என் மலர்
நீங்கள் தேடியது "onam"
- ஓணம் பண்டிகையை அவர்கள் மாற்ற விரும்புகிறார்கள்.
- இன்று நாம் கொண்டாடும் அனைத்தையும் பழைய காலத்திற்கு மாற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள்.
பாஜகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் கேரளாவின் பண்பாட்டை அழித்துவிடும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
எர்ணாகுளத்தில் மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சியின் எதிர்காலம் குறித்த கருத்தரங்கில் பேசிய பினராயி விஜயன், "மத்திய அமைச்சர் அமித் ஷா அண்மையில் கேரளா வந்திருந்த போது, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 25% வாக்கினை பெற வேண்டும் என்றும், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறுவதைபாஜக நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார். கேரளா பாஜகவின் முக்கிய இலக்காக உள்ளது என்பதை அவரின் பேச்சு தெளிவுபடுத்துகிறது.
ஓணம் பண்டிகை நாளில் வாமனனுடன் மகா விஷ்ணுவையும், வாமனனின் காலடியில் மகாபலியையும் சித்தரிக்கும் செய்தியை ஒருவர் எனக்கு காட்டினார். இதன் பொருள், மகாபலி நம்மைப் பார்ப்பதாக நம்பப்படும் ஒரு பண்டிகையான ஓணத்தையே அவர்கள் மாற்ற விரும்புகிறார்கள். இன்று நாம் கொண்டாடும் அனைத்தையும் பழைய காலத்திற்கு மாற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள்.
பாஜகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் கேரளாவின் பண்பாட்டை அழித்துவிடும்" என்று தெரிவித்தார்.
- இந்த ஆண்டு கூடுதலாக ரூ.50 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
- உத்திராட நாளில் (அதாவது ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாள்) மட்டும் ரூ.137 கோடிக்கு மது விற்பனையானது.
கொச்சி:
கேரளாவில் ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த 10 நாட்கள் ஓணம் விழா நடந்தது. மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10 நாட்களில் ரூ.826 கோடிக்கு மது விற்பனை ஆனது. கடந்த ஆண்டு ரூ.776 கோடிக்கு மது விற்பனை நடந்தது. இதை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு கூடுதலாக ரூ.50 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
உத்திராட நாளில் (அதாவது ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாள்) மட்டும் ரூ.137 கோடிக்கு மது விற்பனையானது. கடந்த ஆண்டு அதே நாளில் ரூ.126 கோடிக்கு மது விற்பனையாகி இருந்தது. இதை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு கூடுதலாக ரூ.11 கோடி மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் 6 மதுபான சில்லறை விற்பனை கடைகளில் ரூ.1 கோடி மற்றும் அதற்கு கூடுதலாக மதுபானங்கள் விற்பனையானது. இதில் 3 சில்லறை விற்பனை கடைகள் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது.
கொல்லம் மாவட்டம் கருணாகப்பள்ளி பகுதியில் உள்ள அரசின் சில்லறை விற்பனை கடையில் ரூ.1.46 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. இது மாநிலத்திலேயே அதிக அளவு விற்பனையான கடை ஆகும். அதற்கு அடுத்தபடியாக கொல்லம் அருகே உள்ள காவநாடு சில்லறை விற்பனை கடையில் ரூ.1.24 கோடிக்கும், மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னாவில் உள்ள எடப்பால் குற்றிப்பாலா சில்லறை மதுபான விற்பனை கடையில் ரூ.1.11 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
திருச்சூர் மாவட்டம் சாலக்குடி மதுபான சில்லறை விற்பனை கடையில் ரூ.1.07 கோடிக்கும், இரிஞ்சாலகுடா மதுபான கடையில் ரூ.1.03 கோடிக்கும், கொல்லம் மாவட்டம் குண்டராவில் உள்ள மதுபான கடையில் ரூ.1 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது என்று கேரள அரசின் மதுபான விற்பனை கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- திரைப்பிரபலங்கள் பலர் ஓணம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- தவெக தலைவர் விஜய் ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதிலும் உள்ள மலையாள மக்கள் இன்று ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இதை முன்னிட்டு, அரசியல் கட்சி தலைவர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை ஓணம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தவெக தலைவர் விஜய் ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில்," ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் புது ஆடை, வகையான சாப்பாடு, புது ரிலீஸ் திரைப்படங்களை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் மலையாள நடிகைகள் அவர்களது ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
நடிகைகளின் ஓணம் க்ளிக்ஸ்-ஐ இப்பதிவில் பார்க்கலாம் வாங்க:
கேரளா நடிகை பாவனா அழகான அனார்கலி உடையில் ஜொலிக்கிறார்.
