search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்தணி அருகே இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற கள்ளக்காதலன் கைது
    X

    திருத்தணி அருகே இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற கள்ளக்காதலன் கைது

    • சிகிச்சை பலனின்றி சசிகலா பரிதாபமாக இறந்தார்.
    • கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருத்தணி:

    திருத்தணி அருகே உள்ள கனகம்மாசத்திரம், பாளையக்கார தெருவை சேர்ந்தவர் சசிகலா (வயது33). இவருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சசிகலா கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் திருத்தணி காந்தி ரோடு பகுதியில் கழுத்து அறுபட்ட நிலையில் சசிகலா உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரது உடல் முழுவதும் கத்திக்குத்து காயமும் இருந்தது.

    உடனடியாக அவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சசிகலா பரிதாபமாக இறந்தார். விசாரணையில் கள்ளக்காதலில் சசிகலா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக முத்து கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் சசிகலாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தோம். சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து இருந்தபோது எனக்கு கடன் பிரச்சினை இருந்ததால் ரூ.2 ½ லட்சம் பணம் கேட்டேன். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் சசிகலா அணிந்து இருந்த நகையை பறிக்க முயன்றபோது என்னை தாக்கி தள்ளிவிட்டார். கோபம் அடைந்த நான் அவரது கழுத்தை கத்தியால் அறுத்தும், சரமாரியாக குத்தியும் விட்டு தப்பி ஓடிவிட்டேன். இதில் பலத்த காயம் அடைந்த சசிகலா இறந்து போனார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×