search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "person died"

    • ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் வாய்ப்பாடி பிரிவு அருகே கழிவு நீர் சாக்கடையில் ஒருவர் விழுந்து இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
    • இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் வாய்ப்பாடி பிரிவு அருகே கழிவு நீர் சாக்கடையில் ஒருவர் விழுந்து இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், பெருந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில், இறந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும் எனவும், உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

    இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுவையில் ஆயிரத்து 509 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது
    • புதுவையில் 73, காரைக்காலில் 31, ஏனாமில் 15 பேர் என புதிதாக 119 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் ஆயிரத்து 509 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதுவையில் 73, காரைக்காலில் 31, ஏனாமில் 15 பேர் என புதிதாக 119 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 5, காரைக்கால், ஏனாம், மாகியில் தலா ஒருவர் என 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் 603, காரைக்காலில் 105, ஏனாமில் 43, மாகேவில் ஒருவர் என 752 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவையில் 69, காரைக்காலில் 27, ஏனாமில் 2 பேர் என 98 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.

    புதுவை குருசுகுப்பத்தை சேர்ந்த 79 வயது முதியவர் ஜிப்மரில் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார். நேற்றும் கருமாம்பாக்கத்தை சேர்ந்த முதியவர் பலியானார். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 967 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 18 லட்சத்து 50 ஆயிரத்து 190 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    ×