என் மலர்
நீங்கள் தேடியது "கள்ளக்காதல் கொலை"
- கணவர் கொளஞ்சிக்கு தெரியாமல் லட்சுமி கள்ளக்காதலன் தங்கராசுவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
- கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலை கோட்டாளம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி. விவசாயியான இவர் டிரைவராகவும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த தங்கராசு என்ற வாலிபருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.
அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வந்ததால் லட்சுமியும், தங்கராசுவும் நெருங்கி பழகினார்கள். கணவர் கொளஞ்சிக்கு தெரியாமல் லட்சுமி கள்ளக்காதலன் தங்கராசுவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து மனைவி லட்சுமியை கண்டித்த கொளஞ்சி நீ செய்யும் செயலால் என்னால் வெளியில் தலை காட்ட முடியவில்லை. பெரிய அவமானமாக உள்ளது. தங்கராசுவுடன் பேசி பழகுவதை நிறுத்திக்கொள் என்று கூறியுள்ளார்.
ஆனால் கணவரின் பேச்சை கேட்காத லட்சுமி கள்ளக்காதலன் தங்கராசுவுடன் ஊர் உறங்கிய பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத இரவு நேரங்களில் உல்லாசமாக இருப்பதை தொடர்ந்துள்ளார். கணவருடன் வீட்டில் ஒன்றாக தூங்கினாலும் லட்சுமியால் தங்கராசுவுடனான தொடர்பை துண்டிக்க முடியவில்லை. பக்கத்து வீடு என்பதால் கணவர் தூங்கிய பிறகு நள்ளிரவு நேரத்தில் கள்ளக்காதலன் தங்கராசுவுடன் லட்சுமி தனிமையில் சந்தித்து மறைவான இடங்களில் வைத்து செக்ஸ் இன்பத்தை அனுபவித்து வந்துள்ளார். இதன்படி நேற்று இரவு சாப்பாட்டை முடித்து விட்டு தூங்குவதற்காக சென்ற லட்சுமி கள்ளக்காதலன் தங்கராசுவுக்கு போன் செய்து நள்ளிரவில் வீட்டுக்கு வா என்று கூறி உள்ளார். இதை தொடர்ந்து லட்சுமியின் வீட்டுக்கு சென்ற தங்கராசு மொட்டை மாடிக்கு அழைத்து சென்றார். அங்கு இருவரும் மெய் மறந்த நிலையில் ஆசை தீர உல்லாசம் அனுபவித்தனர்.
இன்று அதிகாலை 3 மணி அளவில் எழுந்து பார்த்த கொளஞ்சி லட்சுமி வீட்டில் இல்லாததை பார்த்து சந்தேகம் அடைந்தார். இதையடுத்து மொட்டை மாடிக்கு சென்று பார்த்தார். அங்கு அவர் கண்ட காட்சி தூக்கி வாரிப் போட்டது. மனைவி லட்சுமியும், கள்ளக்காதலன் தங்கராசுவும் அரைகுறை ஆடையுடன் கட்டிப்பிடித்து உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்தனர். இதனை நேரில் பார்த்த கொளஞ்சிக்கு ஆத்திரம் தலைக்கேறியது. இதை தொடர்ந்து வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து மனைவி லட்சுமியையும், கள்ளக்காதலன் தங்கராசுவையும் சரமாரியாக கழுத்தில் வெட்டினார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்து துடிதுடித்தபடியே உயிருக்கு போராடினார்கள். அப்போது கொளஞ்சியின் வெறி அடங்கவில்லை. 2 பேரின் தலையையும் துண்டித்து எடுத்து கொளஞ்சி அதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு மாடியில் இருந்து இறங்கியுள்ளார்.
பின்னர் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு சென்ற கொளஞ்சி அந்த வழியாக வேலூர் நோக்கி சென்ற பஸ்சில் துண்டிக்கப்பட்ட தலைகளுடன் ஏறினார். அதிகாலை நேரம் என்பதால் கொளஞ்சியின் பையில் இருப்பது என்ன? என்பதை டிரைவரும், கண்டக்டரும் கவனிக்கவில்லை. சுமார் 3½ மணி நேரம் துண்டித்த தலைகளுடன் எந்த வித பயமும், பதட்டமும் இன்றி பயணம் செய்து வேலூரில் போய் இறங்கிய கொளஞ்சி நேராக வேலூர் சிறைக்கு சென்றார்.
