழங்குவது நல்லது.

    கும்பம்

    திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். ராசியில் ராகுவும், ஏழில் கேதுவும் நிற்கிறார்கள். வேற்று மத இன நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். குறுக்கு வழியில் முன்னேறும் எண்ணம் மிகுதியாகும். ராசிக்கு தற்போது குரு பார்வை இல்லாததால் திருமண விசயத்தில் கவனம் தேவை. உடல் உபாதைகளால் மன சஞ்சலம் அதிகமாகும்.குறைந்த சம்பளத்திற்கு அதிக நேரம் வேலை பார்ப்பீர்கள். வியாபரத்திற்கு நம்பகமான வேலையாட்கள் தேடுவீர்கள்.

    தொழில் உத்தியோக நிமித்தமாக தம்பதிகள் பிரிந்து வாழலாம். வாகன வசதிகள் மேம்படும். வாரிசு உருவாகும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.கடன் வாங்குவதை தவிர்த்தல் நலம். தீபாவளி ஆபரில் புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 21.10.2025 அன்று காலை 9.36 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் தொடர்பாக சக ஊழியர்களால் டென்ஷன் உண்டாகும். வியாபார ரகசியங்கள் கசியும். தொழில் போட்டிகள் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவை. 9ல்சூரியன் நீச்சமாக இருப்பதால் அமாவாசையன்று பித்ருக்கள் தர்ப்பணம் செய்து வழிபட வேண்டும்.

    மீனம்

    கடன் தொல்லைகள் குறையும் வாரம். ராசியில் உள்ள சனிக்கு குருவின் ஐந்தாம் பார்வை உள்ளது. இது தர்மகர்மாதிபதி யோகம். அடுத்த ஒன்றரை மாதத்திற்குள் கடன் தொல்லையை கட்டுப்படுத்த கூடிய அளவிற்கு நல்ல சந்தர்ப்பங்களில் கூடிவரும். வரா கடன்கள் வசூலாகும். அடிப்படை வாழ்வாதாரத்திற்குப் போராடியவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். காலம் தாழ்த்தாமல் நிச்சயித்த திருமணத்தை உடனே நடத்த வேண்டும். ஜென்ம சனியை மீறிய சில நல்ல பலன்கள் நடக்கும். இதுவரை நிலையான தொழில் உத்தியோகம் இல்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடி வரும்.

    படுக்கையில் இருப்பவர்கள் கூட எழுந்து நடமாடுவார்கள். மாணவர்களுக்கு போட்டித் தேர்வில் வெற்றி சுலபமாகும். ஆரோக்கியத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். 21.10.2025 அன்று காலை 9.36 முதல் 23.10.2025 இரவு 10.06 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல் தூக்கமின்மை இருக்கும். ஐப்பசி மாசம் நீர் நிலைகளில் நீராடுவதால் ஆன்ம பலம் பெருகும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

    • திருமணத்திற்கு நல்ல வரன் அமையும்.
    • சிலருக்கு ஆரோக்கிய கேடு உண்டாகும்.

    மேஷம்

    நன்மைகள் அதிகரிக்கும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சுக்கிரன் நீச்சபங்க ராஜயோகத்தில் இருக்கிறார். வெற்றிக் கனியை ருசிப்பீர்கள். புத்தி சாதுர்யமும் அறிவுத் திறனும் அதிகரிக்கும். செயல்களில் வேகம் உண்டாகும்.

    எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். செல்வாக்கு, சொல்வாக்கு உயரும். தீபாவளி போனஸ் மகிழ்ச்சியை அதிகரிக்கும். தந்தையின் ஆசீர்வாதம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். வருமானத்தடை விலகும்.

    சிறிய முதலீட்டில் அதிக லாபம் பார்ப்பீர்கள். தடைபட்ட வாடகை வருமானம் வரத் துவங்கும். தம்பதிகளிடம் நல்ல புரிதல் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களின் பேச்சிற்கு கட்டுப்படுவார்கள். உடல் நலனில் முன்னேற்றம் அதிகமாகும்.

