என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்காதலன்"

    • போலீஸ் விசாரணையில் மம்தா, பயாஸ் இருவரும் ஆந்திராவில் இருப்பது தெரிய வந்தது.
    • புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை போலீசார் மீட்டனர்.

    தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் சப்ஷா பள்ளியை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மனைவி மம்தா. தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மகன் சரண்(வயது 4) மகள் தனுஸ்ரீ (3). கருத்து வேறுபாடு காரணமாக மம்தா அவருடைய கணவரை பிரிந்தார்.

    தனது மகன் மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பயாஸ் என்ற வாலிபருடன் அவருக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டது. அவருடன் வாழ முடிவு செய்தார்.

    கடந்த ஜூன் மாதம் மம்தா தனது மகனை தாய் வீட்டில் விட்டு விட்டு மகளை அழைத்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் சென்றார்.

    அப்போது கள்ளகாதலுக்கு இடையூறாக இருப்பதாக கூறி குழந்தை தனுஸ்ரீயை மம்தா மற்றும் பயாஸ் இருவரும் சேர்ந்து கொலை செய்தனர். யாருக்கும் தெரியாமல் குழந்தை உடலை புதைத்து விட்டனர். இதற்கிடையே மனைவி குழந்தை காணாமல் மாயமானது குறித்து பாஸ்கர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீஸ் விசாரணையில் மம்தா, பயாஸ் இருவரும் ஆந்திராவில் இருப்பது தெரிய வந்தது. அவர்களை பிடித்து விசாரித்தபோது குழந்தையை கொலை செய்து புதைத்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை போலீசார் மீட்டனர். மம்தா, பயாஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவர் கொளஞ்சிக்கு தெரியாமல் லட்சுமி கள்ளக்காதலன் தங்கராசுவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
    • கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலை கோட்டாளம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி. விவசாயியான இவர் டிரைவராகவும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த தங்கராசு என்ற வாலிபருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.

    அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வந்ததால் லட்சுமியும், தங்கராசுவும் நெருங்கி பழகினார்கள். கணவர் கொளஞ்சிக்கு தெரியாமல் லட்சுமி கள்ளக்காதலன் தங்கராசுவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து மனைவி லட்சுமியை கண்டித்த கொளஞ்சி நீ செய்யும் செயலால் என்னால் வெளியில் தலை காட்ட முடியவில்லை. பெரிய அவமானமாக உள்ளது. தங்கராசுவுடன் பேசி பழகுவதை நிறுத்திக்கொள் என்று கூறியுள்ளார்.

    ஆனால் கணவரின் பேச்சை கேட்காத லட்சுமி கள்ளக்காதலன் தங்கராசுவுடன் ஊர் உறங்கிய பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத இரவு நேரங்களில் உல்லாசமாக இருப்பதை தொடர்ந்துள்ளார். கணவருடன் வீட்டில் ஒன்றாக தூங்கினாலும் லட்சுமியால் தங்கராசுவுடனான தொடர்பை துண்டிக்க முடியவில்லை. பக்கத்து வீடு என்பதால் கணவர் தூங்கிய பிறகு நள்ளிரவு நேரத்தில் கள்ளக்காதலன் தங்கராசுவுடன் லட்சுமி தனிமையில் சந்தித்து மறைவான இடங்களில் வைத்து செக்ஸ் இன்பத்தை அனுபவித்து வந்துள்ளார். இதன்படி நேற்று இரவு சாப்பாட்டை முடித்து விட்டு தூங்குவதற்காக சென்ற லட்சுமி கள்ளக்காதலன் தங்கராசுவுக்கு போன் செய்து நள்ளிரவில் வீட்டுக்கு வா என்று கூறி உள்ளார். இதை தொடர்ந்து லட்சுமியின் வீட்டுக்கு சென்ற தங்கராசு மொட்டை மாடிக்கு அழைத்து சென்றார். அங்கு இருவரும் மெய் மறந்த நிலையில் ஆசை தீர உல்லாசம் அனுபவித்தனர்.

