search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்திருப்பேரையில் வீடு, வீடாக சென்று மின் இணைப்புடன் ஆதார் இணைக்கும் பணி
    X

    வீடு வீடாக சென்று மின்இணைப்பு எண்ணோடு ஆதார் எண் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்ட காட்சி.


    தென்திருப்பேரையில் வீடு, வீடாக சென்று மின் இணைப்புடன் ஆதார் இணைக்கும் பணி

    • மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தென்திருப்பேரையில் நடைபெற்றது.
    • தி.மு.க. சார்பில்வீடு வீடாக சென்று ஆதார் எண் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    தென்திருப்பேரை:

    தமிழக அரசின் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தென்திருப்பேரையில் நடைபெற்றது. பேரூர் பகுதியில் 100 சதவீதம் முழுமையடையச் செய்ய தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படி தென்திருப்பேரை பேரூர் தி.மு.க. சார்பில் தன்னார்வலர்களை கொண்டு வீடு வீடாக சென்று மின்இணைப்பு எண்ணோடு ஆதார் எண் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    இந் நிகழ்ச்சி ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார் தலைமையில் நகர செயலாளர் முத்து வீரப்பெருமாள், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் ஆனந்த், ஆழ்வை மத்திய ஒன்றிய அவைத்தலைவர் மகரபூஷணம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. ஒன்றிய துணை செயலாளர் கோட்டூர் கோயில்துரை, மாவட்ட பிரதிநிதி செங்கோட்டையன், பேரூராட்சி கவுன்சிலர்கள் மாரியம்மாள், சீதாலெட்சுமி, சண்முகசுந்தரம், வார்டு செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×