search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman harassment"

    செல்போன் நம்பர் கேட்டு பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை ஊமச்சிக்குளம் பால்பண்ணை காலனியைச் சேர்ந்த புஷ்பராஜ் மனைவி நாகஜோதி (வயது 21). இவர் நேற்று காலை வாடிப்பட்டிக்கு சென்றார்.

    அப்போது நாகஜோதியை வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து சென்றார். நீ மிகவும் அழகாய் இருக்கிறாய், உன் செல்போன் நம்பர் கொடு என்று வற்புறுத்தி உள்ளார்.

    இதற்கு நாகஜோதி மறுக்கவே, வாலிபர் சம்பவ இடத்தில் வழிமறித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். இது தொடர்பாக நாகஜோதி வாடிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். சப்- இன்ஸ்பெக்டர் சேவை ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து நாகஜோதிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த வாலிபரை பிடித்து விசாரித்தார்.

    விசாரணையில் அவர் வாடிப்பட்டி அருகில் உள்ள செம்புக்குடிப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (27) என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து வாடிப்பட்டி போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவிலில் திருமண ஆசைகாட்டி பெண் ஊழியரை கற்பழித்த கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி கனகமூலம், புதுத்தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது21). நாகர்கோவில் மணிமேடை பகுதியில் சந்தோஷ் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 18 வயது இளம்பெண் ஒருவர் வேலை பார்த்தார்.

    இந்த பெண்ணுக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இது பற்றி தெரிய வந்ததும் பெண்ணின் தாயார் அவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணை பரிசோதித்த போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தாயார், கர்ப்பத்திற்கான காரணம் பற்றி கேட்டார். அப்போது கடை உரிமையாளர் தன்னை திருமண ஆசைக்காட்டி கற்பழித்து விட்டதாக தெரிவித்தார்.

    இதையடுத்து பெண்ணின் தாயார் நாகர்கோவில் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் செய்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் மணிமேடையில் உள்ள கடையில் வேலை பார்த்த போது கடையின் உரிமையாளர் சந்தோஷ் என்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார். பின்னர் என்னை அனந்தன் நகர் பகுதியில் உள்ள அவரது நண்பரின் அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

    பின்னர் அடிக்கடி என்னை அங்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார். இதில் நான் கர்ப்பம் ஆனேன். எனவே என்னை திருமணம் செய்யுமாறு கூறினேன். அதற்கு அவர் மறுத்து விட்டார்.

    எனவே என்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த சந்தோஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.

    இது பற்றி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் கடையின் உரிமையாளர் சந்தோசை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    சங்கரன்கோவில் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரை அடுத்த சம்சிகாபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி வர்சில்ஜோஸ் (எ) ரோசி. பாலமுருகன் வெளியூரில் வேலை செய்து வருகிறார். ரோசி மட்டும் சம்சிகாபுரத்தில் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று மதியம் வீட்டில் ரோசி மட்டும் தனியாக இருந்தார். 

    அப்போது அங்கு வந்த சம்சிகாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி (34), முப்பிடாதி (29) ஆகியோர் கதவை தட்டி தண்ணீர் கேட்டனர். பின்னர் ரோசி கையை பிடித்து இழுத்து சில்மிஷம் செய்தனர். இதனால் பயந்து போன ரோசி சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர். இதனால் கருப்பாமி மற்றும் முப்பிடாதி அங்கிருந்து தப்பி ஓடினர். 

    சம்பவம் பற்றிய புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த கரிவலம் போலீசார் தப்பி ஓடிய கருப்பசாமி, முப்பிடாதியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நோனாங்குப்பத்தில் பெண்ணை மானபங்கம் செய்த மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
    புதுச்சேரி:

    அரியாங்குப்பத்தை அடுத்த நோனாங்குப்பத்தில் மளிகைகடை நடத்தி வருபவர் கலியமூர்த்தி (வயது51). இவரது கடைக்கு அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் மளிகை பொருட்கள் வாங்க வருவது வழக்கம்.

    அதுபோல் சம்பவத்தன்று அந்த பெண் மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க வந்தார். அப்போது கலியமூர்த்தி அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் தனது பெற்றோரிடம் முறையிட்டார்.

    இதையடுத்து அவரது பெற்றோர் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து கலியமூர்த்தியை கைது செய்தனர்.

    மறைவான இடத்தில் வைத்து பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி  அருகே  உள்ள காஞ்சிரான் கொல்லையைச் சேர்ந்த வேலாயுதம். இவரது மனைவி முத்துலெட்சுமி (வயது 30). கூலி வேலை செய்து வருகிறார். இவர் சம்பவதன்று ஆலங்குடியில் வேலைக்கு சென்று விட்டு பஸ்சில் அரசடி பட்டிக்கு வந்தார். பின்னர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதி எஸ்.களபத்தைச் சேர்ந்த பழனிவேலு (வயது 36)  என்பவர் மோட்டார் சைக்கிளிலில் வந்தார். அவர் முத்துலட்சுமியை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். பின்னர் மறைவான இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு முத்துலட்சுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அவர் சத்தம் போடவே பழனிவேலு அங்கிருந்து தப்பியோடி விட்டார். 

