search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theppathiruvizha"

    • கடந்த மார்ச் 18-ந் தேதி கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கியது.
    • மாயக்கூத்த பெருமாள், அலமேலு மங்கை, குளந்தைவல்லி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் தோளுக்கினியானில் புறப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளி தீபாராதனை காட்டப்பட்டது.

    தென்திருப்பேரை:

    தாமிரபரணி ஆற்றின் கரையிலுள்ள நவதிருப்பதி கோவில்களில் 6- வது கோவில் பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள் கோவில் ஆகும்.

    தெப்பத்திருவிழா

    ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவோண நட்சத்திரத்தில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 18-ந் தேதி கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கியது. 12 ம் நாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு தெப்பம் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 8.15 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு நித்தியல். மாலை 5 மணிக்கு சாயரட்சை, 6.30 மணிக்கு சுவாமி மாயக்கூத்த பெருமாள், அலமேலு மங்கை, குளந்தைவல்லி தாயார் களுடன் சிறப்பு அலங்கா ரத்தில் தோளுக்கினியானில் புறப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளி தீபாராதனை காட்டப்பட்டது.

    நாலாயிர திவ்ய பிரபந்தங் களை அரையர் சம்பத், சாரங்கன் ஸ்வாமிகள், அண்ணாவியார், பாலாஜி ஸ்வாமி ஆத்தான், கீழத்திருமாளிகை சுவாமிகள் ராமானுஜம், உட்பட பலர் சேவித்தனர். பின்னர் தீர்த்தம், சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஸ்தல அர்ச்சகர் வெங்கடேசன், சுந்தரம், பிச்சைமணி, சுந்தர நாராயணன், ஸ்தலத்தார்கள் சீனிவாசன், ராமானுஜம், ஸ்ரீதர், ஸ்ரீகாரியம் அஸ்வின். அரவிந்த், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், தக்கார் சிவலோநாயகி, கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி, இந்திய கலாச்சார பண்பாட்டு அறக்கட்டளை முதன்மை செயல் அலுவலர்கள் கசங்காத்த பெருமாள், புருஷோத்தமன், கள இயக்குனர் விஜயகுமார், சூப்பர் வைசர்கள் வரதராஜ பத்மநாபன், பாலாஜி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இன்று காலை புஷ்ஞ்சாலி நடைபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை குளந்தை வல்லி தாயார் கைங்கர்ய சபாவினர் மற்றும் நிர்வாகம் செய்கின்றனர்.

    • ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித்திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • விழாவில் இறுதி நாளான நாளை (13-ந்தேதி) காலையில் சுவாமி நம்மாழ்வார் இரட்டை திருப்பதி கோவிலில் எழுந்தருளுகிறார்.

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித்திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலையும், மாலையும் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாலித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் 10-ந்தேதி இரவில் சுவாமி பொலிந்து நின்ற பிரான் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார்.

    நேற்று இரவில் சுவாமி நம்மாழ்வார் ஆச்சாரி யார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து தெப்பத்தை மூன்று முறை சுற்றி வந்தார். இன்று மதியம் தீர்த்தவாரி நடைபெருகிறது.

    விழாவில் இறுதி நாளான நாளை (13-ந்தேதி) காலையில் சுவாமி நம்மாழ்வார் இரட்டை திருப்பதி கோவிலில் எழுந்தருளுகிறார். அங்கு திருமஞ்சனம் கோஷ்டி, சாத்துமுறைக்கு பின் இரவு சுவாமி பல்லக்கில் ஆழ்வார் திருநகரிதிரும்புகிறார்.

    விழாவில் எம்பெரு மானார் ஜீயர், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் அஜித், காரியமாறன் கலை காப்பகத்தினர் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

    ×