    இன்று அதிகாலை 3 மணி அளவில் எழுந்து பார்த்த கொளஞ்சி லட்சுமி வீட்டில் இல்லாததை பார்த்து சந்தேகம் அடைந்தார். இதையடுத்து மொட்டை மாடிக்கு சென்று பார்த்தார். அங்கு அவர் கண்ட காட்சி தூக்கி வாரிப் போட்டது. மனைவி லட்சுமியும், கள்ளக்காதலன் தங்கராசுவும் அரைகுறை ஆடையுடன் கட்டிப்பிடித்து உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்தனர். இதனை நேரில் பார்த்த கொளஞ்சிக்கு ஆத்திரம் தலைக்கேறியது. இதை தொடர்ந்து வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து மனைவி லட்சுமியையும், கள்ளக்காதலன் தங்கராசுவையும் சரமாரியாக கழுத்தில் வெட்டினார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்து துடிதுடித்தபடியே உயிருக்கு போராடினார்கள். அப்போது கொளஞ்சியின் வெறி அடங்கவில்லை. 2 பேரின் தலையையும் துண்டித்து எடுத்து கொளஞ்சி அதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு மாடியில் இருந்து இறங்கியுள்ளார்.

    பின்னர் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு சென்ற கொளஞ்சி அந்த வழியாக வேலூர் நோக்கி சென்ற பஸ்சில் துண்டிக்கப்பட்ட தலைகளுடன் ஏறினார். அதிகாலை நேரம் என்பதால் கொளஞ்சியின் பையில் இருப்பது என்ன? என்பதை டிரைவரும், கண்டக்டரும் கவனிக்கவில்லை. சுமார் 3½ மணி நேரம் துண்டித்த தலைகளுடன் எந்த வித பயமும், பதட்டமும் இன்றி பயணம் செய்து வேலூரில் போய் இறங்கிய கொளஞ்சி நேராக வேலூர் சிறைக்கு சென்றார்.

    அங்கு சிறைவாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் சென்று பையில் வைத்திருந்த 2 தலைகளையும் காட்டி நடந்த சம்பவத்தை கூலாக கூறியுள்ளார். பையில் இருந்த தலைகளை பார்த்து பதறிய சிறைக் காவலர்கள் பதட்டம் அடைந்தனர். இது பற்றி உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று கொளஞ்சியை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் இதுபற்றி கள்ளக்குறிச்சி வரஞ்சிரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று லட்சுமி, தங்கராசு இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வேலூருக்கு விரைந்து சென்று கொளஞ்சியை கைது செய்து 2 தலைகளை மீட்டனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டில் மாமியார் வள்ளியம்மாளும், மருமகள் அபிதாவும் மட்டும் இருந்தனர்.
    • போலீசாரின் விசாரணையால் அபிதாவின் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

    பூந்தமல்லி:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், மணிகண்டன் நகர், காந்தி சாலையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி அபிதா(59), ராஜேந்திரனின் தாய் வள்ளியம்மாள்(88). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு ராஜேந்திரன் வேலை பார்த்த இடத்தில் தங்கி விட்டார்.

    வீட்டில் மாமியார் வள்ளியம்மாளும், மருமகள் அபிதாவும் மட்டும் இருந்தனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், அபிதாவையும் மாமியார் வள்ளியம்மாளையும் கட்டிப்போட்டு 11 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டார்.

    இதுகுறித்து குன்றத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அபிதாவே தனது கள்ளக்காதலனை வரவழைத்து இந்த நகை பறிப்பில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து அபிதாவிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது.

    அபிதாவிற்கு குழந்தைகள் இல்லை. இதனால் அவர் அடிக்கடி அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வந்தபோது அங்கு வந்த திருநெல்வேலியை சேர்ந்த 35 வயதுடைய வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    வயது வித்தியாசம் அதிகம் இருந்தாலும் கள்ளக்காதலர்கள் தங்களது நட்பை வளர்த்து அடிக்கடி தனியாக சந்தித்து வந்து உள்ளார். அந்த வாலிபர் அபிதாவிடம் பணம் கேட்கும் போதெல்லாம் தன்னிடம் பணம் இல்லை. ஆனால் வீட்டில் நகைகள் உள்ளது. அதுவும் தனது மாமியாரிடம் உள்ளது என்று கூறி உள்ளார். செலவுக்கு பணம் இல்லாததால் அந்த நகையை திருடி இருவரும் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று திட்டமிட்டனர்.

