search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrives"

    • தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
    • சேலத்தில் நடைபெற உள்ள மாநில இளைஞர் அணி மாநாட்டிற்கான முன்னோட்டமாக அமையும்.

    கோவை,

    தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அடுத்த மாதம் 2-ந் தேதி கோவை வருகிறார்.

    பீளமேடு கொடிசியா மைதானத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசுகிறார். சேலத்தில் டிசம்பர் 17-ந் தேதி தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டை விளக்கும் விதமாக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் இந்த செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது.

    இந்த செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவதற்கான ஆயத்த ஏற்பாடுகள் கொடிசியா மைதானத்தில் தொடங்கி உள்ளது. அந்த பணிகளை அமைச்சர் முத்துசாமி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, கோவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் டிசம்பர் 2-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் 20 ஆயிரம் இளைஞர் அணியினர் கலந்து கொள்ள உள்ளனர். அதற்கான பணிகளை மாவட்ட செயலாளர்கள் மற்றும் இளைஞர் அணியினர் தொடங்கி உள்ளனர்.

    இந்த கூட்டம் சேலத்தில் நடைபெற உள்ள மாநாட்டிற்கான முன்னோட்டமாக அமையும். சேலத்தில் நடைபெற உள்ள மாநில இளைஞர் அணி மாநாட்டிற்கான முன்னோட்டமாக அமையும். சேலத்தில் நடைபெறும் மாநாடு இதுவரை நடந்திராத மாநாடாக இருக்கும். அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது கோவை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொண்டாமுத்தூர் ரவி உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு
    • சூலூர் பஸ் நிலையத்துக்கு காலை 8 மணிக்கும், கொடிசியா வளாகத்துக்கு காலை 11 மணிக்கும், பொள்ளாச்சி பஸ் நிலையத்துக்கு மாலை 4 மணிக்கும் கொண்டு செல்ல ஏற்பாடு

    கோவை,

    எழுத்தாளர் கலைஞர் குழுமூலம் தயார் செய்யப்பட்ட முத்தமிழ்த் தேர் அலங்கார ஊர்தி கோவைக்கு நாளை மறுநாள் வருகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார்பாடி கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு நிலையான பங்களிப்பை தர வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்துவதற்காக 12 குழுக்கள் அமைக்கப்பட்டன.

    அதில் எழுத்தாளர் கலைஞர் குழுவின் மூலம் படைப்புலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்த கருணா நிதி தமிழகத்திற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரது பரிணாமங்களைப் போற்றும் வகையிலும், இன்றைய இளம் தலைமுறையினருக்கு அவரின் பன்முக தன்மையை எடுத்துச் சொல்லும் வகை யிலும் அவரது புகழ்பாடும் முத்தமிழ்த் தேர் அலங்கார ஊர்தி தயாரிக்கப்பட்டு ள்ளது. இந்த ஊர்தி கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகேயுள்ள முக்கோண பூங்காவில் இருந்து கடந்த 4-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. டிசம்பர் 5-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல உள்ள இந்த ஊர்தி, கோவைக்கு நவம்பர் 21-ந் தேதி வருகிறது.

    சூலூர் பஸ் நிலையத்துக்கு காலை 8 மணிக்கும், கொடிசியா வளாகத்துக்கு காலை 11 மணிக்கும், பொள்ளாச்சி பஸ் நிலையத்துக்கு மாலை 4 மணிக்கும் இந்த அலங்கார ஊர்தி கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இளையான்குடி அருகே வரும்முன் காப்போம் திட்டத்தை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • சிறப்பு மருத்துவர்கள் உட்பட20 மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் , செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் பெரும்பச்சேரியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் சாவித்திரி முருகன் தலைமை வகித்தார்.

    ஒன்றியத் தலைவர் முனியாண்டி, ஒன்றியக் குழு உறுப்பினர் முருகன் முன்னிலை வகித்தனர், மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி குத்துவிளக்கேற்றி மருந்துப்பெட்டகம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கி பேசினார்.

    இதில் சிவகங்கை மாவட்ட துணை இயக்குநர் ராம்கணேஷ், இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர்- முன்னாள் எம்.எல்.ஏ. சுபமதியரசன், ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் கருணாகரன், மலைமேகு, தமிழரசன், கண்ணன், சுதர்சன், சரவணன், மற்றும் சிறப்பு மருத்துவர்கள் உட்பட20 மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் , செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் ஆரோன், தாமோதரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    பா.ஜனதா தலைவர் அமித்ஷா அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சியை வலுப்படுத்தி வருகிறோம். கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அடுத்த மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாடு வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு மாற்றம் தேவை என்பதை முன்வைத்து பாரதீய ஜனதா கட்சி தயாராகி வருகிறது.



    சேலம் பசுமை பாதை திட்டம் ஒரு நல்ல திட்டம். காடுகளை அழிக்காமல் சேலம் பசுமை பாதை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்பதை போராட்டக்காரர்கள் உணரவேண்டும். இப்போதே அதனை எதிர்த்து பிரசாரம் தொடங்கியிருப்பது ஆரோக்கியமானது அல்ல. மக்களுக்கான நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.

    தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தமிழக அரசு ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    இமாசலப்பிரதேசம் தலைநகர் சிம்லாவுக்கு 6 நாள் பயணமாக வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி ஆகியோரை மாநில கவர்னர், முதல் மந்திரி உள்பட பலர் வரவேற்றனர். #RamnathKovind #Shimla
    சிம்லா:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா ஆகியோர் இன்று இமாசலப்பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் சிம்லாவுக்கு வந்தனர்.

    சராப்ரா பகுதியில் உள்ள ஹெலிபேட் தளத்தில் வந்திறங்கிய அவர்களை மாநில கவர்னர் ஆசார்யா தேவ்ரத் மற்றும் முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர், மாநில மந்திரி மொகிந்தர் சிங் தாக்குர் ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர். #RamnathKovind #Shimla
    ×