    வாழ்க்கையின் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே நடக்கும். திருமணத் தடை அகலும். எதிர் பாலினத்தவரால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும். அரசு, வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் வெற்றி உறுதி. குழந்தை பாக்கியம் கிடைக்கும். செயற்கை கருத்தரிப்பை நாடியவர்களுக்கு இயற்கையாகவே குழந்தை பிறக்கும். குல தெய்வ வழிபாடு பலன் தரும்.

    ரிஷபம்

    விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரம். ராசி அதிபதி சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ளார். சொத்து இல்லாதவர்களுக்கு புதிய வீடு, வாகன யோகம் உண்டாகும். கூட்டுக் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு பிறந்த வீட்டு பாகப்பிரிவினை சொத்து, பணம், நகை கிடைக்கும். ஜாமீன் வழக்கு, செக் மோசடி வழக்கில் தீர்ப்பு சாதகமாகும்.

    திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். ராசிக்கு செவ்வாயின் எட்டாம் பார்வையின் சனியின் மூன்றாம் பார்வையும் பதிகிறது. மனதில் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் சங்கடமும் முயற்சியில் இழுபறியும் உண்டாகும். கை, கால் வலி மற்றும் உடல் உபாதைக்கு வைத்தியம் செய்வீர்கள். அண்ணன், தம்பிகளை அனுசரித்து செல்லுதல் நலம். சிலருக்கு வேற்று மத நம்பிக்கை அதிகரிக்கும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு கிடைக்கும்.

    தீபாவளிக்கு வீட்டு தேவைக்கான புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தீபாவளி போட்டி வியாபாரத்தை சூழ்நிலைக்கு ஏற்ப பேசி சமாளிப்பீர்கள். விநாயகர் வழிபாட்டால் நிம்மதியை அதிகரிக்க முடியும்.

    மிதுனம்

    நன்மைகள் மிகுதியாக நடக்கும் வாரம். ராசி அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தொழில் தொடர்பான சிந்தனை, சுய முயற்சி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். ஆழ்மன சிந்தனை பெருகும். சுறுசுறுப்பாக இயங்கி புதிய முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். அரச பதவி, அரசு உத்தியோகம், அரசு வகை ஆதரவு உண்டு. பங்குச்சந்தை ஆதாயம் அதிகரிக்கும். பிள்ளைகளால் நிம்மதி கூடும்.

    பூர்வீகச் சொத்தால் மிகுதியான பலன் உண்டு. குல தெய்வ அனுகிரகம் உண்டாகும். குல தெய்வம் தெரியாதவர்களுக்கு குல தெய்வம் பற்றி அறியும் காலம் வந்து விட்டது. பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும்.

    தீபாவளிக்கு பரிசுகள், பட்டாசுகள், இனிப்புகள் கிடைக்கும். தடைபட்ட பல விசயங்களுக்கு விடைகள் கிடைத்து அனுகூலமான மாற்றங்கள் பெற்று மகிழ்வீர்கள். கடன் தொல்லைகள் நீங்கி கணிசமான லாபம் உயரும்.

    பிள்ளைகளால் ஏற்பட்ட மன சஞ்சலம் அகலும். தாயாரின் ஆயுள் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். மீனாட்சி அம்மன் வழிபாட்டால் சிறப்பான பலன்கள் நடக்கும்.

    கடகம்

    கருமமே கண்ணாக செயல்பட வேண்டிய வாரம். ராசியில் குரு பகவான் வார இறுதி நாளில் இரவில் உச்சம் பெற போகிறார். ஜென்ம குரு என்று பயப்படத் தேவையில்லை. பிற கோட்சார கிரகங்களின் செயல்பாடுகள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. சிறப்பான பலன்கள் தேடி வரும். பாக்கியாதிபதி குரு தன் வீட்டைத் தானே பார்ப்பதால் பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தான வலிமையால் வாழ்க்கையின் அனைத்து விஷயங்களும் சாதகமாக நடக்கும்.

