search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ATM Machine"

    • வங்கி உயர்அதிகாரிகள் மற்றும் ஏ.டி.எம். எந்திரத்தை கையாளும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்படாமல் இருந்ததால் அதில் கொள்ளை நடந்தது உடனடியாக தெரியவில்லை.

    தாம்பரம்:

    படப்பை, பிரதான சாலையில் சவுத் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் அந்த வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 6-ந் தேதி மாலையில் ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.23 லட்சத்து 35 ஆயிரத்து 300 பணத்தை ஊழியர்கள் நிரப்பி சென்றனர். வழக்கமாக பணம் நிரப்பப்பட்ட பின்னர் ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் எந்திரத்தில் பணம் வைப்பது வழக்கம். ஆனால் புதிதாக பணம் நிரப்பப்பட்ட பின்னர் கடந்த 2 நாட்களிலேயே வாடிக்கையார்களால் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க முடியவில்லை. அனைவருக்கும் ஏ.டி.எம்.மில் பணம் இல்லை என்ற தகவலே காண்பித்தது.

    இதுபற்றி வாடிக்கையாளர்கள் வங்கியில் புகார் செய்தனர். அதிகாரிகள் ஏ.டி.எம். எந்திரத்தை ஆய்வு செய்தபோது, வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாதபடி நம்பர் லாக் செய்யப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

    இதுபற்றி வங்கி உயர்அதிகாரிகள் மற்றும் ஏ.டி.எம். எந்திரத்தை கையாளும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஏ.டி.எம்.மில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பப்பட்ட 2 நாட்களுக்கு பிறது நம்பர் பிளேட் இல்லாத காரில் 4 மர்ம ஆசாமிகள் வருவதும், அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பயன்படுத்தும் நம்பர் லாக் மூலம் அடுத்தடுத்து 2 நாட்களில் மொத்தம் ரூ.13 லட்சத்து 3 ஆயிரத்து 200 கொள்ளையடித்து சென்றிருப்பதும் தெரிந்தது.

    முதல் நாளில் ரூ.8 லட்சத்து 17 ஆயிரத்து 200 மற்றும் மறுநாள் காலை 9:40 மணிக்கு வந்து ரூ.4 லட்சத்து 86 ஆயிரத்தை எந்தவித பதட்டமும் இன்றி பட்டப்பகலில் கொள்ளையடித்து சென்று உள்ளனர். ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்படாமல் இருந்ததால் அதில் கொள்ளை நடந்தது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து வங்கியின் மேலாளர், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக மணிமங்கலம் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொள்ளை கும்பல் ஏ.டி.எம்.மின் ரகசிய எண்களை தெரிந்து கைவரிசை காட்டி உள்ளதால் வங்கியோடு தொடர்புடைய நபர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பிய ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் சக்தி ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி அருகே அந்த வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் பணி முடிந்ததும் ஊழியர்கள் வங்கியை பூட்டி விட்டு சென்றுவிட்டனர்.

    இந்நிலையில் நள்ளிரவு 3 மணி அளவில் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் இருக்கும் பணத்தை கொள்ளை அடிக்க முயன்றுள்ளார். இதற்காக அந்த மர்ம நபர் தான் கொண்டு வந்திருந்த ஆயுதத்தால் முதலில் ஏ.டி.எம் மையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை அடித்து உடைத்துள்ளார்.

    பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துள்ளார். இருந்தாலும் அவரால் பணத்தை திருட முடியவில்லை. இதனையடுத்து அந்த மர்மநபர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று உள்ளார். இன்று காலை ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரம் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் வீரப்பன்சத்திரம் போலீசார் மட்டும் வங்கியின் மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். வங்கி மேலாளரும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.

    சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இதேப்போல் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவி பிடிக்கவில்லை.

    போலீசார் விசாரணையில் மர்ம நபர் நள்ளிரவில் வந்து இந்த துணிகர கொள்ளை முயற்சி ஈடுபட்டது தெரிய வந்தது. நல்ல வாய்ப்பாக பணம் கொள்ளை போகாததால் லட்சக்கணக்கில் பணம் தப்பியது.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    • உடனே கட்டுப்பாட்டு அறையிலிருந்து வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
    • ராயபுரம் முனியப்பன் தேர்வை சார்ந்த வெங்கட்ராமன் என்பவர் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    சென்னை வியாசர்பாடி எஸ்.எம். நகர் பகுதியில் இருந்த ஏ.டி.எம். மையத்தில் முன்புற கவர் உடைக்கப்படுவதை கண்காணிப்பு கேமரா மூலம் அறிந்த மும்பையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். கட்டுப்பாட்டு அறை அதிகாரி, தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறிக்கை போன் செய்து தகவல் தெரிவித்தார் உடனே கட்டுப்பாட்டு அறையிலிருந்து வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

