search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sewage stream"

    • சீனியப்பன் திருத்து பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது.
    • கழிவு நீர் ஓடையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதாக துணை மேயருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் பகுதிக்கு உட்பட்ட 1-வது வார்டு சீனியப்பன் திருத்து பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. அப்போது தோண்டிய மணல்கள் கழிவு நீர் ஓடையில் விழுந்து அடிக்கடி அடைப்பு ஏற்படுவதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி பொது மக்கள் துணை மேயர் கே.ஆர்.ராஜுக்கு கோரிக்கை வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து துணை மேயர், மாநகராட்சி கமிஷனர் கவனத்திற்கு கொண்டு சென்று கூட்டு துப்புரவு பணி செய்து உடனடியாக பணியை முடிக்க உத்தரவிட்டார்.அதன் அடிப்படையில் சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் துப்புரவு பணி ஆய்வாளர் ஜானகிராமன், மேஸ்திரி முருகன் உள்ளிட்ட துப்புரவு பணியாளர்கள் 25 பேர் கொண்ட குழுவினர் உடனடியாக பணியை தொடங்கி சரி செய்தனர். 

    • நெல்லை மாநகர பகுதி யில் கழிவு நீர் ஓடைகளை தூர்வாரும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
    • டவுன் ஆர்ச் முதல் நெல்லையப்பர் கோவிலுக்கு செல்லும் சாலை பகுதியில் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் கிடந்த கழிவுநீர் ஓடைகள் சிறிய பொக்லைன் எந்திரம் மூலமாக தூர்வாரப்பட்டது.

    நெல்லை :

    நெல்லை மாநகர பகுதி யில் கழிவு நீர் ஓடைகளை தூர்வாரும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை மண்டலம் 25- வது வார்டுக்கு உட்பட்ட டவுன் நயினார் குளம், எஸ்.என்.ஹைரோடு உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக கழிவு நீர் ஓடைகள் தூர்வாரப்படாமல் கிடப்பதாகவும், தற்போது அய்யப்ப பக்தர்களின் வருகை நெல்லையப்பர் கோவிலுக்கு அதிக அளவில் இருப்பதால் அப்பகுதியில் உள்ள கழிவு நீர் ஓடைகளை சுத்தம் செய்யும்படியும் அந்த வார்டு கவுன்சிலர் ராமகிருஷ்ணன் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்திக்கு கோரிக்கை விடுத்தார்.

    அதன் அடிப்படையில் கடந்த சில நாட்களாக நயினார் குளம் சாலையில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் கழிவுநீர் ஓடைகள் தூர்வாரப்பட்டன.

    இன்று டவுன் ஆர்ச் முதல் நெல்லையப்பர் கோவிலுக்கு செல்லும் சாலை பகுதியில் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் கிடந்த கழிவுநீர் ஓடைகள் சிறிய பொக்லைன் எந்திரம் மூலமாக தூர்வாரப்பட்டது.

    • ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் வாய்ப்பாடி பிரிவு அருகே கழிவு நீர் சாக்கடையில் ஒருவர் விழுந்து இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
    • இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் வாய்ப்பாடி பிரிவு அருகே கழிவு நீர் சாக்கடையில் ஒருவர் விழுந்து இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், பெருந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில், இறந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும் எனவும், உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

    இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×