search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manamadurai"

    • மானாமதுைரயில் திருகூடல்மலை நவநீதபெருமாளை பக்தர்கள் வரவேற்றனர்.
    • இரவு வைகை கரை அய்யனார் கோவிலில் எழுந்தருளினார்.

    மானாமதுரை

    மதுரை திருப்பரங்குன்றம் திருகூடல்மலை நவநீத பெருமாள் மானாமதுரை வைகை கரை அய்யனார் கோவிலில் எழுந்தருளும் வைபவம் நடந்தது. இதற்கான கடந்த 1-ந்தேதி திருகூடல் மலையில் இருந்து பல்லக்கில் சாமி புறப்பட்டார்.

    ஆரப்பாளையம், கோரிப் பாளையம், அண்ணா நகர், வண்டியூர், திருப்புவனம், திருப்பாசேத்தி, முத்த னேந்தல், ராஜகம்பீரம் வழியாக மானாமதுரை வந்தடைந்தார்.மானாமதுரையில் மாரியம்மன் கோவில் தெரு, பழைய தபால் ஆபிஸ் தெரு, சுந்தர புரம் கடைவீதி , பட்டரைதெரு, வேளார் தெரு வழியாக குதிரை வாகனத்தில் புறப்பட்டு இரவு தாயமங்கலம் ரோடு அலங்கார் நகரில் உள்ள வைகை கரை அய்யனார் கோவிலில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா.... என கோஷமிட்டு அவரை வரவேற்றனர்.கோவிலில் சாமியை ஆரத்தி எடுத்து மஞ்சள் பட்டு சாற்றி வரவேற்றனர்.

    அதை தொடர்ந்து நவநீத பெருமாள் மற்றும் கோவி லில் உள்ள அய்யனார், சோனையா , மகாசித்தர் கட்டிக்குளம் மாயாண்டி சித்தர் சன்னதிகளில் சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு முழுவதும் காத்திருந்து ஏராளமான பக்தர்கள் நவநீதபெருமாளை தரிசனம் செய்தனர். இன்று காலை சங்கு பிள்ளையார் கோவி லில் இருந்து பல்லக்கில் புறப்பட்ட பெருமாள் 24 -ந்தேதி திருகூடல்மலை சென்ற டைவார்.

    • மதுரை அருகே பிராகுடியில் ஆயிரம் ஆண்டு பழமையான பாண்டியர் கால அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது.
    • முற்கால பாண்டியர்களின் கலைநயத்தில் உருவானதாக இருக்கலாம்.

    மானாமதுரை

    மதுரை மாவட்டம் விரகனூர் சுற்றுச்சாலையில் இருந்து கல்லம்பல் செல்லும் வழியில் உள்ள பிராகுடி என்ற ஊரின் வயல் பகுதியில் பழமையான சிலை இருப்பதாக மதுரை தெப்பக்குளம் ஸ்ரீமந் நாயகியார் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவன் சேசனுக்கு தெரியவந்தது. இதுகுறித்து அந்த மாணவர் தொல்லியல் கள ஆய்வாளர் மீனாட்சி சுந்தரத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று அவர் அந்த சிலையை ஆய்வு செய்ததில் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த அய்யனார் சிற்பம் என்பது தெரியவந்தது.

    இதுபற்றி மேலும் அவர் கூறியதாவது:-

    இந்த சிற்பம் 4 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதி மகுடத்துடன் கூடிய விரிந்த ஜடா பாரத்துடன் உள்ளது, இரு காதுகளிலும் பத்ர குண்டலம் அணிந்துள்ளார், கழுத்தில் ஆபரணமும், மார்பில் முப்புரிநூலும், கைகளில் தோள்வளையும், கை வளையல்களுடனும் அய்யனார் சிற்பம் அமைந்துள்ளது. வலது கரத்தில் பூச்சென்டினை பிடித்தபடியும்

    இடது கரம் கஜ ஹஸ்தத்தை முன்னோக்கி நீட்டியவாறு மடக்கி நிறுத்திய முழங்கால் மீது இடது கை மணிக்கட்டை வைத்த நிலையில் தண்ட ஹஸ்தமாகவும் சிற்பம் நேர்த்தியாக வடிக்கப் பட்டுள்ளது. இடது காலை பீடத்தின் மீது குத்தவைத்தும் வலது காலை கீழே தொங்க விட்டும் உத்குடிகாசன கோலத்தில் அமர்ந்தபடி அய்யனார் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த

