search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "North State workers"

    • மூட்டை முடிச்சுகளுடன் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்த அவர்கள் ரெயில்களில் ஏறி சென்றனர்.
    • தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு ஆலைகளில் தயாரிப்பு பணி பாதிக்கும் என்றும் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதி, புறநகர் பகுதி, பெருந்துறை சிப்காட் உள்ளிட்ட கிராம பகுதிகளில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் பணியாற்று வருகின்றனர்.

    இது தவிர செங்கல் சூளை, கெமிக்கல் தொழிற்சாலை, தனிப்பட்டறை என ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட கால இடைவேளையில் அவர்கள் சொந்த ஊர் சென்று திரும்புவது வழக்கம். அவ்வாறு சொந்த ஊருக்கு செல்லும்போது குறைந்தது 10 முதல் 15 நாட்களுக்கு விடுமுறை எடுத்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக வருகிற 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் ஓட்டு போடவும், பிரசாரத்தில் ஈடுபடவும் வட மாநில தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நேற்று இரவு ஈரோடு ரெயில் நிலையத்தில் குவிந்தனர். மூட்டை முடிச்சுகளுடன் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்த அவர்கள் ரெயில்களில் ஏறி சென்றனர்.

    இன்று காலையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் வட மாநில தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் சொந்த ஊர் செல்ல வந்திருந்தனர். இனி வரும் நாட்களில் சொந்த ஊர் செல்லும் வட மாநில தொழிலாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. இதனால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு ஆலைகளில் தயாரிப்பு பணி பாதிக்கும் என்றும் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    • உள்ளூர் தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் வடமாநிலத்தவருக்கான சம்பளம் மிகவும் குறைவு.
    • பண்டிகை முடிந்த அடுத்த சில நாட்களில், அவர்கள் மீண்டும் கோவைக்கு திரும்பி விடுவர்

    கோவை,

    தமிழகத்தில் முக்கிய தொழில் நகரமாக கோவை உள்ளது. ஆனாலும் இங்கு வேலை செய்ய ஆட்கள் கிடைப்பது குதிரை க்கொம்பாக இருக்கிறது. எனவே இங்கு உள்ள பல்வேறு தொழிற்சா லைகள், வடமாநில தொழி லாளிகளை வேலை க்கு அமர்த்தி உள்ளன.

    உள்ளூர் தொழிலா ளர்களுடன் ஒப்பிடுகையில் வடமாநி லத்தவருக்கான சம்பளம் மிகவும் குறைவு. எனவே அவர்களுக்கு கோவை மாவட்டத்தில் மிகுந்த வரவேற்பு உள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். பொதுவாக பண்டிகை முடிந்த அடுத்த சில நாட்களில், அவர்கள் மீண்டும் கோவைக்கு திரும்பி விடுவர். ஆனால் சொந்த ஊருக்கு சென்றவர்களில் 30 சதவீதத்துக்கும் மேற்ப ட்டோர் வேலைக்கு திரும்ப வில்லை. இது கோவை மாவட்ட தொழி ற்சாலை நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவர்கள் சொந்த ஊருக்கு சென்ற ஊழியர்களை மீண்டும் கோவைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அவர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பல்வேறு சலுகைகள் அளிப்பதாக வாக்குறுதி தரப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான வேலைகள் அப்படியே நிற்கிறது.

    எனவே வடமாநில தொழிலாளிகள் கோவைக்கு உடனடியாக புறப்பட்டு வருவதற்கு ஏதுவாக, தொழிற்சாலைகள் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக அவர்களை விமானத்தில் திருப்பி அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில், ஏஜெண்டுகள் மூலம் டிக்கெட்டுகள் பதிவு செ ய்யப்ப ட்டு வருகின்றன. வடமாநிலங்களில் வசிக்கும் தொழிலாளிகளை கோவைக்கு விமானத்தில் அழைத்து வரவேண்டும் என்றால், ஒருவருக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் செலவு பிடிக்கும். கோவையில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களுக்கு, வெளிமாநில ஆர்டர்களை குறிப்பிட காலத்துக்குள் முடித்து தரவேண்டும் என்ற காலவரையறை நிர்ணயிக்க ப்பட்டு உள்ளது. எனவே அந்த நிறுவனங்கள் கூடுதல் செலவை கருத்தில் கொள்ளா மல் வடமாநில ங்களில் வசிக்கும் தொழி லாளர்களை விமானத்தில் மீண்டும் அழைத்து வருவதற்கான ஏற்பாடுக ளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தென்காசியில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திற்கே நேரில் சென்று அவர்களை சந்தித்து பேசினார்.
    • கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான தகவல் பரவி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் தங்கி பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தென்காசியில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திற்கே நேரில் சென்று அவர்களை சந்தித்து பேசினார். அவர்களிடம் எஸ்.பி. கூறும்போது, கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான தகவல் பரவி வருகிறது. இதனால் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும், மேலும் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை அல்லது உதவி என்றால் தென்காசி மாவட்ட காவல்துறையின் 9498193455 மற்றும் 9385678039 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வடமாநில தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுடன் சேர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.