    இரவு நேர ரோந்து பணியில் இருந்த வியாசர்பாடி போலீசார் சிவராஜ், செட்டார், கதிரவன், ஞான பிரசாத் ஆகிய நால்வருக்கும் காவல் நிலையத்தில் இருந்து தகவல் தெரிவித்ததை அடுத்து ஏ.டி.எம். மிஷினை உடைத்துக் கொண்டிருக்கும் பொழுதே மர்ம நபர் கையும் களவுமாக பிடிபட்டார். பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்திய போது ராயபுரம் முனியப்பன் தேர்வை சார்ந்த வெங்கட்ராமன் என்பவர் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

    • ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாமல் திணறிய கொள்ளையர்கள் வெளியில் வந்தனர்.
    • கடையின் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.15 ஆயிரம் பணத்தையும் திருடிவிட்டு, கடையை மூடிவிட்டு சென்றுள்ளனர்.

    சங்கராபுரம்:

    சங்கராபுரம் பஸ் நிலையம் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். உள்ளது. இதன் அருகில் உள்ள பஸ் நிலையத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் பல்வேறு கடைகள் செயல்படுகின்றன.

    இரவு 10 மணிக்கு மேல் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வராது என்பதால் அங்குள்ள கடைகளை மூடிவிட்டு அதன் உரிமையாளர் வீட்டிற்கு சென்று விடுவார்கள்.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்றிரவு 11 மணிக்கு மேல் தனியார் வங்கி ஏ.டி.எம்.மிற்கு வந்துள்ளனர். அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாமல் திணறிய கொள்ளையர்கள் வெளியில் வந்தனர்.

    அருகில் இருந்த பழக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.15 ஆயிரத்து 700 பணத்தை திருடினர். மேலும், அங்கிருந்த ஆப்பிள், திராட்சை போன்ற பழங்களை எடுத்து சாப்பிட்டுள்ளனர்.

    கொள்ளையர்களின் தேவை அதிகமாக இருந்ததால், பழக்கடைக்கு அருகில் இருந்த பல்பொருள் அங்காடியின் பூட்டை உடைத்து அதனுள் நுழைந்தனர். அந்த கடையின் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.15 ஆயிரம் பணத்தையும் திருடிவிட்டு, கடையை மூடிவிட்டு சென்றுள்ளனர்.

    இன்று அதிகாலை பணம் எடுக்க ஒரு சிலர் ஏ.டி.எம்,மிற்கு வந்தனர். அங்கு ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சி நடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இத்தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதையடுத்து பஸ் நிலைய பகுதியில் இருந்த கடை உரிமையாளர்கள் அனைவரும் விரைந்து வந்து, தங்கள் கடைகளில் திருட்டு ஏதேனும் நடந்ததா என சோதனை நடத்தினர்.

    அப்போது பழக்கடை மற்றும் பல்பொருள் அங்காடி ஆகியவற்றின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர்கள் இது குறித்து சங்கராபுரம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கராபுரம் போலீசார், முதலில் ஏ.டி.எம். மையத்தில் சோதனை நடத்தினர். தொடர்ந்து பழக்கடை, பல்பொருள் அங்காடிகளில் சோதனை நடத்தினர். அப்போது பழக்கடை மற்றும் பல்பொருள் அங்காடிகளில் கொள்ளையர்கள் மிளகாய் பொடியை தூவி சென்றதை கண்டனர்.

    இதையடுத்து விழுப்புரத்தில் இருந்த கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும், தனியார் ஏ.டி.எம். நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்து அவர்களை வரவழைத்தனர். அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    சங்கராபுரத்தின் மையப்பகுதியில் மக்கள் நடமாட்டம் உள்ள பஸ் நிலையத்தில் உள்ள ஏ.டி.எம்,மில் கொள்ளை முயற்சி, அருகில் உள்ள 2 கடைகளில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • பணத்தை செலுத்தவும் ஏ.டி.எம்.எந்திரங்கள்உள்ளன.
    • போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி அருகே அதே வங்கியில் பணம் எடுக்கவும் பணத்தை செலுத்தவும் ஏ.டி.எம்.எந்திரங்கள்உள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு ஏ.டி.எம்.எந்திரத்தில் சாவி இருந்ததை கண்டு ஏ.டி.எம்.- க்கு வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் அங்கு வந்து சாவியை போலீஸ் நிலையம் எடுத்துச் சென்றனர். கொள்ளையர்கள் யாரேனும் ஏ.டி.எம். எந்திரத்தில் சாவியை வைத்து அதில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தார்களா, அல்லது ஏ.டி.எம்.எந்திரத்தில் பணத்தை வைத்துவிட்டு சாவியை அங்கேயே ஊழியர்கள் விட்டு சென்றார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஜெயச்சந்திரன் பணத்தை வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தார்.
    • ஜெயச்சந்திரனின் நேர்மையை வங்கி மேலாளர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 54). ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் நேற்று காலை 10 மணிக்கு குளச்சல் மெயின் ரோட்டில் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றுள்ளார்.

