search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தம் விஜயாசன பெருமாள் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம்
    X

    நத்தம் விஜயாசன பெருமாள் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

    நத்தம் விஜயாசன பெருமாள் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம்

    • திருவிழா நேற்று முன்தினம் திரு முளைச்சாத்துடன்தொடங்கிய நிலையில் வரும் 24-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது.
    • 24-ந் தேதி காலை 11மணிக்கு புஷ்ப யாகத்துடன் திருவிழா நிறைவடைகிறது.

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதிகளில் 2-வது ஸ்தலமான நத்தம் ஸ்ரீவிஜயாஸன பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் மாசி பிரம்மோத்ஸவ திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதன்படி, இந்தாண்டிற் கான திரு விழா நேற்று முன்தினம் திரு முளைச்சாத்துடன்தொடங்கிய நிலையில் வரும் 24-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது.

    திருவிழா கொடி யேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு திருமஞ்சனம், நித்தியல், கோஷ்டி நடைபெற்றது. காலை 10.30மணிக்கு கொடி பட்டம் கோயில் வளாகத்தை சுற்றிவரப்பட்டு காலை 11,05மணிக்கு அர்ச்சகர்கள் கண்ணன், கொடியேற்றி வைத்தார்.

    கொடியேற்றத்தினை தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை 9.10மணிக்கு பெருமாள் தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடும், பகல் 11மணிக்கு திருமஞ்சனம், தீர்த்த விநியோக கோஷ்டியும் நடக்கிறது.

    இதைப்போல் தினமும் மாலை 6 மணிக்கு பெருமாள் ஹம்ஸ வாகனம், சிம்ஹ வாகனம், ஹனுமந்தம், சேஷம், யானை, இந்திர விமானம், சந்திரபிரபை, பரங்கி நாற்காலி, குதிரை, வெற்றிவேர் சப்பரம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.

    திருவிழாவின் 5ம் திருவிழாவான 18ம் தேதி மாலை 6மணிக்கு எம்இடர் கடிவான் பெருமாள் கருட சேவையும், 8ம் திருவிழாவான 20ம் தேதி மதியம் 2மணி முதல் மாலை 5மணிக்குள் திருக்கல்யாணமும், 24ம் தேதி காலை 11மணிக்கு புஷ்ப யாகத்துடன் திருவிழா நிறைவடைகிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். அர்ச்சகர்கள் ராஜ கோபாலன், சுந்தர்ராஜன், ஸ்தலத்தார்கள் ராஜப்பாவெங்கடாச்சாரி, சீனிவாசன், உள்ப்பட பலர் கலந்து கொண்டனர்

    Next Story
    ×