search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lockdown of salon shops"

    • சவர தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதைதொடர்ந்து இன்று சலூன் கடை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல சலூன் கடைகள் இயங்கி வருகிறது. இந்த பகுதிகளில் இயங்கி வரும் ஒரு சில சலூன் கடைகளில் வட மாநில தொழிலாளர்களை வைத்து அவர்கள் மூலம் முடி திருத்தும் பணி செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் புதிதாக உருவாகும் சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களிலும் வட மாநில தொழிலாளர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவ தாகவும் அந்த பகுதி சவர தொழிலாளர்கள் புகார் கூறி வருகிறார்கள்.

    இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள்

    இந்நிலையில் வட மாநில தொழிலாளர்களை அந்தியூர் பகுதியில் சவர தொழில் செய்ய அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (சவர த்தொழிளார்களின் சங்கம்) சார்பில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறது.

    இதையொட்டி அந்தியூ ர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சலூன் கடைகள் வைத்திருப்பவர்கள் மற்றும் அங்கு வேலை செய்பவர்கள் கடந்த 4 நாட்களாக கடை யடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இதனால் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 36-க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் மூடப்பட்டு அவர்கள் எதிர்ப்பை தெரி வித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் வட மாநில தொழி லாளர்கள் அந்தியூர் பகுதி யில் கடைகளை திறந்து வேலை செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் அந்த பகுதி சலூன் கடைகாரர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரி வித்தனர்.

    இதையடுத்து சவர தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் அந்தியூர் பஸ் நிலையம் ரவுண்டானா பகுதியில் திரண்டனர். தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்தியூர்- அத்தாணி, பர்கூர், பவானி ரோட்டில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து மாலை பவானி ரோட்டில் இயங்கி வரும் அழகு நிலையம் கடையை திறந்து வைத்திருந்ததை கண்டித்தும் அங்கேயும் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கடைகள் அடைக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) 5-வது நாளாக சலூன் கடை தொழி லாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து சலூன் கடை களும் அடைக்கப்பட்டு இரு ந்தன. 

    ×