    அங்கு ஏ.டி.எம். கார்டை செருக முயன்றபோது எந்திரத்தில் இருந்து தானாக பணம் வந்துள்ளது. கார்டையே செருகவில்லை, அதற்குள் பணம் வருகிறதே என ஆச்சர்யத்துடன் அவர் அந்த பணத்தை எடுத்து எண்ணி பார்த்தார்.

    அதில் 50 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது. இது அனைத்தும் ரூ.500 நோட்டுகள் ஆகும். இந்த பணம் தன்னுடையது இல்லை என்பதால் அதனை நேர்மையுடன் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்றார்.

    அங்கு பணத்தை வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தார். ஜெயச்சந்திரனின் நேர்மையை வங்கி மேலாளர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    இதுகுறித்து வங்கி மேலாளர் கூறுகையில், "சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பதோடு, டெபாசிட் செய்யும் வசதியும் உள்ளது. ஜெயச்சந்திரன் செல்வதற்கு முன்பு வாடிக்கையாளர் யாராவது பணத்தை எந்திரத்தில் டெபாசிட் செய்திருக்கலாம். ஆனால் எந்திரத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பணம் உரிய கணக்கில் டெபாசிட் ஆகாமல் இருந்திருக்கும். இது தெரியாமல் அந்த வாடிக்கையாளர் சென்றிருக்கலாம். ஜெயச்சந்திரன் சென்றபோது அந்த பணம் வெளியே வந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரை வரவழைத்து அவரது கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்" என்றார்.

    • செல்வராஜ் வருவதை பார்த்து, வெளியே காவலுக்கு நின்றிருந்த நபர் தப்பியோடிவிட்டார்.
    • போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை அடுத்த ஜோடுகுளி பஸ் நிறுத்தம் அருகே வசித்து வருபவர் செல்வராஜ். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    இவது வீட்டின் ஒரு பகுதியில், 2 தனியார் ஏ.டி.எம். மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு வீட்டு உரிமையாளரான செல்வராஜூக்கு தீ கருகிய வாடை வந்துள்ளது.

    இதையடுத்து வெளியே வந்து பார்த்தபோது, 2 மர்ம நபர்கள், அங்கிருந்த ஒரு ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து எந்திரத்தை வெல்டிங் மிஷின் உதவியுடன் உடைத்து திறக்க முயன்று கொண்டிருந்தனர். மற்றொரு நபர் ஏ.டி.எம். மையத்திற்கு வெளியே காவலுக்கு நின்று கொண்டிருந்தார்.

    செல்வராஜ் வருவதை பார்த்து, வெளியே காவலுக்கு நின்றிருந்த நபர் தப்பியோடிவிட்டார். இதையடுத்து மற்ற 2 மர்ம பேரையும் ஏ.டி.எம். மையத்திற்குள்ளேயே வைத்து ஷட்டரை அடைத்து செல்வராஜ் பூட்டு போட்டார்.

    பின்னர் இதுபற்றி தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார், ஷட்டரை திறந்து, அந்த 2 நபர்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    2 பேரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும் தப்பியோடிய மற்றொருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதனிடையே, ஏ.டி.எம். கொள்ளை முயற்சி தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதனிடையே சாதுர்யமாக செயல்பட்டு வடமாநில கொள்ளையர்களை பிடிக்க உதவிய போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளர் செல்வராஜுக்கு பாராட்டுகள் குவிகின்றன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரும் அவரை பாராட்டினார்.

    • மனைவி மீது உள்ள கோபத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்ததால் வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
    • போலீசார் வாலிபரை எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம் கோ. கீரனூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை உள்ளது. இதன் அருகிலேயே ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று இங்கு புகுந்த மர்ம நபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தார். இதைப் பார்த்ததும் அப்பகுதி பொதுமக்கள் கொள்ளை முயற்சி நடைபெறுகிறதோ என்ற அச்சத்தில் கள்ளிமந்தயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் சுற்றித் திரிந்த அவர் மனைவி மீது உள்ள கோபத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டார் என்பது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் சொந்த பிரச்சினைக்காக பொது சொத்தை சேதப்படுத்தக்கூடாது என வாலிபரை எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூடுதல் அம்சமாக 15 நாட்கள் செயல்முறை பயிற்சியும் தருகிறார்கள்.
    • ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் நுட்பத்தை பீகாரின் சப்ரா பகுதியை சேர்ந்த சுதிர் மிஸ்ராவிடம் கற்றுக் கொண்டதாக கூறினார்.

