search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adinathar Alwar Temple"

    • ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகம் நடந்த வைகாசி மாத உத்திரட்டாதி நட்சத்திர நாளன்று வருஷாபிஷேகம் நடப்பது வழக்கம்.
    • பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் காட்சி தந்து அருள் பாலித்தார்.

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதிகளில் 9-வது திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கருடசேவை நடந்தது.

    ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகம் நடந்த வைகாசி மாத உத்திரட்டாதி நட்சத்திர நாளன்று வருஷாபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி காலை 5 மணிக்கு விஸ்வரூபம், 7 மணிக்கு கும்பம் வைத்து ஹோமம் நடந்தது. 8.30 மணிக்கு பூர்ணாகுதி, 9 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 10 மணிக்கு தீபாராதனை, நாலாயிர திவ்யப்பிரபந்தம், 12 மணிக்கு சாத்துமுறை, தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சாயரட்சை, 6.30 மணிக்கு சுவாமிகள் ஆதிநாதர் ஆழ்வார் வாகன குறட்டிற்கு எழுந்தருளினார். 7 மணிக்கு பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் காட்சி தந்து அருள் பாலித்தார். பின்னர் மாட வீதி உலா நடந்தது. இந்நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர், அர்ச்சகர்கள் கண்ணன், விவேக் நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாச சேவைகள் அறக்கட்டளை பாலாஜி, பத்மநாபன் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 9-ம் திருவிழாவான இன்று காலை 8 மணிக்கு தங்கத்தேரில் நம்மாழ்வார் எழுந்தருளினார்.
    • நாளை (2-ந்தேதி) தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி தலங்களில் 9- வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தினமும் சுவாமி நம்மாழ்வார் மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வருகிறது. 5-ம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்திலும், சுவாமி நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் தங்க பல்லக்கிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தனர். அன்றைய தினம் நவதிருப்பதி பெருமாள் மங்களாசாசனம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    தேரோட்டம்

    9-ம் திருவிழாவான இன்று காலை 8 மணிக்கு தங்கத்தேரில் நம்மாழ்வார் எழுத்தருளினார். 8.30 மணியளவில் பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என்ற கர கோஷத்துடன் நான்கு ரத வீதிகளில் தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். காலை 11 மணி அளவில் தேர் நிலை வந்தடைந்தது. நாளை (2-ந்தேதி) தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் வானமாமலை ராமானுஜ ஜீயர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆழ்வார்திருநகரி சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு துறை அலுவலர்கள் இசக்கி, ராஜ்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • நேற்று காலை நவதிருப்பதி பெருமாள் கோவில் கருட வாகனங்கள் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலுக்கு வந்து சேர்ந்தன.
    • விழாவின் சிகர நாளான 1-ந் தேதி (வியாழக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவி லில் நம்மாழ்வார் மங்களா சாசனம் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.

    பிரம்மோற்சவ விழா

    ஆழ்வார் கோவிலின் பூப்பந்தல் மண்டபத்தில் சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளி னார். சுவாமி நம்மாழ்வார் இங்குள்ள புளிய மரத்தின் பொந்தில் சிறு குழந்தையாக தவழ்ந்து வந்து அமர்ந்து 16 ஆண்டுகள் கழித்து வாய்திறந்து திருவாய்மொழி பாடினார்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் சுவாமி நம்மாழ்வார் திரு அவதாரம் செய்த வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் 15 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மங்களாசாசனம் கருடசேவை

    அதைத்தொடர்ந்து நேற்று காலை நவதிருப்பதி பெருமாள் கோவில் கருட வாகனங்கள் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலுக்கு வந்து சேர்ந்தன. ஶ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர் கடிவான், திருப்புளியங்குடி காய்சினவேந்தன், இரட்டை திருப்பதி அரவிந்தர லோசனர், தேவர்பிரான், பெருங்குளம் மாயக்கூத்தர், தென்திருப்பேரை நிகரில் முகில் வண்ணன், திருக்கோளூர் வைத்தமாநிதி, ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்ற பிரான், மதுரகவி ஆழ்வார் ஆகியோர் பூப்பந்தல் மண்டபத்திற்கு வந்த பின்னர் இரவு 10.30 மணிக்கு மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் 9 பெருமா ள்களும் புஷ்ப அலங்கா ரத்துடன் கருடவாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் தங்கபல்லக்கிலும் ஒன்றன்பின் ஒன்றாக வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தனர்.