    அதன்படி சம்பவத்தன்று கணவர் வீட்டில் இல்லாததை அபிதா தனது கள்ளக்காதலனிடம் தெரிவித்தார். திட்டமிட்டபடி அந்த கள்ளக்காதலன் வந்து அபிதாவையும், மாமியார் வள்ளியம்மாளையும் கட்டிப்போட்டு நகையை கொள்ளையடித்து சென்று விட்டார். ஆனால் இதில் கள்ளக்காதலர்களின் திட்டம் சொதப்பியதால் அபிதா சிக்கிக் கொண்டார். முதலில் மாமியார் வள்ளியம்மாளை மட்டும் தாக்கி நகையை பறித்து உள்ளார். பின்னர் போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக தன்னையும் கட்டிப்போட்டு விட்டு செல்லுமாறு அபிதா கூறி இருக்கிறார். இதன் பின்னர் அபிதாவையும், வள்ளியம்மாளையும் கட்டிப் போட்டு கள்ளக்காதலன் தப்பி இருக்கிறார்.

    போலீசார் வந்து விசாரணை செய்தபோது மாமியார் வள்ளியம்மாள் உட லில் மட்டும் காயங்கள் இருந்தன. ஆனால் அபிதாவின் உடலில் சிறிய காயங்கள் கூட இல்லை. விசாரணையின்போது அபிதா முன்னுக்குபின் முரணான பதில்களை கூறி உள்ளார். மேலும் வள்ளியம்மாள் அணிந்து இருந்த நகையை மட்டுமே கள்ளக்காதலன் பறித்து சென்று இருந்ததால் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது.

    பின்னர் போலீசார் தங்களது பாணியில் விசாரித்தபோது அபிதா கள்ளக்காதலனை வரவழைத்து மாமியாரை கட்டிப்போட்டு நகை பறித்து இருப்பது தெரிய வந்தது.

    ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு இதே போல் நகை பறிப்பு சம்பவம் நடந்து உள்ளது. இதனை சமாளித்து போலீசில் புகார் கொடுக்காமல் கள்ளக்காதலனை அபிதா காப்பாற்றி உள்ளார். அதேபோல் தற்போதும் நகை பறித்து போலீசில் சிக்காமல் உல்லாசமாக செலவு செய்யலாம் என்று நினைத்து நகை கொள்ளையில் ஈடுபட்டபோது போலீசாரின் விசாரணையால் அபிதாவின் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

    இதேபோல் கொள்ளை நடந்த நேரத்தில் அப்பகுதியில் அபிதா, கள்ளக்காதலனிடம் நின்று பேசிக் கொண்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சியும் போலீசாருக்கு கிடைத்து உள்ளது. அபிதா போலீசில் சிக்கியது பற்றி அறிந்ததும் தற்போது அவரது கள்ளக்காதலன் தலைமறைவாகி விட்டார். அவர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பள்ளி விடுமுறை என்பதால் மாணவி தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
    • சம்பவத்தன்று மாணவியின் தாய் வேலைக்கு சென்று இருந்தார்.

    கோவை:

    கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கிணத்துக்கடவில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    மாணவியின் தந்தைக்கு குடிபழக்கம் இருந்தது. எனவே அவருக்கும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் மாணவியின் தாய்க்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்த கூலித்தொழிலாளி சுரேஷ் (வயது35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் மாணவியின் தந்தைக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார்.

    இதனையடுத்து சிறுமியின் தாய் தனது கணவரை பிரிந்தார். அவர் தனது மகள் மற்றும் மகனை தனது தாய் வீட்டில் விட்டார். பின்னர் அவர் வேட்டைக்காரன் புதூரியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். அப்போது சுரேஷ் அடிக்கடி அங்கு சென்று அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    பள்ளி விடுமுறை என்பதால் மாணவி தனது தாய் வீட்டிற்கு சென்றார். சம்பவத்தன்று மாணவியின் தாய் வேலைக்கு சென்று இருந்தார். வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்தார். அப்போது அவரது தாயின் கள்ளக்காதலன் அங்கு சென்றார்.