    சிற்பத்தின் வடிவ மைப்பை வைத்துப் பார்க்கும்போது இவை முற்கால பாண்டியர்களின் கலைநயத்தில் உருவானதாக இருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் ஆடித் திருவிழா தொடங்கியது. 30-ந் தேதி தபசு உற்சவம் நடக்கிறது.
    • 11 நாட்கள் திருவிழா நடைபெறும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆடித் திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடி யேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கு கலச நீர், 16 வகையான வாசனை பொருள்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் தர்ப்பைப்புல், மலர் மாலைகள் சாற்றி, சிறப்பு பூஜைகள், தீபாராத னை நடந்தது. பூஜைகளை கோவில் பரம்பரை ஸ்தானிகம் தெய்வசிகாமணி, பட்டர்கள் ராஜேஷ், சரவணன், குமார் நடத்தி வைத்தனர்.

    இதில் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமி ழரசி, நகர் மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. தொடர்ந்து 11 நாட்கள் திருவிழா நடைபெறும்.

    தினமும் அம்மன் சர்வ அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் கோவில் மண்டபத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான தபசு உற்சவம் வருகிற 30-ந் தேதி நடக்கிறது. தபசு கோலத்தில் எழுந்தருளும் அம்மனுக்கு சோமநாத சுவாமி விருஷா பரூடராக காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெறும். 31-ந் தேதி சந்தனக்காப்பு உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • தி.மு.க. முன்னாள் எம்.பி. தா.கிருஷ்ணனின் 20-ம் ஆண்டு நினைவு நாள் நாளை நடக்கிறது.
    • தி.மு.க.வினர் மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா கொம்புக்காரனேந்தலை சேர்ந்தவர் மறைந்த தா.கிருஷ் ணன். முன்னாள் எம்.பி.யான இவர் ஒருங்கிணைந்த ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாள ராகவும், சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும் பணியாற்றி னார். இவர் கடந்த 2003-ம் ஆண்டு மே மாதம் 20-ந்தேதி மரணமடைந்தார்.

    சிவகங்கை மாவட்டம் கொம்புக்காரனேந்தலில் தா.கிருஷ்ணனின் நினைவிடம் உள்ளது. ஆண்டுதோறும் மாவட்ட தி.மு.க. சார்பில் அவரது நினைவை போற்றும் வகையில் கொம்புக்கார னேந்தலில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

    நாளை (20-ந்தேதி) சனிக்கிழமை காலை 10 மணி அளவில் கொம்புக்கார னேந்தலில் உள்ள தா.கிருஷ்ணன் நினைவிடத்தில் சிவகங்கை மாவட்ட செயலா ளரும், அமைச்சருமான கே ஆர்.பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க.வினர் மலர் அஞ்சலி செலுத்து கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை தா.கிருஷ்ணன் குடும்பத்தினர், சிவகங்கை மாவட்ட தி.மு.க.வினர் செய்து வருகிறார்கள். நினைவுநாள் நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதிலும் உள்ள தி.மு.க. நிர்வாகி கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேருர் செயலா ளர்கள், சார்பு அணி நிர்வாகி கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்-அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • மானாமதுரை அருகே பெருங்கற்கால இரும்பு ஆலை எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
    • உருக்கு கழி­வு­கள் அதி­கம் காணப்­படு­கின்றன.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் வலசை கிராமம் காட்டுப்பகுதியில் தென்னக வரலாற்று மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சி சுந்தரம், தருனேஷ்வரன் வரலாற்றுத் துறை பேராசிரியர் தங்கமுத்து ஆகியோர் அங்கு சென்று கள மேற்பரப்பாய்வு செய்தனர். அப்போது இந்தப்பகுதியில் பழங்கால இரும்பு உருக்காலை எச்சங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    இந்தப்பகுதியில் ஏராள மான பெருங்கற்கால இரும்பு உருக்கு கழிவுகளும், சுமார் 4 சென்டிமீட்டர் சுற்றளவு கொண்ட துண்டு குழாய்களும் உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப் பட்டன. இவை இரும்பு உலைகளை எரியூட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட வையாகும்.

    ஏராளமான கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், இரும்பு, உருக்கு கழிவுகள் ஆகியவையும் அதிகம் காணப்படுகின்றன. பழங்காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் இரும்பு பொருள்களை தயாரிக்கும் தொழிற்கூடத்தை அமைத்திருக்க வேண்டும்.

