என் மலர்
நீங்கள் தேடியது "வார ராசிபலன்"
- மிதுனம் திட்டமிட்ட காரியங்கள் வெற்றியில் முடியும் வாரம்.
- கடகம் இறைவழிபாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டிய வாரம்.
மேஷம்
முன்னேற்றமான மாற்றங்கள் ஏற்படும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது மேஷ ராசிக்கு இழந்த இன்பங்களை மீட்டுத் தரும் காலமாகும். ராசி அதிபதியுடன் ராகு சேர்வது மறைமுக சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். இந்த கிரகச் சேர்க்கைக்கு குரு பார்வை இருப்பதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது என்பதை உறுதியாக கூறலாம். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் உண்டு.
சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கு சாத்தியம் உள்ளது. இரண்டாவது திருமண முயற்சி கைகூடும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் புதிய முயற்சிகளை ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்ய வேண்டும். பெண்களுக்கு சொத்துக்கள் மற்றும் சொந்தங்களால் நிம்மதி கூடும். தடைபட்ட புத்திர பாக்கியம் சித்திக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். பங்குச் சந்தை முதலீடு லாபம் தரும். ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் நீங்கும். பவுர்ணமி அன்று சித்தர்களை ஜீவசமாதியில் வழிபடவும்.
ரிஷபம்
உழைப்பிற்கான அதிர்ஷ்டத்தை அடையக் கூடிய அற்புதமான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் உச்சம் அடைகிறார். அங்கு ஏற்கனவே சஞ்சரிக்கும் சனியுடன் சேர்க்கை பெறுகிறார். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கிரகங்கள் ஜாதகருக்கு வாழ்க்கையில் நடைபெற வேண்டிய அனைத்து இன்பங்களையும் ஏற்படுத்தித் தரும். எண்ணங்கள் விருப்பங்கள் ஆசைகள் கனவுகள் லட்சியங்கள் பூர்த்தியாகும். தடை தாமதங்கள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும்.
பெண்களுக்கு கணவரின் பாராட்டும் பரிசுகளும் கிடைக்கும். அனைத்து பாக்கியங்களும் தேடி வரும். சிலர் ரசனைக்கு ஏற்ப வீட்டின் அமைப்பை மாற்றுவார்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக சிறிய தொகை கடன் வாங்க நேரும். விரும்பிய வேலை மாற்றம் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு சாதகமாகும். கலைத் துறையினருக்குப் பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். தாய்வழிச் சொத்தில் மூத்த சகோதரத்தால் ஆதாயம் உண்டு. சந்திர கிரகணத்தன்று வெளி உணவுகளை தவிர்க்கவும்.
மிதுனம்
திட்டமிட்ட காரியங்கள் வெற்றியில் முடியும் வாரம். ராசி அதிபதி புதன் 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் வக்ர கதியில் குரு பார்வையில் சஞ்சரிக்கிறார். எந்த ஒரு செயலும் தொடங்கும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு கிடைக்கும். அதிர்ஷ்டம் என்னைத் தேடி வருமா என அதிர்ஷ்டத்தைத் தேடி காலம் தள்ளுவீர்கள். சிலருக்கு விபரீத ராஜ யோகம் உண்டாகும். சிலர் தொழில், உத்தியோக நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேற நேரும்.
மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஏற்பட்ட தடைகள் அகலும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வயோதிகர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி சுயமாக மருந்து சாப்பிடக்கூடாது. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். பணியில் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் போது முக்கிய பத்திரங்களை படித்துப் பார்ப்பது அவசியம். சந்திர கிரகணத்தன்று பச்சை பயிறு தானம் வழங்கவும்.
கடகம்
இறைவழிபாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டிய வாரம். ராசியை எந்த கிரகமும் பார்க்கவில்லை. ஆனால் ராசிக்கு இரண்டாமிடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திர கிரகணம் சம்பவிக்கப் போகிறது. காரசாரமான விவாதங்கள் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். தெளிவான மனக் குழப்பமற்ற பேச்சுகளால் மட்டுமே குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். கொடுக்கல் வாங்கல் மற்றும் முக்கிய பேச்சுவார்த்தைகளை தள்ளி வைக்கவும். யாரையும் சபிக்க கூடாது.
நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையால், வேற்று மதத்தினர் வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. அரசியல்வாதிகள் எதிர்காலம் பற்றிய முடிவு எடுக்க சாதகமான காலம். முக்கிய விஷயங்களில் மேலிடத்தின் சொல்படி கேட்டு நடக்க வேண்டும். அடிப்படை வசதியற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை வழங்கவும். சந்திர கிரகணத்தன்று மவுன விரதம் இருப்பது நல்லது.
சிம்மம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய வாரம். சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் நடக்க உள்ளது. விரயாதிபதி சந்திரன் கேதுவுடன் இணைவதால் கடன், நோய், எதிரி சார்ந்த பாதிப்புகள் வரலாம். தவிர்க்க முடியாத கடுமையான உடல் பாதிப்பு உள்ளவர்கள் அன்று வைத்தியம் செய்யலாம். சுய வைத்தியம். சுயமாக மருந்து எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். எடுக்கும் காரியங்கள் முயற்சிகளில் தடை தாமதங்கள் இருக்கும்.
சுய கட்டுப்பாடு மிக அவசியம். திட்டமிட்டு செயல்பட வேண்டும். மனதின் எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்துவது நல்லது. பெண்கள் வீட்டிற்கு தெரியாமல், நகை சீட்டு, ஏலச் சீட்டு கட்டுவதை தவிர்த்து அரசுடைமை வங்கிகளில் உபரி பணத்தை சேமிக்க வேண்டும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். தடைபட்ட பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் ஏற்படும். மற்றவர்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். சந்திர கிரகணத்தன்று மன வளர்ச்சியற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவது நல்லது.
கன்னி
சுமாரான வாரம். ராசி அதிபதி புதன் ராசிக்கு ஆறாம் இடத்தில் வக்ரகதியில் செவ்வாய், சூரியன் மற்றும் ராகுவுடன் சேர்ந்து உள்ளார். பெண்களுக்கு வேலையில் விரும்பிய சலுகைகள் கிடைக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு தலைமையிட ஆதரவு உண்டு. தொழில் மாற்றம் செய்யும் சிந்தனை அதிகரிக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். சிலர் தவணை முறையில் புதிய வாகனம் வாங்கலாம்.
வீடு, மனை, திருமணம், மகப்பேறு ஆகியவற்றின் மூலம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். பழைய கடன்களைத் தீர்க்க திட்டம் தீட்டிச் செயல்படுவீர்கள். வேலையில் பதவி உயர்வு, பாராட்டு, இடப்பெயர்ச்சியும் கிடைக்கும். சிலர் கூட்டுத் தொழில் அல்லது சுய தொழில் துவங்கும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் கிரகங்களின் இயக்கம் பாதிப்பை தராது. சந்திர கிரகணம் முடிந்த பிறகு மகாவிஷ்ணுவை வழிபடவும்.
துலாம்
வெற்றிகரமான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் ராசிக்கு ஆறாம் இடத்தில் உச்சம் அடைகிறார். மருத்துவம், ராணுவம், அரசியல், அரசாங்கம், ஜோதிடம் போன்ற துறையில் இருப்பவர்களின் வாழ்வாதாரம் பல மடங்கு உயரும். பெயர் புகழ் அந்தஸ்து கவுரவம் உயரக்கூடிய நேரம். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிரமங்கள் படிப்படியாக குறையும். நீண்ட காலமாக நிறைவேற்ற முடியாமல் தடைபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் சந்தர்ப்பம் அமையும்.
இல்லத்தில் நடைபெறும் சுப நிகழ்வுகள் மன மகிழ்ச்சியை அதிகரிக்கும். மருமகளால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும். பல வருடங்களாக திருமணத்தடையை சந்தித்த துலாம் ராசியினருக்கு திருமணம் நடந்து முடியும். ஒரு சிலருக்கு சட்ட சிக்கலான இரண்டாம் திருமணமும் நடக்கும். அதிர்ஷ்ட பணம், பூர்வீகச் சொத்து கிடைக்க வாய்ப்புள்ளது. பிள்ளைகள் கல்விக்காக இடம் பெயரலாம். புதிய சொத்துக்கள் சேர வாய்ப்புள்ளது. உயர் கல்வியில் இருந்த தடை தாமதங்கள் விலகும். சந்திர கிரகணத்தன்று உணவு உடை தானம் வழங்கவும்.
விருச்சிகம்
சுபிட்சமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் நான்காம் இடமான சுகஸ்தானத்திற்கு செல்கிறார். இதுவரை வெளியே தெரியாமல் இருந்து வந்த உங்களுடைய திறமைகள் அனைவருக்கும் தெரியவரும். பய உணர்வும், கலக்கமான மனநிலையும் விலகி மனத்தில் ஒரு புத்துணர்ச்சி பிறக்கும். புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். கடனால் சுணங்கிய தொழிலை முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் செல்லும் மார்க்கம் தென்படும்.
பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து குடும்ப வருமானம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முன்னோர்களின் ஆசிர்வாதமும் வழிகாட்டலும் விரும்பிய மாற்றத்தை தரும். பேச்சால் வீண் பிரச்சனை ஏற்படும் என்பதால் தேவையில்லாத பேச்சினைத் தவிர்க்கவும். குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உருவாகும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சையில் இருந்தவர்களுக்கு நோயின் தாக்கம் படிப்படியாக குறையும். திருமண வயதினருக்கு ஓரிரு மாதங்களில் திருமணம் நிச்சயிக்கப்படும். சந்திர கிரகணத் தன்று சிவபுராணம் படிக்கவும்.
தனுசு
தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாரம். தனுசு ராசிக்கு 6,11-ம் அதிபதியான சுக்ரன் ராசிக்கு 4ல் உச்சம் பெறுகிறார். சொத்துக்களை விற்று கடன் அடைக்கும் முயற்சிகள் சித்திக்கும். பண நெருக்கடிகள் அகலும். பணிபுரி பவர்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு உண்டு. தொழிலில் முன்னேற்றமும் லாபமும் பெருகும். நல்ல புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணம் கொடுக்கல், வாங்கலில் நிலவிய நெருக்கடிகள் விலகும். கடன்கள் படிப்படியாக குறையும்.
குடும்ப தேவைகள் நிறைவேறும். தாய், தந்தையே தெய்வம் என்ற உணர்வு மேலோங்கும். தலைமறைவாக வாழ்ந்தவர்கள் வீடு திரும்புவார்கள். அண்டை அயலாருடன் ஏற்பட்ட பிணக்குகள் சீராகும். அதிர்ஷ்டம், லாட்டரி, போட்டி பந்தயங்கள் சாதகமாகும். 2.3.2026 அன்று காலை 7.51 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்மறை விவாதங்களைத் தவிர்த்து விடாமுயற்சி, வைராக்கியத்துடன் செயல்பட வேண்டும். சில திட்டங்களை செயல்படுத்த போராடினாலும் முடிவில் வெற்றி வாகை சூடுவீர்கள். சந்திர கிரகணம் முடிந்த பிறகு சிவ வழிபாடு செய்யவும்.
மகரம்
கொள்கை பிடிப்போடு செயல்படும் வாரம். ராசிக்கு 2ம்மிடமான தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் புதன் ராகு சேர்க்கை உள்ளது. சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள். உங்கள் பேச்சிற்கு குடும்ப உறுப்பினர்கள் மதிப்பு கொடுப்பார்கள். இதுவரை சொந்த தொழில் நாட்டம் இல்லாதவர்களுக்கு கூட தொழில் ஆர்வம் உருவாகும். தொழிலுக்கு தேவையான உபரி மூலதனம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்கிய நிலை மாறும்.
பூர்வீகச் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். அஷ்டம கேதுவால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய முடியும். வைத்தியச் செலவுகள் குறையும். பிள்ளைபேறு உண்டாகும். இழுபறியாக இருந்த வம்பு வழக்குகளில் வெற்றி கிடைக்கும். 2.3.2026 அன்று காலை 7.51 மணி முதல் 4.3.2026 அன்று பகல் 1.45 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பமும், பதட்டமும் அதிகரிக்கும். சந்திர கிரகணத்தன்று ஸ்ரீ ருத்ரம் கேட்கவும் அல்லது படிக்கவும்.
கும்பம்
எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும் வாரம். ராசிக்கு ஏழாமிடமான சம சப்தம ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கப்போகிறது. தொழில் தொடர்பான புதிய முயற்சிகள், திருமணம், திருமண ஒப்பந்தம், விவாகரத்து வழக்குகளை விசாரித்தல், வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் இவைகளை சில நாட்களுக்கு தவிர்க்கவும். மறைமுக எதிரிகளால் தொல்லைகள் வரலாம். வாழ்க்கை துணை, நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்களை பகைக்க கூடாது. அல்லது சகோதரரின் குடும்பத்தை பராமரிக்கும் நிலை வரலாம்.
பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை நடக்கலாம். 4.3.2026 அன்று பகல் 1.45 முதல் 6.3.2026 அன்று பகல் 10.18 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையைச் சோதிக்கும் பல்வேறு அனுபவங்களை சந்திக்க நேரும். எனவே பிறரிடம் பேசும் போது பொறுமை, நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சந்திர கிரகணத்தன்று நலிந்தவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவது நல்லது.
மீனம்
திருமண தடை அகலும் வாரம். ராசியில் சுக்கிரன் சனி சேர்க்கை உள்ளது. வீண் கவலைகள் நீங்கி துணிச்சல், தைரியம் அதிகரிக்கும். மனதில் தோன்றும் திட்டங்களை முறையாக செயல்படுத்த முடியும். உங்களது பெயர், புகழ், சமுதாய அந்தஸ்து உயரும். பல பெரிய மனிதர்களின் நட்பால் நற்பலன்கள் உண்டாகும். சிலருக்கு தொழில், உத்தியோக ரீதியான வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் அமையும். பெரியோர்களின் ஆசியுடன் திருமணம் நடைபெறும். சொந்த மனை வாங்க கூடிய யோகம் உண்டாகும்.
பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட மன உளைச்சல், மனக்குழப்பம் அகலும். பழகிய வட்டாரத்தில் மதிப்பும், அந்தஸ்தும் கூடும். புத்திரர்களின் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பெண்களுக்கு மாமியாரால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். 6.3.2026 அன்று இரவு 10.18 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் அமைதியாக இருப்பதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். சந்திர கிரகணம் முடிந்த பிறகு முக்கிய பணிகளை துவங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- ரிஷபம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய காலம்.
- மிதுனம் பாக்கிய பலம் அதிகரிக்கும் வாரம்.
மேஷம்
அனுகூலமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம், திருப்பம் உண்டாகும். பண வரவு சிறப்பாக இருக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள், இன்னல்கள் மறையும். எதிர் நீச்சல் போட்டு இழந்ததை மீட்பீர்கள். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். குடும்ப குழப்பங்கள் சூரியனைக் கண்ட பனிபோல் விலகி மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகமாகும்.
சகோதர, சகோதரிகளின் நலனில் ஆர்வம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தந்தையின் ஆசியும் ஆஸ்தியும் கிடைக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சுவார்த்தை பலன் தரும். சிலருக்கு வீண் செலவுகள், விரயங்கள் ஏற்படும். திருமண முயற்சி வெற்றி தரும். புதிய வீடு வாகன யோகம் கிடைக்கும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாழக்கிழமை வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகனை வழிபடவும்.
ரிஷபம்
திட்டமிட்டு செயல்பட வேண்டிய காலம். ராசிக்கு செவ்வாயின் 4-ம் பார்வையும் சனியின் 3ம் பார்வையும் உள்ளது. இரு அசுபகிரகங்களின் பார்வை ராசிக்கு உள்ளதால் சற்று ஏற்ற இறக்கமான பலன்களை ஏற்படுத்தும். பொருளாதார நிலை சாதகமாக இருக்கும். ஏற்றத் தாழ்வுகளை கட்டுப்படுத்த முடியும். பேச்சாற்றலால் சிக்கலான காரியங்களைக் எளிதாக சாதிப்பீர்கள். புதிய தொழில் துவங்க ஏற்ற காலம். அரியர்ஸ் ஓவர் டைம் ஊதியம் இப்பொழுது கிடைக்கும்.
சிலருக்கு வேலை மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். திருமணம், குழந்தை பேறில் நிலவிய தடைகள் அகலும். தந்தைக்கு தடைபட்ட அரசின் உதவித் தொகை கிடைக்கும். வெளிநாட்டில் வசிக்கும் உங்களின் மூத்த சகோதரர் பூர்வீகத்திற்கு வந்து செல்வார். தாய் வழிச் சொத்து, உயில் ஆதாயம் உண்டு. எதிரிகளின் பலம் குறையும். பிள்ளைகளின் கடமைகளை செய்து முடிப்பீர்கள். திருமணத்திற்கான வரன்கள் தேடி வரும். வாராகி அம்மனை வழிபடவும்.
மிதுனம்
பாக்கிய பலம் அதிகரிக்கும் வாரம். இந்த வாரத்தில் ராசி அதிபதி புதன் வக்கிரகதியில் செல்ல இருக்கிறார். எனினும் ராசியில் நிற்கும் குருவின் பலத்தால் உங்களுடைய பணிகளை விரைவாகவும் வேகமாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடிப்பீர்கள். மிக மிக சிறப்பான நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தொட்டது எல்லாம் துலங்கும். ஜனவசியம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தன வரவுகள் திருப்தியாக இருக்கும். அடமான நகைகள், சொத்துக்கள் மீண்டு வரும். குல தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும்.
இஷ்ட தெய்வ அனுகிரகம் உண்டாகும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு சிறு பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலர் வீட்டை புதுப்பிப்பார்கள். வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாத கடன் பிரச்சினைகள் கூட தீரும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக் கவலை அகலும். புதன் கிழமை பசுவிற்கு அகத்திக் கீரை வழங்கவும்.
கடகம்
தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் பார்வை உள்ளது. இதுவரை பாராமுகமாக இருந்த உறவுகளின் வருகை குடும்பத்தில் கலகலப்பை அதிகப்படுத்தும். குடும்பத்திலிருந்த பல விதமான குறைபாடுகள் சீரடைந்து வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வரக்கூடிய இடர்பாடுகளை உணரும் உள்ளுணர்வு அதிகரிக்கும். புதிய திட்டங்கள் தீட்டி சவாலான செயல்களையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள்.
உழைப்பிற்கு ஏற்ற வருமானம் நிச்சயம் உண்டு. தொழில் சார்ந்த எண்ணம் ஈடேறும். பூர்வீகத் தொழிலால் கவுரவம் கூடும். பாகப் பிரிவினையில் இருந்த சட்ட சிக்கல் தீரும். தடைபட்ட வாடகை வருமானம் வரத்துவங்கும். புத்திர பிராப்தம் உண்டாகும். திருமணத் தடை அகலும். போட்டி பந்தயங்கள், கலந்து கொள்பவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. வெளிநாட்டு பயணம் சுமூகமாகும். பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் அகலும். சுப பலன்களை அதிகரிக்க சனிக்கிழமை காளியை வழிபடவும்.
சிம்மம்
வாழ்க்கைத் தரம் உயரும் வாரம். ராசி அதிபதி சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், ராகுவுடன் இணைந்து தன் வீட்டை தானே பார்க்கிறார். பல விதமான மாற்றங்கள், ஏற்றங்கள் ஏற்படும். நல்ல வேகமும், விவேகமும் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத தன லாபம் பொருட்சேர்க்கை உண்டாகும். எதையும் சமாளித்து நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பணவரவில் இருந்த தடை, தாமதம் சீராகும். பணப் பற்றாக்குறைகள் அகலும். எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருப்பவருக்கும் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.
மூத்த சகோதரருடன் நல்லிணக்கம் உண்டாகும். சிலருக்கு பூர்வீகச் சொத்து விற்பனை முலம் பெரும் பணம் கிடைக்கும். தொழில் நிமித்தமாக வெளியூரில் வசித்தவர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைத்து குடும்பத்துடன் இணையக் கூடிய அற்புதமான காலம். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருந்த நோய்கள் சாதாரண வைத்தியத்தில் குணமாகும். திருமண வயதில் உள்ள பிள்ளைகளுக்கு சீரும் சிறப்புமாக திருமணம் செய்து முடிப்பீர்கள். அம்பிகையை வழிபடவும்.
கன்னி
நிம்மதியான வாரம். ராசி அதிபதி புதன் ராசிக்கு ஆறில் வக்ரம் அடைகிறார். முக்கிய முடிவுகளில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய தொழில் ஆரம்பிப்பார்கள். தாய், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும். பணியாளர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் முதலாளிகளின் ஆதரவு கிடைக்கும். தாய் வழிச் சொத்தின் மூலம் சகோதரர்களிடம் ஏற்படும் கருத்து வேறுபாட்டை தவிர்க்க முறையான பத்திரப்பதிவை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். குல தெய்வம், பூர்வீகம் தெரியாதவர்கள் அதை தெரிந்து கொள்ள முயல்வீர்கள்.
உங்கள் முயற்சி புகழ், அந்தஸ்தை நிலை நிறுத்த கடின உழைப்பு அவசியம். தந்தையின் ஆரோக்கியத்திற்கு வைத்திய செலவு செய்ய நேரும். பெண்களுக்கு வேலை செய்யும் இடங்களில் நிலவிய மனக்கசப்புகள் தீரும். 23.2.2026 அன்று இரவு 10.12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். குடும்பப் பொறுப்புகள் காரணமாக அலைச்சலும் சோர்வும் ஏற்படும். விநாயகருக்கு அருகம்புல் அணிவித்து வழிபட நல்லது நடக்கும்.
துலாம்
அதிர்ஷ்டம் அரவணைக்கும் வாரம். அதிர்ஷ்டத்தை கூறுமிடமான ஐந்தாம் இடத்தில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், ராகு சேர்க்கை உள்ளது. இது எதிர்பாராத பணவரவை அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். அதிர்ஷ்டத்தை நீங்கள் விரும்பாவிட்டாலும் அதிர்ஷ்டம் உங்களை விரும்பும் நேரம். பங்குச்சந்தை ஆதாயம் பல மடங்கு அதிகரிக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலக பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்குச் சென்று நீண்ட நாட்களாக நினைத்திருந்த பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் நன்மைகள் உண்டு. 23.2.2026 அன்று இரவு 10.12 முதல் 26.2.2026 நள்ளிரவு 12.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்கக் கூடாது. அதே போல் விலை உயர்ந்த ஆபரணங்களை இரவல் கொடுப்பதை வாங்குவதை தவிர்க்கவும். தினமும் லலிதா சகஸ்ரநாமம் கேட்கவும்.