    அவர் கதவை சாத்தி தாழிட்டார். பின்னர் அவர் மாணவியின் ஆடைகளை கழற்றி அவரை நிர்வாணமாக்கினார். தொடர்ந்து அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டார். உடனடியாக கூலித்தொழிலாளி நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் உன்னையும், உனது தாயையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    தனது தாய் வேலை முடிந்து வந்ததும் நடந்த சம்பவங்களை மாணவி அவரது தாயிடம் கூறி கதறி அழுதார். இது குறித்து ஆனைமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    புகாரின் பேரில் 11-ம் வகுப்பு மாணவியை நிர்வாணமாக்கி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தாயின் கள்ளக்காதலன் சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாச போராட்டம் தோல்வி
    • தனக்கு குழந்தைகள் ஒன்றும் தேவையில்லை. அர்ஜுனன் தான் தேவை என பிடிவாதமாக இருந்தார்

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட நட்டாலம் இடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சுனில் (வயது 29). இவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மோனிஷா (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. இவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அர்ஜுனன் (27) என்பவருடன் மோனிஷாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி உள்ளது. மார்த்தாண்டத்திற்கு பொருட்கள் வாங்க செல்கிறேன் என கூறி விட்டு மோனிஷா கள்ளக்காதலனுடன் சுற்றி திரிந்துள்ளார்.

    இந்நிலையில் திடீரென 2 குழந்தைகளையும் அழைத்து சென்று தாயாரின் வீட்டில் விட்டுள்ளார். மார்த்தாண்டத்திற்கு பொருட்கள் வாங்க செல்கிறேன் என தாயாரிடம் கூறிவிட்டு சென்ற மோனிஷா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மோனிஷாவின் தாயார் லதா தனது மகளை காணவில்லை என மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை விசாரித்த போலீசார், அவரது செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்தபோது கேரளாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து விரைந்து சென்ற போலீசார், மோனிஷாவையும் அவருடன் இருந்த அர்ஜுனனையும் பிடித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது லதா 2 பச்சிளம் குழந்தைகளையும், அழைத்து சென்று கண்ணீ ருடன் மகளை தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் மோனிஷா தனக்கு குழந்தைகள் ஒன்றும் தேவையில்லை. அர்ஜுனன் தான் தேவை என பிடிவாதமாக இருந்தார். போலீசார் குழந்தைகளின் நிலை குறித்து யோசிக்கும் படி கேட்டுக்கொண்டனர். ஆனால் மோனிஷா வாழ்ந்தால் அர்ஜுனனுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக கூறியதை தொடர்ந்து, வேறு வழியின்றி கள்ளக்காதலனுடன் அனுப்பி வைத்தனர். தாயாரை பார்த்ததும் குழந்தைகள் கதறி அழுதது. ஆனால் மோனிஷா கண்டுகொள்ளவே இல்லை. இச்சம்பவம் மார்த் தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்த போலீசார் தலைமறைவாக இருந்த ஜான்பி மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
    • மகனை கொலை செய்த கள்ளக்காதலன் உள்பட 2 பேரை தாய் காத்திருந்து பழிவாங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், நரசராவ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜான்பி (வயது40). இவர் தனது கணவனை இழந்த நிலையில் மகன் அப்பாஸ்(20) என்பவருடன் வசித்து வந்தார்.

    ஜான்பிக்கும், அதேபகுதியை சேர்ந்த பாஜி(35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    இவர்களது கள்ளக்காதல் விவகாரம் ஜான்பியின் மகன் அப்பாசுக்கு தெரியவந்தது.

    இதனையடுத்து அப்பாஸ் தனது தாய் ஜான்பி மற்றும் பாஜியை கண்டித்துள்ளார். அதன்டி ஜான்பி, பாஜியிடம் பழகுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த பாஜி, அதே பகுதியை சேர்ந்த அல்லாகசம் என்பவருடன் சேர்ந்து, அப்பாைசை திட்டமிட்டு கொலை செய்தனர். மகன் பிணத்தை பார்த்து கதறிய ஜான்பி கொலையாளிகளை, கொலை செய்து பழி தீர்ப்பேன் என சத்தியம் செய்து சபதம் எடுத்துள்ளார்.