    சுமார் 2,500 ஆண்டுக ளுக்கு முன்பு இங்கு இரும்பு காலத்தில் வாழ்ந்த ஆதிமனி தர்கள் வசித்திருக்கலாம். அவர்கள் இரும்பை உலையில் வைத்து தனியாக பிரித்து, அதன் மூலம் கத்தி, ஈட்டி, கோடாரி, வேல், போன்ற பல பொருள்களை தயாரித்துள்ளதை அறிய முடிகிறது. இந்தப்பகுதியில் இரும்பு உருக்கு கழிவுகள் குவியலாக காணப்படுகிறது, பல துண்டு குழாய்களும் மேற்பரப்பில் கண்டறி யப்பட்டது.

    இந்தப்பகுதிகளில் பெருங்கற்காலத்தை சேர்ந்த இரும்பு உருக்காலைகள் கண்டு பிடிக்கப்பட்டுள் ளதை பார்க்கும்போது இங்கு காணப்படும் அதிகப் படியான செம்பூரான் கற்களே இதற்கு காரணம் எனலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மானாமதுரையில் சிறப்பு ரெயில் நின்று செல்லும் என்ற அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • தமிழரசி எம்.எல்.ஏ. தென்னக ரெயில்வேக்கு நன்றி தெரிவித்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கடந்த 4-ந்தேதி முதல் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து மானாமதுரை ஜங்ஷன் வழியாக வேளாங்கண்ணி வரை புதிதாக எக்ஸ்பிரஸ் ரெயில் விடப்பட்டது.

    இதில் மானாமதுரை நிறுத்தம் இல்லாமல் இருந்தது. இதனால் மானாமதுரை மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி தென்னகரெயில்வே மேலாளர், மத்திய ரெயில்வே அமைச்சகம், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பினார். அதில், எர்ணாகுளம்- வேளாங்கன்னி சிறப்பு ரெயில் மானாமதுரையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    இதை அடுத்து இந்த வாரம் முதல் புதிய வாரந்திரரெயில் மானா மதுரை ஜங்சனில் நின்று செல்லும் என அறிவிப்பு வெளியானது.

    எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம் ,புனலூர்,செங்கோட்டை, விருதுநகர், காரைக்குடி, திருவாரூர் வழியாக நாகப்பட்டினம் செல்லும் இந்த சிறப்பு ெரயிலுக்கு மானாமதுரை ரெயில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மிக முக்கிய சந்திப்பு ரெயில் நிலையமான மானாமதுரை ரெயில் நிலையத்தில் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் நிற்காமல் சென்றது.

    தற்போது கடந்த 4-ந் தேதி முதல் ஆகஸ்ட் 6-ந் தேதி வரை, 10 சேவைகள் இயங்கும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ரெயில் கொல்லம் ,புனலூர், செங்கோட்டை ,கடையநல்லூர், சங்கரன்கோவில், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக செல்லும்.

    இந்த ெரயிலுக்கு மானாமதுரையில் ரெயில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது குறித்து தமிழரசி எம்.எல்.ஏ. தென்னக ரெயில்வேக்கு நன்றி தெரிவித்தார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மானாமதுரை ரெயில் நிலையத்திற்கு ரெயில் நிறுத்தம் வழங்க வேண்டுமென்று தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

    எனது கோரிக்கையை ஏற்று மானாமதுரையில் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மானாமதுரை சட்ட மன்ற தொகுதி மக்கள் சார்பில் ரெயில்வே அதிகாரிகளுக்கு நன்றி யையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    மானாமதுரை அருகே நடைபயிற்சியில் ஈடுபட்ட அமமுக ஒன்றிய செயலாளர் சரவணன் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது40). டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வின் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். இவர் பேரூராட்சி ஒப்பந்த பணிகளையும் செய்து வந்தார்.

    மானாமதுரை பாண்டியன் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த சரவணன் தினமும் நடைபயிற்சி செல்வது வழக்கம். இன்று காலையும் அவர் வழக்கம் போல் நடை பயிற்சிக்காக மோட்டார் சைக்கிளில் வைகை ஆற்றுக்கு வந்தார். அங்கு ஆற்றங்கரையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நடைபயிற்சி மேற்கொண்டார்.

    அப்போது அங்கு ஒரு கும்பல் வந்தது. அந்த கும்பல் சரவணனை சுற்றி வளைத்தது. அவர்களை கண்டதும் சரவணன் தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பல் அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.