    புதிய தொழில் வாய்ப்புகளால் வருவாய் பெருகும். வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கையில் விருப்பம் ஏற்படும். தீபாவளி வியாபாரம் அமோகமாக நடக்கும். கையிருப்பு கணிசமாக உயரும். உயர் நிர்வாக பதவி, உயர்ந்த அந்தஸ்தை அடைவீர்கள். படித்த படிப்பு, அனுபவம் என அனைத்து விதத்திலும் மேன்மையான பலன்கள் உண்டு. அசையும், அசையாச் சொத்துகளில் முதலீடு செய்வீர்கள். எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வைத்தியத்தில் நீங்கும். திருமணத் தடை அகலும். மறுமண முயற்சி வெற்றி தரும். ஸ்ரீ துர்க்கை அம்மனை வழிபட சகல சவுபாக்கியங்களும் பெருகும்.

    சிம்மம்

    கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டிய வாரம். அஷ்டமச் சனி மற்றும் ராகு கேது தாக்கத்துடன் குரு பகவானும் அதி சாரமாக விரய ஸ்தானத்திற்கு செல்ல போகிறார். வெளி மாநிலம், வெளிநாட்டிற்கும் இடம் பெயரலாம். உடல் பெருக்கம் ஏற்படும். வாயுத் தொல்லை உருவாகும். சிலருக்கு கடன் தொல்லை சர்ஜரி, வம்பு, வழக்கு வரலாம். சுய தொழில் புரிபவர்கள் எச்சரிக்கையாக நிதானத்துடன் இருக்க வேண்டும்.

    வேலையில் எதிர்பார்த்த மாற்றம் இடப்பெயர்ச்சி கிடைத்துவிடும். கணவன் மனைவிக்கிடையே நிலவிய இறுக்கமான மனநிலை நீங்கும். மனம் விட்டு பேசி தீர்த்துக் கொள்வீர்கள். கோபம் கூடவே இருந்து குழி பறிக்கும். விட்டுக் கொடுத்து செல்லும் போது பின்நாட்களில் வரும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

    சிலருக்கு ஆரோக்கிய கேடு உண்டாகும். சிலருக்கு பல் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை வரலாம். சில சங்கடங்கள் நிலவினாலும் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று வருவதால் அனைத்தும் சூரியனைக் கண்ட பனியாக மறையும். கோட்ச்சார கிரகங்களால் நன்மை கூடும்.

    கன்னி

    தொட்டது துலங்கும் வாரம். ராசி அதிபதி புதன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் வெற்றி ஸ்தான அதிபதி செவ்வாயுடன் சஞ்சரிக்கிறார். தடைபட்ட அனைத்து முயற்சிகளும் வெற்றி தரும். திட்டுமிட்டு செயல்படுவீர்கள். சொல்வாக்கு உயரும். எல்லா விசயமும் வேகமாகவும் தனக்கு சாதகமாகவும் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிகுதியாக இருக்கும்.

    நினைத்ததை மறுகணமே செய்து முடிக்கும் வாய்ப்புகள் உருவாகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். புத்திர பாக்கியம் கைகூடும். சுப செய்திகள் தேடி வரும். கொடுக்கல், வாங்கலில் சுமூகமான சூழல் நிலவும். அடமானச் சொத்துக்களை மீட்கக்கூடிய சந்தர்ப்பங்கள் கூடிவரும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு சொல்வாக்கு அதிகரிக்கும்.

    உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் சீராகும். மாமனாரால் ஏற்பட்ட மனக்குழப்பங்கள் சீராகும். எதிர்காலம் பற்றிய பய உணர்வு அகலும். வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்படும். உடலும் உள்ளமும் மகிழும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பு கொடுப்பார்கள். தீபாவளிக்கு தான தர்மங்கள் வழங்க திட்டமிடுவீர்கள். தினமும் குலதெய்வத்தை வழிபடவும்.

