search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாயர்புரத்தில் தூய்மை பணி விழிப்புணர்வு முகாம்
    X

    தூய்மை பணி விழிப்புணர்வு முகாம் நடந்த போது எடுத்த படம்.


    சாயர்புரத்தில் தூய்மை பணி விழிப்புணர்வு முகாம்

    • சாயர்புரம் தேர்வுநிலை பேரூராட்சியில் தூய்மை பணி விழிப்புணர்வு முகாம் 10-வது வார்டு புளியநகரில் நடைபெற்றது.
    • புளிய நகர் வார்டு முழுவதும் கொசு மருந்துகள் வீடுவீடாக தெளிக்கப்பட்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சாயர்புரம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் தேர்வுநிலை பேரூராட்சியில் சிறப்பு ஒட்டு மொத்த தீவிர தூய்மை பணி முகாம் 10-வது வார்டு புளியநகரில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.சாயர்புரம் தி.மு.க. செயலாளர் கண்ணன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அறவாழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கலந்து கொண்ட அனைவரும் எனது குப்பை எனது பொறுப்பு, எனது சுத்தமான கிராமம் எனது பெருமை என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    முகாமில் புளிய நகர் வார்டு முழுவதும் கொசு மருந்துகள் வீடுவீடாக தெளிக்கப்பட்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளும் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து வார்டுகளிலும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்த உள்ளது. இதில் சாயர்புரம் பேரூராட்சி கவுன்சிலர் முத்துராஜ், சாயர்புரம், நாசரேத், ஏரல் பேரூராட்சி ஊழியர்கள், பரப்புரை யாளர்கள் ஜெயா, பெனிட்டா மேரி மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சாயர்புரம் பேரூராட்சி மேற்பார்வையாளர் நித்திய கல்யாண் செய்து இருந்தார்.

    Next Story
    ×