என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "denkanikottai"

    • காட்டு யானைகளை கிராமப்பகுதிக்குள் புகுந்து விடாதவாறு கும்ளாபுரம் வழியாக வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • யானை தின்னூர், லக்கசந்திரம் வழியாக நொகனூர் வனப்பகுதி சென்றது.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள ஜவளகிரி காப்பு காட்டில் இருந்து நேற்று அதிகாலை 8 காட்டு யானைகள் கூட்டமாக வெளியேறி கங்கனப்பள்ளி, கும்ளாபுரம் கிராம வழியாக சுற்றித்திரிந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் காட்டு யானைகளை கிராமப்பகுதிக்குள் புகுந்து விடாதவாறு கும்ளாபுரம் வழியாக வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது வனப்பகுதிக்கு அருகே சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள தைலதோப்புக்குள் காட்டு யானைகள் புகுந்தன. தற்பொழுது 8 காட்டு யானைகளும் தைலதோப்புக்குள் தஞ்சமடைந்துள்ளன.

    வன காவலர்கள் மற்றும் வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து அவைகள் மீண்டும் வெளியேறாதவாறு அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டனர்.

    கும்ளாபுரத்தில் இருந்து ஆனைக்கல் செல்லும் சாலையை கடந்த யானைகள் தேவரபெட்டா வனப்பகுதிக்கு சென்றன. இதற்கிடையே தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள் நேற்று, முன்தினம் இரவு தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையை கடந்து தாவரக்கரை வனப்பகுதிக்கு சென்றன.

    அங்கு 25 க்கும் மேற்பட்ட யானைகள் ஒரு குழுவாகவும் கிரி யானை உட்பட 3 யானைகள் மற்றொரு குழுவாகவும் முகாமிட்டுள்ளன.

    தேன்கனிக்கோட்டை அருகே சாப்பரானப்பள்ளி செல்லும் சாலையில் ஆஞ்சநேயர் கோவில் அருகே நுழைந்த கிரி என்கிற ஒற்றை யானை அங்குள்ள விவசாய நிலத்தில் நுழைந்து ராகி, சோளம் தின்றும் மிதித்தும் நாசம் செய்தது.

    விவசாயிகள் பட்டாசுகள் போட்டும், யானை நகராமல் ஒரு மணி நேரத்திற்கு மேல் அங்கே நின்றன. பிறகு அங்கிருந்து சென்ற யானை தின்னூர், லக்கசந்திரம் வழியாக நொகனூர் வனப்பகுதி சென்றது.

    • காட்டு யானையால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருந்தனர்.
    • வனத்துறையினர் பட்டாசு வெடித்து ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டு சுற்றுப்புற கிராம பகுதிகளில் சுற்றித்திரிந்த கிரி என்ற ஒற்றை காட்டு யானை விவசாயிகள் மற்றும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்தது.

    காது கேட்காத இந்த ஒற்றை காட்டு யானையை பொதுமக்கள் விவசாயிகள் விரட்டினாலும் அது அசராமல் அப்படியே நிற்கும், இந்த காட்டு யானையால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருந்தனர்.

    இந்த நிலையில் இந்த கிரி ஒற்றை காட்டு யானை தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து பல்வேறு கிராமங்கள் வழியாக தற்போது கெலமங்கலம் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமம் அருகே வந்துள்ளது. அந்த பகுதியில் சாலையோரம் சுற்றித்திரிந்த இந்த காட்டு யானை குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் பட்டாசு வெடித்து ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    காது கேட்காத இந்த கிரி ஒற்றை காட்டு யானையால் போடிச்சிப்பள்ளி, சினிகிரிப்பள்ளி, பென்னிகல் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பொதுமக்கள் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். விவசாயிகள் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • கர்நாடக மாநில வனப்பகுதி நோக்கி யானைகள் கூட்டம் சென்றன.
    • காட்டு யானைகள் உலா வருவதால் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 35 க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை கடந்த சில நாட்களுக்கு முன் ஜவளகிரி வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

    இந்த யானைகளை கர்நாடகாவுக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் கர்நாடக மாநில வனப்பகுதி நோக்கி யானைகள் கூட்டம் சென்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 15 க்கு மேற்பட்ட காட்டு யானைகள் தனியாக முகாமிட்டு விவசாய பயிர்களின் நாசம் செய்து வருகின்றன.

    அதேபோல் ஜவளகிரி வனப்பகுதியிலும் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உலா வருவதால் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    தேன்கனிக்கோட்டை பகுதியி சந்தேகத்தின் பேரில் எவரேனும் காணப்பட்டால் அவர்களை தாக்க வேண்டாம், காவல் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று காவல் துணை கண்காணிப்பாளர் கூறி உள்ளார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற வட மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து கத்தி, கடப்பாறை, அரிவாள் போன்ற பொருட்கள் விற்பனை செய்து பிழைப்பை நடத்தி வருகிறார்கள்.

    பொதுவாக அனைத்து தொழிலாளர்களும் இந்தி மொழி தவிர மற்ற மொழி தெரியாதவர்கள் ஆவார்கள். முதலாவதாக அவர்களுக்கு மொழிப்பிரச்சனை உள்ளது.

    தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்தி மொழி தெரியாததால் பிழைப்பை நடத்தி வரும் வடமாநில வாலிபர்களை மூர்க்கத்தனமாக தாக்குகின்றனர். வாட்ஸ் அப்பில் தவறான தகவல்களை பரவவிட்டு அவர்களை அடிப்பதும், காவல் நிலையத்தில் ஒப்படைப்பதும் அன்றாடம் தொடர்ச்சியான சம்பவமாக நடந்து வருகிறது.

    வீண் வதந்தியால் உறவினர்கள் வீட்டுக்கு வரும் அண்டை மாநிலத்தவரும் தாக்கப்படுகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேறு மாவட்டத்தில் இருந்து உறவினர்களை பார்க்க தேன்கனிக்கோட்டைக்கு வந்த 2 பேர் பயங்கரமாக தாக்கப்பட்டு பின் தகுந்த அடையாள அட்டைகளை சமர்ப்பித்த பின் பொதுமக்கள் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.

    நீண்ட விசாரணைக்கு பின்பு காவல் நிலையத்தில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    தேன்கனிக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சந்தேகத்தின் பேரில் எவரேனும் காணப்பட்டால் அவர்களை தாக்க வேண்டாம். காவல் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். சந்தேகத்தின் பேரில் வீண் வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×