    தேரோட்டம்

    விழாவின் சிகர நாளான 1-ந் தேதி (வியாழக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. சுவாமி நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் காலை 8 மணிக்கு தேரில் எழுந்தருளுகிறார். அதை தொடர்ந்து 8.30 மணி அளவில் தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாலை தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம் நடக்கிறது. 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 10 -ம் நாள் திருவிழாவான தீர்த்தவாரி நிகழ்ச்சி தாமிரபரணி நதியில் காலை நடக்கிறது. நிகழ்ச்சியில் மாஜிஸ்திரேட் மகராஜன், திருகளங்குடி பேரரூளாயர் ஜீயர், முன்னாள் அறங்கா வலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அஜீத், தக்கார் கோவல மணிகண்டன், அலுவலக பணியாளர்கள் செய்து இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஶ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. மாயவன் தலைமையில் ஆழ்வார் திருநகரி போலீசார் செய்து இருந்தனர்.

    • ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார்கோவில் சித்திரை பிரமோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • மே 1-ந்தேதி (திங்கள் கிழமை) தேர்த் திருவிழா நடை பெறுகிறது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்தி லுள்ள நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை பிரமோற்சவ திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டா டப்பட்டு வருகிறது.

    சித்திரை மாதம் உத்திரம் தினத்தன்று மூலவர் ஆதிநாதர் விக்ரகம் ப்ருகு மற்றும் மார்கண்டேய மகரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவம் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சித்திரை பிரமோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை மறுநாள் (25-ந்தேதி) எம்பெருமானார் எதிர் சேவை நிகழ்ச்சியும், 27-ந்தேதி (வியாழக்கிழமை) கருடோத்ஸவம் நிகழ்ச்சியும், மே 1-ந்தேதி (திங்கள் கிழமை) தேர்த் திருவிழாவும்,மே2-ந்தேதி (செவ்வாய்கிழமை) தீர்த்தவாரியும் நடை பெறுகிறது.

    தினமும் மாலை சுவாமி பொலிந்து நின்ற பிரான் பரங்கி நாற்காலி, சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், யானை வாகனம், இந்திர விமான வாகனம், குதிரை வாகனம், புன்னை மர வாகனம், வெட்டி வேர் சப்பரம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி அஜீத், தக்கார் கோவல மணிகண்டன், எம்பெரு மானார் பேரருளாளர், ராமானுஜ ஜீயர், ஆழ்வார் கைங்கர்ய சபா தலைவர் காரிமாறன், கலைக்காப்பக தலைவர் ரெங்கராஜன், முன்னாள் அறங்காவலர் குழுதலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 25-ந் தேதி முதல் தொடங்கி வருகிற 6-ந் தேதி வரை 13 நாட்கள் நடைபெற்று வருகிறது.
    • பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவ திருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 25-ந் தேதி முதல் தொடங்கி வருகிற 6-ந் தேதி வரை 13 நாட்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 5-ம் நாளான 31-ந் தேதி கருடசேவை நிகழ்ச்சியில் கருட வாகனத்தில் பொலிந்து நின்ற பிரானும், அன்ன வாகனத்தில் நம்மாழ்வாரும் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தனர். திருவிழா நாட்களில் காலை, மாலை இரு வேளையும் பொலிந்து நின்ற பிரான் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    தேரோட்டம்

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. உற்சவர் பொலிந்து நின்ற பிரான் சிறப்பு பூஜையுடன் காலையில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 8 மணி அளவில் நான்கு ரத வீதிகளில் தேர் வலம் வந்து மதியம் நிலையை அடைந்தது. அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோசம் எழுப்பி தேரை இழுத்து வந்தனர். தேரோட்டத்தில் ஆழ்வார் திருநகரி எம்பெருமான் ஜீயர், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை நிர்வாகிகள், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நாளை 5-ந் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. எற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அஜித், தக்கார் கோவல மணிகண்டன் மற்றும் நிர்வாகத்தினர், காரிமாறன் கலை காப்பகத்தினர் செய்து இருந்தனர்.

    • ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வருகிற ஏப்ரல் 4-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்தி லுள்ள நவ திருப்பதி தலங்களில் 9 வது தலமான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி யேற்றத்தை முன்னிட்டு அதிகா லையில் நடைதிறக்கப்பட்டு விஸ்வரூபம் திருமஞ்சனம் நடைபெற்றது. அதை தொடர்ந்து கொடிபட்டம் வீதி உலா வந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கொடி யேற்றப்பட்டது.

    திருவிழா நாட்களில் காலை, மாலை இரு வேளையும் பொலிந்து நின்ற பிரானும், நம்மாழ்வாரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 31-ந் தேதி கருட சேவை நடைபெறுகிறது. கருட வாகனத்தில் பொலிந்து நின்ற பிரானும் ஹம்ச வாகனத்தில் நம்மாழ்வாரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலிக்கிறார்.

    வருகிற ஏப்ரல் 4-ந் தேதி தேரோட்டம் நடைபெறு கிறது. 5-ந் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான எற்பாடு களை கோவில் நிர்வாக அதிகாரி அஜித் தக்கார் கோவல மணிகண்டன் மற்றும் நிர்வாகத்தினர், ஆதிநாதர் ஆழ்வார் கைங்கர்ய சபா காரிமாறன் கலை காப்ப கத்தினர் செய்து இருந்தனர். நிகழ்ச்சியில் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித்திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • விழாவில் இறுதி நாளான நாளை (13-ந்தேதி) காலையில் சுவாமி நம்மாழ்வார் இரட்டை திருப்பதி கோவிலில் எழுந்தருளுகிறார்.

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித்திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலையும், மாலையும் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாலித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் 10-ந்தேதி இரவில் சுவாமி பொலிந்து நின்ற பிரான் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார்.

    நேற்று இரவில் சுவாமி நம்மாழ்வார் ஆச்சாரி யார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து தெப்பத்தை மூன்று முறை சுற்றி வந்தார். இன்று மதியம் தீர்த்தவாரி நடைபெருகிறது.

    விழாவில் இறுதி நாளான நாளை (13-ந்தேதி) காலையில் சுவாமி நம்மாழ்வார் இரட்டை திருப்பதி கோவிலில் எழுந்தருளுகிறார். அங்கு திருமஞ்சனம் கோஷ்டி, சாத்துமுறைக்கு பின் இரவு சுவாமி பல்லக்கில் ஆழ்வார் திருநகரிதிரும்புகிறார்.

    விழாவில் எம்பெரு மானார் ஜீயர், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் அஜித், காரியமாறன் கலை காப்பகத்தினர் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • விசாக நட்சத்திரம் 10 நாட்கள் மாசி திருவிழாவாக கொண்டாடப்படும்.
    • ஆதிநாதர் ஆழ்வார் மற்றும் நம்மாழ்வார் வெட்டிவேர் சப்பரத்தில் அலங்கரிக்கப்பட்டு மாடவீதி புறப்பாடு நடந்தது.

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதி கோவில் தலங்களில் 9 -வது ஸ்தலமான ஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் பிறந்த திவ்யதேசம், நம்மாழ்வார் விக்ரகம், பொருணை நதி நீரை காய்ச்சி வடித்த நாள் மாசி விசாகமாகும். இந்த ஆண்டு மாசி மாதம் 2 விசாக நட்சத்திரம் வருகிறது.

    இந்த விசாக நட்சத்திரம் 10 நாட்கள் முந்தி மாசி திருவிழாவாக கொண்டாடப்படும். அதன்படி வருகிற மார்ச் மாதம் 1-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

    அதற்கு முன்னதாக 2 விசாக நட்சத்திரம் வருவதால் நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம், 7 மணிக்கு திருமஞ்சனம், 8 மணிக்கு 8.30 மணிக்கு நம்மாழ்வார் ஆதிநாதர் சன்னதி எழுந்தருளினார். பின்னர் 9 மணிக்கு திருவாராதனம். நாலாயிர திவ்ய பிரபந்த கோஷ்டி. தீர்த்தம், சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சாயரட்சை. 5.30 மணிக்கு ஆதிநாதர் ஆழ்வார் மற்றும் நம்மாழ்வார் வெட்டிவேர் சப்பரத்தில் அலங்கரிக்கப்பட்டு மாடவீதி புறப்பாடு நடந்தது.

    இந்நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×