    பலரும் நடைபயிற்சி செய்யும் காலை நேரத்தில் கொலை நடந்திருப்பது மானாமதுரையில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் மானாமதுரை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமீபத்தில் நடந்த மானாமதுரை இடைத்தேர்தலில் அ.ம.மு.க.விற்காக சரவணன் தீவிர பணியாற்றினார். இது பிடிக்காததால் யாராவது கொலை செய்தார்களா? அல்லது பேரூராட்சி ஒப்பந்தப்பணி விவகாரத்தில் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

    கொலையாளிகளை பிடிக்க மாவட்டம்முழுவதும் போலீசார் உஷார்படுத்தப் பட்டுள்ளனர். சோதனை சாவடிகளிலும் தீவிரமாக கண்காணிப்பு பணி நடக்கிறது. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடை பெற்று வருகிறது.

    கொலை செய்யப்பட்ட சரவணனுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    மானாமதுரை பகுதியில் 4 வழிச்சாலை பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து மானாமதுரையில் இயங்கி வந்த ரெயில்வேகேட் விரைவில் மூடப்பட உள்ளது.
    மானாமதுரை:

    மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தொடங்கி தற்போது இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரெயில்வே கேட் பகுதி அனைத்திலும் உயர் மட்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக தற்போது மானாமதுரையை அடுத்த கமுதக்குடி மற்றும் திருப்புவனம் பாலங்கள் தவிர்த்து மற்ற பாலங்கள் வழியாக போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்த நான்கு வழிச்சாலையில் உள்ள மேம்பாலங்கள் கட்டப்பட்ட இடங்களில் உள்ள ரெயில்வே கேட்கள் விரைவில் மூடப்பட உள்ளன. அதன்படி மானா மதுரையில் இருந்து மதுரை செல்லும் அகல ரெயில் பாதையின் குறுக்கே தற்போது ரெயில்வே கேட் ஒன்று உள்ளது. தற்போது மானாமதுரை தல்லாகுளம் முனியாண்டி கோவிலில் இருந்து மானா மதுரை புதிய பஸ் நிலையம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை புதிய பாலம் கட்டப்பட்டு அந்த பாலத்தில் இரு பாதை வழியாக போக்குவரத்து அனுமதிக்கபட்டு வருகிறது. இதையடுத்து இனி மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் நேரடியாக மானாமதுரை புதிய பஸ் நிலையத்திற்கு சென்று விடும். இடையில் உள்ள மானா மதுரை அண்ணா சிலை மற்றும் பை-பாஸ் சாலை பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காது.

    மேலும் மானாமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பொதுமக்கள் அனைவரும் மதுரை செல்லவும் மதுரையில் இருந்து மானாமதுரை நகருக்குள் வரவும் புதிய பஸ் நிலையம் வந்து தான் செல்ல முடியும். மேலும் ஏற்கனவே செயல்பட்டு வந்த மானாமதுரை அண்ணா சிலை மற்றும் பை-பாஸ் பஸ் நிறுத்தம் இனி பயன்பாட்டில் இருக்காது. வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் மானாமதுரை நகர் பகுதிக்குள் வர வேண்டுமானால் சிவகங்கை செல்லும் பஸ்களில் பயணம் செய்தால் தான் நகருக்குள் வரமுடியும்.

    மேலும் சிவகங்கை செல்லும் பஸ்கள் அனைத்தும் மானாமதுரை அண்ணாசிலை வழியாக சர்வீஸ் ரோட்டில் சென்று அதன் பின்னர் இடது புறத்தில் ஏறி பாலத்தை கடந்து தான் புதிய பஸ் நிலையம் செல்லும். மேலும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிவகங்கை செல்லும் வாகனங்கள் அனைத்தும் தல்லாகுளம் முனியாண்டி கோவிலை சுற்றி வந்து வலது புறமாக திரும்பி சர்வீஸ் ரோடு, அண்ணாசிலை, தேவர் சிலை, காந்தி சிலை, சிப்காட் வழியாக சிவகங்கைக்கு செல்ல வேண்டும்.

    மேலும் சரக்கு வாகனங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் சிவகங்கைக்கு செல்ல வேண்டுமானால் மானா மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பை-பாஸ் பாலம் வழியாகத்தான் செல்ல முடியும். இந்த புதிய வழி போக்குவரத்து நடைமுறை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்த புதிய வழித்தட பயணத்திற்கான கருத்து கேட்பு நடத்துவதற்காக தற்போது மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

    இந்த புதிய வழித்தடம் குறித்து மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதும் மானாமதுரையில் உள்ள ரெயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படும். மேலும் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பை-பாஸ் அண்ணாசிலை பஸ் நிறுத்தமும் மூடப்பட உள்ளது. அத்துடன் சுதந்திரத்திற்கு பின் உருவாக்கப்பட்ட 7 ரெயில்வே சந்திப்புகளில் ஒன்றான மானாமதுரை சந்திப்பில் இருந்து மதுரை செல்லும் பாதையில் உள்ள மற்றொரு ரெயில்வே கேட்டும் மூடப்பட உள்ளது.
    கஜா புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழை காரணமாக பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

    மானாமதுரை:

    கஜா புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழை காரணமாக பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

    மழை காரணமாக மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது.