மாளவிகா மோகனன் அழகிய ட்ரான்ஸ்பரண்ட் Saree ஓணம் க்ளிக்
கௌரி கிஷனின் மகிழ்ச்சியான ஓணம் க்ளிக்

ஓவியாவில் ஓணம் செல்ஃபி
ரம்யா நம்பீசனின் சிம்பிள் ஓணம் க்ளிக்

நடிகை அனுமோலின் தங்க நிற புடவையில் ஓணம் க்ளிக்,அபர்னா தாஸின் ஓணம் க்ளிக்,சம்யுக்தாவின் கேஷுவல் ஓணம் க்ளிக் அவர்களது புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
- மகாபலி சக்கரவர்த்தியின் ஆசிகள் ஒவ்வொரு இல்லத்தையும் அமைதி, வளம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தால் நிரப்பட்டும்.
- வளர்ச்சியடைந்த பாரதம் 2047 -ஐ உருவாக்குவதற்கான நமது கூட்டுத் தீர்மானத்தை வலுப்படுத்த ஓணம் உணர்வு நம்மை ஊக்குவிக்கட்டும்.
சென்னை:
கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்திய சகோதர சகோதரிகளுக்கும் ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.
நன்னெறி, இரக்கம், பக்தி மற்றும் தன்னலமற்ற தன்மை ஆகிய காலத்தால் அழியாத நற்பண்புகளைக் கொண்ட, நமது நாகரிக நெறிமுறைகளின் அடித்தளங்களை நினைவூட்டும், கருணைமிக்க மகாபலி சக்கரவர்த்தியின் வரவை நாம் இந்நாளில் கொண்டாடுகிறோம். அவரது ஆசிகள் ஒவ்வொரு இல்லத்தையும் அமைதி, வளம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தால் நிரப்பட்டும்.
வளமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் கலாசார ரீதியாக வேரூன்றிய வளர்ச்சியடைந்த பாரதம் 2047 -ஐ உருவாக்குவதற்கான நமது கூட்டுத் தீர்மானத்தை வலுப்படுத்த ஓணம் உணர்வு நம்மை ஊக்குவிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
- ஓணம் பண்டிகையையடுத்து மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகள் களை கட்டியுள்ளது.
- குமரி மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடியில் இருந்தும் வாழை இலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
நாகர்கோவில்:
மலையாளம் பேசும் மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஒணம். இந்த பண்டிகை நாளை மறுநாள் (5-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்களில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகரப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இன்று காலை அத்தபூ கோலம் வரைந்து ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். கல்லூரிகளில், மாணவிகள் ஓணம் சேலைஅணிந்து வந்திருந்தனர்.
அரசு அலுவலகங்களிலும் பெண் ஊழியர்கள் ஓணம் சேலை அணிந்து இருந்தனர். கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களில் பூக்களால் அத்தபூ கோலம் வரையப்பட்டது. பல வண்ண கலரில் கோலம் வரைந்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர். குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் ஓணம் பண்டிகை அத்தபூ கோலம் வரைந்தும் ஓண ஊஞ்சலாடியும் கொண்டாடி வருகின்றனர்.
ஓணம் பண்டிகையையடுத்து மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகள் களை கட்டியுள்ளது. நாகர்கோவிலில் இருந்து கேரளாவிற்கு வாழைத்தார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. நாகர்கோவில் அப்டாமார்க்கெட்டிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து செவ்வாழை வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்திருந்தன. அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். இந்த தார்கள் ரூ.1000 முதல் ரூ.1500 வரை விற்பனையானது. இதேபோல் மட்டி, கதலி வாழைத்தார்கள் மற்றும் வாழை இலை விலையும் உயர்ந்து காணப்பட்டது.
குமரி மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடியில் இருந்தும் வாழை இலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஒரு கட்டு வாழை இலைகள் சாதாரணமாக ரூ.500 முதல் 800க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.5 ஆயிரம் வரை விற்பனையானது. தோவாளை பூ மார்க்கெட்டிலும் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. பிச்சி, மல்லிகை பூக்களின் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து காணப்பட்டது. அவை கிலோ ரூ. 1000-க்கு மேல் விற்பனையானது. இந்த நிலையில் இன்றும் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை உயர்ந்தது. சம்பங்கி, கேந்தி, அரளி பூக்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.