விருச்சிகம்
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் மூன்றாமிடத்தில் இருந்து நான்காமிடமான சுகஸ்தானம் செல்கிறார். பிறர் புகழ வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். சாமர்த்தியமாகப் பேசி முக்கிய காரியங்களை சாதிப்பீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டு. வங்கிக் கடன் கிடைப்பதில் இருந்த தடை, தாமதம் அகலும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக இருக்கும். புதிய பெரிய மனிதர்களின் நட்பால் அந்தஸ்து உயரும், ஆதாயம் அதிகரிக்கும். விரும்பிய வேலை மாற்றம் கிடைக்கும். மனத் தடுமாற்றம் குறையும். மாணவர்கள் ஆர்வமாக படிப்பார்கள். தான தர்மங்கள் செய்வதால் நிம்மதி அதிகமாகும்.
பிள்ளைகளின் திருமண முயற்சி வெற்றியைத் தரும். காதல் திருமணம் கைகூடும். 26.2.2026 நள்ளிரவு 12.55 முதல் 28.2.2026 அதிகாலை 3.52 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கூட்டுத் தொழிலில் சற்று விட்டுக் கொடுத்து செல்லவும். குடும்ப நிர்வாகச் செலவு மற்றும் சொந்த பந்தங்களின் இல்ல சுபச் செலவு என செலவுகளின் பட்டியல் கூடும். சிவ வழிபாட்டால் மேன்மை பெற முடியும்.
தனுசு
இடப்பெயர்ச்சி பற்றிய சிந்தனை உதயமாகும் வாரம். ராசிக்கு சனியின் பத்தாம் பார்வை உள்ளது. இது அர்த்தாஷ்டம சனியின் காலம் என்பதால் வீடு மாற்றம் வேலை மாற்றம் ஊர்மாற்றம் பற்றிய சிந்தனைகள் கூடும். கணவன்-மனைவி விசயத்தில் சம்பந்தமில்லாத நபர்களின் குறுக்கீடு வரலாம். பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்வது சற்று கடினமாக இருக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையை பொறுமையாக கையாளவும். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் வரும். திருமண முயற்சி சாதகமாகும். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கலாம். தியானம், யோகா போன்ற ஆழ்மன எண்ணங்களை சீராக்கும் பயிற்சியில் ஈடுபடுவீர்கள். குடும்ப பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். ஸ்ரீ கால பைரவரை வழிபட நிம்மதி கூடும்.
மகரம்
பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் வாரம். ராசியில் சஞ்சரித்த உச்ச செவ்வாய் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பங்குச் சந்தை ஆதாயம் மகிழ்ச்சி தரும். அடமான நகைகள் மீண்டு வரும். வாடகைக்கு போகாமல் இருந்த அசையாச் சொத்துக்களுக்கு புதிய வாடகைதாரர் கிடைப்பார்கள். அசையாச் சொத்துகளின் மதிப்பு உயரும். திருமணத் தடை அகலும். காதல் திருமணம் முயற்சி வெற்றி தரும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். உயர் அதிகரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி தரும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் குறையும்.
உண்ண, உறங்க நேரம் இல்லாமல் உழைக்க நேரும். தொழிலில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வீர்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். ஒரு சிலர் மனைவி பெயரில் வீடு, நிலம் வாங்கலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். எல்லாம் முறையாக நடந்தாலும் எதிர்காலம் பற்றிய பயமும் அவ்வப்போது வந்து மறையும். குலதெய்வத்திடம் ஒரு முக்கிய கோரிக்கை வைப்பீர்கள். தினமும் சிவபுராணம் படிப்பதால் அமோகமான மாற்றங்கள் உண்டாகும்.
கும்பம்
நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம். ராசியில் சில கிரகச் சேர்க்கை உள்ளது. சில பாதகங்கள் மற்றும் சாதகங்களும் இருக்கும் என்பதால் தெளிவான மனநிலையில் செயல்படுவது நல்லது. சில கும்பராசியினருக்கு அரசியல் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். இயன்றவரை வேலையை மாற்றம் செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம். தந்தைவழி உறவில் நல்ல விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.
பூர்வீகச் சொத்தில் இருந்துவந்த வில்லங்கங்கள் விலகும். சிலர் பிள்ளைகளின் கல்விக்காக இடப்பெயர்ச்சி செய்ய நேரும். விரும்பிய உயர் கல்வி வாய்ப்பு சாதகமாகும். குடும்ப உறவுகளுக்கு நண்பர்களுக்கு ஜாமீன் பொறுப்பு ஏற்பதை தவிர்க்கவும். பணம் கொடுக்கல் வாங்கலுக்கு உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். பல சாதகங்கள் நடந்தாலும் ஏழரைச் சனியின் காலம் என்பதால் மிகைப்படுத்தலான மன உளைச்சலும் இருக்கும். ராகுவின் தாக்கத்தை கட்டுப்படுத்த செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனை வழிபடவும்.
மீனம்
பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும் வாரம். ராசி அதிபதி குரு சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். கடந்த காலத்தில் ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கிடைக்கும். வீடு, வாகன முயற்சி சித்திக்கும். தாய்வழிச் சொத்து தேடி வரும். உபரி வருமானம் கிடைப்பதால் தாராளமாக செலவு செய்து சந்தோஷமாக இருப்பீர்கள். பங்குச் சந்தை ஆதாயமும் சேமிப்பும் அதிகரிக்கும். தாய்,தந்தை, சகோதரியிடம் இருந்த கருத்து வேற்றுமை அகலும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மனதை மகிழ்விக்கும் சம்பவங்கள் நடக்கும். உத்தியோகத்தில் நினைத்த இடமாற்றம் கிடைப்பது உறுதி. புதிய வேலை வாய்ப்பு மன நிறைவைத் தரும். விண்ணப்பித்த அரசு உத்தியோகம் தொடர்பான நல்ல செய்தி தேடி வரும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். புத்திர பாக்கியம் வாரிசு உருவாகும். ஆலய தரிசனமும் புனித நதிகளில் நீராடும் பாக்கியமும் கிட்டும். தினமும் விநாயகரை வழிபடுவதால் சகல ஐஸ்வர்யங்களும் கூடும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- மேஷம் சேமிப்புகள் அதிகமாகும் வாரம்.
- கடகம் விபரீத ராஜயோகம் உண்டாகும் வாரம்.
மேஷம்
சேமிப்புகள் அதிகமாகும் வாரம். தன ஸ்தான அதிபதி சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். புதிய தொழில் சார்ந்த எண்ணங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றுவீர்கள். மனதில் இருந்த குழப்பங்களுக்கு தெளிவுகள் பிறக்கும். வருமானம் உபரியாகும். வராக்கடன்கள் வசூலாகும். சேமிப்புகளை அதிகரிக்கும் எண்ணங்கள் உருவாகும். வீடு, வாகன யோகம் சித்திக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும் கவுரவம் நிலைத்திருக்கும். தொழில் கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்துச் செல்வதால் இன்னல்கள் விலகும்.
திருமண முயற்சிகள் பலிதமாகும். பெண்களுக்கு தாய் வீட்டுச் சீதனம், பாகப் பிரிவினை பணம், சொத்து கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கு அரசு வேலை கிடைக்கும். வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பேச்சு வார்த்தையில் பாகப்பிரிவினை சுமூகமாகும். வெளியூர் பயணங்கள் ஆதாயத்தில் முடியும். அமாவாசை அன்று சிவப்பு துவரை ஒரு கிலோ தானம் வழங்கவும்.
ரிஷபம்
புதிய தொழில் சிந்தனைகள் உருவாக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் சூரியன் புதன் ராகுவுடன் இணைகிறார். செல்வாக்கு புகழ் அந்தஸ்து பற்றிய சிந்தனை அதிகரிக்கும். கவுரவ பதவிகள் கிடைக்கும். மனக் குழப்பங்களில் இருந்து தெளிவு பிறக்கும். தவறான விலை நிர்ணயம் உண்டாகலாம் என்பதால் சொத்து வாங்குதல் விற்றல் போன்றவற்றில் சிந்தித்து செயல்பட வேண்டும்.
புதிய தொழில் அபிவிருத்தி சிந்தனைகள் அதிகரிக்கும். அரசின் டெண்டர் காண்ட்ராக்ட் குத்தகைதாரர்களுக்கு உபரி வருமானம் இரட்டிப்பாகும். புதிதாக சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் புத்திர பிராப்த்தம் போன்றவற்றில் சாதகமான சூழ்நிலை நிலவும். தன வரவில் தன்னிறைவு உண்டாகும். அமாவாசை அன்று விரதம் இருந்து முன்னோர்களை வழிபடவும்.
மிதுனம்
நல்ல சிந்தனைகள் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி புதன் ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்தில் சூரியன் சுக்கிரன் ராகுவுடன் இணைந்து உள்ளார். முயற்சிகளில் ஏற்பட்ட தளர்ச்சிகள் அகலும். சமூகப் பணிகளில் ஆர்வம் கூடும். பெருந்தன்மையாக செயலபட்டு செல்வாக்கை அதிகரிப்பீர்கள். கடன் சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். வியாபாரத்தில் போட்டிகளை தவிர்க்கவும். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகள் ஈடேறும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.
உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வேலையாட்களிடம் நிதானம் வேண்டும். 17.2.2026 அன்று காலை 9.06 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வெளியூர் பயணங்கள் தவிர்க்கவும். பெரிய பண பரிவர்த்தனைகளை ஒத்தி வைப்பது நல்லது. ஆடம்பரமான சிந்தனைகளை தவிர்த்து சிக்கனமாக செயல்பட வேண்டும். அமாவாசை அன்று பச்சை பயிறுதானம் வழங்கவும்.
கடகம்
விபரீத ராஜயோகம் உண்டாகும் வாரம். அஷ்டம ஸ்தானத்தில் நிற்கும் ராகுவுடன் சூரியன் புதன் சுக்கிரன் சேர்க்கை ஏற்படுகிறது. குடும்பத்தில் நிலவிய மறைமுகப் பிரச்சினைகள் மறைந்து மகிழ்ச்சியும் சுபிட்சமும் கூடும். மனதில் புதுவிதமான நம்பிக்கை அதிகரிக்கும். தனித் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத அதிர்ஷ்ட பணம் பொருள் வரவுகள் உண்டாகும். அடமான சொத்துக்கள் நகைகளை மீட்கக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும்.
மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகமாகும். கிரகண தோஷ பாதிப்பு இருப்பதால் திருமணம் முயற்சிகளை ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைப்பது நல்லது. ஆரோக்கியத்தில் நல்ல தெளிவு உண்டாகும். 17.2.2026 அன்று காலை 9.06 மணி முதல் 19.2.2026 பகல் 3 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செயல்பாடுகளில் ஒரு விதமான மந்தத்தன்மை இருக்கும். பிறரிடம் எதிர்பார்த்த சில ஆதாயங்கள் தாமதமாக கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. அமாவாசை அன்று புனித நதிகளில் நீராடவும்.
சிம்மம்
விவேகத்துடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் ராகுவுடன் இணைந்து கிரகணம் அடைகிறார். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் காலதாமதம் ஏற்படுவதால் தன் கையே தனக்கு உதவி என்று உணர்வீர்கள். உண்ண உறங்க நேரமின்றி உழைப்பீர்கள். சிலர் உத்தியோக நிமித்தமாக குடும்பத்தை விட்டு விலகி வேறு இடத்தில் வாழும் சூழ்நிலை உண்டாகும். வழக்குகளை வாபஸ் பெறுவீர்கள். மத்தியஸ்தர்கள் முன்னிலையில் பேசி தீர்க்கப்படும்.
கொடுத்த பணம் வசூலாகும். சிலருக்கு திடீர் பண வரவு அல்லது கடன் கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். வீடு, வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரும். பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். 19.2.2026 பகல் 3 மணி முதல் 21.2.2026 அன்று இரவு 7.07 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்கள் பேச்சை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள் என்பதால் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கோட்ச்சார கிரகங்கள் சுமாராக இருப்பதால் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். அமாவாசை அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்யவும்.
கன்னி
திட்டமிட்டு செயல்படும் செயல்கள் பூர்த்தியாகும் வாரம். ராசி அதிபதி புதன் ராசிக்கு ஆறாம் இடத்தில் ராகு மற்றும் சூரியன் சுக்கிரனுடன் சஞ்சரிக்கிறார். கடன் நோய் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு திட்டமிடுதல் அவசியம். எனினும் ஆறாம் இடத்திற்கு குரு பார்வை இருப்பதால் புதிய நல்ல மாற்றங்கள் உண்டாகும். எதிலும் மதி நுட்பத்துடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். திருப்புமுனையான சம்பவங்கள் நடக்கும். பிரிந்த தம்பதிகள் வேற்றுமை மறந்து மீண்டும் சேருவார்கள். குடும்ப உறவுகளுடன் இருந்த மனக்கசப்பு மறைந்து ஒற்றுமையும் அமைதியும் நிலவும்.
உங்கள் மீதான அவப்பெயர்கள் விலகும். ஆடம்பர விருந்து உபசாரங்களில் கலந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 21.2.2026 அன்று இரவு 7.07 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் முக்கிய ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. அமாவாசை அன்று விரதம் இருந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு தானம் வழங்கவும்.
துலாம்
புதிய வாய்ப்புகள் கிடைக்கும் வாரம். ராசி பூர்வ புண்ணிய ஸ்தானம் பாக்கியஸ்தானத்திற்கு குரு பார்வை உள்ளது. ஐந்தாம் இடத்தில் உள்ள கிரகச் சேர்க்கை சில நன்மைகளையும் அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆர்வத்தையும் அதிகரிக்கும். தன வரவுகள் திருப்திகரமாக இருக்கும். குடும்ப உறவுகளின் சந்திப்பால் மனக் கவலைகள் அகலும். கடன் சுமை குறையத் துவங்கும். வராக்கடன்கள் வசூலாகும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். கோட்சார கிரகங்கள் சாதகமாக உள்ளதால் கெடுதல்கள் விலகும்.
திருமணத் தடை அகலும். ஓய்வு நேரம் குறையும். தேவையற்ற அலைச்சல் டென்சன், உடல் சோர்வு ஏற்படும். குலதெய்வ வேண்டுதல்களை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். அரசுப் பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். கணவன் மனைவிக்குள் நிலவிய வாக்குவாதம் விலகும். தேக நலனில் நிலவிய குறைபாடுகள் அகலும். அமாவாசை அன்று பசுவிற்கு அகத்திக்கீரை தானம் வழங்க நன்மைகள் அதிகரிக்கும்.
விருச்சிகம்
இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெறும் வாரம். ராசிக்கு நான்கில் சூரியன் புதன் சுக்கிரன் சேர்க்கை உள்ளது. மனதில் நல்ல விதமான புதிய சிந்தனைகள் உருவாகும். அன்றாட செயல்களில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும். எதிர்பார்த்த வெளிநாட்டு தொழில், வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் தகுதிக்கேற்ற பணி கிடைக்கும். தொழிலில் வெற்றி நடைபோடுவீர்கள். புதிய கூட்டுத் தொழில் முயற்சிகள் சாதகமாகும்.
அடமானத்தில் இருந்த வீட்டை மீட்க மகள், மகனின் உதவி கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் புரிந்து படிப்பார்கள். அலைச்சல் மிகுந்த பயணங்கள் செய்ய நேரும். சிலரின் நான்கு சக்கர வாகனம் வாங்கும் முயற்சி பலிதமாகும். பூமி, மனை, வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு சுப செலவு செய்து மகிழ்வீர்கள். தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. அமாவாசை அன்று விரதம் இருந்து வயது முதிர்ந்தவர்களுக்கு உணவு தானம் வழங்கவும்.
தனுசு
ஆரவாரமான வாரம். ராசி அதிபதி குரு தன் வீட்டை தானே பார்க்கிறார். பொருளாதார நெருக்கடிகள் விலகி அனைத்து தேவைகளும் நிறைவேறும். தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் பூர்த்தியாகும். கடினமான பணிகளைக் கூட சுலபமாகச் செய்து முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். வேலைப் பளு குறைந்து நிம்மதியுடன் இருப்பீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல சிறப்பாக இருக்கும். புதிய கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. வேலை பார்க்குமிடத்தில் எதிர் பாலினத்தவரை அனுசரித்து செல்லவும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். ராசிக்கு மூன்றில் கிரகண கிரகச் சேர்க்கை இருப்பதால் பாகப்பிரிவினை தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகள் மற்றும் வேலை மாற்றம் செய்வதை தவிர்க்கவும். அமாவாசை அன்று விரதம் இருந்து அந்தணர்களுக்கு தானம் தர்மம் வழங்கவும்.
மகரம்
வாழ்வில் வசந்தம் உலா வரும் வாரம். ராசியில் உள்ள உச்ச செவ்வாய் இந்த வாரத்தில் மட்டுமே சஞ்சரிப்பார். செவ்வாயின் இந்த சஞ்சாரம் மிகச் சாதகமான திருப்புமுனையான நல்ல பலன்களை வழங்கும். எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவீர்கள். எதிலும் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி வாகை சூடுவீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் சுப நிகழ்வுகள் கூடிவரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மன நிறைவுடன் இருப்பீர்கள்.
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் இந்த வாரம் கிடைக்கக்கூடும். தாய், தந்தையின் மூலம் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். தடைபட்ட வெளி நாட்டு பயணம் சாதகமாகும். குடும்பத்திற்கு ஒரு புதிய உறுப்பினர் சேர்க்கை ஏற்படும். அந்த புது வரவு களத்திரமாகவோ குழந்தையாகவோ இருக்கலாம். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சி வெற்றி தரும். எட்டாமிட கேதுவால் வீண் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால், தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அமாவாசை அன்று விரதம் இருந்து உடல் ஊனமுற்றவர்களின் தேவையறிந்து உதவி செய்யவும்.
கும்பம்
அமைதி காக்க வேண்டிய காலம். ராசியில் சூரியன் புதன் சுக்கிரன் ராகு சேர்க்கை உள்ளது. ராகுவுடன் முக்கிய கிரகங்கள் கிரகணம் அடைவதால் நேரத்திற்கு உண்ண, உறங்க முடியாமல் உழைக்க நேரும். சில எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையலாம். அதிர்ஷ்டப் பொருட்களை வாங்கி குவித்து ஏமாறுவீர்கள். வருமானம் சீராக இருந்தாலும் சமாளிக்க முடியாத விரயங்களும் ஏற்படலாம்.
சேமிக்க முடியவில்லை என்ற ஆதங்கம் மனதை வாட்டும். கணவன் மனைவி உறவில் கருத்து வேறுபாடு தோன்றும். தேவையற்ற கோபமும் முயற்சியில் தடை, தாமதம் உண்டாகும். உங்கள் செயல்பாடுகளில் மந்த நிலையும் மெத்தன போக்கும் ஏற்படும். காது நரம்பு தொடர்பான சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். கோபத்தை குறைத்து நம்பிக்கையோடு முயற்சித்தால் காரிய சித்தியுடன் நிம்மதியும் நிலைக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் விரயத்தை சுப செலவாக மாற்ற முடியும். அமாவாசை அன்று விரதம் இருந்து தான தர்மம் வழங்கவும்.
மீனம்
விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். சில கிரகங்கள் சாதகமாகவும் சில கிரகங்கள் பாதகமாகவும் உள்ளதால் சாதகங்களும், பாதகங்களும் சேர்ந்தே நடக்கும். வீடு, வாகனம் மற்றும் தாயின் ஆரோக்கியத்திற்காக சில விரயங்களை சந்திக்க நேரும். சிலருக்கு அறுவை சிகிச்சையில் ஆரோக்கியம் சீராகும். தூக்கம் குறையும். பயணங்களால் சில அசவுகரியங்கள் உண்டாகும். தொழில், உத்தியோக நிமித்தமாக வெளியூர், வெளிநாட்டு பயணம் செய்ய நேரும்.
ஜாமீன் போடுவதை தவிர்க்க வேண்டும். கண், கை, கால் மூட்டு வலி போன்றவற்றிற்கு சிகிச்சை செய்ய வேண்டிய நேரம் உள்ளது. வரவிற்கு ஏற்ற செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவையை நிறைவு செய்ய அதிக சிரமத்தை சந்திப்பார்கள். அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவதாக மீடியாக்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து ஏமாறுவீர்கள். முறையான திட்டமிடுதல் இருக்காது. தொழில், உத்தியோக நிமித்தமாக வெளியூர், வெளிநாட்டு பயணம் செய்ய நேரும். அமாவாசை அன்று விரதம் இருந்து சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- மேஷம் தொழில் சார்ந்த வெற்றிகள் தேடி வரும் வாரம்.
- மீனம் புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும்.
மேஷம்
தொழில் சார்ந்த வெற்றிகள் தேடி வரும் வாரம். மேஷ ராசிக்கு தனத்தை கொடுக்கக்கூடிய கிரகமான சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் தோற்றப் பொலிவில் புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய தொழில் சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புகள், பணிச் சுமையால் மன சஞ்சலம் உண்டாகும். எந்தப் பஞ்சாங்கத்தின் படி பார்த்தாலும் மேஷ ராசிக்கு ஏழரை சனி நடக்கும் காலம் என்பதால் தொழில் சார்ந்த அரசின் சட்ட திட்டங்களை விதிகளை மதிப்பது அவசியம்.
விரலுக்கேற்ற வீக்கம் தான் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு அகலக்கால் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் விரும்பிய மாற்றங்கள் உண்டாகும். விரும்பியவர்கள் வந்து இணைவார்கள். 10.2.2026 அன்று நள்ளிரவு 1.11 மணி முதல் 12.2.2026 அன்று பகல் 1.42 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அதிக உழைப்பும் குறைந்த ஊதியமும் கிடைக்கும். அலைச்சல் மிகுந்த பயணம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். தாய் வழியில் மனக்கவலை கருத்து வேறுபாடு உண்டாகும். ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.
ரிஷபம்
இழுபறிகள் குறையும் வாரம். லாப ஸ்தானத்தில் சனி பகவான் சுயசாரத்தில் சஞ்சரிப்பதால் குறைந்த உழைப்பும் நிறைந்த வருமானமும் கிடைக்கும். தொழிலில் நல்ல பணப்புழக்கம் இருக்கும். வாராக்கடன்கள் வசூலாகும் வாய்ப்பு உள்ளது. பூர்வீகச் சொத்து தொடர்பான இழுபறிகள் நீங்கும். உங்களுக்கு சேர வேண்டிய பாகப்பிரிவினை பங்கு முழுமையாக சொத்தாகவோ, பணமாகவோ வந்து சேரும். சிலர் பூர்வீகப் பங்குப் பிரிவினை பணத்தில் பழைய கடன்களை அடைத்து விட்டு புதிய வீடு, வாகனம் வாங்கலாம்.
பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினை மனக்கசப்பு முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான முயற்சியில் தந்தை, மகனுக்கு ஒருமித்த கருத்து நிலவும். உடல் உறுப்பில் இடது காது, கணுக்கால், பின் முதுகில் அவ்வப்போது வலி தோன்றலாம். ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.12.2.2026 அன்று பகல் 1.42 மணி முதல் 15.2.2026 நள்ளிரவு 12.42 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திட்டமிட்ட காரியங்களில் பின்னடைவு இருக்கும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. அறிமுகம் இல்லாத புதிய நபர்களிடம் பழகக் கூடாது. அஷ்டலட்சுமிகளை வழிபடவும்.
மிதுனம்
திடீர் திருப்பங்கள் உண்டாகும் வாரம். ராசியில் உள்ள ஜென்ம குரு பகவான் வெகு விரைவில் வக்கிர நிவர்த்தி அடையப் போகிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பேச்சாற்றலால் லாபம் சம்பாதிக்க முயல்வீர்கள். பற்றாக்குறை பட்ஜெட் உபரி பட்ஜெட்டாகும். உறவினர் பகை அகலும். வியாபாரம், தொழிலில் இருந்த மந்த நிலைமாறும். பெரிய மனிதர்களின் ஆதரவோடு புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். ஊடகங்களில் பணிபுரிபவர்களின் தனித் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். பணி நிரந்தரமாகும்.
சம்பள உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலருக்கு விருப்ப திருமணம் நடக்கலாம். பெண்களின் முயற்சிக்கு கணவரின் ஆதரவும், உதவியும் கிடைக்கும். திருமணத்தடை அகலும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு பூர்வீகம் வந்து செல்வதில் நிலவிய தடை, தாமதம் அகலும். தினமும் சிவபுராணம் படிக்க தொல்லைகள், மனக் கவலைகள் அகலும்.
கடகம்
உழைப்பிற்கான அதிர்ஷ்டத்தை அடையக் கூடிய அற்புதமான வாரம். தன ஸ்தான அதிபதி சூரியன் சம சப்தம ஸ்தானத்தில் நின்று ராசியை பார்க்கிறார். இது சிறப்பான அமைப்பு என்பதால் சகல விதத்திலும் அனுகூலங்கள் உண்டாகும். மறைமுகப் பிரச்சினைகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். தொழிலை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்ற எண்ணங்கள் பூர்த்தியாகும். சிலருக்கு கூட்டுத் தொழிலில் மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு கவுரவப் பதவிகள் உயர்வுகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக அடிக்கடி அலைச்சல் மிகுந்த பயணங்கள் செய்ய நேரும்.
சிலருக்கு சொத்துக்கள் அடமானம், விற்றல் மூலமும் பணம் கிடைக்கும். சிலருக்கு சொத்துக்கள் வாங்க, கட்ட, விஸ்தரிக்கத் தேவையான பொருள் உதவி கிடைக்கும். சிறப்பான பணவரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையத் தொடங்கும். தாய் மாமாவின் ஆதரவால் தாய்வழிச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரும். மங்களகரமான சுப நிகழ்வுகள் நடைபெறும். நீண்ட காலமாக தீர்க்க முடியாத பல பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அம்பிகை வழிபாட்டால் சங்கடங்கள் தீரும்.
சிம்மம்
சிந்தித்து செயல்பட வேண்டிய காலம். ராசிக்கு எட்டாம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் தெளிவாக திட்டமிட்டு செயல்பட முடியாத நிலை இருக்கும். சிலருக்கு வேலை மாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம் போன்றவைகள் ஏற்படலாம். வேலை பளு கூடும். எளிமையாக முடிய வேண்டிய வேலைகள் இழுபறியாகும். பிறரை நம்பி ஒப்படைத்த செயல்களால் விரோதம் உண்டாகும். கூட்டுக் குடும்பம், கூட்டுத் தொழிலில் பிரிவினை உண்டாகும். தொழில் சார்ந்த துறையில் உங்களின் புதிய முயற்சிகளில் தடை உண்டாகலாம்.
சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இழுபறியாக இருக்கும். பிள்ளைகளின் திருமண முயற்சி கைகூடும். முன் கோபத்தைக் குறைத்து நிதானமாக செயல்படவும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்ப உறவுகளிடம் தேவையற்ற பேச்சை தவிர்க்க வேண்டும். தொழில் நிமித்தமாக பிரிந்த தம்பதியினர் சேர்ந்து வாழ்வார்கள். சனிக்கிழமை ஸ்ரீ காலபைரவரை வழிபடவும்.
கன்னி
தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் வாரம். ராசி மற்றும் பத்தாம் அதிபதியான புதன் ராசிக்கு ஆறில் ராகுவுடன் இணைந்து குரு பார்வை பெறுகிறார்கள். புதிய முயற்சிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும். உடன் பிறந்தவர்கள் மற்றும் தந்தையால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கடந்த காலங்களில் நிலவிய நெருக்கடிகள் குறைந்து படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
வேலை இழந்தவர்களுக்கு புதிய ஆன்லைன் வேலை கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். போட்டி பந்தயங்களில் வெற்றி நிச்சயம். வரவிற்கு ஏற்ற செலவும் இருக்கும். பெண்களுக்கு தாய் வழிச் சொத்து கிடைப்பதில் நிலவிய தடை, தாமதங்கள் சீராகும். முழுப் பங்கும் முறையாக வந்து சேரும். புதிய நட்புக்கள் கிடைக்கும். வம்பு, வழக்குகளில் இருந்த இழுபறி நிலைமாறி தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக முடியும். மேலும் சுப பலனை அதிகரிக்க ஸ்ரீ மீனாட்சியை வழிபடவும்.
துலாம்
புதிய வாய்ப்புகள் கைகூடும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு மற்றும் புதனுடன் சஞ்சரிக்கிறார். உங்களின் பலமும், வளமும் அதிகரிக்கும். வாழ்வில் நீங்கள் எதிர்பார்க்கும் மிகப் பெரிய மாற்றங்கள் உண்டாகும். பெயர், புகழ், அந்தஸ்து உயர்ந்து சமுதாயத்தில் நல்லதொரு இடத்தினை பிடிக்க முடியும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களின் தனித் திறமைகளை வெளிப் படுத்தக்கூடிய சிறப்பான சந்தர்ப்பங்கள் கிடைக்கும். கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட், பங்குச் சந்தை போன்ற துறையில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டமான லாபகரமான பலன் கிடைக்கும்.
பணிச்சுமைகள் குறைந்து மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். நிலவிய தேக்கங்கள் விலகி லாபங்கள் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். பிரிந்து சென்ற உறவுகள் தேடி வருவார்கள். சிலர் புத்திர பாக்கியத்தை அடைய செயற்கை கருத்தரிப்பு முறையை அணுகலாம். பெண்களுக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும். தினமும் மாலை வேளையில் ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வழிபட கடன் தீர்ந்து தாராள தன வரவு உண்டாகும்.
விருச்சிகம்
புதிய அனுபவங்களால் மகிழ்ச்சி உண்டாகும் வாரம். தன அதிபதி குரு பகவான் தன ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத தன லாபம் உண்டாகும். வாழ்க்கைத் தரம் உயரும். விலை உயர்ந்த பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். எதையும் சமாளித்து நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். தொழிலை விட்டு விலகி விடலாம் என்று நினைத்தவர்களுக்கு கூட நம்பிக்கையை அதிகரிக்கும் விதமான மாற்றங்கள் ஏற்படும்.
நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வந்து சேரும். காணாமல் போன நகை, பணம் கிடைக்கும். கடந்த கால கடன் பிரச்சினைகள் குறையத் தொடங்கும். தேவையற்ற செலவுகள் குறைந்தால் சேமிப்பு உயரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் விலகி மன நிம்மதி ஏற்படும். வீடு, வாகன யோகம் கை கூடி வரும். சித்தப்பாவின் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பழகிய வட்டாரத்தில் மதிப்பும், அந்தஸ்தும் கூடும். பிறரை அண்டி பிழைத்த நிலை மாறும். அரசு சம்பந்தப்பட்ட முயற்சியில் சாதகமான பலன் எதிர்பார்க்கலாம். சிதம்பரம் நடராஜரை வழிபடவும்.
தனுசு
தனித்திறமை வெளிப்படும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் தன் வீட்டைத் தானே பார்ப்பதால் முயற்சியில் தளர்ச்சி இல்லாத வளர்ச்சி உண்டாகும். புதிய தேடல் உண்டாகும். உடன் பிறப்புகளால் அனுகூலமும், ஆதாயமும் உண்டாகும். உழைப்பிற்கான பலன் கிடைக்கும் அர்தாஷ்டமச் சனி தொடங்கினாலும் குரு ராசியை பார்ப்பதால் படித்து முடித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வங்கிக் கடன் கிடைக்கும். வேலை ஆட்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். பிரார்த்தனைகள் நிறைவேறும்.
குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் சாதகமான உதவிகள் கிடைக்கும். வரவிற்கும், செலவிற்கும் சரியாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளையும் அவசியமற்ற கடனையும் குறைப்பது நல்லது. உடல் உபாதைகள், நோய் தொந்தரவு மாற்று வைத்தியத்தில் பலன் தரும். தாத்தா பாட்டியை சந்தித்து நல்லாசி பெறுவீர்கள். தாராள தன வரவு உண்டு. திருமணத் தடை விலகும். வீட்டில் சுப விசேஷங்கள் நடக்கும். கணவன், மனைவி ஒற்றுமை ஓங்கும். வீட்டில் ஸ்ரீ சக்ரம் வைத்து வழிபடவும்.
மகரம்
அறிவாற்றல் பெருகும் வாரம். ராசியில் நிலவிய கிரக சேர்க்கையில் மாற்றம் ஏற்படுகிறது. வார இறுதியில் செவ்வாய் மட்டும் ராசியில் சஞ்சரிப்பார். பிற மாத கிரகங்கள் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் கடினமான பணிகளைக் கூட சுலபமாக முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி வளர்ச்சி கிட்டும். சிலருக்கு தொழில் கடன் கிடைக்கும். பிள்ளைகளின் உதவியால் அடமானச் சொத்து நகைகளை மீட்பீர்கள்.
பூர்வீக சொத்து தொடர்பான முயற்சிகள் சிறு மன சஞ்சலத்திற்குப் பிறகு சாதகமாகும். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் உண்மையாக இருப்பவர்கள் யார்? பகடைக்காயாக பயன்படுத்து பவர் யார்? என்ற அனுபவ உண்மை புரியும். இறை பணிகளில் ஈடுபாடுகள் ஆர்வம் எழும். வழக்குகளில் வெற்றி பெறும் சூட்சுமத்தை அறிவீர்கள். வெளிநாட்டு குடியுரிமை கிடைப்பதில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். மருத்துவத்தில் நோய் கட்டுப்படும். சிலருக்கு வீண் விரயங்களும் இருக்கும். ராஜ அலங்கார முருகனை வழிபடவும்.
கும்பம்
வாழ்க்கைத் தரம் உயரும் வாரம். ராசியில் உள்ள ராகுவுடன் புதன் சுக்கிரன் சூரியன் சேர்க்கை ஏற்படபோகிறது. ராசியில் உள்ள ராகுவுடன் சூரியன் சேர்வது கிரகணதோஷ அமைப்பாகும். இந்த மாதம் ஏற்படப்போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்றாலும் ராசியில் கிரகணம் ஏற்படுவதால் வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. தம்பதிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
பணிபுரியும் இடத்தில் சக நண்பர்களிடம் ஏற்பட்ட மனபேதம் தீரும். திருமண முயற்சியில் சாதகமான பலன் உண்டு. சிலருக்கு மறுமணம் நடக்கும். பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். தந்தை வழியில் உதவி, பூர்வீகச் சொத்து சம்பந்தமாக சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். இந்த மாதம் முழுவதும் சூரியன் மீனத்திற்கு செல்லும் வரை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30-6 மணிக்குள் சிவ வழிபாடு செய்து வர தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மீனம்
புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். லாப ஸ்தானத்தில் உச்ச செவ்வாய் சஞ்சரிப்பதால் புதிய நம்பிக்கை பிறக்கும். எதிர்காலத் தேவைகளுக்கு சேமிக்க தொடங்குவீர்கள். கடனால் சுணங்கிய தொழிலை முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் செல்லும் மார்க்கம் தென்படும். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து குடும்ப வருமானம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் பேச்சிற்கு குடும்ப உறுப்பினர்கள் மதிப்பு கொடுப்பார்கள். ஜென்மச் சனியின் காலம் என்றாலும் குரு சாதகமாக இருப்பதால் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதும் இருப்பதை தக்க வைத்துக் கொள்வதும் புத்திசாலித்தனம்.
அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கலாம் பழைய சொத்துக்களை விற்கலாம். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவர். 10.2.2026 அன்று நள்ளிரவு 1.11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதி காக்க வேண்டியது அவசியம். தொழில் சீராக நடந்தாலும் லாபம் நிற்காது. கூட்டம் களை கட்டும் கல்லா களை கட்டாது. வியாழக்கிழமை நவக்கிரக குரு பகவானை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- ரிஷபம் தன்னம்பிக்கை உயரும் வாரம்.
- மிதுனம் பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும் வாரம்.
மேஷம்
மாற்றங்களை சந்திக்கும் வாரம். உச்சம் பெற்ற ராசி அதிபதி செவ்வாய் தனது 4-ம் பார்வையால் தன் வீட்டை தானே பார்க்கிறார். செவ்வாயின் நான்காம் பார்வைக்கு சொத்துக்களை வழங்கக்கூடிய சக்தி உண்டு. இதுவரை வீடு நில புலம் இல்லாதவர்களுக்கு புதிய சொத்துக்கள் சேரும். பழைய சொத்துக்களின் மதிப்பு உயரும். உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். ஏழரைச் சனி துவங்கினாலும் குருவின் பார்வை பாக்கிய ஸ்தானத்திற்கு இருப்பதால் எப்பொழுதும் உழைத்துக் கொண்டே இருக்கும் ஆர்வம் மிகுதியாகும்.
துணிந்து சில முடிவுகளை எடுத்து முன்னேறுவீர்கள். தொழில் உத்தியோக நிமித்தமாக அடிக்கடி பிரயாணம் செய்ய நேரும். நிரந்தரமான நிலையான வருமானம் உண்டாகும். சேமிப்புகள் உயரும். மனைவி மூலம் செல்வாக்கு உயரும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. திருமண தடைகள் நீங்கி வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். சுப நிகழ்ச்சிகளால் அலைச்சல் அதிகமாகும். முருகன் வழிபாட்டால் முத்தாய்ப்பான முன்னேற்றங்களை அடைய முடியும்.
ரிஷபம்
தன்னம்பிக்கை உயரும் வாரம். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி சுக்கிரன் வார இறுதியில் பத்தாம் இடமான தொழில் ஸ்தானம் சென்று ராகுவுடன் இணைந்து குரு பார்வை பெறுகிறார். பெரிய முதலீடுகளை பயன்படுத்தி தொழிலை விரிவுபடுத்துவது பற்றி திட்டமிடுவீர்கள். கடின உழைப்பை வெளிப்படுத்துவீர்கள். வீடு, மனை, பூமி தொடர்பான நெடுநாள் கனவுகள் நிறைவேறும். உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகும். சிலருக்கு உஷ்ணம் சார்ந்த பிரச்சிினைகளும் ஜீரணக் கோளாறுகளும் ஏற்படும்.
இன்னல்களை எதிர்கொள்ளும் மனோதிடம் உருவாகும். கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். புத்திர பிராப்த்தம் உண்டாகும். உயர்கல்வி முயற்சி வெற்றி தரும். பெரிய மனிதர்களின் ஆதரவில் கவுரவப் பதவி கிடைக்கும். சமுதாயத்தில் செல்வாக்கு உயரும். பெண்களுக்கு கணவர் மற்றும் புகுந்த வீட்டாரின் ஆதரவு மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் எதிர்கால நலனிற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றிதரும்.ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். முருகனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபடவும்.
மிதுனம்
பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி புதன் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு சென்று ராகுவுடன் இணைந்து குரு பார்வை பெறுகிறார். தெளிவான முடிவு எடுக்கும் தன்மையும் ஞாபக சக்தியும் கூடும். குடும்பத்தில் நிலவிய பிணக்குகள் நீங்கும். புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் உருவாகும். பொறுப்புகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் ஏற்பட்ட அவப்பெயர் விலகும். பெண்களுக்கு சிறு தொழில், சுய தொழில் செய்யும் ஆர்வம் அதிகமாகும். விண்ணப்பித்த அரசு வேலை கிடைக்கும். மறைமுக வருமானம் பெருகும். வாடகை வீட்டில் வாழ்ந்தவர்கள் சொந்த வீடு வாங்கி குடியேறுவார்கள்.
கடந்த கால வம்பு வழக்குகளின் தீர்ப்பு சாதகமாகும். பிள்ளைகளின் திருமணத்திற்கு சீர்வரிசைகள் வாங்குவீர்கள். யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. பெரிய பண பரிவர்த்தனைக்கான முக்கிய ஆவணங்களை கவனமாக வைத்திருக்க வேண்டும். நோயால் கடனால் ஏற்பட்ட கவலைகள் குறையும். ஆயுள் பலம் உண்டு. முருகனுக்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபடவும்.
கடகம்
நம்பிக்கை அதிகரிக்கும் வாரம். ராசியை ஏக யோகாதிபதி செவ்வாய் பார்ப்பது சந்திரமங்கள யோகமாகும். தெளிவான சிந்தனைகள் பிறக்கும். வாழ்வில் முக்கியமான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் வெற்றியை உறுதி செய்வீர்கள். பணத்தேவைகள் நிறைவேறும். சில குழப்பங்களுக்கு முடிவு கிடைக்கும். சொத்து விற்பனையில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் உண்டாகும். பூர்வீகத்தில் புதிய அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டு. விவசாயிகளுக்கு அரசு வகை ஆதாயம் கிடைக்கும். வாழ்க்கை துணைக்கு வட்டியில்லா கடன் கிடைக்கும்.
பங்குச்சந்தை இழப்புகள் குறையும். நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு. தொழில் தொடர்பான முயற்சிக்கு தந்தையின் ஆதரவு கிடைக்கும். இதுவரை இருந்து வந்த சகோதர, சகோதரி பிணக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு அரசியல் ஆசை துளிர் விடும். திருமணத் தடை அகலும். பார்த்துச் சென்ற வரனிடமிருந்து நல்ல தகவல் கிடைக்கும். அஷ்டம ராகுவால் சிலருக்கு விபரீத ராஜயோகம் ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. அமைதியாக இருப்பது அவசியம். விபூதி அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.
சிம்மம்
சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் 4,9-ம் அதிபதி செவ்வாயுடன் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார். பெரியளவு முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. யாருக்கும் பணம் பொருள் இவற்றிற்கு ஜாமீன் போடக்கூடாது. பங்குச் சந்தை முதலீடுகளில் மிகவும் கவனம் தேவை. பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளை ஒத்தி வைக்கவும். கடன்கள் மற்றும் மீது கவனம் தேவை. தொழில் மற்றும் குடும்ப ரகசியங்களை வெளி நபர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். தொழில் ரீதியான முன்னேற்றமும் இருக்கும்.
தர்ம காரியங்கள் செய்து மகிழ்வீர்கள். அஷ்டமச் சனியின் காலம் என்பதால் எதைச் செய்தாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யவும். கோட்ச்சார கிரகங்கள் சுமாராக இருந்தாலும் வாழும் கலையை உணர்ந்த உங்களை எந்த வினையும் பாதிக்காது. திருமணத்திற்கு ஏற்ற காலம் அல்ல. தம்பதிகளிடம் ஒற்றுமை உணர்வு மேலோங்கும். சிலருக்கு கண், காது சார்ந்த பிரச்சினைக்கு மருத்துவம் செய்ய நேரும். முருகனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபடவும்.
கன்னி
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம். கடந்த சில வாரங்களாக ஐந்தாம் இடத்தில் சஞ்சரித்து அபரிமிதமான சுப பலன்களை வழங்கிய ராசி அதிபதி புதன் ஆறாம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்திற்கு சென்று குருவின் பார்வையை பெறுகிறார். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் விரும்பிய மாற்றம் கிடைக்கும். பணிபுரிபவர்களின் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தானாகவே வந்து சேரும். வெளிநாடு சென்றவர்கள் பூர்வீகம் வந்து செல்லும் வாய்ப்பு உள்ளது.
கன்னி ராசியினர் தாத்தா பாட்டியாகும் யோகம் உள்ளது. சில பிள்ளைகள் கல்விக்காக விடுதிக்கு செல்வார்கள். குருவின் பார்வை ஆறாம் இடத்திற்கு இருப்பதால் கடன் நோய் சார்ந்த பாதிப்புகள் அதிகரிக்கும். அதிக கோபம் மற்றும் மன அழுத்த பாதிப்பு உருவாகும். அனைத்து செயலிலும் நிதானம் மற்றும் பொறுமை மிக முக்கியம். நேர் மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். திருமணம், வளைகாப்பு, கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்விற்கான அறிகுறிகள் தென்படும். முருகனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து வழிபடவும்.
துலாம்
தடைகள் தகரும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் லாப அதிபதி சூரியனுடன் இணைந்து நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் இணைந்திருப்பது துலாம் ராசிக்கு அபரிமிதமான சுப பலன்களை வழங்கும் அமைப்பாகும். வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படும். அன்றாட செயல்களில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கடனால் கவலை, கணவன் மனைவி பிரிவினை அல்லது வழக்கு, பிரச்சினைகள் முற்றிலும் நீங்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
குல தெய்வ அனுகிரகத்தால் தடுமாற்றங்கள் அகன்று எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தின் மூலம் சமுதாய அங்கீகாரம் உயரும். சித்தப்பா மற்றும் மூத்த சகோதரருடன் பூர்வீக சொத்து தொடர்பான பேச்சு வார்த்தை நடக்கும். இந்த வாரத்தில் வீட்டுக்கடன், தொழில் விரிவாக்க கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு தந்தையின் பூர்வீக வீடு, சொத்துக்கள் கிடைக்கும். திடீர் எதிர்பாராத பணவரவால் தேவைகள் அனைத்தும் நிறைவு பெறும் என்பதால் பயப்படத் தேவையில்லை. முருகனுக்கு சந்தன அபிஷேகம் செய்து வழிபடவும்.