    துலாம்

    பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் நீச்சபங்க ராஜயோகத்தில் உள்ளார். அதிர்ஷ்ட சொத்து, உழைக்காத வருமானம் உண்டு. வழக்குகளில் வெற்றி உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். நல்ல வரவேற்பு கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். ஆதாயம் இல்லாத செயலைச் செய்ய மாட்டீர்கள். மங்களகரமான சுப நிகழ்வில் கலந்து கொள்வீர்கள்.

    குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடைகள் விலகும். மருத்துவச் செலவுகள் குறையும். உடன் பிறந்தவர்களுடன் நிலவிய கருத்து வேற்றுமை மறையும். சொத்துக்கள் வாங்க விற்க உகந்த நேரம். உயர்கல்வி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.12.10.2025 அதிகாலை 2.25 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தவறான போன் தகவலை நம்பி வங்கிக் கணக்கு எண்களை யாரிடமும் தெரிவிக்க கூடாது. சேமிப்பில் உள்ள பணத்தை இழக்கும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. ஆஞ்சநேயரை வழிபட நெருக்கடிகள் விலகும்.

    விருச்சிகம்

    நல்ல செயல்கள் நடைபெறும் வாரம். இந்த வார இறுதிவரை தொழில் ஸ்தான அதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சிகள் விலகும். ஆதாயம் தரும் விதத்தில் தொழில் முன்னேற்றம் இருக்கும். பணி புரியும் இடத்தில் உங்கள் திறமைகள் போற்றப்படும். சிலர் தீபாவளி முடிந்தவுடன் பார்க்கும் வேலையை மாற்றலாம். வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு உயரும். பங்குச் சந்தையில் ஈடுபட்டவர்களின் தொழில் வளர்ச்சி பிரமாண்டமாகும். திடீர் பணவரவு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.

    வெளிநாடு செல்வதில் நிலவிய விசா பிரச்சினை சீராகும். ஆன்மீகச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு உள்ளது. தாய், தந்தையின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். சமுதாய அந்தஸ்து நிறைந்த புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். காதல் திருமண முயற்சிக்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்கும்.

    உடல் ஆரோக்கியத்தில் நிலவிய தொல்லைகள் சீராகும். 12.10.2025 அதிகாலை 2.25 மணி முதல் 14.10.2025 அன்று விடியற்காலை 5.59 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சின்னச் சின்னப் பிரச்சனைகள் தோன்றினாலும் உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.

    தனுசு

    புத்தியை தீட்ட வேண்டிய வாரம். அடுத்த 48 நாட்களுக்கு ராசி அதிபதி குரு பகவான் அஷ்டம ஸ்தானம் செல்ல போகிறார். கவனமாக செயல்பட வேண்டும். வெளிநாட்டு வேலை மற்றும் பயணம் திட்டமிட்டபடி நடக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். மூத்த சகோதர வகையில் சில சாதகங்களும் பல பாதகங்களும் உண்டாகும். சொத்துக்கள் விற்பனையால் ஆதாயம் உண்டு. கணவன்-மனைவி இடையே சின்னச் சின்ன சலசலப்புகள் வரலாம். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை.

    குடும்பச் செலவுகள் இந்த வாரம் அதிகரிக்கும். தீபாவளி பட்ஜெட் கூடும். அதற்குக் தகுந்த வரவும் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். சொத்து தொடர்பான வழக்குகள் சாதகமாகும். வெளிநாட்டில், வெளியூரில் வசிப்பவர்கள் பூர்வீகத்தில் சொத்து வாங்கலாம். சிலர் புதிய இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள்.

    14.10.2025 அன்று விடியற்காலை 5.59 மணி முதல் 16.10.2025 பகல் 12.42 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைப்பளு கூடும். வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடவும். உணவு விசயத்தில் கவனம் தேவை. நவகிரக குரு பகவான் வழிபடுவதால் ஏற்றமான பலன்கள் நடக்கும்.

