என் மலர்tooltip icon

    இந்தியா

    மகளுக்கு பாலியல் வன்கொடுமை: Gay பார்ட்னரின் ஆணுறுப்பை துண்டித்த தந்தை- அதன்பின் எடுத்த விபரீத முடிவு
    X

    மகளுக்கு பாலியல் வன்கொடுமை: "Gay" பார்ட்னரின் ஆணுறுப்பை துண்டித்த தந்தை- அதன்பின் எடுத்த விபரீத முடிவு

    • மனைவி பிரிந்த நிலையில் ஆண் நண்பரின் தனியாக வசித்து வந்துள்ளார்.
    • தந்தையை பார்க்க வந்த சிறுமியை, நண்பர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் தனது மகளை சீரழித்த, ஓரினச்சேரிக்கை பார்ட்னரின் ஆணுறுப்பை துண்டித்த நபர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

    உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் வசித்து வந்தவர் 32 வயது நபர். இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். மனைவி பிரிந்ததால், ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார். அவருடன், 32 வயதான ராம்பாபு யாதவ் என்பரை அந்த அறையில் சேர்த்துக் கொண்டார்.

    இவருக்கும் இடையிலான நட்பு, பின்னர் ஓரினசேர்க்கையாளராக இணைந்து வாழும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இருவரும் சிறிய அறையில் வாழ்ந்து வந்த நிலையில், ஒருநாள் அந்த நபரின் 6 வயது மகள் தந்தையை பார்ப்பதற்காக, அந்த அறைக்கு சென்றுள்ளார். அப்போது ராம்பாபு யாதவ், தனது பார்ட்னரின் மகள் என்று கூட பார்க்காமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    இந்த விசயம் அந்த சிறுமியின் நண்பருக்கு ஒரு சில தினங்கள் கழித்து தெரியவந்துள்ளது. அடைக்கலம் கொடுத்து பார்ட்னராக்கிய நிலையில், தனது மகளையே சூறையாடிவிட்டானே என அந்த சிறுமியின் தந்தை கடுங்கோபம் அடைந்தார்.

    இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். அத்துடன் ராம்பாபு யாதவுடன் சண்டையில் ஈடுபட்டார். அப்போது திடீரென சிறுமியின் தந்தை, கத்தியை எடுத்து நண்பரின் ஆணுறுப்பை அறுத்து துண்டாக்கினார். இதனால் ராம்பாபு யாதவ் ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.

    உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அந்த சிறுமியின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

    ராம்பாபு யாதவ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அந்த சிறுமியை மெடிக்கல் உதவி மற்றும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், தாய்வழி பாட்டி வீட்டிற்கு தங்கவைக்கப்பட்டுள்ளார்.

    Next Story
    ×