- கேரளாவில் ஓணம் பண்டிகையை அந்த மாநிலத்து மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள்.
- இந்தாண்டு ஓணம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை போல கேரளாவில் ஓணம் பண்டிகையை அந்த மாநிலத்து மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள்.
கேரளாவில் ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5 ஆம் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
அவ்வகையில் திருவனந்தபுரம் சட்டமன்ற மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓணம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மேடையில் நடனமாடி கொண்டிருந்த சட்டமன்ற ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓணம் கொண்டாட்டத்தின் போது துணை நூலகர் வி. ஜுனைஸ் (46) நடனமாடும்போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஜுனைஸ் வயநாட்டின் பத்தேரியைச் சேர்ந்தவர். ஜுனைஸ் மயங்கி விழுந்து உயிரிழந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஓணம் பண்டிகை வருகிற 5-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
- ஒரு கிலோ நேந்திரன் வாழை ரூ.45 முதல் ரூ.50 வரை விலைக்கு விற்பனையாகும்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.
இங்கு விளைவிக்கப்படும் நேந்திரன், செவ்வாழை, ரஸ்தாளி, ரோபஸ்டா போன்ற வாழை ரகங்கள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
குறிப்பாக நேந்திரன் வாழைத்தார்கள் 80 சதவீதம் வரை கேரள வியாபாரிகளால் வாங்கப்படுகிறது.
மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் வாழைத்தார்கள் நால்ரோடு பகுதியில் செயல்படும் ஏல மையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு மொத்த வியாபாரிகள் ஏலம் மூலம் வாழைத்தார்களை வாங்கி செல்கிறார்கள்.
ஆண்டுதோறும் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை கணக்கிட்டு இங்குள்ள வாழை விவசாயிகள் நேந்திரன் வாழையை அதிகளவில் பயிரிடுவது வழக்கம். இந்த ஆண்டும் அதுபோன்று வாழைகள் பயிரிட்டு இருந்தனர்.
ஆனால் கடந்த மாதம் வீசிய கடும் சூறாவளி காற்றின் காரணமாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன.
இதனால் வாழைத்தார் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. முழுமையாக வளராத வாழைத்தார்கள் பெருமளவில் ஏல மையங்களுக்கு வந்ததால் உரிய விலை கிடைக்கவில்லை.
கேரள வியாபாரிகளின் வருகையும் குறைந்து விட்டது. இதனால் சராசரி விலை கூட கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து வாழை விவசாயிகள் கூறியதாவது:-
ஓணம் பண்டிகை வருகிற 5-ந்தேதி கொண்டாடப்படுகிறது. ஓணம் விழா காலங்களில் போட்டி போட்டுக்கொண்டு நேந்திரன் வாழைத்தார்களை கேரள வியாபாரிகள் வாங்கி செல்வார்கள்.
ஆனால் இந்த ஆண்டு கேரள வியாபாரிகள் வரவில்லை. இதனால் வாழைத்தார்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஓணம் பண்டிகை மாதத்தில் ஒரு கிலோ நேந்திரன் வாழை ரூ.45 முதல் ரூ.50 வரை விலைக்கு விற்பனையாகும். ஆனால் தற்போது ரூ.25-ல் இருந்து ரூ.35க்கு மட்டுமே விற்பனையாகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- ரேஷன் கடைகள் மூலமாக ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
- கடந்த ஆண்டு 86 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் வருகிற 29-ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஓணம் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஓணம் பரிசு பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
கேரளாவில் நடப்பாண்டில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுகள் உள்ள வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 5 லட்சத்து 87 ஆயிரத்து 691 பேர், நல வாழ்வு மையங்களில் வாழும் 20 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இந்த ஆண்டு ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த தொகுப்பில் தேயிலைத்தூள், சிறுபருப்பு, சேமியா பாயாசம் மிக்ஸ், நெய், முந்திரி பருப்பு, தேங்காய் எண்ணெய், சாம்பார் பொடி, மிளகு பொடி, மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, துவரம் பருப்பு, சிறுபயறு மற்றும் உப்பு ஆகிய பொருட்கள் அடங்கி இருக்கும்.