    இந்த கொலை நிரூபிக்கப்பட்ட நிலையில், பாஜி மற்றும் அல்லாகசம் ஆகியோர் கைது செய்து, ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 6 மாத காலம் சிறை தண்டனைக்கு பிறகு 2 பேரும் ஜாமினில் வெளியே வந்தனர்.

    இதில் பாஜி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார்.

    ஜான்பி தனது உறவினர்கள் சிலரை தன்னுடன் சேர்த்துக்கொண்டு, 2 பேரையும் கொலை செய்ய பல நாட்கள் திட்டம் தீட்டினார். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜான்பி தனது உறவினர்களுடன் சேர்ந்து, அல்லாகசமை குத்தி கொலை செய்தார்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜான்பிக்கு, ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது. 3 மாத காலம் ஜெயில் தண்டனை அனுபவித்தார். பிறகு, ஜாமினில் அவர் வெளியே வந்தார்.

    தலைமறைவாக இருந்த பாஜியை தேடி ஜான்பி அலைந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜி, சொந்த ஊரான நரசராவ்பேட்டைக்கு வந்தார்.

    இந்த தகவல் அறிந்த ஜான்பி, தனது உறவினர்கள் 3 பேருடன் சேர்ந்து பாஜியையும் கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்த போலீசார் தலைமறைவாக இருந்த ஜான்பி மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மகனை கொலை செய்த கள்ளக்காதலன் உள்பட 2 பேரை தாய் காத்திருந்து பழிவாங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ரசீது ஏதும் வழங்காமல் ஜி பே மூலம் சுகிர்தா கட்டணத்தை முழுமையாக தனது வங்கி கணக்கிற்கு செலுத்தி மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்காதலன் பிரபுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சரவணம்பட்டி:

    கோவை சரவணம்பட்டியில் தனியார் பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது.

    இந்த விடுதியில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த சுகிர்தா (35) என்பவர் வார்டனாக பணியாற்றி வந்தார். கடந்த 2020-ல் கொரோனா ஊரடங்கால் அனைவரும் ஊருக்கு சென்றுவிட்டனர். சுகிர்தாவும் தனது சொந்த ஊருக்கு சென்றார்.

    அதன்பின்னர் சில மாதங்கள் கழித்து சுகிர்தா விடுதிக்கு வந்து மீண்டும் பணியில் சேர்ந்து கொண்டார். அப்போது உரிமையாளர் அவரிடம் முந்தைய வரவு, செலவு கணக்குகளை கூறுமாறு தெரிவித்தார். அதற்கு அவர் எதுவும் கூறவில்லை.

    பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே சுகிர்தா, தனது சித்தி இறந்துவிட்டதாகவும், ஊருக்கு சென்று வருவதாகவும் கூறி விட்டு சென்றார்.

    தொடர்ந்து 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி ஹாஸ்டல் உரிமையாளர் ஒரு விடுதியில் உள்ள அறைகளை சுத்தம் செய்வதற்காக திறந்து பார்த்த போது பெரும்பாலான அறைகள் காலியாக இருந்துள்ளது. மேலும் ஊரடங்கு சமயத்தில் தங்கி இருந்த பெண்கள் விட்டுச் சென்ற உடைமைகள் அனைத்தும் காணாமல் போய் இருந்தது. சுகிர்தாவை, உரிமையாளர் தொடர்பு கொள்ள முயன்ற போது தொடர்பை துண்டித்து வந்துள்ளார். சில நாட்கள் கழித்து சுகிர்தாவின் கள்ளக்காதலன் பிரபு என்பவர் விடுதி உரிமையாளருக்கு செல்போன் மூலம் அழைத்து விடுதியின் வரவு செலவு கணக்குகளை கேட்டால் ஆள் வைத்து கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.