விருச்சிகம்
பரிபூரண வெற்றியும் மகிழ்ச்சியும் உண்டாகும் வாரம். உச்சம் பெற்ற ராசி அதிபதி செவ்வாய் முயற்சி மற்றும் வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிப்பது இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டு தரக்கூடிய அமைப்பாகும். மூன்றாம் இடமான உபஜெய ஸ்தானம் வளம் பெறும் போது எண்ணங்கள், லட்சியங்கள், கனவுகள் நிறைவேறும். இதுவரை உடலாலும், உள்ளத்தாலும் வேதனைப்பட்டு வந்த உங்களுக்கு இனி வெற்றிக்கனியை சுவைக்கும் வாய்ப்பு வரப்போகிறது. சகோதரரால் சகாயங்கள் உண்டாகும். சிலருக்கு பணிக் காலம் முடிந்தப் பிறகும் பதவி நீடிப்புகள் ஏற்படலாம்.
நிரந்தர வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கோட்சார கிரகங்களால் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கி நல்ல சுப பலன்கள் உண்டாகும். விலகிச் சென்ற உறவுகள் உண்மையை புரிந்து கொள்வார்கள். அரை குறையாக நின்ற அனைத்துப் பணிகளும் துரிதமாகும். பெண்களுக்கு ஆடை அலங்காரத்தில் ஆர்வம் குறையும். எதிர் பாலினத்தவரிடம் தேவையற்ற சகவாசத்தை தவிர்க்கவும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். முருகனுக்கு தயிர் அபிஷேகம் செய்து வழிபடவும்.
தனுசு
நல்லவிதமான திருப்பங்கள் உண்டாகும் வாரம். வெகு விரைவில் ராசி அதிபதி குரு வக்ர நிவர்த்தி அடையப் போகிறார். இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டு பெறப் போகிறீர்கள். அர்தாஷ்டம சனியையும் மீறி சில பாக்கிய பலன்கள் நடைபெறும். உங்களின் திட்டங்கள் எண்ணங்கள் செயலாக்கம் பெறும். குடும்பத்தில் நிலவிய சிறு சிறு குழப்பங்கள் மறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். அடுத்த குரு பெயர்ச்சிக்கு முன் முக்கிய சுப விசேஷங்களை நடத்தி முடிப்பது நல்லது.
அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். திட்டமிட்டபடி பாகப் பிரிவினைகள் சுமூகமாகும். தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் உணர்வுப் பூர்வமாக செயல்படாமல் நிதானத்துடன் செயல்பட வேண்டும். கணவன், மனைவி ஒற்றுமையில் அன்பு மிளிரும். 2.2.2026 அன்று இரவு 10.48 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் உணர்ச்சி போராட்டம் அதிகமாகும். வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து முருகனை வழிபட முத்தாய்ப்பான முன்னேற்றம் உண்டாகும்.
மகரம்
மனக் குறைகள் நீங்கும் வாரம். கடந்த சில வாரங்களாக ராசியில் நிலவிய கிரகச் சேர்க்கைகளில் சில மாற்றங்கள் இந்த வாரத்தில் ஏற்படப் போகிறது. புதனும் சுக்கிரனும் தன ஸ்தானத்திற்கு செல்ல போகிறார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில தொழில் வாய்ப்புகள் கைகூடி வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். திறமைக்கும் தகுதிக்கும் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். நம்பிக்கையான புதிய வேலையாட்கள் கிடைப்பார்கள். அரசு உத்தியோக அனுகிரகம் உண்டாகும்.
பிரிந்து வாழ்ந்த தாயும், தந்தையும் சேர்ந்து வாழ்வார்கள். திருமண முயற்சி கைகூடும். சிலருக்கு மறுமணத்திற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. 2.2.2026 அன்று இரவு 10.48 முதல் 5.2.2026 அன்று அதிகாலை 4.20 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை. அமைதியாக இருப்பது அவசியம். அமைதியால் அனைத்து பிரச்சினைகளும் அடிப்பட்டு போகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணம் அறிந்து செயல்படுவது நல்லது. பஞ்சகவ்ய அபிஷேகம் செய்து முருகனை வழிபட பாவங்கள் அகலும்.
கும்பம்
விரும்பிய மாற்றங்கள் நடைபெறும் வாரம். ராசியில் உள்ள ராகுவுடன் புதனும் சுக்கிரனும் இணையப் போகிறார்கள். இது கும்ப ராசிக்கு சில மாற்றங்களையும் ஏற்றங்களையும் வழங்கும் அமைப்பாகும். எதிர்காலம் சார்ந்த தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வாழ்க்கைத் துணைக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். தொழில் சார்ந்த அனைத்து முயற்சிகளும் வெற்றி தரும். சிலருக்கு நல்ல வெளிநாட்டு வேலை கிடைக்கும். பெயர், புகழ், அந்தஸ்து அதிகரிக்கும். தந்தையின் அன்பும் ஆசியும் கிடைக்கும். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அதிர்ஷ்டசாலியாக திகழ்வீர்கள். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். கணவன் அல்லது மனைவிக்கு உத்தியோக ரீதியான மாற்றங்கள் உண்டாகும். வங்கி கடனை திரும்பச் செலுத்த கால அவகாசம் கிடைக்கும். 5.2.2026 அன்று அதிகாலை 4.20 முதல் 7.2.2026 அன்று பகல் 1.22 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திருமண வரன் பார்ப்பதில் கவனம் மற்றும் பொறுமை தேவை. நம்பிய வேலையாட்களால் சில அசவுகரியங்கள் உண்டாகும். தேன் அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.
மீனம்
கொள்கை பிடிப்போடு செயல்பட வேண்டிய வாரம். ஜென்ம ராசியில் நிற்கும் சனி பகவான் சுயசாரத்தில் சஞ்சரிப்பதால் பல்வேறு விதமான புண்ணிய பலன்கள் தேடி வரும். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எப்படி எல்லாம் வாழ்ந்தால் முன் ஜென்ம கர்மாவை கழித்து ஆன்மாவை சுத்தப்படுத்தி பிறவியற்ற நிலையை அடையலாம் என்பதை இந்த ஜென்ம சனியின் காலத்தில் உணர்ந்து இருப்பீர்கள். ஜென்மச் சனியை மீறிய சுப பலன்கள் உண்டாகும். கூப்பிட்ட குரலுக்கு குல தெய்வம் வந்து நிற்கும்.
பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் அகலும். உடன் பிறந்தவர்கள் அனைவரும் ஒற்றுமையாக பேசி முறையாக பாகப் பிரிவினைகளை முடிப்பீர்கள்.
கவுரவப் பதவிகள் கிடைக்கும். தந்தை மகன் ஒற்றுமை பலப்படும். திருமணத் தடை அகலும். பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். 7.2.2026 அன்று பகல் 1.22 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்குகளை ஒத்தி வைப்பது நல்லது. தேவையற்ற வாக்கு வாதங்கள் வீண் பேச்சுக்களைத் தவிர்க்கவும். தேனும் திணையும் படைத்து முருகனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- மிதுனம் காரிய சித்தி உண்டாகும் வாரம்.
- சிம்மம் உள்ளம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் வாரம்.
மேஷம்
தொழில் மாற்ற சிந்தனை ஏற்படும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் இழுபறியாக இருந்த முயற்சிகள் இப்பொழுது நிறைவேறும். திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சிகள் அகலும். உடலும், மனமும் பொலிவு பெறும். பிள்ளைகளால் நன்மையும், பெருமையும் உண்டாகும். இடமாற்றம், வீடு மாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் என அவர் அவரின் வயதிற்கும், தேவைக்கும் ஏற்ற மாற்றம் உண்டாகும்.
தொழிலை மேம்படுத்த அல்லது தொழில் மாற்றம் செய்ய வங்கிக் கடன் கிடைக்கும். ஏழரைச் சனி உள்ளதால் கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். தொழில் வியாபார ரீதியான போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வர வேண்டிய வாய்ப்புகள் தடைபடாது. உத்தியோகம் சம்பந்தமான பிரச்சினைகள் ஓரளவு நல்ல முடிவிற்கு வரும். கொடுத்த கடன்கள் வசூலாகும். கடன் தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் உண்டாகும். என்றோ வாங்கிய பங்குகள் இப்பொழுது நல்ல லாபத்தை பெற்றுத்தரும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் பாவங்கள் விலகும்.
ரிஷபம்
புதிய திருப்பங்கள் ஏற்படும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதுவரை சந்தித்த அனைத்து பிரச்சினைகளும் பனிபோல் விலகும். புதிய முயற்சிகளில் முழுமையான வெற்றிகள் உண்டாகும். கொடுத்த வாக்கையும் நாணயத்தையும் காப்பாற்றுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தொழிலில் நிலவிய சங்கடங்கள் விலகும். பணியில் கவுரவம் நிலைத்திருக்கும். அரசு ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும்.
வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த பெற்றோர்கள் மீண்டும் சேருவார்கள். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சிலர் எதிர்பாராத இட மாற்றத்தால் குடும்பத்துடன் இணைந்து வாழ்வார்கள். சகோதர, சகோதரிகள் உங்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். திருமண முயற்சிகள் சித்திக்கும். சிறு சிறு உடல் உபாதைகள் மருத்துவத்தில் சீராகும். உயர் கல்வி சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் பொறுப்புகள் கிடைக்கலாம். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்
காரிய சித்தி உண்டாகும் வாரம். ராசி அதிபதி புதன் அஷ்டம ஸ்தானத்தில் முயற்சி ஸ்தான அதிபதி சூரியனுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகிறார். மறைந்த புதன் நிறைந்த பலனை வழங்குவார். வாக்கு உண்மை உண்டாகும். பேச்சை மூலதனமாகக் கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும். பற்றாக்குறை வருமானத்தால் கவலை அடைந்தவர்களுக்கு உபரி வருமானம் கிடைக்கும். உங்கள் செயல்பாட்டில் மற்றவர்களின் குறுக்கீடு இருக்காது. குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.
பணிபுரியும் இடத்தில் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். தற்காலிக பணியில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரமாகும். தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். கடன் சுமை குறையும்.பொருளாதார நிலை உயரும். முன்னோர்களின் சொத்து பாகப் பிரிவினையில் முறையான பங்கீடு கிடைக்கும். முன்னோர்கள் வழிபாட்டிற்கு உரிய பலன் கிடைக்கும் தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். வீட்டில் சுப காரியப் பேச்சு வார்த்தை நடைபெறும். எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் கைகூடும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் கடன், நோய், எதிரி சார்ந்த பாதிப்புகள் அகலும்.
கடகம்
முட்டுக்கட்டைகள் அகலும் வாரம். ராசிக்கு சூரியன் செவ்வாய் புதன் சுக்கிரன் பார்வை உள்ளது. ஆன்ம பலம் உண்டாகும். மனப் போராட்டம் அகலும். உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள்.நினைத்ததை நினைத்தபடியே முடிப்பீர்கள். பல நல்ல மாற்றங்கள் வரலாம். உயர் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். வாழ்க்கைத் துணையின் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தொழில் செய்யும் எண்ணம் உருவாகும்.
நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இருந்த வரன்கள் இப்பொழுது முடிவாகலாம். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். தன வரவு தாராளமாக வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் சீராகும். உறவுகளின் பகை மறையும். சிலர் பார்க்கும் வேலையில் நிலவும் அசவுகரியத்தால் புதிய வேலைக்கு முயற்சிக்கலாம். சுப காரியங்கள் கைகூடும். வாழ்க்கை துணைக்கு தாய் வீட்டுச் சீதனமாக மதிப்பான சொத்துக்கள் கிடைக்கும். கை கால் மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் குறைய துவங்கும். பெண்களின் முயற்சிக்கு கணவரின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் மனக்குறைகள் அகலும்.
சிம்மம்
உள்ளம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் வாரம். லாப ஸ்தானத்தில் 5,8ம் அதிபதியான குரு சஞ்சரிப்பதால் திட்டமிட்ட காரியங்கள், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரியும் பெண்களின் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பணி நீட்டிப்பு வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு, கவுரவப் பதவிகள் தேடி வரும். நீண்ட காலமாக எதிர்பார்த்த அரசு உத்தியோகம் இப்பொழுது கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருப்தியான நல்ல வருமானம் கிடைக்கும்.
வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் கைகூடும். விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்கும். ஒரு பெரும் பணம் சொத்து விற்பனையில் கிடைக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். ஆரோக்கிய தொல்லை அகன்று மருத்துவ செலவு குறையும். 25.1.2026 அன்று பகல் 1.36 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் கிடைக்கிறது என்பதற்காக தொழிலில் அதிக முதலீடு செய்யக் கூடாது. தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் உடலும் ஆன்மாவும் உள்ளமும் குளிரும்.
கன்னி
சுப விரயம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி புதன் விரயாதிபதி சூரியனுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகிறார். அதிக முதலீட்டுடன் புதிய தொழில் தொடங்குவதை தவிர்க்கவும். எந்த ஒரு செயலையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்பட வேண்டும். வீடு வாங்கும் முயற்சியில் இருந்த குழப்பங்கள் அகலும். சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். பிள்ளைகளுக்கு சுப நிகழ்வு செய்து மகிழ்வீர்கள். வீடு வாகனத்தை புதுப்பிப்பீர்கள். சங்கடத்தில் ஆழ்த்திய நோய் வைத்தியத்திற்கு கட்டுப்படும்.
அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை கிடைக்கும். ஆன்மீக தலங்களுக்குச் சென்று மன நிம்மதியை அதிகரிப்பீர்கள். மனதிற்கு பிடித்த மண வாழ்க்கை அமையும். பொன், பொருள் வாங்கும் பாக்கியம் உண்டாகும். 25.1.2026 அன்று பகல் 1.36 மணி முதல் 27.1.2026 அன்று மாலை 4.45 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர் விசயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். உங்கள் பணியில் மட்டும் கவனமாக இருக்கவும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். ரதசப்தமி அன்று சூரிய நமஸ்காரம் செய்வதால் மனமகிழ்ச்சி உண்டாகும்.
துலாம்
தடைகள் விலகும் வாரம். ராசிக்கு குருப் பார்வை உள்ளது. அனுபவ அறிவு வெளிப்படும். கடினமான வேலையும் எளிமையாக முடிக்கும் திறமை மேலோங்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புதிய சிந்தனைகள் மேலோங்கும். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். பாக்கிய ஸ்தானமும் பூர்வ புண்ணிய ஸ்தானமும் பலம் பெறுகிறது. பித்ருக்களின் நல்லாசிகள் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் ஆர்வம் அதிகரிக்கும். குல தெய்வ அருளால் பூர்வீகம் சம்பந்தமான விசயங்கள், வழக்குகள் முடிவிற்கு வரும்.
திருமணம் போன்ற சுபகாரியங்கள் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் நடைபெறும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் நிலவிய சங்கடங்கள் மறையும். புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். அதற்குத் தேவையான நிதி உதவி கிடைக்கும். 27.1.2026 அன்று மாலை 4.45 மணி முதல் 29.1.2026 அன்று மாலை 6.39 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் பயணங்களால் அலைச்சல் மிகுதியாகும்.மனக் குழப்பங்கள் கூடும். விரயங்கள் அதிகமாக இருக்கும். தினமும் முறையாக சூரிய நமஸ்காரம் செய்தால் பித்ருக்கள் தோஷம் குறையும்.
விருச்சிகம்
மாற்றங்கள் நிறைந்த வாரம். உச்சம் பெற்ற ராசி அதிபதி செவ்வாய் தொழில் ஸ்தான அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இதனால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தானாக வந்து சேரும். தாய், தந்தை வழி ஆதரவு உண்டு. பொருளாதாரம் உயரும். கடன்களை படிப்படியாக குறைப்பதில் தீவிரம் காட்டுவீர்கள். சுப நிகழ்ச்சிகள் கைகூடிவரும். உங்கள் பெயரில் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.
அனைத்து விதமான எதிர்பார்ப்புகளும் ஈடேறும். உடல் நலன்களில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தினரால் ஏற்பட்ட மன சஞ்சலம் சீராகும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். புதுவிதமான பொருட்களை வாங்க வேண்டும் என்கின்ற ஆசை அதிகமாக உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். புத்திர பிராப்த்தம் கிடைக்கும். 29.1.2026 அன்று மாலை 6.39 மணி முதல் 31.1.2026 அன்று இரவு 8.01 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது பொறுமையும், நிதானமும் தேவை. தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் தன்னம்பிக்கை கூடும்.
தனுசு
செயல்திறன் அதிகரிக்கும் வாரம். ராசிக்கு சனி மற்றும் குருவின் பார்வை உள்ளது. எதிர்பாராத நல்ல திருப்பங்கள் நல்ல சம்பவங்கள் நடப்பதற்கான அறிகுறி தென்படும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், களத்திரம் மூலம் சிறுசிறு பிரச்சினைகள் தலை தூக்கினாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரக்கூடிய வாய்ப்பு உருவாகலாம்.
பொருளாதாரம் மேம்படும். பற்றாக்குறை பட்ஜெட் என்ற பேச்சிற்கே இடமில்லை. அக்கம், பக்கம் உள்ளவர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும். பூர்வீகச் சொத்திற்கு நல்ல விலை கிடைக்கும். சுப விரயங்கள் உண்டாகும். கல்வி சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். மனதிற்குப் பிடித்த நல்ல வரன் அமையும். குடும்பத்துடன் ஆடம்பர விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஞாயிற்றுக்கிழமை சூரிய நமஸ்காரம் செய்வதால் துன்பங்கள் விட்டு விலகும்.
மகரம்
லட்சியங்களும் கனவுகளும் நிறைவேறும் வாரம். ராசியில் ராசிக்கு 9ம் அதிபதியான புதனும் 10ம் அதிபதியான சுக்கிரனும் சேர்ந்து நிற்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். சொத்துக்களாலும் சொந்தங்களாலும் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும். விலகிச் சென்ற உறவுகள் நட்பு பாராட்டுவார்கள். உறவினர் பகை அகலும். தைரியம், தெம்பு அதிகமாகும். பூர்வீகம் சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். தம்பதிகளின் இல்லறம் நல்லறமாகும். திருமணத் தடை அகலும். புத்திர பிராப்தம் உண்டாகும். உடல் நிலை தேறும்.
அரசாங்க ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடப்பெயர்ச்சி கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழில்களில் முன்னேற்றங்கள் அதிகமாக இருக்கும். மனதிற்கு பிடித்த இடத்திற்கு வீடு மாற்றம் செய்வீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். பணத்திற்காக பிறரை அண்டிப் பிழைத்த நிலைமாறும். குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும். ஆன்மீகம் சம்பந்தமான சுற்றுப் பயணம் செய்வீர்கள். புனித தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை சூரிய நமஸ்காரம் செய்வதால் நன்மைகள் அதிகரிக்கும்.
கும்பம்
யோகமான பலன்கள் நடக்கும் வாரம். ராசி அதிபதி சனி தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவு தாராளமாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் சீராகும். பங்குச் சந்தை ஆதாயம் அதிகரிக்கும். இழந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் நிலவிய கருத்து மோதல்கள் அகலும். பணிபுரியும் இடத்தில் முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்படலாம். உங்கள் திறமையால் வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள்.
தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழில் வளர்ச்சியும், எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பிள்ளைகளின் திருமண முயற்சி சாதகமாகும். பெண்களுக்கு உடன் பிறப்புகளின் உதவியும் தாய் வழி ஆதரவும் கிடைக்கும். வேறு வேறு ஊர்களில் பணிபுரிந்த தம்பதிகள் ஒரே இடத்தில் பணிபுரியும் வகையில் இடப்பெயர்ச்சி நடக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் ஆர்வத்தில் சக்திக்கு மீறிய செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். ஞாயிற்றுக்கிழமை சூரிய நமஸ்காரம் செய்வதால் வெற்றி நிச்சயம் உண்டாகும்.
மீனம்
லாபகரமான வாரம். ஒரு ஜாதகத்திற்கு பலம் சேர்ப்பது லாப ஸ்தானமாகும். அந்த வகையில் ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்ரன் சேர்க்கை உள்ளது. முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடைகள் அகலும். கடந்த கால மனக்கசப்புகள் விலகி நிம்மதி பிறக்கும். இதுவரை எதிர்ப்புகளையும், ஏமாற்றங்களையும் சந்தித்தவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். விரோதிகள் கூட நண்பர்களாக மாறி நன்மை செய்வார்கள். அடிப்படை வசதி பெருகும். மதிப்பும், மரியாதையும் உயரும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள்.
திடீர் அதிர்ஷ்டம் உயில் சொத்து, எதிர்பாராத தன வரவு வரும் வாய்ப்பு உள்ளது. கடன் பிரச்சினை குறையும். வறுமையில் வாடியவர்களுக்கு வாழ்வில் வசந்தம் வீசும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடும்.சொத்துப் பிரச்சினை சுமூகமாகும். உங்கள் குடும்ப விவகாரங்களில் தலையிட்டவர்கள் தாமாக விலகுவார்கள். இனிமை தரும் இடமாற்றங்கள் ஏற்படும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகத்தை விட்டு வெளியேறிய சிலர் மீண்டும் சொந்த மண்ணில் குடியேறும் வாய்ப்பு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை சூரிய நமஸ்காரம் செய்வதால் காரிய தடை அகலும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- மிதுனம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் வாரம்.
- கடகம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம்.
மேஷம்
பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். இது மேஷ ராசிக்கு மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். தொழில் தொடர்பான விஷயங்களில் அதிகப்படியான ஆர்வத்தை அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தரும். பேச்சை மூலதனமாகக் கொண்டவர்களின் தொழில் திறமை பிரமிக்க வைக்கும்.
படித்து முடித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வருமானம் பல மடங்கு உயரும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை நிலவும். ஏழரைச் சனியால் கணவன், மனைவிக்குள் நிலவிய பிணக்குகள் நீங்கி இணக்கம் ஏற்படும். தடைபட்ட அனைத்து பாக்கியங்களும் கைகூடும். திருமணம், புத்திரம் போன்ற சுப காரியங்களில் இதுவரை இருந்த தடைகள் நீங்கும்.
குடும்ப தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் அரசியல்வாதிகளின் திட்டங்கள் பலிதமாகும். தந்தை வழி உறவுகளுடன் நிலவிய பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தை மாத செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் அகலும்.