அங்கு சிறைவாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் சென்று பையில் வைத்திருந்த 2 தலைகளையும் காட்டி நடந்த சம்பவத்தை கூலாக கூறியுள்ளார். பையில் இருந்த தலைகளை பார்த்து பதறிய சிறைக் காவலர்கள் பதட்டம் அடைந்தனர். இது பற்றி உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று கொளஞ்சியை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் இதுபற்றி கள்ளக்குறிச்சி வரஞ்சிரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று லட்சுமி, தங்கராசு இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வேலூருக்கு விரைந்து சென்று கொளஞ்சியை கைது செய்து 2 தலைகளை மீட்டனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
- திருமணமாகி 5 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை செய்து வருகிறார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் சந்திரன் மகள் சினேகா (வயது 33). இவருக்கும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பேயம்பட்டியை சேர்ந்த சின்னச்சாமி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் ராமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கோபி முத்து கண்ணன் என்பவருக்கும் சினேகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதன் பின்னர் கடந்த 21.5.2025-ந் தேதியன்று சினேகா தனது மகனுடன் மாயமானார். இதுகுறித்து கணவர் விளாம்பட்டி மற்றும் சிந்துப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து சினேகா மற்றும் அவரது மகனை தேடி வந்தனர். இருப்பினும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து ஆட்கொணர்வு மனுவை கணவர் சின்னச்சாமி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிரப்படுத்தி சினேகா மற்றும் அவரது மகனை தேடிய போது அவர்கள் கள்ளக்காதலன் கோபி முத்துக் கண்ணனுடன் கோவையில் தங்கி இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் சினேகாவை அழைத்து வந்து கடந்த 13-ந் தேதி அவரது கணவரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் வீட்டில் இருந்த சினேகா தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விளாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சர்மிளா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சினேகாவின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி 5 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை செய்து வருகிறார். கள்ளத் தொடர்பால் ஏற்பட்ட பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொலை செய்யப்பட்ட நபர் உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது பைசல் என தெரிய வந்தது.
- போலீசார் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்தோடு:
ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த ஆட்டையாம்பாளையம் அருகே கீழ் பவானி கிளை வாய்க்கால் மதகு பகுதியில் வெள்ளை நிற சாக்கு மூட்டை ஒன்று மிதந்து கொண்டு இருந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியது.
இது குறித்து அப்பகுதி மக்கள் சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாக்கு மூட்டையை திறந்து பார்த்தனர். அதில் 25 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபரின் உடல் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இறந்த நபரின் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் இருந்தது தெரிய வந்தது. போலீசார் விசாரணையில் அந்த நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டை கட்டி வாய்க்காலில் வீசப்பட்டது தெரிய வந்தது. இறந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:-
கொலை செய்யப்பட்ட நபர் உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது பைசல் (22) என தெரிய வந்தது. இவருடன் அதே மாநிலத்தைச் சேர்ந்த முகமது நூர் (26) மற்றும் 18 சிறுவன் என மூன்று பேர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் நெச்சிப்பாளையம் புதூர் பகுதியில் வந்து அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி துணியை அரைத்து நூலாக செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் முகமது பைசலுக்கு முகமது நூர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் தெரிந்து முகமது நூர், முகமது பைசலை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி முகமத் பைசல், முகமது நூர் மற்றும் 18 வயது சிறுவன் மூன்று பேரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக முகமது பைசலுக்கும், முகமது நூறுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரத்தில் முகமது நூர் மற்றும் சிறுவன் இருவரும் சேர்ந்து முகமது பைசலை தலையின் பின் பக்கம் கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் இருவரும் முகமது பைசல் உடலை வெள்ளை நிற சாக்கு பையில் கட்டி வாய்க்காலில் வீசியது தெரிய வந்தது. இந்த கொலையில் மேலும் யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து போலீசார் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