    இதை தொடர்ந்து விடுதி உரிமையாளர் தங்கியிருந்த பெண்களின் விண்ணப்ப படிவங்களை எடுத்து பார்த்த போது அதில் இருந்த செல்போன் எண்கள் அனைத்தும் திருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து விடுதி உரிமையாளர் விசாரணை நடத்தினார். விசாரணையில் உரிமையாளருக்கு தெரியாமல் ஏராளமான பெண்களை தங்க வைத்து கட்டணம் அதிகம் பெற்றுள்ளதும், பெற்ற தொகைக்கு ரசீது ஏதும் வழங்காமல் ஜி பே மூலம் சுகிர்தா கட்டணத்தை முழுமையாக தனது வங்கி கணக்கிற்கு செலுத்தி மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை ரூ.31 லட்சம் மோசடி செய்யப்பட்டிருந்தது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதிலிருந்து காட்சிகள் அனைத்தும் திட்டமிட்டு அழிக்கப்பட்டது தெரிய வந்தது.

    தொடர்ந்து விடுதி உரிமையாளர் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் கடந்த 2 வருடங்களாக தலைமறைவாக இருந்த சுகிர்தா மற்றும் அவரது கள்ளக்காதலர்களான பிரபு, ஜெயகுமார் ஆகிய 3 பேரையும் தேடி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்காதலன் பிரபுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் தலைமறைவாக இருந்த சுகிர்தா மற்றும் ஜெயகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர்கள் இருவரும் தூத்துக்குடியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் தூத்துக்குடிக்கு சென்று பதுங்கி இருந்த சுகிர்தா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஜெயக்குமார் ஆகிய இருவரையும் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

    தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கைது செய்யப்பட்ட சுகிர்தா குறித்த திருக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சுகிர்தாவுக்கு ஏற்கனவே நெல்லையை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சுகிர்தா தனது கணவருடன் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்தார்.

    அப்போது அவர்களது வீட்டின் அருகில் வசித்து வந்த பிரபுவுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. தனது கணவர் வெளியில் செல்லும் நேரங்களில் சுகிர்தா, பிரபுவை அழைத்து தனிமையில் ஜாலியாக இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்து நகை மற்றும் பணத்துடன் வெளியேறினர். அப்போது சுகிர்தா தனது 5 வயது மகனையும் அழைத்து சென்றார்.

    இதை பார்த்த கள்ளக்காதலன் பிரபு மகனை எதற்கு அழைத்து வந்தாய் என கேட்கவே மகனின் சட்டை பாக்கெட்டில் கணவரின் பெயர் மற்றும் முகவரியை எழுதி வைத்துவிட்டு கள்ளக்காதலனுடன் சுகிர்தா தலைமறைவானார்.

    கள்ளக்காதலனுடன் வெளியேறிய சுகிர்தா பல இடங்களுக்கு ஜாலியாக சுற்றிவிட்டு மீண்டும் கோவை சரவணம்பட்டி பகுதிக்கு வந்து விடுதியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது அவருக்கு ஜெயக்குமாருடனும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் சுகிர்தா பணிபுரிந்த மகளிர் விடுதியில் ரூ.31 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துவிட்டு கள்ளக்காதலர்களுடன் தலைமறைவானதும் தெரியவந்தது. தற்போது போலீசார் 3 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகிச்சை பலனின்றி சசிகலா பரிதாபமாக இறந்தார்.
    • கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருத்தணி:

    திருத்தணி அருகே உள்ள கனகம்மாசத்திரம், பாளையக்கார தெருவை சேர்ந்தவர் சசிகலா (வயது33). இவருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சசிகலா கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் திருத்தணி காந்தி ரோடு பகுதியில் கழுத்து அறுபட்ட நிலையில் சசிகலா உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரது உடல் முழுவதும் கத்திக்குத்து காயமும் இருந்தது.