ரிஷபம்
தடைபட்ட பாக்கிய பலன்கள் கைகூடும் வாரம். ரிஷப ராசிக்கு 9-ம் மிடமான பாக்கியஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் சேர்க்கை உள்ளது. வாழ்க்கை முன்னேற்றத்திற்கான புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வராக்கடன்கள் வசூலாகும். தன ஸ்தானத்தில் குரு நிற்பதால் எதையெதையோ செய்து நஷ்டத்தை அடைந்தவர்களுக்கு தன்னம்பிக்கையோடு பிழைக்கும் வழி தென்படும்.
பதவி உயர்வு, ஊதிய உயர்வு என விரும்பிய மாற்றங்களால் ஏற்றம் உண்டாகும். வாழ்க்கைத் தரம் உயரும். வீடு, வாகனம் தொடர்பான முயற்சியில் ஈடுபட உகந்த நேரம். தந்தை விருப்ப ஓய்வு பெறலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தென்படும். நீண்ட நாட்களாக தடையான காரியங்கள் துரிதமாக நடைபெறும்.
18.1.2026 அன்று மாலை 4.41 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணவரவில் தடை, தாமதம் ஏற்படுவதால் மன சஞ்சலம் உண்டாகும். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதப்படும். பண விசயத்தில் யாரையும் நம்பக்கூடாது. தை வெள்ளிக்கிழமை அம்பிகை வழிபாடு செய்யவும்.
மிதுனம்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் வாரம். ராசி அதிபதி புதன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். பணம் சம்பாதிப்பதிலும் குடும்பத் தேவைகளை நிறைவு செய்வதிலும் கவனம் செலுத்துவீர்கள். வீடு வாகனம் சொத்து திருமணம் புத்திர பிரார்த்தம் போன்றவற்றில் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். புதிய உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும்.
உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கூலி தொழிலாளிகளுக்கு ஒப்பந்த வேலை கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம், திடீர் பணவரவு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. பண்டிகை கால விடுமுறை பயனுள்ளதாக அமையும். எதிர்பாராத பண வரவுகளால் கையிருப்பு சேமிப்பு உயரும். சில மறைமுக எதிர்ப்புகள், போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் வெற்றி நிச்சயம்.
அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். 18.1.2026 அன்று மாலை 4.41 முதல் 21.1.2026 அன்று நள்ளிரவு 1.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். குடும்ப விஷயங்களில் மற்றவர்கள் தலையிடுவதை புறக்கணிக்கவும். அவல் பாயாசம் படைத்து மகா விஷ்ணுவை வழிபடவும்.
கடகம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம். ராசிக்கு சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் பார்வை உள்ளது. சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். மனதில் செய்ய நினைத்த காரியங்களை மறு நிமிடமே செய்து முடிப்பீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரிகளுக்கு விற்பனையும் லாபமும் படு ஜோராக இருக்கும்.
பணியாளர்களின் ஒத்துழைப்பால் வேலைபளு, மன பாரம் குறையும். சில தம்பதிகள் இணைந்து கூட்டுத் தொழில் முயற்சி செய்யலாம். அதற்கு தேவையான நிதியும் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். அரசு வேலைக்கான நேர்காணலில் வெற்றி உறுதி. கவுரவப்பதவிகள் தேடி வரும். மாமனார், சகோதரர் மூலம் தன வரவு உண்டாகும்.
தந்தை மகன் உறவு பலப்படும். தம்பதிகளிடம் புரிதல் அதிகரிக்கும். திருமணம், குழந்தை, வீடு வாகன யோகம் போன்ற அனைத்து விதமான பாக்கியங்களும் உண்டாகும். 21.1.2026 அன்று நள்ளிரவு 1.35 முதல் 23.1.2026 அன்று காலை 8.33 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உண்ண, உறங்க முடியாமல் உழைக்க நேரும். அலைச்சல் மிகுதியாகும். தினமும் கனகதாரா ஸ்தோத்திரம் கேட்கவும்.
சிம்மம்
கடனை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எதிரிகளை வெல்லக்கூடிய சாமர்த்தியம் அதிகரிக்கும். கடன் வாங்கி சொத்துக்கள் வாங்குவீர்கள். சிலர் வாகனங்களை எக்ஸ்சேஞ்ச் ஆபரில் மாற்றலாம். அரசு வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வாழ்க்கை துணையால் எதிர்பாராத அதிர்ஷ்ட பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.
வீட்டில் மங்களகரமான சுப காரியங்கள் நடக்கும். பணிபுரியும் பெண்களுக்கு சம்பள உயர்வும், சலுகைகளும் உற்சாகத்தை அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போல் இருக்கும். அடிவயிறு தொடர்பான உடல் உபாதைகள் கை கால் மூட்டு வலி வரலாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
23.1.2026 அன்று காலை 8.33 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. அல்லது ஆதாயம் குறையும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். தினமும் பறவைகளுக்கு தானியங்களை இரையிட துன்பங்கள் விட்டு விலகும்.
கன்னி
எண்ணங்களும் விருப்பங்களும் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி புதன் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பிள்ளைகளின் முன்னேற்றம் தொடர்பான திட்டமிடுதலில் ஆர்வம் அதிகரிக்கும். சிந்தனையில் ஏற்பட்ட குழப்பம் விலகும். அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் கூடும். நினைத்ததை நிறைவேற்றுவதில் நிலவிய தடைகள் அகலும்.
உபரி வருமானம் கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். சொத்து சேர்க்கை கூடும். சொத்துக்களின் மதிப்பு ஏறும். சகோதரர்களுடன் இணைந்து முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த காலம். அரசு வகையில் மேற்கொண்ட முயற்சிகள் சாதகமாகும். அரச பதவி, அரசு உத்தியோகம், அரசு வகை ஆதரவு உண்டு.
பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். புத்திர பிரார்த்தம் உண்டாகும். கதை, கட்டுரை, கவிதை எழுதுவதில் தகவல் தொடர்பு சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகமாகும். சிலர் கடன் பெற்று வசதி, வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்வார்கள். தாய், தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் விலகும். இஷ்ட தெய்வத்தை மனதார வழிபடவும்.
துலாம்
தடை தாமதங்கள் விலகும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சுணங்கி கிடந்த பணிகள் விறுவிறுப்படையும். கொடுக்கல் வாங்கலில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். வராக்கடன்கள் வசூலாகும். அடமான நகைகள் மீண்டு வரும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட நிரந்தர வருமானத்திற்கான வழி பிறக்கும்.
தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலைப் பளு குறையும். பத்திரிக்கை எழுத்து துறை,ஜோதிடம், ஆடிட்டிங் கமிஷன் வணிகம், கூட்டுத் தொழில், வங்கி போன்றவற்றில் பணிபுரிபவர்களின் வாழ்வாதாரம் உயரும். பிள்ளைகளின் திருமணம், புத்திரபாக்கியம், உயர் கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து விதமான சுபபலன்களும் கைகூடும்.
பூர்வீகத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு மீண்டும் சொந்த ஊர் செல்லும் எண்ணம் உதயமாகும். அறுவை சிகச்சை செய்ய வேண்டிய நிலை மாறி சாதாரண வைத்தியத்தில் குணமாகும். தை வெள்ளிக்கிழமை சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருட்கள் வழங்கவும்.
விருச்சிகம்
எண்ணத்தில் தெளிவு உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் உப ஜெய ஸ்தானமான மூன்றாம் இடத்தில் உச்சம் பெறுகிறார். வீடு மாற்றம் வேலை மாற்றம் வரலாம். மாமனாரால் மைத்துனரால் ஏற்பட்ட மனச் சங்கடம் தீரும். வேற்று மதத்தினர், இனத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் இலக்கை அடைய முடியும்.
பெண்களுக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி மீண்டும் தொடரும். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் வரும். மறுமண முயற்சி நிறைவேறும். மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும்.
குடும்பத் தேவையை நிறை வேற்றுவீர்கள். நிம்மதியாக உறங்கி, சந்தோஷமாக இருப்பீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இருந்த சங்கடங்கள் குறையத் துவங்கும். தை மாத செவ்வாய்க்கிழமை சுமங்கலி பெண்களிடம் நல்லாசி பெறவும்.
தனுசு
பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம். ராசிக்கு 2-ம்மிடமான தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் சேர்க்கை உள்ளது. இரண்டாம் இடத்தில் அதிக கிரகச் சேர்க்கை உள்ளதால் பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் வந்து சேரும். பொருள் கடனும், பிறவிக் கடனும் தீரும். ஆன்ம பலம் பெருகும். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட சங்கடங்கள், விரயங்கள் சீராகும்.
புதிய நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். புதிய நட்புகளால் சந்தோஷம் உண்டாகும். புதிய நிலம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். சுப விரயங்கள் அதிகரிக்கும். குடும்பத்தாரின் அன்பும் அனுசரணையும் கிடைக்கும். சிலருக்கு வெளியூருக்கு வேலை மாறுதல் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. கொடுத்த வாக்கை எப்படியாவது காப்பாற்றி விடுவீர்கள்.
பெண்களுக்கு வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டு. முன்னோர்களின் சொத்துகளை வம்சாவளியாக பயன்படுத்துவதில் நிலவிய சர்ச்சைகள் சீராகும். கை மறதியாக வைத்த நகை கிடைக்கும். புதிய எதிர்பாலின நண்பர்கள் கிடைப்பார்கள். தை மாதம் பெண் தெய்வங்களை வழிபடுவது சிறப்பாகும்.
மகரம்
கவனமாக செயல்பட வேண்டிய காலம். ராசியில் அஷ்டமாதிபதி சூரியன் சஞ்சரிப்பதால் தொழில் குறுக்கீடுகள் அதிகரிக்கும். வேலையில் திடீரென பொறுப்புகள் மாற்றப்பட்டு மன உளைச்சல் அதிகமாகும். வேலைப்பளு மிகுதியாக இருக்கும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு பிறருக்கு கிடைக்கலாம்.
தொழிலில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் கணிசமான பணப் புழக்கம் கைகளில் புரளும். சொத்து வாங்கும் முயற்சி சித்திக்கும். சிலருக்கு வீடு, வாகனத்தை பராமரிக்கும் செலவு அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணத்தில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். தேவைக்கேற்ற வருமானம் இருந்தாலும் வரவிற்கு மீறிய செலவும் இருக்கும். சிலருக்கு நிர்பந்த ஊர் மாற்றம், இடமாற்றம் செய்ய நேரும்.
குறுக்கு வழியில் வருமானம் ஈட்டுவது, தவறான நட்பு போன்றவற்றைத் தவிர்க்கவும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் தேவையற்ற வாக்கு பிரயோகத்தை தவிர்க்க வேண்டும். அலைச்சல் மிகுதியாக இருந்தாலும் நிம்மதியான தூக்கம் இருக்கும். புதிய முயற்சிகளையும் கொடுக்கல், வாங்கல்களையும் தவிர்க்கவும். ஏற்கனவே தொடங்கிய செயல்களைத் தொடர்ந்து செய்யலாம். ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பு.
கும்பம்
விரயங்களை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசிக்கு 12-ம்மிடமான விரய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் சேர்க்கை இருப்பதால் கவனத்தை தொழிலில் மட்டும் செலுத்தினால் தேவையற்ற சங்கடங்களிலிருந்து தப்ப முடியும். புதியதாக சொந்த தொழில் செய்யும் முயற்சியை ஒத்தி வைக்கவும்.
வாழ்க்கைத் துணையின் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும்.
சிலரின் கல்வி சார்ந்த விசயங்களில் ஏற்பட்ட தடை அகலும். பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகளின் விசாரணை தாமதமாகும். வாழ்க்கைத் துணைக்கு தாய் வழி பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். சுபச் செலவிற்காக கடன் பெற நேரலாம். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் ஏற்பட்ட மன சங்கடம் தீரும்.
நிலம், தோட்டம், வாகனம் வாங்கும் எண்ணம் கைகூடும். திருமணம் நிச்சயமாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உடன் பிறந்தவர்களுடன் நல்லுறவு ஏற்படும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளி நாட்டில் சென்று பிழைக்கும் எண்ணம் தோன்றும். இடமாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் என நிம்மதியைத் தேடும் மாற்றங்கள் உண்டு. தை மாத பஞ்சமி திதியில் வராகி அம்மனை வழிபடவும்.
மீனம்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் வாரம். மீன ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் 2,9ம் அதிபதி செவ்வாய் உச்சம் பெற்றுள்ளார். இது இழந்த அனைத்து வித இன்பங்களையும் மீட்டுத் தரக்கூடிய அமைப்பாகும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். தொட்ட காரியங்கள் துலங்கும். முறையான முன்னோர்கள் வழிபாட்டால் தடைபட்ட சுப காரியங்கள் கைகூடும்.
சிலருக்கு கவுரவப்பதவிகள் கிடைக்கும். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தை பிரிந்து வாழ்ந்த தந்தை மீண்டும் குடும்பத்துடன் இணைவார். நண்பர்களால், தொழில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். தீராத கடனைத் தீர்க்கும் வழி தென்படும்.
எதிரி தொல்லைகள் குறையும். திருமண முயற்சிகள் கைகூடும். நிலுவையில் உள்ள தொகைகள் கைக்கு வந்து சேரும். மந்தமான தொழில் சூடு பிடிக்கும். தேங்கி கிடந்த பொருட்கள் விற்பனையாகும். தொழில் ரீதியான போட்டிகளை சமாளிக்க முடியும். பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. ஞாயிற்றுகிழமை சிவ வழிபாடு செய்ய நன்மைகள் இரட்டிப்பாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- மேஷம் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும் வாரம்.
- கன்னி உற்சாகம் பொங்கும் மகிழ்ச்சியான வாரம்.
மேஷம்
எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் வார இறுதியில் உச்சம் பெற்று ராசியை தனது 4ம் பார்வையால் பார்க்கிறார். இதனால் குடும்பத்தில் நிம்மதி கூடும். சாதிக்கும் எண்ணம் மேலோங்கும். நீண்டநாளாக தீராத, தீர்க்க முடியாத பல பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். தலைமைப்பதவி தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு தகுதிக்கும், திறமைக்கும் தகுந்த வேலை கிடைக்கும். விவேகமாக சிந்தித்து தொழிலை வளப்படுத்துவீர்கள். எதையும் எதிர்கொண்டு லாபகரமான நிலையை அடையப் போகிறீர்கள் தேக ஆரோக்கியத்தில் தெளிவும், சுகமும் ஏற்படும்.உயர் கல்வியால் மேன்மை உண்டாகும். கல்லூரி அரியர்ஸ் பாடத்தை எழுதி முடிக்க ஏற்ற காலம். 13.1.2026 அன்று மாலை 5.21 முதல்16.1.2026 மாலை 5.48 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்தவொரு செயலிலும் யோசித்து செயல்பட்டால் பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.சிக்கனத்துடன் செயல்பட்டால் விரயங்களை தவிர்க்க முடியும். முருகனை செவ்வரளி மலர்களால் அர்ச்சித்து வழிபட நினைத்தது நடக்கும்.
ரிஷபம்
முன்னேற்றமான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தை நோக்கி செல்கிறார். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றமும் முடிவில் வெற்றியும் உண்டாகும். எதிர்பார்த்த வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலருக்கு வீடு மாற்றம் வேலை மாற்றம் செய்ய வேண்டிய சூழல் வரலாம். எதிர்பார்த்த வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தந்தை மகன் உறவில் பாசமும் மனநிறைவும் உண்டாகும். குல தெய்வ அருளால் பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளும், சிக்கல்களும் தீரும். சவுக்கியமும், சுகமும், நோய் நிவர்த்தியும் உண்டாகும். திருமணயோகம் கை கூடி வரும்.16.1.2026 மாலை 5.48 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் ஆடம்பர செலவு களை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பதுடன் ஓய்வு நேரம் குறையும். அலைச்சல் மிகுந்த பயணங்களைத் தள்ளி வைப்பது நல்லது. நெய் தீபம் ஏற்றி அம்பிகையை வழிபடுவது நல்லது.
மிதுனம்
குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும் வாரம். ராசி அதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை பெறுகிறார். வார இறுதி நாளில் அஷ்டம ஸ்தானம் செல்கிறார். உங்கள் செயலில் ஆற்றலும், வேகமும் கூடும். முக்கிய கடமைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். உடலிலும் மனதிலும் புதிய தெம்பு , உற்சாகம் பிறக்கும்.மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். சிலர் பயன்படாத சொத்துக்களை விற்று லாபம் பார்க்கலாம். தன யோகம் சிறப்பாக அமையும். சமூக அந்தஸ்து அதிகரிக்கும். குடும்பத்தில் சுபமங்கள விரயச் செலவு உண்டாகும். திருமண முயற்சி விரைவில் நிறைவேறும். பெண்கள் புதிய ஏலச் சீட்டு தொடங்குவார்கள். குழந்தைப்பேறு உண்டாகும். நண்பர்கள், உடன் பிறந்தோர் நட்பும், நல்லுறவும் ஏற்படும்.தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் சீராகும். குல தெய்வத்தின் அருள் கிடைக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். கணவன், மனைவியிடம் நல்ல புரிதல் உண்டாகும். புதன்கிழமை கருடாழ்வாரை வழிபடவும்.
கடகம்
மகிழ்ச்சியான வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் சமசப்தம ஸ்தானத்தில் நின்று ராசியை பார்க்கிறார். உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். பொருளாதாரம் உயர்வதோடு, குடும்பத்தில் அமைதியும், நிம்மதியும் ஏற்படும். ஆரோக்கியம், தொழில், கல்வி உத்தியோகம் போன்றவற்றில் நிலவிய தடை, பிரச்சனைகள் சீராகும். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள், மூத்த சகோதரர் வகையில் ஆதரவும், அன்பும் கிடைக்கும். தந்தை வழி உறவு மேம்படும். திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். பிரிந்த தம்பதிகள் அல்லது பிரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற தம்பதிகள் இடையே இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். கொடுக்கல், வாங்கல் சீராகும். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். இழுபறியாக இருந்த வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும்.வாழ்க்கைத் துணையால் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டு. ஸ்ரீ காலபைரவரை வழிபடவும்.
சிம்மம்
தேவையற்ற கடனை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் 6ம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். விரக்தி மனப்பான்மை அதிகமாகும். ஆனால் குருவின் பார்வைபட்ட இடங்கள் பல மாற்றத்தையும் ஏற்றத்தையும் தரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. எந்தக்கை உங்களை விட்டாலும் நம்பிக்கையை விடாமல் இருப்பது முக்கியம். புதிய முதலீடுகளை தவிர்த்தல் நலம். பார்க்கும் வேலையை மாற்றக்கூடாது. சிலருக்கு அசையாச் சொத்து, பிள்ளைகளின் திருமணம், கல்வி போன்ற சுப விரயம் உண்டாகும். திறமையான வேலையாட்கள் இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். தன லாப அதிபதி புதனால் பணப் புழக்கம் சரளமாக இருக்கும். சீட்டு, ரேஸ், பங்குச் சந்தை மூலம் வருமானம் பெருகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். சில தம்பதிகள் தொழில் அல்லது உத்தியோகத்திற்காக பிரிந்து வாழலாம். பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டாகும். ஆரோக்கியம் அதிகரிக்கும். படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபடவும்.
கன்னி
உற்சாகம் பொங்கும் மகிழ்ச்சியான வாரம்.ராசி அதிபதி புதன் 4,7ம் அதிபதி குருவுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். தனித் திறமையை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். தாய் அன்பும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் கிடைக்கும். சிலர் சொந்த வீட்டில் இருந்து மன மாற்றத்திற்காக வாடகை வீடு செல்லலாம். அரசு ஊழியர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு, சிறப்பு சலுகைகள் கிடைக்கும். திருமணத்தடை அகலும். சிலருக்கு மறுமண யோகம் உண்டாகும். கண், காது, மூக்கு தொடர்பான உபாதைகள் வைத்தியத்தில் சீராகும். சொத்து தொடர்பான செயல்களில் இடைத் தரகர்களை நம்பி பணம் கொடுப்பதை தவிர்க்கவும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். பெண்களுக்கு தாய் வழிச் சீதனம் கிடைக்கும். ஆரோக்கியம் சிறக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிரிகளின் பலம் குறையும். கருடாழ்வாரை வழிபட நிரந்தரமான முன்னேற்றம் உண்டாகும்.
துலாம்
நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் வாரம்.ராசி அதிபதி சுக்கிரன் லாப அதிபதி சூரியனுடன் இணைந்து சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பல்வேறு வளமான பலன்களை அடையும் யோகம் உள்ளது. வாழ்வில் மறக்க முடியாத இனிய நல்ல சம்பவங்கள் நடைபெறும். கடந்த கால நெருக்கடிகள் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகளும் அதற்கான உதவிகளும் கிடைக்கும். வீடு, தோட்டம் என அசையாச் சொத்துக்களின் சேர்க்கை மனதை மகிழ்விக்கும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் மறுமுதலீடாக மாறும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். தொழிலில், உத்தியோகத்தில் நிலவிய பிரச்சினைகள் குறையும். அரசு வழி ஆதரவு கிடைக்கும். சகோதர, சகோதரியால் ஆதாயம் உண்டு. பெண்களுக்கு புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்கு தொழில் ரீதியாகவோ, வேறு காரணத்திற்காகவோ வெளியூர், வெளிநாடு செல்ல நேரும். புதிய சொத்துக்கள் வாங்க ஏற்ற காலம். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும். அடமானப் பொருட்களை மீட்க தேவையான பணம் கிடைக்கும்.
விருச்சிகம்
தன்னம்பிக்கையான வாரம். ராசி அதிபதி செவ்வாய் மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்தில் உச்சம் அடைகிறார்.ஜாதகரின் முயற்சி எளிதில் வெற்றி பெறும். வார ஆரம்பத்தில் தொழிலில் மந்த போக்கு நிலவினாலும் நிலையான முன்னேற்றத்தை எட்டி பிடிப்பீர்கள். பெயர், புகழ், அந்தஸ்து, கவுரவம் உயரும். பெரிய மனிதர்களின் தொடர்பு அரசியல் செலவு ஏற்படலாம். உடன் பிறந்தவர்களின் அன்பும் அனுசரணையும் இருக்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாகும். ஒரு நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அதற்கு நீங்களே காரணமாக இருப்பீர்கள். மனதில் நிலவிய வெறுமை தேவையில்லாத கற்பனை பய உணர்வு குறையும். இடப்பெயர்ச்சி நடக்கும். கடன் தொல்லை அதிகரிக்கும். தேவையற்ற வழக்குகள் மற்றும் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் அதிர்ஷ்ட சொத்து, நகை, பணம், பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும். நவீனகரமான பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். பெண்களுக்கு புகுந்த வீட்டினரின் பாராட்டும் அன்பும் கிடைக்கும்.விநாயகரை வழிபட தடைகள் அகலும்.