ரேஷன் கடைகள் மூலமாக ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இதற்காக ரூ.32 கோடி முன்பணமாக சப்ளை கோ நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்-மந்திரியின் அறிவிப்பை தொடர்ந்து ஓணம் பரிசு தொகுப்பு விரைவில் ரேஷன் கடைகளுக்கு கொண்டு வரப்பட்டு, கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கடந்த ஆண்டு 86 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. நடப்பாண்டில் நிதி நெருக்கடி காரணமாக 6 லட்சத்து 7 ஆயிரத்து 691 பேருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 17 பொருட்கள் வழங்கப்பட்டன. தற்போது உலர் அரிசி, சர்க்கரை வரட்டி, சீனி, ஏலக்காய் ஆகிய 4 பொருட்கள் நீக்கப்பட்டு, 13 பொருட்கள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.
- திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழா ஓணம். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை, கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.
கொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்களாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஆவணி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும், வாமணன் அவதரித்த நாளும் அன்றுதான் எனவும் குறிப்புகள் கூறுகின்றன.
மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். தானம், தருமங்கள் செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும்போது திருமால் வாமணனாக (குள்ளமான உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையே கொடுத்தான் பலி மகாராஜா. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன் தலையில் கால் வைத்து அவனை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால்.
தன் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதாளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களை கண்டு மகிழும் வரம் வேண்டினான் மகாபலி. அதன்படி, ஒவ்வொரு திருவோணத் திருநாள் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகத்திற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள் இதனை நினைவு கூர்ந்து, மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்த திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
ஓணம் ஸ்பெஷல் உணவுகள்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழி ஓண சாத்யா என்ற உணவின் சிறப்பை கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சாத்யா"என்ற உணவு தயாரிக்கப்படுகிறது.
புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும்.
ஓணம் ஸ்பெஷல் அத்தப்பூக்கோலம்
ஓணம் பண்டிகையின் சிறப்பு அம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ஆகும். முதல் நாள் ஒரேவகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும். அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாக கொண்டாடுவர்.
புத்தாடை
கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை பெண்கள் அணிந்தும், பாடல்கள் பாடியும் மகிழ்வார்கள். 10 நாட்களாக நடைபெறும் திருவிழாவில் பலவிதமான போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்படும். முக்கியமாக களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப்போட்டிகள் போன்றவைகள் நடைபெறும்.
திருவிழா பத்து நாட்கள் நீடிக்கும், முதல் நாள் அத்தம் என்றும் மற்றவை சித்திரை, சோதி, விசாகம், அனிசம், திருக்கேடா, மூலம், பூராடம், உத்ராடம் மற்றும் திருவோணம் என்றும் வரிசையாக முத்திரை குத்தப்பட்டு, திருவோணம் மிக முக்கியமானது. இந்த ஆண்டு ஓணம் ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 31 வரை கொண்டாடப்படும்.
- ஓணம் பண்டிகையின் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று 'திருவோணதோணி'.
- விருந்தில் பட்டாத்திரி கொண்டு வந்த பலகாரங்கள் மற்றும் பலதரப்பட்ட மக்களால் தெய்வத்திற்கு பிரசாதம் வழங்கப்படும்.
ஓணம் என்பது பல்வேறு சடங்குகள் மற்றும் பாரம்பரியங்களை உள்ளடக்கிய கொண்டாட்டமாகும். கேரளாவில் ஓணம் பண்டிகையின் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று 'திருவோணதோணி'. இது காட்டூர் மாங்காடு இல்லத்தில் இருந்து ஓணம் விருந்து உணவுகளுடன் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முலா பார்த்தசாரதி கோவிலுக்கு வரும் தோணியை குறிக்கிறது.
இந்த பாரம்பரியத்தின் பின்னால் ஒரு சுவாரசியமான புராணக்கதை உள்ளது. காட்டூர் மாங்காடு இல்லம் பட்டாத்திரிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. இறுதியாக ஒரு குழந்தை பிறந்ததும், அதை ஆரன்முலா கோவிலில் உள்ள பார்த்தசாரதியின் ஆசிர்வாதம் என்று கருதினார். ஒவ்வொரு ஆண்டும், பட்டத்திரி தனது திருவோண மதிய உணவுக்கு முன் ஒரு பிரம்மச்சாரிக்கு உணவளிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார்.