    மகரம்

    முயற்சிகள் வெற்றி தரும் வாரம். அதிசார குருவால் ராசிக்கு குருப் பார்வை கிடைக்கப்போகிறது. மகர ராசிக்கு மிக அற்புதமான நல்ல மாற்றங்கள் தெரியும். எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும். புதிய முயற்சிகான பலன்கள் உடனே தெரியும். முன்னேற்றப் பாதையில் நிலவிய தடைகள் விலகும். இதுவரை ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்யும் படியாக வருமானம் கூடும். குடும்ப பிரச்சனைகள் விலகி நிம்மதி கூடும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் செய்து மகிழ்வீர்கள்.

    கை நழுவிச் சென்ற வாய்ப்புகள் இப்பொழுது வந்து சேரும். பதவி உயர்வு, உத்தியோக உயர்வு தானாக கிட்டும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு உபரி லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு பாராட்டும் புகழும் கிடைக்கும். பொன், பொருள் சேரும். வாழ்க்கை துணையின் ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் சீராகும். இடம், பூமி, வாங்கும் முயற்சிகள் கைகூடும். 16.10.2025 பகல் 12.42 மணி முதல் 18.10.2025 இரவு 10.11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வீண் செலவால் மனச் சஞ்சலம் மனக்குழப்பம் உருவாகும். மகா விஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபடவும்.

    கும்பம்

    நெருக்கடிகள் விலகும் வாரம். தன ஸ்தானத்திற்கு குருப்பார்வை கிடைப்பதால் உங்களின் பல வருட எதிர்பார்ப்புகள் இந்த வாரத்தில் நிறைவேறும். அரசு வழியில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். துணிச்சலும் தைரியமும் அதிகரிக்கும். வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். கொடுக்க வேண்டிய கடன்களை கொடுத்து நிம்மதி அடைவீர்கள். உடன் பிறந்தவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்கு வரும்.

    வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். குல தெய்வ வழிபாடு பலன் தரும். முக்கிய பிரார்த்தனைகளையும், வேண்டுதல்களையும் நிறைவு செய்வீர்கள். விவசாயிகளுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் மானியத்துடன் கடன் கிடைக்கும். வாக்கு வன்மை உண்டாகும். ஆரோக்கியம் சீராகும். சின்னத்திரை, சினிமா கலைஞர்களின் புகழ், அந்தஸ்து கூடும். கவுரவப் பதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டு தீபாவளி சீதனம் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

    சிலருக்கு காதல் திருமணம் நடக்கும் வாய்ப்பும் உள்ளது. சிலருக்கு மறு விவாகம் நடக்கும். உடல் ஆரோக்கியமடையும். காவல் தெய்வங்களை வழிபடவும்.

    மீனம்

    கவலைகள் குறையும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் ராசியில் உள்ள சனிபகவானை பார்க்கப் போகிறார். மீன ராசிக்கு பலவிதமான கிரக அமைப்புகள் சாதகமாக இருப்பதால் பணக்கஷ்டம் ஏற்படாது. கடன் பாதிப்பு இருக்காது. பழைய பாக்கிகள் வசூலாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் அதிக லாபத்தை தரப்போகிறது. ஒரு சிலர் வெளிநாடு, வெளி மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்து மகிழ்வீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியடையும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் நிம்மதி தரும். பேசி நிச்சயித்த திருமணத்திற்கு முகூர்த்தம் குறிக்கப்படும். சில மாணவர்கள் உயர் கல்விக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம்.

    பிள்ளைகளின் கல்வி, ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணிசமான பாலிசி முதிர்வு, தொகை, பிக்சட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட் முதிர்வு தொகை, ஏலச்சீட்டு பணம் கிடைக்கும். முன்னோர்களின் நல்லாசிகளைப் பெறுவீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நண்பர், உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். புதிய வீடு, வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். தாய் வழி உறவினர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். உக்கிர தெய்வங்களை வழிபடுவதால் உயர்வுகள் கூடும். 

    ×