- கடந்த ஒரு மாதத்திற்கு முன்பும் ஏசுதாசனுக்கும், அன்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன் (வயது 58). இவர் அந்த பகுதியில் செங்கல் சூளை வைத்துள்ளார். நேற்று இரவு ஏசுதாசன் செங்கல் சூளையிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
ஆரல்வாய்மொழி பகுதியில் வந்து கொண்டிருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் ஏசுதாசனை வழி மறித்து கத்தியால் சரமாரியாக குத்தியது. இதில் ஏசுதாசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. ரத்தவெள்ளத்தில் கிடந்த ஏசுதாசனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஏசுதாசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை மேற் கொண்டனர். ஏசுதாசன் மனைவி ஜெயா கொடுத்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி கிறிஸ்துநகரை சேர்ந்த அன்பு என்ற அன்பழகன், விஜயன், திருப்பதிசாரத்தை சேர்ந்த மணிகண்டன், ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்டை சேர்ந்த தங்க ஜோஸ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கொலை செய்யப்பட்ட ஏசுதாசன் அதே பகுதியை சேர்ந்த அன்புவின் உறவுக்கார பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். பின்னர் அவரை தூத்துக்குடிக்கு அழைத்து சென்று தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை இங்கு அழைத்து வந்தார். இதனால் அன்புவிற்கும், ஏசுதாசனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பும் ஏசுதாசனுக்கும், அன்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆரல்வாய் மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தான் அன்பு பழிக்கு பழியாக ஏசுதாசனை தீர்த்து கட்டியது தெரிய வந்துள்ளது.
கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் தேடுவதை அறிந்த 4 பேரும் தலைமறைவாகிவிட்டனர்.
இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட ஏசுதாசனின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர்.
- தன்னை பிரிந்து சென்றதால் ராஜேஸ்வரி மீது பரமசிவத்துக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
- ரங்கப்பநாயக்கன்பட்டி கண்மாயில் பகுதியில் பதுங்கி இருந்த பரமசிவத்தை போலீசார் கைது செய்தனர்.
தாயில்பட்டி:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி முத்துப்பாண்டி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி ராஜேஸ்வரி தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்கு பதிந்து அவரை கொன்றது யார்? என்று விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகின.
சாத்தூர் அருகே உள்ள சங்கரநத்தம் கிராமத்தை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி பரமசிவம் (51). விறகு விற்க வந்தபோது இவருக்கும், ராஜேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறி உள்ளது.
இந்நிலையில் ராஜேஸ்வரி கணவரை பிரிந்து பரமசிவத்துடன் சென்று விட்டார். அவருடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜேஸ்வரி தனது கணவர் வீட்டுக்கே வந்து விட்டதாக தெரிகிறது.
தன்னை பிரிந்து சென்றதால் ராஜேஸ்வரி மீது பரமசிவத்துக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அந்த ஆத்திரத்திலேயே சம்பவத்தன்று ராஜேஸ்வரியை கழுத்து அறுத்து கொன்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து பரமசிவம் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். தலைமறைவாக இருந்த அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் ரங்கப்பநாயக்கன்பட்டி கண்மாயில் பகுதியில் பதுங்கி இருந்த பரமசிவத்தை போலீசார் கைது செய்தனர். ராஜேஸ்வரியை கொலை செய்து விட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த பரமசிவத்தை 18 நாட்களுக்கு பிறகு போலீசார் இன்று கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
- செல்வபிரகாசம் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக மாங்காடு போலீசில் புகார் அளித்தார்.