    • சவர தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதைதொடர்ந்து இன்று சலூன் கடை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல சலூன் கடைகள் இயங்கி வருகிறது. இந்த பகுதிகளில் இயங்கி வரும் ஒரு சில சலூன் கடைகளில் வட மாநில தொழிலாளர்களை வைத்து அவர்கள் மூலம் முடி திருத்தும் பணி செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் புதிதாக உருவாகும் சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களிலும் வட மாநில தொழிலாளர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவ தாகவும் அந்த பகுதி சவர தொழிலாளர்கள் புகார் கூறி வருகிறார்கள்.

    இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள்

    இந்நிலையில் வட மாநில தொழிலாளர்களை அந்தியூர் பகுதியில் சவர தொழில் செய்ய அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (சவர த்தொழிளார்களின் சங்கம்) சார்பில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறது.

    இதையொட்டி அந்தியூ ர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சலூன் கடைகள் வைத்திருப்பவர்கள் மற்றும் அங்கு வேலை செய்பவர்கள் கடந்த 4 நாட்களாக கடை யடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இதனால் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 36-க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் மூடப்பட்டு அவர்கள் எதிர்ப்பை தெரி வித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் வட மாநில தொழி லாளர்கள் அந்தியூர் பகுதி யில் கடைகளை திறந்து வேலை செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் அந்த பகுதி சலூன் கடைகாரர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரி வித்தனர்.

    இதையடுத்து சவர தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் அந்தியூர் பஸ் நிலையம் ரவுண்டானா பகுதியில் திரண்டனர். தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்தியூர்- அத்தாணி, பர்கூர், பவானி ரோட்டில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து மாலை பவானி ரோட்டில் இயங்கி வரும் அழகு நிலையம் கடையை திறந்து வைத்திருந்ததை கண்டித்தும் அங்கேயும் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கடைகள் அடைக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) 5-வது நாளாக சலூன் கடை தொழி லாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து சலூன் கடை களும் அடைக்கப்பட்டு இரு ந்தன. 

    • திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இளைஞர்கள் திரண்டனர்.
    • சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவிட்ட நபர் யாரென்று சைபர் க்ரைம் போலீசார் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைபார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள், தமிழக வாலிபர் ஒருவரை பெல்ட், கட்டை, உள்ளிட்டவைகளை கொண்டு துரத்தி துரத்தி தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இளைஞர்கள் திரண்டனர். அவர்கள் வடமாநில தொழிலாளர்களை முறைப்படுத்த வேண்டும். தமிழக இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் , தமிழக வாலிபரை தாக்கிய வடமாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் தமிழக வாலிபரை, வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதாக சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பாக தகவல்கள் பகிரப்பட்டு வருவதாகவும், வீடியோவை தவறாக சித்தரித்து வெளியிட்டுள்ளதாகவும் திருப்பூர் மாநகர போலீசார் விளக்கம் அளித்தனர். மேலும் வீடியோவை பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    மேலும் சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவிட்ட நபர் யாரென்று சைபர் க்ரைம் போலீசார் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செந்தில்குமார் செட்டிப்பாளையத்தை அடுத்த தேங்கனி பகுதியில் குவாரி வைத்துள்ளார்.
    • 3 வாலிபர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் மடக்கி பிடித்தனர்.

    கோவை 

    கோவை கிணத்துக்கடவு வாலி தோட்டத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). இவர் செட்டிப்பாளையத்தை அடுத்த தேங்கனி பகுதியில் குவாரி வைத்துள்ளார்.


    இங்கு வடமாநிலத்தை சேர்ந்த சிக்கந்தர், சாகானி, பங்கச் சாகானி, நித்திஷ் ஆகியோர் கூலி வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று அவர்கள் வழக்கம் போல வேலைகளை முடித்து குவாரியில் உள்ள தங்களாது அறைக்கு தூங்க சென்றனர்.

    மறுநாள் அதிகாலை வடமாநில தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்காக எழுந்தனர். அப்போது அறையில் இருந்த அவர்களது 3 செல்போன்கள் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தேடி பார்த்து கிடைக்காததால் அவர்கள் சென்று செந்தில்குமாரிடம் தெரிவித்தனர்.

    அவர் குவாரியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தார். அதில் 3 வாலிபர்கள் குவாரியில் இருந்து வெளியே செல்வது பதிவாகி இருந்தது. உடனே செந்தில்குமார் அவர்களை அழைத்து கொண்டு விரைந்தார்.

