என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கள்ளக்காதலனுடன் சென்ற இளம்பெண் தற்கொலை
    X

    கள்ளக்காதலனுடன் சென்ற இளம்பெண் தற்கொலை

    • திருமணமாகி 5 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை செய்து வருகிறார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் சந்திரன் மகள் சினேகா (வயது 33). இவருக்கும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பேயம்பட்டியை சேர்ந்த சின்னச்சாமி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளார்.

    இந்நிலையில் ராமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கோபி முத்து கண்ணன் என்பவருக்கும் சினேகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதன் பின்னர் கடந்த 21.5.2025-ந் தேதியன்று சினேகா தனது மகனுடன் மாயமானார். இதுகுறித்து கணவர் விளாம்பட்டி மற்றும் சிந்துப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து சினேகா மற்றும் அவரது மகனை தேடி வந்தனர். இருப்பினும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து ஆட்கொணர்வு மனுவை கணவர் சின்னச்சாமி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிரப்படுத்தி சினேகா மற்றும் அவரது மகனை தேடிய போது அவர்கள் கள்ளக்காதலன் கோபி முத்துக் கண்ணனுடன் கோவையில் தங்கி இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் சினேகாவை அழைத்து வந்து கடந்த 13-ந் தேதி அவரது கணவரிடம் ஒப்படைத்தனர்.

    இந்நிலையில் வீட்டில் இருந்த சினேகா தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விளாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சர்மிளா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சினேகாவின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி 5 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை செய்து வருகிறார். கள்ளத் தொடர்பால் ஏற்பட்ட பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×