ஒரு சமயம், அப்படிப்பட்ட பிரம்மச்சாரி அவர் வீட்டிற்கு வரவில்லை. ஒரு பிரம்மச்சாரி வந்து உணவு அருந்தாவிட்டால் மதிய உணவு சாப்பிட மாட்டேன் என்று பட்டாத்திரி வலியுறுத்தினார். இறுதியில் ஒரு குழந்தை வந்து மதிய உணவு சாப்பிட்டது. பட்டத்திரியின் பக்தியாலும் நம்பிக்கையாலும் கவரப்பட்ட பகவான் கிருஷ்ணர், அவரது கனவில் தோன்றி, ஆரண்முலா கோவிலுக்கு விருந்து அளிக்கச்சொன்னார்.
அடுத்த ஆண்டு முதல் பட்டாத்திரி மாங்காடு இல்லத்தில் இருந்து ஆரன்முலா கோவிலுக்கு படகில் விருந்தை கொண்டு வருவார். இந்த படகு (மலையாளத்தில் தோணி என்று அழைக்கப்படுகிறது) இறுதியில் 'திருவோணதோணி' என்று அழைக்கப்பட்டது.
இந்த பயணங்களில் ஒன்றில், பட்டாத்திரி கோவிலுக்கு செல்லும் வழியில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் படகுகளில் சம்பவ இடத்திற்கு வந்து திருவோணத்தோணி மற்றும் பட்டாத்திரிக்கு பாதுகாப்பு அளித்தனர். அந்த ஆண்டு முதல், போர் படகுகளாக செயல்படும் சுண்டன் வல்லம்கள் (பாம்புப் படகுகள்) திருவோணத்தோணியுடன் வரத்தொடங்கின. காலப்போக்கில் இந்த படகுகள் 'ஆரண்முலா பள்ளியோடங்கள்' என்று குறிப்பிடத் தொடங்கின.
பட்டத்திரி மாங்காடு இல்லத்தில் இருந்து குமரநெல்லூர் கார்த்தியாயனி கோவிலுக்கு அருகில் உள்ள புதிய இடத்திற்கு மாறிய பிறகு, திருவோணத்தோணி தொடங்கும் இடமும் குமரநெல்லூர் மானா என்று அழைக்கப்படும் புதிய இடத்திற்கு மாறியது. சிங்கமாதம் மூலத்தன்று, குடும்பத்தின் மூத்த பட்டாத்திரி சுருளன் படகில் புறப்படுவார். அவர் ஆரன்முலாவில் உள்ள காட்டூர் வந்தடைந்ததும் படகுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட பெரிய தெப்பத்திற்கு திருவோணத்தோணி மாற்றப்படும். கண்கவர் ஊர்வலம், கிடங்கரா, திருவல்லா, ஆறாட்டுப்புழா, கொழஞ்சேரி, காட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக சென்று, திருவோணத்தன்று காலை ஆரன்முளா கோவிலின் கரையை வந்தடையும். அப்போது பிரமாண்ட விருந்துக்கான ஏற்பாடுகள் தொடங்கும்.
இந்த விருந்தில் பட்டாத்திரி கொண்டு வந்த பலகாரங்கள் மற்றும் பலதரப்பட்ட மக்களால் தெய்வத்திற்கு பிரசாதம் வழங்கப்படும். அன்றைய தினம் 'அத்தாழ பூஜை' முடிந்ததும், கோவில் பூசாரியிடம் இருந்து பட்டாத்திரி பணப் பையை பெறுகிறார். இது விருந்துக்கு பயன்படுத்தப்பட்ட பிறகு மீதமுள்ள தொகையாக இருக்க வேண்டும். பட்டத்திரி அதையே கோவில் களஞ்சியத்தில் இறக்கிவிட்டு தனது பயணத்தைத் தொடங்குகிறார்.
- அம்பலப்புழா சங்கம் அம்பலப்புழா பால் பாயசத்துடன் சம்பக்குளத்திற்கு செல்கிறது.
- ஒரு 'சுருல்லன்' படகில் மாப்பிளச்சேரிக்கு வருகிறார்கள்.
அம்பலப்புழா குழு அம்பலப்புழாவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் இருந்து பாயசத்துடன் வந்த பிறகு சம்பக்குளம் வல்லம்காளி அல்லது சம்பக்குளம் படகுப் போட்டி தொடங்குகிறது. இது ஒரு புனிதமான உணவுப்பொருளாக கருதப்படுகிறது மற்றும் மலையாளத்தில் பொதுவாக 'பிரசாதம்' என்று அழைக்கப்படுகிறது. இது கடவுளுக்கு பிரசாதமாக தயாரிக்கப்பட்டு அனைத்து சடங்குகளையும் முடித்த பிறகு பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்த சடங்கின் ஒரு பகுதியாக அம்பலப்புழா சங்கம் ஒவ்வொரு ஆண்டும் சம்பக்குளத்தில் காட்சியளிக்கிறது. படகுப் போட்டியின் வரலாறு அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் உள்ள சிலையின் கதையுடன் தொடர்புடையது.