    அப்போதுஅங்கு சென்று கொண்டு இருந்த 3 வாலிபர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த வாலிபர்களை செட்டிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீஸ் விசாரணையில் அவர்கள் விருதுநகரை சேர்ந்த மாரிஸ்வரன் (19), ஈச்சனாரியை சேர்ந்த குனசேகரன் (19), செட்டிப்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (19) என்பதும், நண்பர்களான அவர்கள் செட்டிப்பாளையத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், கூம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மில்கள் உள்ளன.
    • மில் நிர்வாகி களிடம் வடமாநில தொழி லாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், கூம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மில்கள் உள்ளன. இங்கு வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் புரோக்கர்கள் மூலம் அழைத்து வரப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ள–னர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்ல மறுத்த 2 வட மாநில பெண்களை புரோக்கர் அறையில் பூட்டி சித்ரவதை செய்தார். இதனைத் தொடர்ந்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் இளம்பெண்க ளை மீட்டு அவர்களுக்கு உணவு வழங்கி பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் ஒரு தம்பதியை மில் வேலைக்கு அழைத்து வந்து கோழிப்பண்ணையில் பணியமர்த்தியதால் அவர்கள் வேலைக்கு செல்ல மறுத்தனர். இதனால் புரோக்கர் அந்த பெண்ணை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேடசந்தூருக்கு டி.எஸ்.பி. துர்காதேவி புதிதாக பதவியேற்றுள்ளார். அவர் வடமாநில தொழிலாளர்கள் புரோக்கர்களிடம் சிக்கி அவதிப்படுவதை அறிந்து மில் நிர்வாகிகளுடன் ஆலோ சனை கூட்டம் நடத்தினார்.

    இதில் சப்-இன்ஸ்பெ க்டர்கள் பாண்டியன், வேல்ராஜ், வேல்மணி, ஆகியோர் மில் நிர்வாகி களிடம் வடமாநில தொழி லாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினர்.

    • நூற்பு ஆலையில் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    • தனியார் நூற்பு ஆலையில் 50-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் பகுதியில் உள்ள தனியார் நூற்பு ஆலையில் 50-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதற்காக அவர்கள் அருகில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர். தொழிலாளர்கள் ஜித்தேத்தி ரகுமார், நீரஜ்குமார் ஆகியோரிடம், சின்ன பேராளியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஹெட்போனை பறித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் பாலமுருகன் உள்பட 6 பேர் சம்பவத்தன்று நூற்பு ஆலையில் புகுந்து அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த நீரஜ்குமார், பூசன், சஞ்சய், கோல்குமார், அனில்குமார், ராகுல் உள்பட 10-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மில் மேலாளர் முருகேசன், பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் உள்பட 6 பேரை தேடி வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை பகுதியி சந்தேகத்தின் பேரில் எவரேனும் காணப்பட்டால் அவர்களை தாக்க வேண்டாம், காவல் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று காவல் துணை கண்காணிப்பாளர் கூறி உள்ளார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற வட மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து கத்தி, கடப்பாறை, அரிவாள் போன்ற பொருட்கள் விற்பனை செய்து பிழைப்பை நடத்தி வருகிறார்கள்.

    பொதுவாக அனைத்து தொழிலாளர்களும் இந்தி மொழி தவிர மற்ற மொழி தெரியாதவர்கள் ஆவார்கள். முதலாவதாக அவர்களுக்கு மொழிப்பிரச்சனை உள்ளது.

    தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்தி மொழி தெரியாததால் பிழைப்பை நடத்தி வரும் வடமாநில வாலிபர்களை மூர்க்கத்தனமாக தாக்குகின்றனர். வாட்ஸ் அப்பில் தவறான தகவல்களை பரவவிட்டு அவர்களை அடிப்பதும், காவல் நிலையத்தில் ஒப்படைப்பதும் அன்றாடம் தொடர்ச்சியான சம்பவமாக நடந்து வருகிறது.

    வீண் வதந்தியால் உறவினர்கள் வீட்டுக்கு வரும் அண்டை மாநிலத்தவரும் தாக்கப்படுகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேறு மாவட்டத்தில் இருந்து உறவினர்களை பார்க்க தேன்கனிக்கோட்டைக்கு வந்த 2 பேர் பயங்கரமாக தாக்கப்பட்டு பின் தகுந்த அடையாள அட்டைகளை சமர்ப்பித்த பின் பொதுமக்கள் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.

    நீண்ட விசாரணைக்கு பின்பு காவல் நிலையத்தில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    தேன்கனிக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சந்தேகத்தின் பேரில் எவரேனும் காணப்பட்டால் அவர்களை தாக்க வேண்டாம். காவல் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். சந்தேகத்தின் பேரில் வீண் வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×