தனுசு
தடை தாமதங்கள் அகலும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் 7,10ம் அதிபதி புதனுடன் பரிவர்த்தனை பெறுகிறார். எந்தவொரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து எண்ணிய பலனை அடைவீர்கள். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். தன்நிறைவோடு வாழ முடியும். பொருளாதார நெருக்கடி, கடன் படிப்படியாக குறையும்.எதிர்பாராத தனவரவும், அதற்கேற்ப செலவும் உண்டாகும். வெளிநாட்டு தொடர்புகளால் ஆதாயம் உண்டு. உத்தியோக பணிகளில் உயர்வு ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பயணங்கள் உண்டாகும். நண்பர்கள், உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியைத் தரும். அடமானம் வைத்த பொருளை சொத்துக்களை மீட்பீர்கள். எப்பொழுதோ வாங்கி வைத்த பங்குகளின் மதிப்பு உயரும். அர்த்தாஷ்டமச் சனி நடந்தாலும் ராசியை குரு பார்ப்பதால் வேலை செய்யும் இடத்தில் அனுகூலமான சூழல் காணப்படும்.தம்பதிகளிடம் புரிதல் உண்டாகும். திருமணத்தடை அகலும். மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சித்து நவகிரக குரு பகவானை வழிபடவும்.
மகரம்
பொறுப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசியில் அஷ்டம அதிபதி சூரியன் சஞ்சரிக்கிறார். முன் கோபத்தால் பகைமை உருவாகும். சில முக்கிய விஷயங்களை நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் சமாளிக்க முடியும். முன்னோர் சொத்துப் பிரச்சனை நீதிமன்ற படி ஏற வைக்கும் என்பதால் பங்காளிகளிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. எதிர்மறை எண்ணங்கள் அவ்வப்போது தோன்றி மறையும். உண்மையான நண்பர்களையும் ஏமாற்றுபவர்களையும் அடையாளம் காணக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும். தந்தையுடன் கருத்து வேறுபாடு அல்லது தந்தையால் நஷ்டம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் சில உதவிகள் கிடைக்கும். வயிறு தொடர்பான பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. கட்டிய வீட்டை பழுது பார்ப்பது அல்லது புதிய மனை வாங்கி வீடு கட்டுவது போன்ற செலவுகளை மேற்கொள்ள நேரும். இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். லட்சுமி நரசிம்மரை வழிபட கடன் தொல்லை நிவர்த்தியாகும்.
கும்பம்
நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். உற்சாகமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் வாரம். இதுவரை வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்த திறமைகள் வெளிப்படும். புகழ், அந்தஸ்து கவுரவம் உயரும். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் அதிகரிக்கும். குலத் தொழில் செழித்து வளரும்.ராசியில் ராகு இருப்பதால் சிறிய வீட்டில் வாழ்ந்த சிலர் வசதியான வீட்டிற்கு செல்வார்கள்.சுகபோக வாழ்க்கை கிடைக்கும். லவுகீக நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு குறுக்கு வழியிலாவது பணம் சம்பாதித்து விட வேண்டும் என்ற பேராசை மேலோங்கும்.கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். பெண்களுக்கு மகளிர் சுய உதவி குழு மூலம் சிறிய கடன் தொகை கிடைக்கும்.விவாகரத்து வழக்கு பிரச்சனை முடிவுக்கு வரும்.11.1.2026 அன்று அதிகாலை 4.52 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி நேரத்திற்கு சாப்பிட்டு ஓய்வு எடுப்பது நல்லது. மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. மந்தாரை மலர்களால் நவகிரக ராகு பகவானை வழிபடவும்.
மீனம்
கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய வாரம். ஜென்மச் சனியால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் இல்லம் திரும்புவார்கள். தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள். மாற்று முறை சிகிச்சையால் நோய்க்கு தீர்வு கிடைக்கும். சிலருக்கு நீதி மன்ற வழக்குகளுக்காக அதிக பணம் செலவு செய்ய நேரும். அலைச்சல் மிகுதியாகும். திருமணத் தடைகள் அகலும். புத்திர பிராப்தம் உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான முயற்சியில் ஈடுபட உகந்த காலமாகும்.குல தெய்வ கடாட்சம் கிடைக்கும்.தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். 11.1.2026 அன்று அதிகாலை 4.52 முதல் 13.1.2026 அன்று மாலை 5.21 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் கொடுக்கல், வாங்கல்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் ஏதாவது செலவுகள் ஏற்படும்.பண விஷயத்தில் யாரையும் நம்ப கூடாது.உடல் ஊனமுற்றவர்களுக்கு உணவு தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- மேஷம் சாதிக்கும் எண்ணம் மேலோங்கும் வாரம்.
- ரிஷபம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனந்தம் அதிகரிக்கும் வாரம்.
மேஷம்
சாதிக்கும் எண்ணம் மேலோங்கும் வாரம். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி செவ்வாய்க்கும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனுக்கும் பாக்யாதிபதி குருவின் சம சப்தம பார்வை உள்ளது. இதனால் திரிகோணங்கள் பலம் பெறுகிறது. குடும்ப பிரச்சினைகள் அகலும். மனதில் நிரம்பி வழிந்த துக்கங்கள், துயரங்கள், சங்கடங்கள் விலகும். உங்களை ஏளனமாக அலட்சியமாக நினைத்தவர்கள் திரும்பி பார்க்கும் வகையில் உங்களுடைய வளர்ச்சி கூட போகிறது.தொழில் முன்னேற்றம், வியாபார அபிவிருத்தி, எடுத்த காரியத்தில் வெற்றி போன்ற நன்மைகள் நடக்கும். சுப பலன்கள் அதிகரிக்கும். கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனசில் கடனை கழித்து வாழ்க்கையை ஓட்டிய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.பெண்களுக்கு பொன், பொருள் ஆபரண சேர்க்கை உண்டாகும்.திருமணத் தடை அகன்று தகுதியான வரன்கள் வரும். உடல் நலம் மிகச் சிறப்பாக இருக்கும். சஷ்டி திதியில் முருகனை வழிபடவும்.
ரிஷபம்
குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனந்தம் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் நின்று தனம் வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவை பார்க்கிறார். குரு ராசி அதிபதியை பார்ப்பதால் வாரிசு இல்லாதவர்களுக்கு புத்திரம் உருவாகும். பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும்.வேலை பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும், பாராட்டும் கிடைக்கும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். விலை உயர்ந்த நவீன ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண தடை விலகி விவாகம் நடைபெறும். பெண்களுக்கு மண வாழ்க்கை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். சமூக ஆர்வ லர்களுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து விநாயகரை வழிபட சுப பலன்கள் அதிகரிக்கும்.
மிதுனம்
தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் வாரம்.ராசி அதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை பெறுகிறார். எடுக்கும் முயற்சியில் தடையில்லாத வெற்றி கிட்டும். அதிர்ஷ்டமும், யோகமும் கூடி வரும். பண வரவு பல வழிகளில் வரும். கோட்சார கிரகங்கள் அனைத்தும் மிதுன ராசியினருக்கு சாதகமாக உள்ளது. இதனால் ஆன்ம பலம் பெருகி ஆரோக்கியத் தொல்லை குறையும். தாய், தந்தையரின் விருப்பங்க ளையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்று வீர்கள். கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும். உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிடைக்கும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். பெண்களுக்கு தாய்வழி ஆதரவும், சீதனமும் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். மூத்த சகோதரம், சித்தப்பா மூலம் பொருள் உதவி கிடைக்கும். தாய் அல்லது தந்தையின் அரசாங்க வாரிசு வேலை கிடைக்கும்.சுவாமி ஐயப்பனை ஆத்மார்த்தமாக வழிபடவும்.
கடகம்
மனக்கவலைகள் குறையும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சூரியனுக்கு குருவின் சம சப்தம பார்வை உள்ளது. இது கடக ராசிக்கு முன்னேற்றத்தை தரக்கூடிய யோகமான காலமாகும்.குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும். குல தெய்வ அருள் கிடைக்கும். தொழில் முயற்சிகள் நிறைவேறும். வருமானத் தடை அகன்று நிலையான முன்னேற்றம் உண்டாகும். தந்தையின் ஆரோக்கியம் முன்னேற்றமடையும்.பாக்கிய பலத்தால் தாராளமான வரவு செலவும், பணப்புழக்கமும் உண்டாகும். கைநிறைய பணம் புரள்வதால் மனதில் நிறைவும் நெகிழ்ச்சியும் உண்டாகும். திருமணத்தடை விலகும். நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும். மறுமணத்திற்கும் வரன் கிடைக்கும். சிலர் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்து வாங்குவார்கள்.கூட்டுத் தொழிலில் பலன் உண்டு. திண்டாட்டம் மாறி கொண்டாட்டம் உலாவும்.ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.வேலை மாற்றம் செய்வதை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு வேலைப் பளுவும் அலைச்சலும் அதிகரிக்கும்.ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
சிம்மம்
நெருக்கடிகள் விலகும் வாரம். ராசி அதிபதி சூரியன் குரு மற்றும் சனி பார்வையில் உள்ளார். தடை, தாமதங்கள் விலகும். மனச் சங்கடங்கள் அகலும்.ஞாபக சக்தி அதிகரிக்கும். தைரியமும் தெம்பும் குடிபுகும். நினைப்பது எல்லாம் நடக்கும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்ப உறவுகளின் அனுசரனையால் அனைத்து பிரச்சினைகளும் கானல் நீராக மறையும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். சிலருக்கு நிலம், வீடு போன்ற சொத்துச் சேர்க்கை உண்டாகும்.சிலரது காதல் பிரிவினையில் முடியும். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட இடையூறுகள் குறையும்.அதிக முதலீடு கொண்ட செயல்களை தற்காலி கமாக ஒத்தி வைப்பது நல்லது.வேலையில் பதவி உயர்வுகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. கை,கால், மூட்டு வலியால் சிலருக்கு சிறு அறுவை சிகிச்சைக்கும் வாய்ப்பு உள்ளது. பூர்வீகம் தொடர்பான விசயங்கள் விரைவில் முடிவிற்கு வரும். குடும்ப முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்து மகிழ்வீர்கள்.சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள். முன் கோபத்தை குறைப்பது நல்லது.வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடவும்.
கன்னி
பொறுப்புகள், கடமைகள் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார்.பிறரை நம்பி களத்தில் இறங்கி ஏமாற்றம் அடைந்த நீங்கள் சுய நம்பிக்கையில் இழந்தததை ஈடுகட்டுவீர்கள். இது வரை உங்களைத் துரத்திய அவமானம், நஷ்டம், கவலைகள் விலகும். எதிர்காலத்தில் உங்கள் பெயர் பிரகாசிக்குமளவு புகழ், பெருமை, கவுரவம் சேரும். ஜனன கால ஜாதரீதியாக சாதகமான தசாபுக்திகள் நடந்தால் நன்மையின் அளவை அளவிட முடியாத வளர்ச்சி உண்டு. கண்டகச் சனி பற்றிய பயம் விலகும். பொருளாதார பற்றாக்குறை அகலும். வர வேண்டிய கடன் வசூலாகும். கொடுக்க வேண்டிய கடனை திரும்ப செலுத்துவீர்கள்.பெண்களுக்கு பொருளாதாரத்தில் தன் நிறைவு கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் மனம் மகிழும் சம்பவம் நடக்கும். தொழில் உத்தியோகம் நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள். அரசு வேலைக்கான முயற்சி கைகூடும்.புத ஆதித்ய யோகத்தால் மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். பள்ளி கல்லூரிகள் மூலம் கல்வி சம்பந்தமான சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உள்ளது.தினமும் திருகோளாறு பதிகம் படிக்கவும்.
துலாம்
தெய்வு அனுகூலமும், அதிர்ஷ்டமும் வழி நடத்தும் வாரம். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி சுக்கிரனுக்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது.புகழ், அந்தஸ்து, ஆளுமை அதிகரிக்கும். இனம் புரியாத கவலைகள் குறையும். ராசிக்கு குரு பார்வை இருப்பதால் எதிர் நீச்சல் போட்டு இழந்ததை மீட்பீர்கள். நண்பர்கள், சகோதரர்களால் கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். சிலருக்கு சுப தேவைக்காக கடன் வாங்கும் சூழல் உண்டாகும். சொத்து வாங்கும் முயற்சிகள் சித்திக்கும். தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். திருமண வாய்ப்புகள் தேடி வரும். ஓயாத உழைப்பால் அசதி மன உளைச்சல் ஏற்படும். விரும்பிய வேலையில் சேர சிபாரிசுக்கு அலைய நேரும். ஆரோக்கியம் சிறக்கும். கொடுத்து வாக்குறுதியை காப்பாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள்.சங்கடங்கள் எந்த ரூபத்தில் வந்தாலும் மாற்றும் வல்லமை இறைபக்திக்கு உண்டு என்பதால் சரபேஸ்வரரை வழிபட்டு நலம் பெறவும்.
விருச்சிகம்
ஏற்றமான பலன்கள் உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் குரு மற்றும் சனியின் பார்வையில் சூரியன் சுக்கிரன் புதனுடன் இணைந்துள்ளார்.கடன் தொல்லை அகலும்.போதிய தன வரவால் குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். சிலரின் இளைய சகோதரம் உதவிக்கரம் நீட்டுவார்கள். புதிய தொழில் முயற்சிக்கு தேவை யான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். முக்கியமான தேவைகள் நிறைவேறும். பார்த்துச் சென்ற வரனின் முடிவிற்காக காத்து இருப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.திருமண முயற்சியை ஒரு வாரம் ஒத்தி வைக்கலாம்.வீட்டு வாடகை உயரும். சொத்தை அடமானம் வைத்து சில்லறைக் கடனை அடைப்பீர்கள். கடன் தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் உண்டாகும். 4.1.2026 அன்று காலை 9.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வாக்கால் உறவுகளிடம் மன சங்கடம் உண்டாகும். சகோதர, சகோதரிகளிடம் புரிதல் குறையும்.வெளி உணவுகளைத் தவிர்க்கவும். நெருக்கமானவர்களிடம் இருந்து சற்று விலகி இருக்கவும். தினமும் சிவபுராணம் படிக்கவும்.
தனுசு
முன்னோர்களின் நல்லாசிகள் நிறைந்த வாரம். பாக்கிய ஸ்தான அதிபதி சூரியன் ராசியில் சஞ்சரிப்பதால் தந்தையின் மூலம் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். தந்தையின் ஆசியும் ஆஸ்தியும் கிடைக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சு வார்த்தை பலன் தரும். வெளிநாட்டு பயணம் சாதகமாகும். புதிய வாய்ப்புகளால் லாபம் உண்டாகும்.நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவுகளிடம் நிலவிய கவுரவப் போராட்டம் விலகி ஒற்றுமை பலப்படும்.வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் மறுமுதலீடாக மாறும். தொழிலில், உத்தியோகத்தில் நிலவிய பிரச்சினைகள் குறையும். திருமணத் தடை அகலும். சொந்த இன, உறவுகளில் வரன் அமையும்.4.1.2026 அன்று காலை 9.43க்கு ஆரம்பித்து 6.1.2026 அன்று பகல் 12.17 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் சில சங்கடங்கள் உண்டாகலாம். எதிலும் சிறப்பாக செயல்பட முடியாது. உடன் இருப்ப வர்களால் மனக்குழப்பம், பணியில் சோர்வு ஏற்படும். சனிக்கிழமைகளில் முன்னோர்களை வழிபட குடும்பத்தில் நிம்மதி கூடும்.
மகரம்
நிம்மதியான வாரம்.ராசி அதிபதி சனி வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மறைமுக லாபம் கிடைக்கும். உணவுத் தொழில், ரியல் எஸ்டேட் தொழில், பங்கு வர்த்தகம், மார்க்கெட்டிங் போன்ற பணியில் இருப்பவர்களின் வருமானம் இரட்டிப்பாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம், திருப்பம் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் இந்த வாரம் கிடைக்கக்கூடும். பிள்ளைகளின் திருமண முயற்சி சாதகமாகும். குடும்பத்தில் இழந்த சந்தோஷம் மீண்டும் துளிர்விடும்.பெண்களுக்கு குடும்பப் பணிச்சுமையால் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். உயர்கல்வி முயற்சி சாதகமாகும். பெண்கள் கணவரின் உண்மையான அன்பை உணர்வீர்கள். 6.1.2026 அன்று பகல் 12.17 முதல் 8.1.2026 அன்று மாலை 6.39 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சால், முன் கோபத்தால் நல்ல வாய்ப்புகள் தள்ளிப்போகும்.பேச்சைக் குறைப்பது நல்லது. வேலைப்பளு மிகுதியாகும். மன அமைதி குறையும். வேலை ஆட்களை அனுசரித்துச் செல்லவும். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை செய்வது வழிபடவும்.
கும்பம்
மகிழ்ச்சிகரமான வாரம். ஏழரைச் சனியின் தாக்கத்தால் தொழிலில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் சனி உங்களின் ராசி அதிபதி என்பதால் பெரும் பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். தொழிலில் சீரான முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடா முயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும்.கூலித் தொழிலாளிகளுக்கு தொழில் நெருக்கடி விரைவில் சீராகும். லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்ரன் சேர்க்கை இருப்பதால் பணக் கஷ்டம்,கடன் பாதிப்பு இருக்காது.சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். சிலருக்கு அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை கிடைக்கும்.கடந்த கால கடன்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் சீராகும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று நடப்பார்கள். 8.1.2026 அன்று மாலை 6.39க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் எடுத்த காரியத்தில் தடை ஏற்படுவதால் மனச்சோர்வு அடைவீர்கள். பொறுமையையும், நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டும். முன் கோபத்தை குறைப்பது நல்லது.வியாழக்கிழமை குபேர லட்சுமியை மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவும்.
மீனம்
திட்டம் தீட்டி வெற்றி பெற வேண்டிய வாரம். ஜென்மச் சனியின் காலம் என்பதால் பண விசயத்தில் யாரையும் நம்பக்க கூடாது. திட்டமிட்டு செயல்பட்டால் விரயத்தை சுப செலவாக மாற்ற முடியும். வீடு, வாகனம், பிள்ளைகளின் திருமணம், படிப்பு, நகை வாங்குவது என விரயத்தை சுப செலவாக முதலீடாக மாற்றுவது நல்லது.உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஊர் விட்டு ஊர் மாற நேரும். சிலர் வெளி மாநிலம் , வெளிநாட்டிற்கும் இடம் பெயரலாம். சிலருக்கு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். தாய் வழிச் சொத்து விஷயத்தில் உடன் பிறந்தவர்களுடன் சிறு சலசலப்பு ஏற்படும். பாகப்பிரிவினை பேச்சுவார்த்தை பஞ்சாயத்து வரை சென்று சாதகமாகும். ஆரோக்கிய குறைபாட்டிற்கு மாற்றுமுறை வைத்தியத்தை நாடுவீர்கள். வார இறுதியில் வேலைப்பளு அதிகரிக்கும். ஆன்மீக பயணங்கள் அதிகமாக மேற்கொள்வீர்கள். வேலையில் பணி நிரந்தரமாகும். திருமண முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது நல்லது.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- ரிஷபம் நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரம்.
- கடகம் தடை, தாமதங்கள் விலகும் வாரம்.
மேஷம்
சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் வாரம்.ராசிக்கு 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் உள்ள சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதனுக்கு சனி மற்றும் குருவின் பார்வை உள்ளது. இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை உருவாகும்.தொழில் வளர்ச்சி அபரிமித மாக இருக்கும். லாபம் அதிகரிக்கும். வேலை பார்த்து கொண்டே உபதொழில் செய்து லாபம் ஈட்டும் மார்க்கம் தென்படும். தொழில் உத்தியோகத்தில் இருந்த பாதிப்புகள் விலகும்.வேலையில் பதவி உயர்வுகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. நெருக்கடியாக இருந்த பிரச்சினைகள் நீங்கும். சாமர்த்தியம் அதிகமாகும். பங்கு வர்த்தகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகளின் திருமணம், குழந்தை பாக்கியம், உத்தியோக, தொழில் அனுக்கிர கம் மன நிம்மதியை அதிகரிக்கும். மனதை மகிழ்விக் கும் நல்ல சம்பவங்கள் நடக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். சிலருக்கு நிலம், வீடு போன்ற சொத்துச் சேர்க்கை உண்டாகும். கை, கால், மூட்டு வலியால் ஏற்பட்ட அவதியில் இருந்து விடுதலை உண்டாகும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். நடராஜருக்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபடவும்.
ரிஷபம்
நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரம்.ராசிக்கு சனியின் 3ம் பார்வை உள்ளது. தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு வக்ரமாக இருப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் மனதை வருத்தும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களது செய்கை கோபத்தை அதிகரித்தாலும் நிதானத்தை கடைபிடித்தால் தேவையற்ற பிரச்சினைகளைத் தடுக்கலாம். தொழில், உத்தியோக ரீதியான பாதிப்பு எதுவும் இருக்காது. தொழில் கூட்டாளி களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. நல்ல சொந்த வீட்டிற்குச் செல்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடை பெறும். ஆண், பெண்களுக்கு திருமண வாய்ப்பு தேடி வரும். குழந்தை பாக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் வைத்தியத்தில் சீராகும். வீட்டுக்கடன் குறைந்த வட்டியில் கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். சொத்து தொடர்பான முக்கிய முடிவு, பத்திரப்பதிவுகளை ஓரிரு வாரங்களுக்கு தவிர்க்க வும். நடராஜருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட எல்லா விதமான பிரச்சினைகளும் சீராகும்.
மிதுனம்
தடைபட்ட காரியங்கள் துரிதமாகும் வாரம். ராசி அதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை பெற்று சனி பார்வையில் இருக்கிறார். வாழ்க்கையை நடத்து வதில் இருந்த சிரமங்கள் உங்களுடைய முயற்சியால் சீராகும். பயம் என்பதே இருக்காது. தைரியசாலியாக இருப் பீர்கள். கடுமையாக உழைப்பீர்கள். குடும்ப சிக்கல்கள், மற்றும் சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். கடந்த கால கடன்களைத் தீர்த்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும். பணம் சம்பாதிக்கும் சிந்தனையுடனே இருப்பீர் கள். பண வரவில் முன்னேற்றம் இருக் கும். குடும்ப உறவுகளின் அனுசரனை யால் அனைத்து பிரச்சினைகளும் கானல் நீராக மறையும். பருவ வயதினர் மண நாளை எண்ணலாம். மனதும், உடலும் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு குறையும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைத்து குடும்பத்துடன் இணையும் வாய்ப்புள்ளது. உடன் பிறந்தவர்கள், பங்காளிகளிடம் அனுசரித்துச் சென்றால் பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகள் தீரும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலை அதிகரிக்கும். நடராஜருக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடவும்.