வில்வமங்கலம் சுவாமிகளின் அறிவுரைப்படி தேவநாராயணன் என்றழைக்கப்படும் செம்பகச்சேரி மன்னரால் இக்கோயில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. அம்பலப்புழா புறக்காடு என்ற மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்தது. தேவநாராயணன் புறக்காட்டை தோற்கடித்தபோது, வாசுதேவபுரம் புறக்காடு ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் புறக்கணிக்கப்பட்டது. கோவில் இடிபாடுகள் மற்றும் அழிக்கப்பட்ட சிலையை குறிச்சி வல்லிய மாட்டம் குடும்பத்தினர் பாதுகாத்து வந்ததாக கூறப்படுகிறது. இக்கோயில் இடிந்ததை அடுத்து எழுந்துள்ள பிரச்னைகளை தீர்க்கும் வகையில், அம்பலப்புழா ஸ்ரீகிருஷ்ணர் கோயிலை அம்பலப்புழாவில் கட்ட வில்வமங்கலம் சுவாமிகள் அறிவுறுத்தினார். கோவிலில் புதிய சிலை நிறுவப்பட்ட நாளில், அது தூய்மையற்றது என கண்டறியப்பட்டது. எனவே, அரசர் தனது மந்திரி கோழிமுக்குப் பாறையில் மேனனுக்கு வேறு சிலையைத் தேடும்படி கட்டளையிட்டார்.
மேனன் மற்றும் அவரது குழுவினர் இரவு நேரமாகிவிட்டால் சம்பக்குளம் கோயிக்கேரி மாப்பிளச்சேரி இத்திதாமனின் வீட்டில் சிலையுடன் ஓய்வெடுக்குமாறு மன்னர் அறிவுறுத்தினார். மாப்பிளச்சேரி வீட்டில் சிலையை நிறுவிய குழுவினரை மாப்பிளச்சேரி குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அனைவரும் வரவேற்றனர். மறுநாள், செம்பகச்சேரி மன்னர் தேவநாராயணன் மற்றும் அவரது குடும்பத்தினர் சிலையைப் பெறுவதற்காக மாப்பிளச்சேரியின் பரம்பரை வீட்டிற்கு வந்தனர். விழாக்களுக்கு மத்தியில், படகில் மீண்டும் அம்பலப்புழாவுக்குச் சென்றனர். வீடு திரும்பும் வழியில் கல்லூர்காடு தேவாலயத்தில் பட்டாசு வெடித்து வரவேற்றனர். சம்பகுளம் ஆற்றங்கரையில் உள்ள நடுபாகம் மாட்டம் அம்மன் கோயிலிலும் பந்தீரடி பூஜையுடன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த மாபெரும் நீர் அணிவகுப்பின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஓணத்தின் போது சம்பகுளம் பாம்பு படகு போட்டி நடத்தப்படுகிறது.
இந்த வரலாற்று விழாவை புதுப்பிக்கவே அம்பலப்புழா சங்கம் அம்பலப்புழா பால் பாயசத்துடன் சம்பக்குளத்திற்கு செல்கிறது. சங்கம், கோவிலை அடைந்ததும், சிலை வைக்கப்பட்டுள்ள மாப்பிளச்சேரி தாராவாடு (வீட்டுக்கு) செல்கிறது. தாராவாடு உள்ள சிலைக்கு பூஜை செய்கிறார்கள். அவர்கள் ஒரு 'சுருல்லன்' படகில் மாப்பிளச்சேரிக்கு வருகிறார்கள். கல்லூர்க்காடு தேவாலயத்தின் வழக்கமான சம்பிரதாய முறைப்படி வரவேற்பை ஏற்றுக்கொள்கிறார்கள். அம்பலப்புழா சங்கம் திரும்பும் பயணத்திற்குப் பிறகுதான் புகழ்பெற்ற சம்பக்குளம் வல்லம்களி அல்லது சம்பக்குளம் வல்லம்களி படகுப் போட்டி தொடங்குகிறது.