    இது குறித்து முத்துலட்சுமி ஆலங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி பழனிவேலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    குலசேகரம் அருகே மொபட்டில் இருந்து விழுந்த பெண்ணுக்கு உதவுவது போல் நடித்து செக்ஸ் சில்மிஷம் செய்த வாலிபர் மீது பெண்ணின் கணவர் போலீசில் புகார் செய்தார்.
    குலசேகரம்:

    குலசேகரத்தை அடுத்த உண்ணியூர் கோணம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று குழந்தையுடன் பொருட்கள் வாங்க குல சேகரம் சென்றார்.

    குலசேகரத்தில் பொருட்கள் வாங்கி விட்டு மீண்டும் வீட்டிற்கு மொபட்டில் புறப்பட்டார். உண்ணியூர்கோணம் அருகே சென்ற போது, இவரது மொபட் நிலைதடுமாறி சரிந்தது. இதில் அந்த பெண்ணும், அவரது குழந்தையும் மொபட்டில் இருந்து கீழே விழுந்தனர். இதனை அருகில் உள்ள வீட்டில் நின்று கொண்டிருந்த வாலிபர் பார்த்தார். அவர் இளம்பெண் அருகே ஓடிச் சென்று அவரை தூக்கி விட்டார். பின்னர் குழந்தையையும் எடுத்து பெண்ணிடம் கொடுத் தார்.

    அப்போது அந்த வாலிபர், விபத்தில் சிக்கிய பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம் செய்ததாக அந்த பெண், அவரது கணவரி டம் தெரிவித்து அழுதார். பெண்ணின் கணவர் இது பற்றி குலசேகரம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி வாலிபரை பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து போலீசார் வாலிபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
    கிருஷ்ணகிரியில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் கண்டக்டர் வேல்முருகனை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கோயமுத்தூர் அடுத்த கோவைபுதூர் அலமு நகரை சேர்ந்த முருகன் மகள் ராணி (23). (இருவரது பெயரும் மாற்றபட்டுள்ளது) இவர், கடந்த 19ம் தேதி இரவு கோயமுத்தூரில் இருந்து பெங்களூருக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் சென்று கொண்டிருந்துள்ளார். பஸ் சேலம் கருமத்தம்பட்டி அருகே வந்த போது, அந்த பஸ்சின் கண்டக்டரான கூடலூர் அடுத்த கொத்தாட்டை கிராமத்தை சேர்ந்த வேல்முருகன்(42) என்பவர், ஸ்ரீஜாவிற்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

    பின்னர் அங்கிருந்து கிருஷ்ணகிரி வரும் வரை இதே போல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீஜா கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் இறங்கி, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதவள்ளி வழக்கு பதிவு செய்து, பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் கண்டக்டரான வேல்முருகனை கைது செய்தார்.

    புதுவைக்கு உறவினருடன் சுற்றுலா வந்த பெண்ணை தாக்கி மானபங்கம் செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    சென்னை கீழ்ப்பாக்கம் மாணிக்க ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹேமந்த்குமார் (வயது28). இவர் அங்குள்ள தனியார் ஓட்டலில் மானேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த அக்‌ஷனி (23). இவர் சினிமா துறையில் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.

    இவர்கள் இருவரும் ஒரு காரில் நேற்று புதுவைக்கு சுற்றுலா வந்தனர். புதுவையில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு மாலையில் ரெயில்வே நிலையம் எதிரே உள்ள சூப் கடைக்கு சூப் குடிக்க வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் அக்‌ஷனி வடமாநில பெண் என நினைத்து அவர் அணிந்திருந்த ஆடை குறித்து கிண்டல் செய்தனர்.

    இதையடுத்து அக்‌ஷனி ஏன் கிண்டல் செய்தீர்கள் என்று கேட்டபோது அந்த வாலிபர்கள் மீண்டும் ஆபாச வார்த்தைகளால் அக்‌ஷனியை வர்ணித்தனர். இதனை ஹேமந்த்குமார் தட்டிக்கேட்ட போது ஆவேசம் அடைந்த அந்த வாலிபர்கள் ஹேமந்த்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    மேலும் அக்‌ஷனி அணிந்திருந்த ஆடையை கிழித்து மானபங்கம் செய்தனர். இதனை அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தட்டிக்கேட்காமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஹனிஷ்போரிஷ் (24) என்ற பெண் தைரியமாக வந்து தட்டிக்கேட்டார். அந்த பெண்ணிடமும் வாலிபர்கள் தகராறு செய்து அவரை தாக்கினர்.

    இதையடுத்து அந்த பெண் ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர்கள் தப்பிஓட முயன்றனர். இதில் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

    பிடிபட்ட வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முருங்கப்பாக்கத்தை சேர்ந்த டைல்ஸ் தொழிலாளி சதீஷ் (34)மற்றும் டிரைவர் கிருஷ்ணகுமார் (25) என்பதும் தப்பி ஓடியவர்கள் அமுது, தேவ் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பெண்ணை மானபங்கம் செய்தல், தாக்குதல், கொலைமிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து சதீஷ், கிருஷ்ணகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய அமுது, தேவ் ஆகிய 2 பேரையும் தேடிவருகிறார்கள்.
    ×