கடகம்
தடை, தாமதங்கள் விலகும் வாரம். ராசி அதிபதி சந்திரன் 9,10,11-ம் இடங்களில் சஞ்சரிப்பதால் பிறர் ஆச்சரியப்படும் வகையில் அன்றாட பணிகளை திறம்பட செயல்படுத்த முடியும். தொழிலில் கணிசமான லாபம் கிடைக்கும்.வேலை செய்யும் இடத்தில் சில அசவுகரியங்கள் அதிகரித்தாலும் அதை பொருட்டாக மதிக்காமல் முன்னேறுவீர்கள். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்த வர்கள் வீடு தேடி வந்து பணத்தை கொடுப்பார்கள்.அதிக முதலீட்டில் சொந்த தொழில் செய்பவர்கள் நிதானந்துடன் செயல்பட வேண்டும். விவாகரத்து வரைச் சென்ற வழக்குகள் சுமூகமாகும். சுய ஜாதக ரீதியான திருமணத் தடை அகலும். மறு திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். தேவை இல்லாமல் குடும்பத்தில் நடந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தம்பதிகள் அமைதி கடை பிடித்தால் ஓரிரு வாரங்களில் நிைலமை சீராகும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். விவசாயிகள் பருவ காலத் திற்கு ஏற்ற பயிரை விளைவிப்பது நலம். இளநீர் அபிஷேகம் செய்து நடராஜரை வழிபடவும்.
சிம்மம்
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும் வாரம். ராசி அதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆத்ம ஞானம் கிடைக்கும். உடலுக் கும், ஆன்மாவுக்கும் புத்துணர்வு தரும் பயிற்சி களில் ஆர்வம் ஏற்படும். மன சங்கடங்கள் அகலும். தடை பட்ட குல தெய்வ வேண்டுதல்களை நிறைவேற்று வீர்கள். பித்ருக்கள் வழிபாட்டில் ஆர்வம் மிகும். அரசு வழி ஆதாயம் உண்டு. குழந்தை பாக்கியம் தொடர் பான உங்களின் எண்ணம் ஈடேறும். பொறுப்புடன் வேலை செய்து அதிகாரிகளின் பாராட்டைப் பெறு வீர்கள். தடை பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு இப்பொழுது கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். சனி, ராகு, கேதுக்களின் நிலைப்பாடு சுமாராக உள்ளதால் அதிக முதலீடு கொண்ட செயல் களைத் தவிர்ப்பது நல்லது. கிடைக்கும் பணத்தை வேறு வகையில் முதலீடு செய்ய வேண்டும். சிலரது காதல் பிரிவினையில் முடியும். வாழ்க்கைத் துணை யால் ஏற்பட்ட இடையூறுகள் குறையும். 29.12.2025 அன்று காலை 7.41 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு சளி, இருமல், காய்ச்சல், உடல் அசதி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் உண்டாகும். திருவாதிரை அன்று நடராஜருக்கு விபூதி அபிஷேகம் செய்து வழிபடவும்.
கன்னி
புதிய தெளிவும் நம்பிக்கையும் பிறக்கும் வாரம். ராசி அதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை பெற்று உள்ளார். முயற்சிகளில் அதிக ஆர்வத்துடன் செயல்பட வேண்டும். அனைவரிடமும் பெருந் தன்மையாக நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தில் நிலவிய உட்பூசல் குறைந்து அமைதிப் பூங்காவாகும். தொழில், வேலையில் மாற்றம் ஏற்படலாம். வீடு மாற்றம், ஊர் மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது. வேலை, தொழில் சம்பந்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம். சிலர் வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு செல்லலாம். சிலருக்கு வட்டி இல்லாத கைமாற்றுக் கடன் கிடைக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் வைத்தியத்தில் கட்டுப்படும். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் திறமை யால் சாமர்த்தியத்தால் எதிரிகளை வெல்வீர்கள். 29.12.2025 அன்று காலை 7.41-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பித்து 31.12.2025 அன்று காலை 9.23-க்கு முடிவதால் சிலர் கை இருப்பை செலவழித்து விட்டு கடன் வாங்க நேரிடலாம். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் மன சஞ்ச லத்தால் தாமதமாகும். நடராஜருக்கு பஞ்சகவ்ய அபிஷேகம் செய்து வழிபடவும்.
துலாம்
தடைகள் தகரும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தேவையற்ற பேச்சுக்கள், வாக்கு வாதங்கள் குறையும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வருமானம் உயரும். வருமானம் தரக்கூடிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். கைவிட்டுப் போனது எல்லாம் கிடைக்கும். திருமணத் தடை அகலும். புத்திரப் பிராப்தம் கிடைக்கும். பெற்றோர்கள், பெரியோர்கள், முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க மாற்று முறை வைத்தியத்தை நாடுவீர்கள்.பொருளாதாரம், ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை திருப்தியான வாரம் என்பதால் நிம்மதியாக இருக்கலாம். மேலும் நன்மையை அதிகரிக்க குல தெய்வம், முன்னோர்களை வழிபடவும். 31.12.2025 அன்று காலை 9.23 மணி முதல் 2.1.2026 அன்று காலை 9.26 மணி வரை இருப்பதால் அன்றைய தினம் யாருக்கும் பணம் கடனாக தர, வாங்கக் கூடாது. நன்மையும் தீமையும் கலந்த வாரமாகவே இருக்கும் என்பதால் ஒரு செயலில் இறங்கும் முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். திருவாதிரையன்று நடராஜருக்கு கரும்புச் சாறு அபிஷேகம் செய்து வழிபடவும்.
விருச்சிகம்
விபரீத ராஜ யோகமான வாரம்.தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி குரு பகவான் 8,11ம் அதிபதி புதனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார்.லாட்டரி, பங்குச் சந்தை லாபம், அதிர்ஷ்ட பணம், சொத்துக்கள் என எதிர்பாராத ராஜ யோகங்கள் ஏற்படலாம்.விசுவாசமாக உழைப்பவர்களுக்கு மலைபோல் வந்த பிரச்சினைகள் பனி போல் விலகும். பெண்களுக்கு கணவராலும், ஆண்களுக்கு மனைவியாலும் அதிர்ஷ்டமும், யோகமும் உண்டாகும். சுய ஜாதக ரீதியான தோஷங்கள் விலகி திருமணம் நடைபெறும்.உடன் பிறப்புகள், பங்காளிகள், சித்தப்பாவிடம் நிலவிய மனக்கசப்புகள் மறைந்து பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் சுமூகமாகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் நன்மை ஏற்படலாம். சிலர் நண்பர் களுடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்க லாம். அல்லது தொழிலை விரிவாக்கம் செய்யலாம். வீடு கட்டுதல், விரிவாக்கம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. 2.1.2026 அன்று காலை 9.26 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரைப் பற்றியும் யாரிடமும் குறை கூறாமல், தர்க்கம் செய்யா மல் அமைதி காப்பது நல்லது. திருவாதிரை அன்று நடராஜருக்கு புனுகு சாற்றி வழிபடவும்.
தனுசு
உழைப்பும், அதிர்ஷ்டமும் பலன் தரும் வாரம். ராசியில் உள்ள சூரியன், புதன், செவ்வாய், சுக்கி ரன் சேர்க்கைக்கு சனி, குரு பார்வை உள்ளது. தனுசு ராசியினர் பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழும் அமைப்பு உண்டாகும். செயற்கரிய செயல்களை செய்து புகழ், பாராட்டுகளை அடைவீர்கள். புத்திர தோஷம் விலகி குழந்தை பேறு கிடைக்கும். உங்கள் திறமைகள் வெளிப்படும். அலுவல கத்தில் மகிழ்ச்சியான போக்கு நீடிக்கும். வேலை மாற்ற சிந்தனையை ஒத்தி வைக்கவும். திருமண வயதில் இருப்பவர் களுக்கு கெட்டி மேளம் கொட்டப்படும். வீடு கட்ட, வாகனம் வாங்க உகந்த நேரம். சகோதர, சகோதரிகளிடம் நிலவிய போட்டி, பொறாமைகள் விலகும். பங்காளிகள் பிரச்சினை, கோர்ட்டு, கேஸ், வாய்தாக்கள் என அலைந்த நிலை மறையும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும். பூர்வீகம் தொடர் பான சர்ச்சைகள் முடிவிற்கு வரும். குல தெய்வ கோவிலுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். அண்டை அயலாருடன் சுமூகமான நிலை நீடிக்கும். உடன் பிறந்தே கொன்ற வியாதிக்கு முற்று புள்ளி வைப்பீர்கள். திருவாதிரை நட்சத்திர நாளில் விரதம் இருந்து நடராஜருக்கு பச்சைக் கற்பூரம் அபிஷேகம் செய்து வழிபடவும்.
மகரம்
நீண்ட கால கனவுகள், திட்டங்கள் நிறைவேறும் வாரம். ராசியை எந்த கிரகமும் பார்க்கவில்லை என்பதால் மனதில் நிம்மதி இருக்கும்.இதுவரை அனுபவித்த எண்ணிடலங்கா துயரம் தீரும். விரக்தியாக வாழ்ந்தவர்களுக்கு வாழ்க்கையில் பிடிப்பு, தைரியம் அதிகரிக்கும். முயற்சிகளுக்கும், திட்டமிடுதலுக்கும் குடும்ப உறவுகள் உதவியாக, ஆறுதலாக, பக்கபலமாக இருப்பார்கள். திருமணம், குழந்தை பேறு, உத்தியோகம், தொழில் என தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் மன நிறைவாக நடந்து முடியும். அடிமைத்தனத்துடன் நாடோடிபோல் வாழ்ந்தவர்களுக்கு நிரந்தமான தொழில், அதிர்ஷ்டம், முன்னேற்றம், புகழ் உண்டாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். அடிப்படை தேவைக்கு தடு மாறியவர்களுக்கு கூட தாராளமான பணப் புழக்கம் உண்டாகும். கலை ஆர்வம், அரசுப் பணி, அரசியல் வெற்றி தரும். இழந்த வேலை, மீண்டும் கிடைக்கும். தந்தையாலும், தந்தை வழி உறவுகள் மூலமும் முன்னேற்றத்திற்கான உதவிகள் கிடைக்கும். அடமானச் சொத்துக்கள், நகைகளை மீட்க வாய்ப்பு உள்ளது. திருவாதிரை நட்சத்திரம் அன்று விரதம் இருந்து சிவனுக்கு சந்தன அபிஷேகம் செய்து வழிபடவும்.
கும்பம்
வைராக்கியத்தாலும், விடா முயற்சியாலும் வெற்றி வாய்ப்பு உண்டாகும் வாரம். ராசியில் உள்ள ராகுவிற்கு தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி குருவின் பார்வை உள்ளது.ஞாபக சக்தி அதிகரிக்கும். தைரியமும் தெம்பும் குடிபுகும். சகல சவுபாக்கி யங்களையும் எல்லாவிதமான வளர்ச்சியையும் பெறக்கூடிய நிலை உள்ளது. நினைப்பது நடக்கும். கூட்டுத் தொழில், பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. சிலருக்கு வாடகை வருமானத்தை அதிகரிக்கும் சொத்துக்கள் சேரலாம். தடை பட்ட வாடகை வருமா னங்கள், சம்பள பாக்கிகள் கிடைக்கும். திருமணம், கல்வி, தொழில், உத்தியோகம், பிள்ளைப் பேறு போன்ற சுப செலவிற்காக உடன் பிறந்தவர்களுக்கு உதவ வேண்டிய சூழ்நிலை உள்ளது. பூர்வீக நிலப் பிரச்சினை தீரும். பூர்வீகத்தால் யோகம் உண்டாகும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்சினைகள் அறுவை சிகிச்சையில் சீராகும். ராசியில் ராகு ஏழில் கேது உள்ளதால் திருமண முயற்சியில் எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல் நிதானமாக செயல் பட்டால் அதிக நன்மைய டையலாம். திருவாதிரை நட்சத்திர நாளில் விரதம் இருந்து நடராஜருக்கு தயிர் அபிஷேகம் செய்து வழிபடவும்.
மீனம்
நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம்.ராசியில் உள்ள சனிக்கு செவ்வாயின் நான்காம் பார்வை உள்ளது. பிறர் அறியா நுட்பங்களை அறிந்து தன்னிச்சையாக செயல்படும் தைரியம் உருவாகும்.பொருளாதார சுணக்கங்கள் விலகி அதிகப்படியான வருமானம் கிடைக்கும். சுகமான, சொகுசான ஆடம்பர பங்களா, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. இடப்பெயர்ச்சி செய்ய வாய்ப்புகள் உள்ளது.வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சக ஊழியர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். சிலர் வேலையில் இருந்து விடுபட்டு கடன் பெற்று புதிய சுய தொழில் துவங்கலாம். உடன் பிறந்த சகோதரர் அல்லது உங்களின் உதவியைப் பெற்ற வர்களே போட்டியாக, எதிரியாக மாறுவார்கள். பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் ஜாதக தசா புத்தி ரீதியான பரிகாரங்கள் செய்து கொண்டால் எல்லாச் பிரச்சினைகளும் விலகும். சில விசயங்கள் துவக்கத்தில் சாதகம் இல்லாமல் இருந்தாலும் முடிவில் வெற்றி உங்களுக்கே உண்டாகும். முரட்டு தைரியத்தை கைவிட்டு விவேகத்துடன் செயல்பட்டால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திர நாளில் விரதமிருந்து நடராஜருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- மேஷம் தடைபட்ட அனைத்து இன்பங்களும் கூடி வரும் வாரம்.
- மிதுனம் அறிவும் திறமையும் பளிச்சிடும் வாரம்.
மேஷம்
தடைபட்ட அனைத்து இன்பங்களும் கூடி வரும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் ராசி அதிபதி செவ்வாயுடன் இணைந்து பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனியின் பார்வையில் சஞ்சரிக்கிறார். இது மேஷ ராசிக்கு பாக்கிய பலன்களை அதிகரித்துக் கொடுக்கக்கூடிய காலமாகும்.திரிகோணங்கள் பலம் பெறுவதால் கசந்த காலங்கள் இனி வசந்த காலமாக மாறப்போகிறது. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களில் ஆர்வம் கூடும்.எந்த நெருக்கடிகளையும் எளிதில் சமாளிப்பீர்கள். தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். பெண்களுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உயர் கல்விக்கு விரும்பிய வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்க ளுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு சரியாகும். குடும்பத்தினருடன் பேசி திருமணத்தை முடிவு செய்யலாம். மாற்று முறை வைத்தியத்தில் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பிள்ளைகள் பற்றிய நல்ல செய்திகள் தேடி வரும். நவகிரக செவ்வாயை வழிபடவும்.
ரிஷபம்
அதிர்ஷ்டமான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் செவ்வாயுடன் இணைந்து குரு பார்வை பெறுகிறார்.விபரீத ராஜ யோகம் கை கூடி வரப்போகிறது. அதிர்ஷ்ட பணம், பொருள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கையில் பணம் தாராளமாக நடமாடும்.வேலையில் இருந்த சிரமங்கள் குறையும். எதிர்பார்த்ததைவிட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மகிழ்ச்சியான சம்பவங்கள் அதிகம் நடைபெறும். கஷ்ட காலம் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கப்போகிறது.சிலர் சிறு தொழில் புதியதாக கற்று அது சார்ந்த தொழில் ஆரம்பிக்கலாம். இது வரை வேலை கிடைக்காத மகள், மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். திரும ணம், சுபகாரியம் தொடர்பாக இந்த வாரம் பேசி முடிக்கலாம். திருமணம் முடிந்து சண்டை போட்டு பிரிந்தவர்கள் இனி சந்தோஷமாக சேர்ந்து வாழ்வார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 22.12.2025 அன்று காலை 10.07 மணி வரை சந்தி ராஷ்டமம் இருப்பதால் நீங்கள் நல்லது சொன்னாலும் மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள்.பேச்சில் கவனம் தேவை.கோபத்தை கட்டுப் படுத்தவும்.மகாலட்சுமியை வழிபடவும்.
மிதுனம்
அறிவும் திறமையும் பளிச்சிடும் வாரம். ராசிக்கு சூரியன் செவ்வாய் சுக்ரன் குரு சம்பந்தம் உள்ளது. தடைகளைத் தாண்டி வெற்றிகள் தேடி வரும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். பேச்சாலும் செயலாற்றலாலும் மற்றவர்களைக் கவர்வீர்கள். நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு ஞானத் தன்மை அதிக ரிக்கும்.தான, தர்மம் உதவி செய்வதன் மூலம் உங்கள் செல்வாக்கு அதி கரிக்கும். அதிர்ஷ்டம் சார்ந்த வருமானம் எதிர் பார்க்கலாம். வேலையில் புரமோ சன் கிடைக்கும். பிள்ளைகளால் பெற்றோருக்குப் பெருமை உண்டாகும். வேலை தொழிலில் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக் கும். சொத்து சேர்க்கை ஏற்படும். வயோதி கர்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாண வர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.22.12.2025 அன்று காலை 10.07 முதல் 24.12.2025 அன்று இரவு 7.46 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் விரய செலவுகளும் வரலாம் என்பதால் நிதானம் தேவை. அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு புதிய நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடாது.நவகிரக புத பகவானை வழிபடவும்.
கடகம்
காரிய அனுகூலம் உண்டாகும் வாரம். ராசிக்கு செவ்வாயின் 8ம் பார்வை உள்ளது.தாய் வழி, வீடு, வண்டி, நிலங்கள், கட்டிட வாடகை, கால்நடை சார்ந்த வருமானம் கிடைக்க பெறலாம். புதிய வீடு, மனை வாங்குவீர்கள். வரா கடன் என்று முடிவு செய்த பணம் உங்களைத் தேடி வரும். பாலிசி முதிர்வு தொகை, பூர்வீகச்சொத்து, பங்கு சந்தை முதலீடு என எதிர்பாராத பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும். லாட்டரி, பந்தயம், சூதாட்டம், புத்தி சார்ந்த, கற்ற கலை சார்ந்த வருமானம் உண்டு. சிலருக்கு பிள்ளைகள் மூலம் உபரி வருமானம் கிடைக்கும். பங்குச் சந்தை ஆதா யம் இரட்டிப்பாகும். கவுரவப் பதவிகள், அரசாங்கப் பதவிகள் கிடைக்கும். பூர்வீகம் தொடர்பான சர்ச்சைகள் முடிவிற்கு வரும்.இல்லத்தரசிகளுக்கு பொன் ஆபரணங்கள் சேர்க்கை அதிகரிக்கும்.புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். 24.12.2025 அன்று இரவு 7.46 முதல் 27.12.2025 அன்று அதிகாலை 3.10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் இருப்பது நல்லது. குல, இஷ்ட தெய்வ வழிபாடு உங்களை கவசமாக காத்தருளும்.
சிம்மம்
சகாயங்கள் நிறைந்த வாரம்.ராசி அதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரனுடன் குரு சனி பார்வையில் சஞ்சரிக்கிறார்.புத்திக் கூர்மை கூடும். புதிய சிந்தனைகள்உருவாகும்.மனச் சுமை குறையும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.நவீன ஆடம்பர பொருட்கள், வீடு, வாகன யோகம் ஏற்படும். சிலருக்கு தாய் வழிச் சீதனங்களாக பணம், நகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.பிள்ளைகளின் திருமணம், வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா, உயர் கல்வி என சுப மங்களச் செலவுகள் அதிகரிக்கும்.அஷ்டமத்து சனியால் மறைமுக ஆதாயம் உண்டாகும். பண வரவு அதி கரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். நல்ல வேலையும், பதவி உயர்வும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிரமங்கள் நீங்கும். ஆன்மீக பயணங்கள் செல் வீர்கள். 27.12.2025 அன்று அதிகாலை 3.10க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் பணியி டங்களில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். இறை நம்பிக் கையோடு எதையும் எதிர்கொள்ள அற்புதங்கள் நிறைந்த வாரமாக மாறும். தினமும் சிவ கவசம் படிக்கவும்.
கன்னி
முயற்சிகளில் வெற்றி பெறும் வாரம். ராசி அதிபதி புதன் 3-ம்மிடமான வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குடும்ப வாழ்க்கையில் சில சங்கடங்கள் வந்தாலும் அதை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். துடிப்புடன் செயல்பட்டு தொழிலை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வீர்கள்.பங்குதாரர் மற்றும் வாழ்க்கைத் துணை மூலம் ஆதாயம் கிடைக்கும். பெண்கள் கணவரின் தொழில், உத்தியோக உயர்வால் நிம்மதி அடைவார்கள். கணவன் மனைவி இடையே சின்னச்சின்ன ஊடல்கள் வந்து போகும். கடன் நோய் எதிரி சார்ந்த பிரச்சினைகள் குறையும். எந்த பிரச்சினைகளையும் சமாளிக்கும் தைரியம் அதிகரிக்கும். கடந்தகால உழைப்பிற்கான பலன் இப்பொழுது கை கொடுக்கும். முன்னோர்களின் நல் ஆசியும் குலதெய்வ கடாட்சமும் உண்டாகும். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த தீராத சிக்கல்கள் தீரும். மாணவர்கள் ஆரோக்கியத்திலும், கல்வியிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். சனிக்கி ழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடவும்.
துலாம்
மகிழ்ச்சியான வாரம். ராசிக்கு குரு பார்வை உள்ளது. சுறுசுறுப்பும் செயல்திறனும் கூடும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தன வரவில் தன் நிறைவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். வராக்கடன்கள் வசூலாகும். எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். நோய்த் தொல்லை குறையும். தொழிலில் நிலவிய போட்டி, பொறாமைகள் வில கும். வியாபாரம் நல்ல முறையில் நடக்கும்.புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு, சொல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள்.6மிட ராகுவால் வேலை செய்யும் இடத்தில் சில பிரச்சினைகள் வந்து போகும். உயரதிகாரியின் மனநிலை மாறி ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். பிற கிரகங்களின் சஞ்சாரம் சற்று சுமாராக இருந்தாலும் குருபகவா னின் பார்வை சாதகமாக இருப்பதால் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். தினமும் லலிதா திரிசதி நாமாவளி படிக்கவும்.
