search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிணத்தின் மீது சத்தியம் செய்து மகனை கொன்ற கள்ளக்காதலன் உள்பட 2 பேரை தீர்த்துகட்டிய தாய்
    X

    பிணத்தின் மீது சத்தியம் செய்து மகனை கொன்ற கள்ளக்காதலன் உள்பட 2 பேரை தீர்த்துகட்டிய தாய்

    • வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்த போலீசார் தலைமறைவாக இருந்த ஜான்பி மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
    • மகனை கொலை செய்த கள்ளக்காதலன் உள்பட 2 பேரை தாய் காத்திருந்து பழிவாங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், நரசராவ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜான்பி (வயது40). இவர் தனது கணவனை இழந்த நிலையில் மகன் அப்பாஸ்(20) என்பவருடன் வசித்து வந்தார்.

    ஜான்பிக்கும், அதேபகுதியை சேர்ந்த பாஜி(35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    இவர்களது கள்ளக்காதல் விவகாரம் ஜான்பியின் மகன் அப்பாசுக்கு தெரியவந்தது.

    இதனையடுத்து அப்பாஸ் தனது தாய் ஜான்பி மற்றும் பாஜியை கண்டித்துள்ளார். அதன்டி ஜான்பி, பாஜியிடம் பழகுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த பாஜி, அதே பகுதியை சேர்ந்த அல்லாகசம் என்பவருடன் சேர்ந்து, அப்பாைசை திட்டமிட்டு கொலை செய்தனர். மகன் பிணத்தை பார்த்து கதறிய ஜான்பி கொலையாளிகளை, கொலை செய்து பழி தீர்ப்பேன் என சத்தியம் செய்து சபதம் எடுத்துள்ளார்.

    இந்த கொலை நிரூபிக்கப்பட்ட நிலையில், பாஜி மற்றும் அல்லாகசம் ஆகியோர் கைது செய்து, ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 6 மாத காலம் சிறை தண்டனைக்கு பிறகு 2 பேரும் ஜாமினில் வெளியே வந்தனர்.

    இதில் பாஜி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார்.

    ஜான்பி தனது உறவினர்கள் சிலரை தன்னுடன் சேர்த்துக்கொண்டு, 2 பேரையும் கொலை செய்ய பல நாட்கள் திட்டம் தீட்டினார். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜான்பி தனது உறவினர்களுடன் சேர்ந்து, அல்லாகசமை குத்தி கொலை செய்தார்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜான்பிக்கு, ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது. 3 மாத காலம் ஜெயில் தண்டனை அனுபவித்தார். பிறகு, ஜாமினில் அவர் வெளியே வந்தார்.

    தலைமறைவாக இருந்த பாஜியை தேடி ஜான்பி அலைந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜி, சொந்த ஊரான நரசராவ்பேட்டைக்கு வந்தார்.

    இந்த தகவல் அறிந்த ஜான்பி, தனது உறவினர்கள் 3 பேருடன் சேர்ந்து பாஜியையும் கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்த போலீசார் தலைமறைவாக இருந்த ஜான்பி மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மகனை கொலை செய்த கள்ளக்காதலன் உள்பட 2 பேரை தாய் காத்திருந்து பழிவாங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×