    இதேபோல் பள்ளி கட்டிடங்களிலும் மழைநீர் இறங்கி ஈரப்பதத்துடன் காணப்படுகிறது. மழையால் சிவகங்கை, வேம்பத்தூர் சாலையும் சிதைந்து கிடக்கிறது.

    சுற்றிலும் பள்ளி சுற்றுச்சுவரை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. பள்ளியில் தேங்கிய மழைநீரை உடனே வெளியேற்றுவதுடன் ஈரப்பதத்துடன் உள்ள கட்டிடங்களை தொடர்ந்து பயன்படுத்தலாமா? என ஆய்வு செய்ய வேண்டும். வேம்பத்தூரில் இருந்து பச்சேரி வரை புதிய சாலை அமைக்க வேண்டும் என வேம்பத்தூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மானாமதுரை தொகுதி அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டை அதை யாராலும் அசைக்க முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். #Sengottaiyan
    திருப்புவனம்:

    திருப்புவனத்தில் அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய நகர செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.பி. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கணேசன் வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசியதாவது:- மானாமதுரை தொகுதிக்கு இடைத்தேர்தல் வரப்போகிறது. இந்த தொகுதி அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டை அதை யாராலும் அசைக்க முடியாது. 2019 ஜனவரி மாதம் முதல் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சீருடை மாற்றப்பட உள்ளது என்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் பேசினர். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், ராஜேந்திரன், திருப்புவனம் யூனியன் முன்னாள் துணை தலைவர் புவனேந்திரன், மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர் அழகுமலை, மடப்புரம் காலனி கிளை செயலாளர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல இளையான்குடியில் நடந்த கூட்டத்திற்கு இளையான்குடி நகரகுடி கூட்டுறவு வங்கி தலைவர் பாரதிராஜன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் செங்கோட்டையன், பாஸ்கரன், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.பி. உள்பட பலர் பேசினர். கூட்டத்தில் மானாமதுரை இடைத்தேர்தலுக்காக பல வியூகங்கள் அமைத்து உள்ளோம். தொகுதி பொறுப்பாளர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நியமித்துள்ளனர். முதல் கட்டமாக ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளோம், தமிழகத்திலேயே மானாமதுரை சட்டமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றி அனைத்து பணிகளையும் நிறைவேற்றுவோம் என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நெட்டூர் நாகராஜன், நகர செயலாளர் அன்வர், மாவட்ட பொருளாளர் ரத்தினம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    மானாமதுரை வி‌ஷம் குடித்து டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரெயில்வே காலனியைச் சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் சிவநாதன் (வயது 22). சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்துவரும் இவர், தற்போது சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார்.

    2 நாள் விடுமுறை என்பதால் சிவநாதன் மானாமதுரை வந்தார். நேற்று இரவு வீட்டில் தூங்கிய அவர், இன்று காலை எழுந்து வராததால் பெற்றோர் சென்று பார்த்தனர்.

    அப்போது சிவநாதன் அங்கு மயங்கி கிடந்தார். அவரை மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது, வி‌ஷம் குடித்திருப்பது தெரியவந்தது.

    டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவநாதன் பரிதாபமாக இறந்தார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மானாமதுரையில் காங்கிரஸ் மகளிர் பிரிவு சார்பில் பேரூராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மானாமதுரை:

    மத்திய அரசின் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலை உயர்வு, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளது போன்ற நட வடிக்கைகளைக் கண்டித்தும், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்தும் மகளிர் காங்கிரஸ் அமைப்பினர் மானாமதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத மாநில அரசைக் கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

    மகளிர் பிரிவு மாநில பொதுச் செயலாளர் வித்யா கணபதி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி செந்தாமரை, பாண்டியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர், காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில துணைத் தலைவர் டாக்டர் எஸ்.செல்வராஜ், மாவட்ட நிர்வாகி ரமேஷ்கண்ணா, மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.

    காங்கிரஸ் கிழக்கு வட்டாரத் தலைவர் ஆரோக்கிய தாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் பிரேம சந்திரன், நிர்வாகிகள் புருஷோத்தம்மன், காசி மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இவர்கள் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளைக் கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். முடிவில் மேனகப்பிரியா நன்றி கூறினார்

    ×