விருச்சிகம்
விழிப்புணர்வோடு செயல்பட வேண்டிய காலம். ராசியில் 8,11-ம் அதிபதியான புதன் இருக்கிறார். புதிய மறைமுக சேமிப்பு திட்டங்கள் பற்றிய எண்ணம் உண்டாகும். தொழில், உத்தியோக நிமித்த மாக குறுகிய காலத்திற்கு வெளியூர் அல்லது வெளிநாடு சென்று வரலாம். மாணவர்க ளுக்கு விரும்பிய உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கும்.உடல் ஆரோக்கித்தில் கவனம் தேவை. நம்பியவர்கள் தக்க சமயத்தில் கை கொடுக்க மாட்டார்கள்.அடுத்தவர் பேச்சைக் கேட்டு அகலக் கால் வைக்காதீர்கள். தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள்.கூட்டாளிகள் மற்றும் நண்பர்களை பகைக்காமல் இருப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். உதவி பெற்ற வர்களே உங்களுக்கு எதிராக திரும்புவார்கள். உடன் இருப்பவர்களே குழி பறிக்கும் முயற்சியில் இறங்குவார்கள் என்பதால் யாரையும் நம்பக்கூடாது. பெண்கள் விலை உயர்ந்த நகை மற்றும் பொருட் களை இரவல் தரவும் வாங்கவும் வேண்டாம்.அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தினமும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது.
தனுசு
பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சி அடையும் வாரம்.ராசியில் உள்ள சூரியன், செவ்வாய், சுக்கிரனுக்கு குரு சனி பார்வை உள்ளது. ராசி அதிபதி குருவின் சம சப்தம பார்வை பாக்கியாதிபதி சூரியனுக்கு கிடைப்பதால் கடந்தகால நெருக்கடிகள் குறையத் துவங்கும். குடும்ப உறவுகளிடம் புரிதல் உண்டா கும். பிணக்குகள் தீரும். சொந்தவீடு, மனை, வாகனம் பற்றிய சிந்தனை மேலோங்கும். சொத்து விஷயங்களில் இருந்து வந்த வம்பு வழக்குகள் குறை யும். கூட்டுக் குடும்பத்தை விட்டுப் பிரிந்த மூத்த சகோதரர் மீண்டும் குடும்பத்தில் இணைவார். அர்த்தாஷ்டம சனியால் எதிலும் பிடிப்பு இல்லாமல் இருந்த உங்களுக்கு சேமிப்பில் நாட்டம் அதிகரிக்கும். எதிலும் வெற்றியே காண்பீர்கள். அலுவ லகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.தம்பதிகளின் கருத்து வேற்றுமை குறையும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன் னேற்றம் உண்டாகும்.திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப காரியங்கள் அனுகூலமாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும்.மகாலட்சுமியை நெய் தீபம் ஏற்றி வழிபட நிம்மதி கூடும்.
மகரம்
முன்னேற்றம் உண்டாகும் வாரம். முயற்சி ஸ்தானத்தில் ராசி அதிபதி சனி சஞ்சரிப்பதால் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.குடும்ப உறவுகளுடன் எல்லா விசயங்களையும் மனம் விட்டுப் பேசும் படியான சூழல் உருவாகும். நண்பிகள் வட்டாரத்தில் உங்கள் செயல்பாடுகள் பாராட்டப்படும்.தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தாய்மாமாவுடன் ஏற்பட்ட மன வருத்தம் மாறும்.தொல்லை கொடுத்த வாடகைதாரர் விலகுவார். புதிய வாடகைதாரர் கிடைப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு உழைக்கிறீர்களோ அவ்வளவுக்கு லாபம் கிடைக்கும்.உத்தியோகத்தில் சாதகமான நிலை நீடித்தாலும் வேலைப் பளுவும் பொறுப்புகளும் அதி கரிக்கும். தடைபட்ட திருமண வாய்ப்புகள் கூடி வரும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். திருமணம் நிச்சய மாகும். பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்களை கவனமாக கையாள வேண்டும். பிரிந்த தாய், தந்தை மீண்டும் இணைவார்கள்.தினமும் சிவபுராணம் படிக்கவும்.
கும்பம்
விரும்பிய மாற்றம் தேடி வரும் வாரம். ராசியில் உள்ள ராகுவிற்கு தன, லாப அதிபதி குருவின் பார்வை உள்ளது.இது கும்ப ராசியினருக்கு மிக மிக யோகமான காலம் என்றால் அது மிகைப்படுத்தலாகாது. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகன யோகம்,சொத்து மதிப்பு உயர்தல், தொழில் முன்னேற்றம், புதிய வேலை வாய்ப்பு என்று எல்லாவிதமான நன்மைகளையும் அடைவீர்கள்.உங்கள் வாக்கிற்கு மதிப்பும், மரியாதையும் உண்டாகும். ஆசிரியர் பணி மற்றும் பேச்சை தொழிலாக கொண்டவர்களுக்கு மேன்மை உண்டாகும். பல வழிகளில் வருமானம் வந்து மனதை மகிழ்விக்கும். பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும். வேலை இன்மையால் அவதிப்பட்டவர்களுக்கு அரசு, தனியார் துறையில் நல்ல வேலை கிடைக்கும்.ஆரோக்கிய குறைபாடு கள் சீராகும்.சிலருக்கு வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்படும். தொழில், பணி அல்லது குடும்ப சூழல் காரணமாக தம்பதிகள் சிறிது காலம் பிரிந்து வாழலாம்.பூர்வீகச் சொத்தில் சித்தப்பா மற்றும் மூத்த சகோதரத்தால் ஏற்பட்ட குழப்பங்கள் முடிவிற்கு வரும். தந்தையுடன் சுமாரான உறவே இருக்கும். காலபைரவர் வழிபாட்டால் நன்மைகளை அடைய முடியும்.
மீனம்
மகிழ்ச்சியான நிம்மதியான வாரம். பத்தில் ஒரு பாவி இருக்க வேண்டும் என்பது ஜோதிட பழமொழி.தற்போது கோட்சாரத்தில் ராசிக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் நிற்கும் சூரியன், செவ்வாய், சுக்ரனுக்கு சனி மற்றும் குருவின் பார்வை உள்ளது. அனைத்து விதமான செயல்களிலும் அனுகூலமான பலன் உண்டாகும்.இளைய சகோதர, சகோதரி மூலம் நிலவிய குழப் பங்கள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். குலத் தொழில் உள்ளவர்களுக்கு தொழில் வளர்ச்சி பல மடங்காகும். பணவரத்து திருப்தி தரும். நிதி நெருக்கடிகள் நீங்கும். அதே வேளையில் சுபச்செலவுகளும் அதிகமாகும். மறு திருமணத்தால் ஏற்பட்ட மனச் சங்கடம் நீங்கும். நோய் தொல்லை குறையும். சொந்த வாழ்க்கையை விட பொது வாழ்வில் நாட்டம் அதிகரிக்கும். பெண்கள் புதிய வாகனம் வாங்குதல், ஆடம்பரப் பொருட்கள் வாங்குதல், உல்லாசப் பயணம் செல்லுதல் என்று இனிமையாகப் பொழுதை கழிப்பார்கள். மகான்க ளின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- கடகம் அனுபவ அறிவால் வெற்றி பெறும் நேரம்.தன ஸ்தான அதிபதி சூரியனுக்கு குருவின் பார்வை உள்ளது.
- சிம்மம் அரசு வகை அனுகூலம் உண்டாகும் வாரம்.
மேஷம்
தடைகள் விலகி மாற்றம் உண்டாகும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனுடன் இணைந்து பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதற்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது.தொழிலில் செய்த முதலீடு பல மடங்கு லாபத்தைத் தரும். உழைப் பிற்கு முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு. நாணயம் நீடிக்கும். தாய்,தந்தை, சகோதரியிடம் இருந்த கருத்து வேற்றுமை அக லும். விருந்தினர் வருகை வீட்டை கலகலப்பாக்கும். கல்வியில் இருந்த தடை தாமதம் விலகும்.மாமியார் மருமகள் பிணக்கு,தாய் மகள் கருத்து வேறுபாடு மறையும்.போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டு. வங்கிக் கடன் கிடைப்பதில் இருந்த தடை, தாமதம் அகலும். வரவும் செலவும் சரியாக இருக்கும். அரசுப் பணியாளர்களுக்கு விரும்பிய இடமாறுதல் கிடைக்கும். வாழ்க்கைக் துணையுடன் நல்ல புரிதல் உண்டாகும். உடல் நிலை மேம்படும். சுப விரயங்கள் மிகுதியாகும். 17.12.2025 அன்று காலை 10.26 மணி முதல் 19.12.2025 அன்று இரவு 10.51 மணி வரை சந்திராஷ்டமம் இருப்ப தால் நிதா னத்தை கடைபிடிக்க வேண்டும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு இன்னல்களில் இருந்து உங்களை காக்கும்.
ரிஷபம்
மகிழ்ச்சியான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் குரு மற்றும் சனியின் பார்வையில் சஞ்சரிக்கிறார்.இழந்த நிம்மதி, சந்தோஷம் உங்களுக்குள் மீண்டும் குடிபுகும். தொழில் ரீதியான பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப் படுத்தும். லாபகரமான நிலைக்கு தொழிலை கொண்டு செல்வீர்கள்.பதவி உயர்வு, உத்தியோகத்தில் இடமாற்றம், மற்றவர்க ளால் மதிக்கப்படக் கூடிய நிலை ஏற்படும்.இழந்த சொத்துக்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும். குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உருவாகும். கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளால் பெருமை சேரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கடன் பிரச்சினையால் நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வீண் செலவு குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். நிதான மாக செயல்பட்டால் அரசு வகையில் யாவும் அனுகூல மாகும். 19.12.2025 அன்று இரவு 10.51 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் அன்றைய தினம் உடலுக்கும் மனதுக்கும் சற்றே ஓய்வு கொடுப்பது அவசியம்.குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். விநாயகர் வழிபாட்டால் இன்னல்களில் இருந்து மீள முடியும்.
மிதுனம்
விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும் வாரம். ராசி அதிபதி புதன் ராசிக்கு 6ம் இடத்தில் சஞ்சரிக் கிறார். ராசியில் உள்ள வக்ர குருவிற்கு சூரியன் செவ்வாய் சுக்கிரன் பார்வை உள்ளது.தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்பட்டு வருமா னம் கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருந்தாலும் அதன் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர் பார்த்த புதிய வேலை முயற்சி வெற்றி தரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.எதிலும் வெற்றி உண்டாகும். குழந்தை கள் உங்கள் சொற்படி கேட்டு நடப்பதால் சந்தோஷம் கொள்வீர்கள். நீண்ட நாட்க ளாக வராமல் இருந்த கடன்கள் இனி கொஞ்ச கொஞ்சமாக வசூலாகும். பங்கு தாரர்க ளிடம் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னே நடைபெறும்.வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். அதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் மனம் மகிழும் படியான நிகழ்ச்சி நடக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிவ வழிபாடு செய்வதன் மூலம் மகிழ்ச்சி கூடும்.
கடகம்
அனுபவ அறிவால் வெற்றி பெறும் நேரம்.தன ஸ்தான அதிபதி சூரியனுக்கு குருவின் பார்வை உள்ளது.தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சு திறமை கூடும். அக்கம் பக்கத்தினருடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மாறும்.எடுக்கப் பட்ட முயற்சியால் எதையும் சமாளிக்கும் மன வலிமை உண்டாகும் . தடைபட்ட பணிகள் விரைந்து செயல் வடிவம் பெறும். கடன், நோய் எதிரி தொல்லை நிவர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொழில் முதலீடுகளில் விழிப்புணர்வு அவசியம்.உறவினர்கள் நண்பர்கள் வகையில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். பங்கு மார்க்கெட் லாபம் ஓரளவு கூடும். பணவரத்து வழக்கத்தை விட அதிகமாக இருப்பதால் பண பிரச்சினை நீங்கும். வானொலி தொலைக்காட்சி, ஊடக துறையினர் நல்ல மாறுதலும் மேன்மையும் பெறுவர். பெண்கள் குடும்பப் பணிகளை நேர்த்தியாக செய்து முடிப்பார்கள். திருமணம் முயற்சி செயல் வடிவம் பெறும். பொறுப்புகள் அதிகரிக்கும். அரசி யல் வாதிகளுக்கு பொதுஜன ஆதரவு அதிகரிக்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சீதனம் மகிழ்ச்சியைத் தரும்.பஞ்சமுக தீபம் ஏற்றி சிவனை வழிபடவும்.
சிம்மம்
அரசு வகை அனுகூலம் உண்டாகும் வாரம்.ராசி அதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குருவின் பார்வையில் சஞ்சரிக்கிறார். குலதெய்வ நல்லாசிகள் கிட்டும். ஆன்ம பலம் பெருகும். அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் மிகுந்த ஆதா யத்தை ஏற்படுத்தித் தரும்.புத்திர பிரார்த்தம் உண்டாகும். சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பு உருவாகும். அரசுப் பணியாளர்களின் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சிலருக்கு பெரிய தொகை கடனாக கிடைக்கும். வாக்கு ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பிறரிடம் பேசும் போதும் கருத்து தெரிவிக்கும் போதும் கவனமாகவும் இருப்பது நல்லது. சில ருக்கு வீடு மாற்றம், வேலை மாற்றம் அல்லது ஊர் மாற்றம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெண்களுக்கு மன உளைச்சல் மன அழுத்தங்கள் நீங்கும். முன்பு வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயரும்.உயர்கல்வி படிப்பவர்களுக்கு எடுத்த காரியம் வெற்றி கிடைக்கும். குரு பகவான் வக்ர நிவர்த்தி பெறும் போது எதையும் சமாளிக்கும் தைரியத்தை யும் தெம்பையும் வழங்குவார். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
கன்னி
வெற்றிக் கனியை ருசிக்கும் வாரம். ராசி அதிபதி புதன் வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மகிழ்ச்சி யும் மன நிம்மதியும் அதிகரிக்கும். அரசு ஊழியர்க ளுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். எதிரிகள் தொந்தரவு நீங்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும் தொழில் போட்டிகள் குறையும். வியாபாரிகள் விற்பனையில் சாதுரியமாகப் பேசி சாதகமான பலனை அடைவார்கள். திருமணம் போன்ற சுப காரிய பேச்சுவார்த்தை நடக்கும். பாகப் பிரிவினை யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும். உடன் பிறந்த வர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அடமான நகைகள் சொத்துக்களை மீட்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். பழைய கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள்.சப்த மாதாக்களை வழிபட சங்கடங்கள் அகலும்.
துலாம்
நிம்மதியான வாரம்.வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி சுக்கிரனுக்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது.உங்கள் யோ சனை, சிந்தனை, அறிவு, திட்டம் போன்றவை பயனுள்ளதாக இருக்கும்.முதலீட்டாளர்கள் பெரிய முதலீடுகளை பயன்படுத்தி புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்கும். புதிய அரசாங்க ஒப்பந்தங்கள் கிடைக்கும் .சகோதர உறவுகளால் ஏற்பட்ட மன சஞ்சலங்கள் மாறும்.வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். வசிக்கும் வீட்டை விரி வாக்கம் செய்வீர்கள். ஆனால், அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் ஆவணங்கள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். மருத்துவமனைச் செலவு கள் முற்றிலும் அகலும். கை, கால், வலி அசதி நீங்கும். வீட்டில் முடங்கி கிடந்தவர்கள் வெளியில் சென்று வரும் அளவிற்கு ஆரோக்கி யத்தில் முன்னேற்றம் உண்டாகும். விவசாயிகளுக்கு கிணறு வெட்டக் கடன் கிடைத்து வாழ்வாதாரம் உயரும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் மிகுதியாகும். ஸ்ரீ வராகியை வழிபட நல்ல வாய்ப்பு கள் கிடைக்கப்பெற்று நிம்மதி கூடும்.
விருச்சிகம்
பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் ஏற்றமும் தேடி வரும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய்க்கு 2,5ம் அதிபதியான குருவின் சம சப்தம பார்வை உள்ளது.புதிய தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும்.கையில் பணம் புரள்வதால் கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி புதிய தொழிலில் இறங்க வேண்டாம். சுய ஜாதக தசா புக்தி சாதகம் அறிந்து சுய தொழில் துவங்க வேண்டும். உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகச் செய்து பாராட்டு களைப் பெறுவீர்கள். சிலருக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்கள் கிடைக் கும். நீண்ட நாட்களாக இருந்த பண பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திடீர் யோகங்கள் கை கூடி வரும். பங்குச்சந்தை முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை தரும். மூத்த சகோதரர்களின் ஆதரவும் ஒத்துழைப் பும் கிடைக்கும். குரு வக்ர நிவர்த்தி பெற்றவுடன் திருமண முயற்சிகள் கைகூடும். முழுத் திறமை களையும் காட்டி மேலதிகாரிகளின் கவனத்தைக் ஈர்ப்பீர்கள்.நீண்ட காலமாக நிலவிய சில பிரச்சினை கள் தீரப் போவதற்கான வழி பிறக் கும். சக்கரத்தாழ் வாரை வழிபட நவகிரக தோஷம் விலகும்.
தனுசு
தடைக் கற்கள் படிக்கற்களாக மாறும் வாரம். ராசியில் சூரியன் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை உள்ளது. இதற்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது.முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெறுவீர்கள்.குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.பணவரவு சிறப்பாக இருப்பதால் கடன் நெருக்கடி கள் சற்று குறையும். துக்கம், துயரம், சங்கடங்கள் விலகும்.வாக்கு வன்மை யால், பண பலத்தால் விரும்பி யதை சாதித்துக் கொள்வீர்கள். பங்கு வர்த்த கர்களுக்கு மிகச் சாதகமான காலம். தொழில் முன்னேற்றம் மற்றும் உத்தியோக உயர்வில் சாதகமான பலன் உண்டு. அரசாங்கம் மற்றும் வெளிநாட்டு வேலை முயற்சி சித்திக்கும். புத்திர பிரார்த்தம் உண்டாகும்.மாமனார், மாமி யாரால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.வீடு கட்டும் வாய்ப்பு கூடி வரும்.பெண்களுக்கு கணவரின் பாராட்டும் பரிசுகளும் கிடைக்கும்.நோய்கள் நீங்கி ஆரோக்கி யம் அதிகரிக்கும். திருமணத்திற்கு வரன் தேடத் துவங்குவீர்கள்.சிலருக்கு கண் சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவாகும். விவசாயிகள் உயர் ரக கறவை மாடு வாங்கி பயன் பெறுவீர்கள். குலதெய்வ வழிபாட்டால் அனுகூலமான பலனை அடைவீர்கள்.
மகரம்
விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம்.ராசிக்கு 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை குரு பார்வையில் உள்ளது.பிறருக்கு உதவுவதில் ஆர்வம் அதிகரிக் கும். தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், நண்பர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம்.வியா பாரத்தில் பெரிய அளவில் பண முதலீடு செய்ய வேண்டாம். யாருக்கும் பெரிய பணம் கடனாக கொடுக்க வேண்டாம். கடன் தொல்லை ஒரு பக்கம் இருந்தாலும் மீளும் வகையான மார்க்கம் தென்படும். புதிய தொழில் முயற்சிகளைத் தவிர்க்க வும். கோபத்தை கட்டுப்படுத்தவும். பூமி வாங்கும் விசயத்தில் சிந்தித்து நிதானமாக செயல்படுவது சிறப்பு. திட்டமிட்டு செயல்பட பணம், புகழ், அந்தஸ்து, கவுரவ பதவி, பதவி உயர்வு போன்ற நியாயமான ஆசைகள் அனைத்தும் ஈடேறும். இறை வழிபாட்டால் மகிழ்ச்சி உண்டாகும். தீர்க்கமாக யோசிக்காமல் எடுக்கும் முடிவு எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும்.உடன் பிறந்தவர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் நிலவிய மனக்கசப்பு மாறும். வீடு, வாகன யோகம் உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆஞ்சநேயர் வழிபாட்டால் இன்னல்களில் இருந்து மீள முடியும்.
கும்பம்
அதிர்ஷ்டம் அரவணைக்கும் வாரம் ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை குரு பார்வையில் உள்ளது.தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் தடை யின்றி கிடைக்கும். சிலர் புதிய வேலை வாய்ப் பிற்காக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். அரசு உத்தியோக முயற்சி கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும்.அரசியல்வாதிகளுக்கு சமூக அந்தஸ்து உயரும். விருப்ப திருமணத்திற்கு தந்தையின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்து கிடைப்பதில் சட்டச் சிக்கல் விலகும்.சிலருக்கு அத்தை, மாமா அல்லது சித்தி, சித்தப்பா மூலம் அதிர்ஷ்ட சொத்து அல்லது பணம் கிடைக்கும். தாய் வழி உறவுகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை செலுத்துவீர்கள். சிலர் குறுக்கு வழியில் அதிர்ஷ்டத்தை தேடி அலைவார் கள்.14.12.2025 அன்று இரவு 9.41 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தவறான போன் தக வலை நம்பி அக்கவுண்ட் நம்பரை யாருக்கும் தரக் கூடாது. சேமிப்பில் உள்ள பணத்தை இழக்கும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. காவல் தெய்வ வழிபாட்டால் நிம்மதியை அதிகரிக்க முடியும்.
மீனம்
பெயர், புகழுடன் வாழும் அமைப்பு உண்டாகும் வாரம். ஜென்ம சனியால் பகைமை பாராட்டிய உறவுகள் தற்போது பக்க பலமாக இருப்பார்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். சமூக அந்தஸ்தை நிலைப்படுத்தும் கவுரவப் பதவிகள் கிடைக்கும். புத்திக் கூர்மை அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய பய உணர்வு நீங்கும். தொழில், உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து படிப்படியான முன்னேற்றம் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு விண்ணப்பித்த கடன், பண உதவிகள் கிடைக்கும். கை மறதியாக வைத்த முக்கியமான ஆவணங்கள் நகைகள் கிடைக் கும். இடப் பெயர்ச்சி செய்ய நேரும். வீடு மாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் ஏற்படலாம். சொத்து வாங்கும், விற்கும் முயற்சி சாதகமாகும். 14.12.2025 அன்று இரவு 9.41 மணி முதல் 17.12.2025 அன்று காலை 10.26 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அதிகமான அலைச்சல், உறவுகள் மீது அதிருப்தி, பழகிய வட்டா ரத்தில் ஏமாற்றம் உண்டாக வாய்ப்புள்ளது. புதிய தொழில் முயற்சியை தவிர்க்கவும். எதிலும் ஈடுபாட்டுடன் இருக்க முடியாது. பண விசயத்தில் கவனமாக இருப்பது நல்லது. தினமும் நவகிரக காயத்ரி மந்திரம் படிக்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