பூந்தமல்லி:
மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வ பிரகாசம். இவரது மனைவி லாவண்யா. இவர்களது மகன் சர்வேஸ்வரன் (வயது 2½). கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து மனைவி லாவண்யாவை பிரிந்து செல்வபிரகாசம் தனியாக சென்று விட்டார். இதனால் லாவண்யா, தனது மகன் சர்வேஸ்வரனுடன் தனியாக வசித்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் மகன் சர்வேஸ்வரன் தவறி கிழே விழுந்ததில் தலையில் காயம் அடைந்து இறந்து விட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சர்வேஸ்வரன் உடல் அதே பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் இதுபற்றி லாவண்யா தனது கணவர் செல்வபிரகாசத்துக்கு தகவல் தெரிவிக்க வில்லை.
இதற்கிடையே செல்வ பிரகாசம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகனை பார்க்க சென்றபோது அவன் இறந்து இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் லாவண்யாவின் நடவடிக்கை குறித்து அக்கம் பக்கத்தினர் சந்தேகம் தெரிவித்தனர்.
இதையடுத்து செல்வபிரகாசம் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக மாங்காடு போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்காதல், உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் லாவண்யா, அவரது கள்ளக்காதலனான அதே பகுதியை சேர்ந்த மணிகண்டனுடன் சேர்ந்து குழந்தை சர்வேஸ்வரணை அடித்து கொலை செய்து இருப்பது தெரிந்தது.
மேலும் கொலையை மறைக்க அவன் தவறி கிழே விழுந்ததில் இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இதனால் ஆரம்பத்தில் லாவண்யாவின் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. அவரும் மகன் சாவில் சோகத்தில் இருப்பது போல் நடித்து வந்தார்.
ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையின் போது லாவண்யா தனது மகனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து நாடகமாடியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து லாவண்யா, அவரது கள்ளக்காதலன் மணிகண்டன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கணவர் பிரிந்து சென்ற பின்னர் வீட்டின் அருகே வசித்த மணிகண்டனுடன் லாவண்யாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் கணவன், மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அவர்களின் உல்லாச சந்திப்பிற்கு இடையூறாக குழந்தை சர்வேஸ்வரன் இருந்தான்.
இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், குழந்தை சர்வேஸ்வரன் உடலில் கடித்து வைத்து உள்ளார். மேலும் இருவரும் தொடர்நது குழந்தை சர்வஸே்வரனை அடித்து உதைத்து கொடுமை படுத்தி உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளியதில் குழந்தை சர்வேஸ்வரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்து விட்டான். இது வெளியே தெரிந்தால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்து லாவண்யா நாடகமாடியது விசாரணையில் தெரியவந்து உள்ளது.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனை தாயே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை ஜாப்ராபாத் பகுதியில் இருந்து வாங்கியதாக சிறுவன் கூறியிருந்தான்.
- கொலையில் ஈடுபட்ட மேலும் ஒரு சிறுவனையும் தேடி வருகின்றனர்.
புதுடெல்லி:
டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காளிந்தி குஞ்ச் பகுதியில் நிமா எனும் சிறிய ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய இந்த ஆஸ்பத்திரியில் ஜாவேத் அக்தர் என்பவர் நிமானி டாக்டராக பணியாற்றி வந்தார்.
நேற்று அதிகாலை ஆஸ்பத்திரியில் டாக்டர் ஜாவேத் அக்தர், நர்சுகள் கஜலாபர்வீன், முகமது கமில் ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது அங்கு 2 சிறுவர்கள் சிகிச்சைக்கு வந்தனர். அதில் ஒரு சிறுவனின் கால் விரலில் கட்டு போடப்பட்டிருந்தது.
அதை அவிழ்த்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என சிறுவன் கூறினான். அவனுக்கு நர்சு கமில் கட்டுபோட்டார். பின்னர் அந்த சிறுவன் டாக்டர் ஜாவேத் அக்தரிடம் மருந்து சீட்டு வாங்க வேண்டும் என கூறி டாக்டரின் அறைக்கு சென்றான். அங்கு சிறுவன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியில் டாக்டரை சுட்டுக்கொன்றான். பின்னர் அந்த சிறுவனும் அவனுடன் வந்த ஒரு மற்றொரு சிறுவனும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த கொலை குறித்து தகவலறிந்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று டாக்டர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆஸ்பத்திரியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தினர்.
