என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தென்திருப்பேரையில் கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான 1.25 ஏக்கர் நிலம் மீட்பு
Byமாலை மலர்8 Feb 2023 7:03 AM GMT
- நிலத்தை மீட்க நடவடிக்கை வேண்டும் என்று பக்தர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
- மீட்கப்பட்ட நிலத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் என்று அறிவிப்பு பலகையும் நடப்பட்டது.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் தென் திருப்பேரையிலுள்ள நவ கைலாயத்தில் 7-வது தலமாக விளங்கும் கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 1.25 ஏக்கர் நஞ்சை நிலம் குருகாட்டூர் கிராமத்தில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது.
அந்த நிலத்தை மீட்க நடவடிக்கை வேண்டும் என்று பக்தர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது அந்த நிலத்தை இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் சங்கர் முன்னிலையில், அறநிலையத்துறை தனி தாசில்தார் ஈஸ்வர நாதன், கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் செயல் அலுவலர் அஜீத் உட்பட வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டு நிலத்தை மீட்டனர்.
அந்த நிலத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் என்று அறிவிப்பு பலகையும் நடப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X