என் மலர்
நீங்கள் தேடியது "Locker"
- வங்கி திருத்த சட்ட விதிகளின்படி நிதி அமைச்சகம் மாற்றத்தை அறிவித்துள்ளது.
- உரிமை கோரப்படாத பணம், நகை உள்ளிட்ட உடைமைகள் கணிசமாக குறையும்.
சென்னை:
வங்கிகளில் கணக்கு பராமரிப்பவர்கள் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனைகள் செய்யவில்லையென்றால், அந்த கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகை ரிசர்வ் வங்கியின் டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு (டெப்) தானாகவே மாற்றம் செய்யப்பட்டுவிடும். இவ்வாறு கிடைக்கும் நிதியை மக்களிடம் நிதி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், கல்வி வளர்ச்சி திட்டங்களுக்காகவும் ரிசர்வ் வங்கி பயன்படுத்தி வருகிறது.
ரிசர்வ் வங்கி தகவலின்படி, கடந்த ஜூன் மாதம் வரையிலான நிலவரப்படி பொதுத்துறை வங்கிகளில் ரூ.58 ஆயிரத்து 330 கோடியும், தனியார் வங்கிகளில் ரூ.8 ஆயிரத்து 673 கோடியும் உரிமை கோரப்படாமல் முடங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட வங்கி கணக்குதாரர் மரணமடைந்து, அவரால் முன்மொழியப்பட்ட வாரிசுதாரர் (நாமினி) பணத்துக்கு உரிமை கோராததுதான் இதற்கு பிரதான காரணமாக கருதப்படுகிறது.
வங்கியில் கணக்கு தொடங்குபவர்கள், லாக்கர்களில் நகைகள் உள்ளிட்ட உடைமைகளை பாதுகாப்பாக வைப்பவர்கள் தனக்கு ஏதாவது விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தால், அந்த பணத்துக்கும், லாக்கர்களில் உள்ள உடைமைகளுக்கும் பொறுப்பாக வாரிசுதாரராக ஒருவரை மட்டுமே தற்போது நியமிக்கலாம். இதில், வங்கி திருத்த சட்ட விதிகளின்படி நிதி அமைச்சகம் மாற்றத்தை அறிவித்துள்ளது.
புதிய விதிகளின்படி வங்கியில் கணக்கு, வங்கிகளில் லாக்கர் வசதியை வைத்திருப்பவர்கள் வாரிசுதாரராக 4 பேரை நியமித்துக்கொள்ளலாம். இந்த வசதி அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. உரிமை கோராமல் வங்கி கணக்குகளில் முடங்கும் பணத்தை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிதி அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, ''புதிய விதிகளின்படி, வங்கியில் கணக்கு பராமரிப்பவர்கள் தாங்கள் விரும்பும் 4 பேரை வாரிசுதாரர்களாக நியமித்து, அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவேண்டிய தொகையையும் வௌிப்படையாக அறிவிக்கலாம். இதேபோல லாக்கர் வசதியை பயன்படுத்துபவர்களும் வாரிசுதாரர்களாக 4 பேரை நியமிக்கலாம்.
லாக்கர் பராமரிப்பவர்கள் ஒருவேளை மரணம் அடைந்தால், அவருக்கு பின்னர் யார் அதனை கையாளவேண்டும் என்பதையும் தெரிவிக்கலாம். இதனால் உரிமை கோரப்படாத பணம், நகை உள்ளிட்ட உடைமைகள் கணிசமாக குறையும். புதிய விதியை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என்று கூறினர்.
- இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லாக்கர்’.
- இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இரட்டை இயக்குனர்கள் ராஜசேகர் என்- யுவராஜ் கண்ணன் இணைந்து இயக்கியுள்ள திரைப்படம் 'லாக்கர்'. இப்படத்தில் எதற்கும் துணிந்தவன், கேம் ஓவர், மாஸ்டர் படங்களில் நடித்த விக்னேஷ் சண்முகம் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக அறிமுக நடிகை நிரஞ்சனி அசோகன் நடித்துள்ளார்.

