என் மலர்
உள்ளூர் செய்திகள்

பா.ம.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் ஜி.கே.மணி ஆய்வு
- ஆய்வுகள் முறையாக நடைபெறுகிறாதா என சோதனை
- எராளமானோர் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் பாமக சோளிங்கர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பூத் கமிட்டி செயல்பாடுகள் குறித்து மாநில செயற்குழு உறுப்பினர் இடையூர் கேசவன், சமூக முன்னேற்ற இணை செயலாளர் ஜெகதீஷன் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வுகள் முறையாக நடைபெறுகிறாதா என பாமக கவுரவத்தலைவர் ஜிகே மணி ஆய்வு மேற்கொண்டார்.
இதில் கிராமங்கள் தோறும் கிளைகழகங்களை மேம்படுத்துதல், வாக்குசாவடி தோறும் களப்பணியாளர்கள் அமைத்தல் கிராமங்கள் தோறும் கட்சி கொடி ஏற்றுதல், கிளைகழகங்கள் தோறும் திண்ணை பிரசாரங்கள், மாதந்திர கூட்டங்கள் நடத்தி பாமக கொள்கைகளை மக்களுக்கு எடுத்து கூறி கட்சி நிரந்தர வாக்காளர்களை சேர்த்தல் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாசை முதலமைச்சராக ஆக்க அயராது பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அப்போது மாவட்ட தலைவர் அ.ம. கிருஷ்ணன், மாநில சமூக நீதிப் பேரவை துணை செயலாளர் சக்கரவர்த்தி, மேற்கு ஒன்றிய செயலாளர் ரஜேஷ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், மாவட்ட முன்னாள் வன்னியர் சங்க செயலாளர் மோகன், ஒன்றிய தலைவர் சம்பத், ஒன்றிய அவைத் தலைவர் கேசவன், கிளை கழக தலைவர்கள் மனோகரன் ஆதிகேசவன் விஜயன், தம்பிப்படை திலீப்பவித்ரன் மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் கிளை கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.