இதில் சந்தேகத்திற்கிடமான ஒரு சிறுவனை போலீசார் அடையாளம் கண்டனர். அவனது இன்ஸ்டாகிராம் கணக்கை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அந்த சிறுவன் துப்பாக்கியுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தது தெரியவந்தது.

மேலும் அந்த புகைப்படத்துடன் சிறுவனின் பதிவில், 2024-ல் முதல் கொலை என்று பெருமையுடன் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து விசாரணை நடத்தி போலீசார் அந்த சிறுவனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
ஆஸ்பத்திரியில் பணியாற்றும் நர்சு ஒருவருடன் டாக்டர் ஜாவேத் அக்தர் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக அந்த நர்சின் கணவர் சந்தேகப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அந்த நர்சின் மகளை இந்த சிறுவன் காதலித்து வந்துள்ளான். இதையறிந்த நர்சுவின் கணவர், டாக்டரை அந்த சிறுவன் மூலமாகவே கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியுள்ளார்.
அந்த சிறுவனிடம் நர்சுவின் கணவர், நீ டாக்டரை கொன்றால் எனது மகளை திருமணம் செய்து வைக்கிறேன என உறுதி அளித்துள்ளார். இதை நம்பி அந்த சிறுவன் டாக்டரை சுட்டுக்கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் இந்த கொலைக்காக நர்சின் கணவர் அந்த சிறுவனுக்கு பணமும் கொடுத்தது விசாரணையில் அம்பலமானது.
கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை ஜாப்ராபாத் பகுதியில் இருந்து வாங்கியதாக சிறுவன் கூறியிருந்தான். இதைத்தொடர்ந்து சிறுவனுக்கு துப்பாக்கி விற்றவரையும், அவனுடன் சேர்ந்து கொலையில் ஈடுபட்ட மேலும் ஒரு சிறுவனையும் தேடி வருகின்றனர்.
- மனைவி காணாமல் போனது குறித்து திவாகர் வனஸ்தலிபுரம் போலீசில் புகார் செய்தார்.
- தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை போலீசார் மத்திய பிரதேசம் சென்றுள்ளனர்.
திருப்பதி:
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் திவாகர். இவரது மனைவி பிந்து (வயது 25). தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
கணவன், மனைவி இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம், சங்கர் பள்ளிக்கு வந்தனர். திவாகர் பிளம்பர் வேலை செய்து வந்தார்.
பிந்து வீட்டு வேலைக்கு சென்று வந்த போது அங்கீத் சாகேத் (25) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த திவாகர் சிந்தில் குண்டாவிற்கு வீட்டை மாற்றினார். கடந்த 8-ந் தேதி பிந்து கள்ளக்காதலன் அங்கித் சாகேத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
கள்ளக்காதல் ஜோடி புப்புலகுடாவில் உள்ள நண்பரின் வீட்டில் 3 நாள் தங்கி இருந்தனர். மனைவி காணாமல் போனது குறித்து திவாகர் வனஸ்தலிபுரம் போலீசில் புகார் செய்தார்.
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி அங்கித் சாகேத்தின் நண்பர் ஒருவர் அவருக்கு போன் செய்து புப்புல குடா அனந்த பத்மநாபசாமி கோவில் அருகே வருமாறு தெரிவித்தார்.
நண்பர் கூறிய இடத்திற்கு அங்கித் சாகேத் மற்றும் பிந்து ஆகியோர் சென்றனர். அப்போது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து அங்கித் சாகேத் மது அருந்தினார். மது போதை ஏறியதும் நண்பர்களுக்கும், அங்கித் சாகேத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் அங்கித் சாகேத்தை தலையில் சரமாரியாக கத்தியால் குத்தியும், முகத்தில் கல்லை போட்டு கொலை செய்தனர். இதனைக் கண்ட பிந்து அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அவரையும் பிடித்து கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கித் சாகேத் மற்றும் பிந்துவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 5 தனிப்படைகள் அமைத்து சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை போலீசார் மத்திய பிரதேசம் சென்றுள்ளனர்.