மேலும், வில்லனாக தரமணி, ரெஜினா போன்ற படங்களில் நடித்த நிவாஸ் ஆதித்தன் நடித்துள்ளார். பிரின்ஸ், குட் நைட் போன்ற படங்களில் நடித்த சுப்ரமணியன் மாதவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் வைகுந்த் ஸ்ரீநிவாசன் இசையமைத்துள்ளார். தணிகைதாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

'லாக்கர்' படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இப்பாடல்களை கார்த்திக் நேத்தா மற்றும் விஷ்ணு இடவன் எழுதியுள்ளனர். ராபரி டிராமாவாக உருவாகியுள்ள 'லாக்கர்' படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இறுதி கட்டப் பணியில் இருக்கும் 'லாக்கர்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மதியம் உணவு உண்பதற்காக வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்திருந்தது.
- சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி விருப்பாச்சி பகுதியில் வசிப்பவர் சசிக்குமார் (வயது 34). இவரது மனைவி ஆனந்தி. இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணி செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிக்கொண்டு, பள்ளிக்கு சென்றனர். மதியம் உணவு உண்ப தற்காக வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திற ந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பின்பக்க கதவும் திறந்திருந்தது. அதிர்ச்சியடைந்த தம்பதியர், வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் உள்ளனவா என சரிபார்த்தனர். அப்போது, பூஜை அறையில் உள்ள லாக்கரில் வைத்திருந்த 2 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணம் திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பாக குறிஞ்சிப்பாடி போலீசாரிடம் புகாரளித்த னர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து, தடயங்களை சேகரித்தனர். திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில், பட்டப்பகலில் பூட்டிய வீட்டிற்குள் புகுந்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கிரகப்பிரவேசத்திற்கு மாவிலை வேண்டும் எனச் சொல்லி பேசிய நிலையில், வீட்டை நோட்டம் விட்டு உள்ளார்கள்.
- பீரோவில் லாக்கர் திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, நகை திருட்டு போனதை அறிந்து மூதாட்டி பதட்டம் அடைந்தார்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள வேலங்குடி தென்கரை மாத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 55) மற்றும் அவரது மனைவி ராணி, மகன் மணிவாசகம் ஆகியோர் வெளியூர் சென்ற நிலையில் வீட்டில் ராஜேந்திரனின் தாயார் வயதானவர் இருந்துள்ளார். அப்பொழுது ராஜேந்திரனின் மகன் மணி வாசகத்தின் நண்பர்கள் என்று சொல்லி, வீடு கிரகப்பிரவேசத்திற்கு பத்திரிக்கை வைக்க வந்துள்ளதாக கூறி வீட்டுக்குள் சென்று உள்ளனர்.
மூதாட்டியிடம் கிரகப்பிரவேசத்திற்கு மாவிலை வேண்டும் எனச் சொல்லி பே சிய நிலையில், வீட்டை நோட்டம் விட்டு உள்ளார்கள். அப்பொழுது வீட்டின் அறையில் இருந்த பீரோ திறந்து இருப்பதைக் கண்டனர். பாட்டி மாவிலை பறிக்க கொள்ளைக்கு சென்ற நிலையில், திறந்திருந்த பீரோவில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை திருடிக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். கொள்ளையில் இருந்து வந்த பாட்டி பீரோவில் லாக்கர் திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, நகை திருட்டு போனதை அறிந்து பதட்டம் அடைந்தார்.
இதனை எடுத்து திருடு போன தகவல் குறித்து மணிவாசகத்திடம் நடந்த நிகழ்வுகளை கூற, பத்திரிக்கை வைப்பது போல் வந்து நாடகமாடி தனது பாட்டியை ஏமாற்றிமர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகையை திருடிச் சென்றதாக மணிவாசகன் பேரளம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