    லக்னோ:

    சமீப காலங்களாக ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில் அனுபவமில்லாத கொள்ளையர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் தோல்வி அடைகிறார்கள்.

    இவர்களை போன்று அனுபவம் இல்லாதவர்களுக்கு பீகார் மாநிலத்தில் புதுமையான பள்ளிக் கூடம் இயங்கி வருகிறது. இந்த பள்ளிக் கூடத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க 3 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் கூடுதல் அம்சமாக 15 நாட்கள் செயல்முறை பயிற்சியும் தருகிறார்கள்.

    உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த 4-ந் தேதி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள் அதில் இருந்த ரூ.39.58 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர். சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் கொள்ளையர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது தான் இந்த புதுமையான பள்ளிக் கூடம் பற்றிய தகவல் கிடைத்தது.

    கைதான ஏ.டி.எம். கொள்ளையன் நீரஜ் என்பவரிடம் விசாரித்தபோது, அவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் நுட்பத்தை பீகாரின் சப்ரா பகுதியை சேர்ந்த சுதிர் மிஸ்ராவிடம் கற்றுக் கொண்டதாக கூறினார்.

    வெளி மாநிலங்களை சேர்ந்த வேலையில்லா இளைஞர்களுக்கு ஏ.டி.எம். எந்திரத்தை உடைப்பது குறித்து 3 மாத பயிற்சியை சுதிர் மிஸ்ரா அளித்துள்ளார். இதனால் அவர் ஏ.டி.எம். பாபா என்றும் அழைக்கப்பட்டுள்ளார்.

    ஏ.டி.எம். அறையின் கண்ணாடிகளில் பனி படர்ந்தது போன்ற திரவத்தை அடிப்பது, அதன் பிறகு 15 நிமிடங்களுக்குள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை எடுப்பது குறித்து அவர் நேரடி பயிற்சி அளித்து உள்ளார். பயிற்சி முடித்தவர்களுக்கு 15 நாட்கள் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த பணியை 15 நிமிடங்கள் மற்றும் அதற்கு முன்பாக முடிப்பவர்கள் மட்டுமே ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை கொள்ளையடிப்பதற்கு களம் இறக்கப்படுகிறார்கள்.

    ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் கொள்ளையர்களுக்கு பயிற்சி அளித்த ஏ.டி.எம். பாபா சுதிர் மிஸ்ராவை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • அம்பத்தூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர் ரூ.8 ஆயிரம் எடுக்க முயன்றபோது அவருக்கு கூடுதலாக ரூ.12 ஆயிரம் சேர்த்து ரூ.20 ஆயிரம் வந்தது.
    • 10-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கும் கூடுதலாக பணம் வந்தது.

    அம்பத்தூர்:

    சென்னை அம்பத்தூர் பழைய சி.டி.எச். சாலையில் இந்தியன் வங்கி உள்ளது. அதே கட்டிடத்தில் அந்த வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை இந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் வந்தனர்.

    அப்போது ஏ.டி.எம். எந்திரம் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பணத்துக்கு பதிலாக தாராளமாக பணத்தை அள்ளி வழங்கியது. ஆனால் அவர்களின் செல்போனுக்கு குறிப்பிட்ட பணம் மட்டும் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.

    இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், போட்டி போட்டு தங்கள் ஏ.டி.எம். கார்டு மூலம் பணத்தை எடுத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அம்பத்தூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர் ரூ.8 ஆயிரம் எடுக்க முயன்றபோது அவருக்கு கூடுதலாக ரூ.12 ஆயிரம் சேர்த்து ரூ.20 ஆயிரம் வந்தது.

    அதேபோல் திருமுல்லைவாயலைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் ரூ.20 ஆயிரம் எடுக்க முயன்றபோது, அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.8 ஆயிரம் மட்டும் எடுக்கலாம் என ஏ.டி.எம். எந்திரத்தில் தகவல் காண்பித்தது. அதன்படி அவர் ரூ.8 ஆயிரம் எடுக்க முயன்றபோது அவருக்கும் ரூ.20 ஆயிரத்தை அள்ளி கொடுத்தது.

