என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கள்ளக்காதலனுக்காக குழந்தைகளை உதறி தள்ளிய இளம்பெண்
- பாச போராட்டம் தோல்வி
- தனக்கு குழந்தைகள் ஒன்றும் தேவையில்லை. அர்ஜுனன் தான் தேவை என பிடிவாதமாக இருந்தார்
கன்னியாகுமரி :
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட நட்டாலம் இடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சுனில் (வயது 29). இவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மோனிஷா (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. இவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அர்ஜுனன் (27) என்பவருடன் மோனிஷாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி உள்ளது. மார்த்தாண்டத்திற்கு பொருட்கள் வாங்க செல்கிறேன் என கூறி விட்டு மோனிஷா கள்ளக்காதலனுடன் சுற்றி திரிந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென 2 குழந்தைகளையும் அழைத்து சென்று தாயாரின் வீட்டில் விட்டுள்ளார். மார்த்தாண்டத்திற்கு பொருட்கள் வாங்க செல்கிறேன் என தாயாரிடம் கூறிவிட்டு சென்ற மோனிஷா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மோனிஷாவின் தாயார் லதா தனது மகளை காணவில்லை என மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை விசாரித்த போலீசார், அவரது செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்தபோது கேரளாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து விரைந்து சென்ற போலீசார், மோனிஷாவையும் அவருடன் இருந்த அர்ஜுனனையும் பிடித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது லதா 2 பச்சிளம் குழந்தைகளையும், அழைத்து சென்று கண்ணீ ருடன் மகளை தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் மோனிஷா தனக்கு குழந்தைகள் ஒன்றும் தேவையில்லை. அர்ஜுனன் தான் தேவை என பிடிவாதமாக இருந்தார். போலீசார் குழந்தைகளின் நிலை குறித்து யோசிக்கும் படி கேட்டுக்கொண்டனர். ஆனால் மோனிஷா வாழ்ந்தால் அர்ஜுனனுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக கூறியதை தொடர்ந்து, வேறு வழியின்றி கள்ளக்காதலனுடன் அனுப்பி வைத்தனர். தாயாரை பார்த்ததும் குழந்தைகள் கதறி அழுதது. ஆனால் மோனிஷா கண்டுகொள்ளவே இல்லை. இச்சம்பவம் மார்த் தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்