    உடனடியாக அவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சசிகலா பரிதாபமாக இறந்தார். விசாரணையில் கள்ளக்காதலில் சசிகலா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக முத்து கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் சசிகலாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தோம். சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து இருந்தபோது எனக்கு கடன் பிரச்சினை இருந்ததால் ரூ.2 ½ லட்சம் பணம் கேட்டேன். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் சசிகலா அணிந்து இருந்த நகையை பறிக்க முயன்றபோது என்னை தாக்கி தள்ளிவிட்டார். கோபம் அடைந்த நான் அவரது கழுத்தை கத்தியால் அறுத்தும், சரமாரியாக குத்தியும் விட்டு தப்பி ஓடிவிட்டேன். இதில் பலத்த காயம் அடைந்த சசிகலா இறந்து போனார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மணிமாறனை தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அருகே டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன்(வயது47). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிமாறன் தான் பழகி வந்த பெண்ணின் மூத்த மகளான கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றார். இதனை மாணவி கண்டித்து தனது தாயிடம் முறையிட்டார்.

    இந்நிலையில் மணிமாறன் 2-வது முறையாக அந்த மாணவியிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மணிமாறனை தேடி வருகிறார்கள்.

    • ஷில்பி கடந்த 3 ஆண்டுகளாக பிரதீப் என்பவருடன் திருமணம் மீறிய உறவில் இருந்துள்ளார்.
    • கணவனை பிரிந்து தன்னுடன் வந்துவிடுமாறு ஷில்பியை பிரதீப் கட்டாயப்படுத்தியுள்ளான்.

    கணவனை பிரிந்து தன்னுடன் வர மறுத்த பெண்ணை அவளது 4 வயது மகனின் கண்முன்னே கொடூரமாக கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் சிஜர்சி கிராமத்தில் ஷில்பி என்ற பெண் தனது கணவர் அஜய் மற்றும் தனது 4 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார். ஷில்பி கடந்த 3 ஆண்டுகளாக பிரதீப் என்பவருடன் திருமணம் மீறிய உறவில் இருந்துள்ளார்.

    நீண்ட நாட்களாக அவளது கணவனை பிரிந்து தன்னுடன் வந்துவிடுமாறு ஷில்பியை பிரதீப் கட்டாயப்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

    இந்நிலையில் நவம்பர் 11ம் தேதி ஷில்பியின் கணவர் வேலைக்கு சென்ற பிறகு அவளது வீட்டிற்கு பிரதீப் சென்றுள்ளார். அப்போது அவளது கணவன் மற்றும் மகனை விட்டுவிட்டு தன்னுடன் வந்து விடுமாறு பிரதீப் மீண்டும் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு ஷில்பி சம்ம்மதிக்கவில்லை. இதனையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த பிரதீப் ஷில்பியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

    ஷில்பியை பிரதீப் கொலை செய்ததை நேரில் பார்த்த அவளது 4 வயது மகன் நடந்த சம்பவம் முழுவதையும் போலீசாரிடம் கூறினான். இதனையடுத்து பிரதீப்பை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
    • மனைவியே கணவனை கூலிப்படையை வைத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி மங்கலம் ரோடு, தாமரை கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 48). இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்கி விற்கும் தொழில் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 1-ந் தேதி நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது மர்ம நபர்கள் ரமேசை அரிவாளால் சரமாரியாக வெட்டி க்கொன்றனர்.

    இதையடுத்து ரமேசின் மனைவி விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் கூலிப்படையை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவினாசியை சேர்ந்த சையது இர்பான் (24) என்பவர் தனது நண்பர் ஜானகிராமன் மூலம் ரூ.8 லட்சம் பணம் கொடுத்து ரமேசை கொலை செய்ய கூறியதும், இதைத்தொடர்ந்து கூலிப்படை மூலம் ரமேஷ் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து சையது இர்பான், ஜானகி ராமன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கடன் பிரச்சனையில் ரமேஷ் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்தநிலையில் திடீர் திருப்பமாக ரமேஷின் மனைவி விஜயலட்சுமி (40) கூலிப்படையை ஏவி தனது கணவரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து விஜயலட்சுமியையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தது.