    இதே போல் 10-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கும் கூடுதலாக பணம் வந்தது. ஏ.டி.எம். எந்திரத்தின் இந்த தாராள பண மழையால் அங்கு ஏராளமானவர்கள் குவிந்தனர்.

    இவ்வாறு ஏ.டி.எம். மையத்தில் கூடுதலாக பணத்தை எடுத்த வாடிக்கையாளர்களில் 6 பேர் மட்டும் வங்கி திறக்கும் வரை அங்கேயே காத்திருந்து, வங்கி திறந்ததும் இது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் எழுதிகொடுத்து கூடுதலாக வந்த பணத்தை திருப்பி கொடுத்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள், ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கும் தனியார் நிறுவன ஊழியர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்த ஏ.டி.எம். எந்திரத்தை சரிபார்த்தபோது, 200 ரூபாய் நோட்டுகள் வைக்க வேண்டிய இடத்தில் ரூ.500 நோட்டுகள் வைத்திருந்ததும், இதனால் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை வாரி வழங்கியதும் தெரியவந்தது. உடனடியாக ஏ.டி.எம்.எந்திரம் சரி செய்யப்பட்டது.

    இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் கூடுதலாக பணம் எடுத்தவர்கள் யார்? என்ற விவரத்தை வைத்து வங்கி அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • காரைக்கால் திருநள்ளாறில் வங்கி ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • பதிவான மர்ம நபரின் அடையாளத்தை வைத்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் பச்சூர் சௌதா நகரில் வசித்து வருபவர் ஞானசேகரன் (வயது64). இவர் காரைக்கால் பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் தொடர்ந்து, அதே வங்கியில் ஏ.டி.எம் மெஷின்களுக்கு சேனல் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், காரைக்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம்-ல் சம்பவத்தன்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்றார். பல முறை முயற்சித்தும் ஏ.டி.எம் மெஷினை உடைக்க முடியாததால் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. வங்கி ஏ.டி.எம். மெஷினை உடைக்க முயன்றதும், ஹைதராபாத்தில் உள்ள ஏ.டி.எம். தலைமையகம், ஞானசேகரனின் மொபைலுக்கு ஏ.டி.எம். மெஷின்களின் உடைப்பு முயற்சி குறித்து தகவல் சென்றது. தொடர்ந்து ஞானசேகரன் ஏ.டி.எம். க்கு சென்று பார்த்த போது, மர்ம நபர் மெஷினை உடைத்து பணம் திருட முயன்றது தெரியவந்தது.

    இதுகுறித்து ஞானசேகரன் காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து ஏ.டி.எம். மிஷினை ஆயுதம் கொண்டு உடைக்க முயன்ற மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில் ஏ.டி.எம்.மில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான மர்ம நபரின் அடையாளத்தை வைத்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திடமாக காரைக்கால் நகர் பகுதியில் சுற்றித் திறந்த வாலிபரை பிடித்து விசாரித்த பொழுது, அவர் பீகார் மாநிலத்தில் சேர்ந்த ராம்லால் முஸ்தா (வயது 26) என்பதும், பீகாரிலிருந்து கட்டுமான தொழிலுக்காக காரைக்கால் வந்து, வேலை சரியாக கிடைக்காததால், ஏ.டி.எம். மிஷினை உடைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அதன் பெயரில் அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    • வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் பயன்படுத்தி வந்தனர்.
    • ஏ.டி.எம். மையத்தில் இருந்த எச்சரிக்கை அலாரம் ஒலித்தது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இரு ந்து வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில் தனியார் மில் ஒன்று செயல்படுகிறது. இந்த மில் அருகே பாங்க் ஆப் பரோடா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது.

    இந்த ஏ.டி.எம். மையத்தை அந்த பகுதியினரும், வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் பயன்படுத்தி வந்தனர். இதனால் இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் எப்போ தும் பணம் இருக்கும். இரவு நேரங்க ளில் அங்கு அதிகம் ஆள் நடமாட்டம் இருக்காது. இதனை பயன்படுத்தி நேற்று இரவு மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை யடிக்க முயன்றனர். வெல்டிங் எந்திரத்துடன் சென்ற அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தின் முன் பக்கமாக அறுத்து பணத்தை கொள்ளையடிக்க முzயற்சி செய்தனர்.

    அப்போது ஏ.டி.எம். மையத்தில் இருந்த எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதுதொடர்பான தகவல் வங்கி அதிகாரிகளுக்கும் சென்றது. அவர்கள் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அலாரம் ஒலித்ததும் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது. இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் மற்றும் போலீசார் ஏ.டி.எம். எந்திரத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கொண்டு கொள்ளை யர்கள் யார் என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. மேலும் கைரேகை நிபுண ர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

    ×