search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தா.கிருஷ்ணனின் 20-ம் ஆண்டு  நினைவு நாள்
    X

    தா.கிருஷ்ணனின் 20-ம் ஆண்டு நினைவு நாள்

    • தி.மு.க. முன்னாள் எம்.பி. தா.கிருஷ்ணனின் 20-ம் ஆண்டு நினைவு நாள் நாளை நடக்கிறது.
    • தி.மு.க.வினர் மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா கொம்புக்காரனேந்தலை சேர்ந்தவர் மறைந்த தா.கிருஷ் ணன். முன்னாள் எம்.பி.யான இவர் ஒருங்கிணைந்த ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாள ராகவும், சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும் பணியாற்றி னார். இவர் கடந்த 2003-ம் ஆண்டு மே மாதம் 20-ந்தேதி மரணமடைந்தார்.

    சிவகங்கை மாவட்டம் கொம்புக்காரனேந்தலில் தா.கிருஷ்ணனின் நினைவிடம் உள்ளது. ஆண்டுதோறும் மாவட்ட தி.மு.க. சார்பில் அவரது நினைவை போற்றும் வகையில் கொம்புக்கார னேந்தலில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

    நாளை (20-ந்தேதி) சனிக்கிழமை காலை 10 மணி அளவில் கொம்புக்கார னேந்தலில் உள்ள தா.கிருஷ்ணன் நினைவிடத்தில் சிவகங்கை மாவட்ட செயலா ளரும், அமைச்சருமான கே ஆர்.பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க.வினர் மலர் அஞ்சலி செலுத்து கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை தா.கிருஷ்ணன் குடும்பத்தினர், சிவகங்கை மாவட்ட தி.மு.க.வினர் செய்து வருகிறார்கள். நினைவுநாள் நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதிலும் உள்ள தி.மு.க. நிர்வாகி கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேருர் செயலா ளர்கள், சார்பு அணி நிர்வாகி கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்-அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Next Story
    ×