    கொலை செய்யப்பட்ட ரமேஷ், மனைவி விஜயலட்சுமியின் செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். மேலும் பணம், தொழில் என்று எப்போதும் இருந்துள்ளார். பாசமாக இல்லாததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் அவினாசியில் ஸ்நாக்ஸ் கடை நடத்தி வரும் சையது இர்பான் கடைக்கு விஜயலட்சுமி அடிக்கடி சென்று ஸ்நாக்ஸ்கள் வாங்கியுள்ளார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. கணவன் அன்பாக இல்லாததால் விஜயலட்சுமி இர்பானுடன் நெருங்கி பழகினார். தினமும் செல்போன் மூலம் பேசிக்கொண்டனர்.

    ரமேஷ் வெளியூர் சென்றிருந்த நேரங்களில் இர்பானை வீட்டிற்கு அழைத்து விஜயலட்சுமி உல்லாசமாகவும் இருந்துள்ளார். இந்தநிலையில் 2 பேரின் கள்ளக்காதல் விவகாரம் ரமேஷிற்கு தெரியவரவே, அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கணவனை கொலை செய்ய திட்டமிட்டார். இது குறித்து இர்பானிடம் தெரிவிக்கவே, அவர் தனது நண்பர் ஜானகிராமன் இருக்கிறார். அவர் மூலம் கூலிப்படையை ஏவி கொலை செய்து விடுவோம் என்று 2 பேரும் திட்டமிட்டுள்ளனர். இதற்கு பணம் செலவாகும் என இர்பான் கேட்கவே, விஜயலட்சுமி வீட்டில் இருந்த 20 பவுன் நகைகளை இர்பானிடம் கொடுத்துள்ளார். அவர் அவினாசியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகைகளை அடகு வைத்து ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் பெற்றுள்ளார்.

    அதில் ரூ.4 லட்சத்தை முதல் கட்டமாக ஜானகி ராமன் மூலம் கூலிப்படைக்கு கொடுத்துள்ளார். மீதி பணத்தை வழக்கு செலவுக்கு செலவழிக்க வைத்திருந்தார். ஜானகிராமன் 5 பேர் அடங்கிய கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளார். கொலை நடந்த அன்று ரமேஷ், வீட்டிலிருந்து நடைபயிற்சிக்கு சென்ற தகவலை விஜயலட்சுமி, இர்பானிடம் கூறவே, கூலிப்படையினர், அங்கு சென்று ரமேசை வெட்டிக்கொன்றுள்ளனர். இர்பானுக்கும், ரமேசுக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்திய போது இந்த தகவல்கள் போலீசாருக்கு தெரியவந்தது. கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியே கணவனை கூலிப்படையை வைத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்

    பழனி:

    பழனி மதனபுரம் பகுதியை சேர்ந்தவர் பஷிராபேகம் (வயது 45). இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது கணவர் இறந்து விட்டார். இதனால் திருஆவிணன்குடி கோவில் சாலையில் டீக்கடை மற்றும் துணிக்கடை வைத்து நடத்தி வந்தார்.

    இந்நிலையில் இவருக்கும் அடிவாரம் சரவணப் பொய்கை சாலையை சேர்ந்த மாரிமுத்து (45) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த விவரம் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தெரியவரவே கண்டித்துள்ளனர். இதனால் மாரிமுத்துவுடன் பேசுவதை அவர் தவிர்த்து வந்துள்ளார். இருந்த போதும் அவருடன் பேச மாரிமுத்து முயன்றுள்ளார். ஆனால் பிடிவாதமாக பஷிராபேகம் தவிர்த்து வந்ததால் இன்று காலை அரிவாளுடன் மாரிமுத்து அவரது கடைக்குச் சென்றார்.

    அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார். அவர் உயிருக்கு பயந்து ஓடியபோதும் துரத்தி வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என்ற பயத்தில் தானும் வெட்டி தற்கொலைக்கு முயன்றார். இதனால் மாரிமுத்துவுக்கும் வெட்டுக் காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் பழனி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் காயமடைந்த மாரிமுத்துவையும் சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த சாலை பழனி கோவிலுக்கு செல்லும் முக்கிய சாலையாகும். அந்த பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக சென்று வந்த போது நடந்த கொலை சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த அப்பகுதி மக்களும் அலறியடித்து ஓடத்தொடங்கினர். சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×