என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூக்கள் விலை உயர்வு"

    • ஓணம் பண்டிகையையடுத்து மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகள் களை கட்டியுள்ளது.
    • குமரி மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடியில் இருந்தும் வாழை இலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

    நாகர்கோவில்:

    மலையாளம் பேசும் மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஒணம். இந்த பண்டிகை நாளை மறுநாள் (5-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.

    குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்களில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகரப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இன்று காலை அத்தபூ கோலம் வரைந்து ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். கல்லூரிகளில், மாணவிகள் ஓணம் சேலைஅணிந்து வந்திருந்தனர்.

    அரசு அலுவலகங்களிலும் பெண் ஊழியர்கள் ஓணம் சேலை அணிந்து இருந்தனர். கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களில் பூக்களால் அத்தபூ கோலம் வரையப்பட்டது. பல வண்ண கலரில் கோலம் வரைந்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர். குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் ஓணம் பண்டிகை அத்தபூ கோலம் வரைந்தும் ஓண ஊஞ்சலாடியும் கொண்டாடி வருகின்றனர்.

    ஓணம் பண்டிகையையடுத்து மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகள் களை கட்டியுள்ளது. நாகர்கோவிலில் இருந்து கேரளாவிற்கு வாழைத்தார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. நாகர்கோவில் அப்டாமார்க்கெட்டிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து செவ்வாழை வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்திருந்தன. அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். இந்த தார்கள் ரூ.1000 முதல் ரூ.1500 வரை விற்பனையானது. இதேபோல் மட்டி, கதலி வாழைத்தார்கள் மற்றும் வாழை இலை விலையும் உயர்ந்து காணப்பட்டது.

    குமரி மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடியில் இருந்தும் வாழை இலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஒரு கட்டு வாழை இலைகள் சாதாரணமாக ரூ.500 முதல் 800க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.5 ஆயிரம் வரை விற்பனையானது. தோவாளை பூ மார்க்கெட்டிலும் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. பிச்சி, மல்லிகை பூக்களின் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து காணப்பட்டது. அவை கிலோ ரூ. 1000-க்கு மேல் விற்பனையானது. இந்த நிலையில் இன்றும் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை உயர்ந்தது. சம்பங்கி, கேந்தி, அரளி பூக்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

    • கடந்த வாரம் குண்டுமல்லி கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், அரளி ரூ.120-க்கும், ரோஜா ரூ.150-க்கும், விற்பனையானது.
    • பூக்களின் வரத்து குறைந்ததாலும், ஐப்பசி மாத வளர்பிறையையொட்டி கோவில் மற்றும் திருமண விசேஷங்கள் இருப்பதால் பூக்களின் விலை‌ கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    கரூர் :

    கரூர் நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த வாரம் குண்டுமல்லி கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், அரளி ரூ.120-க்கும், ரோஜா ரூ.150-க்கும், முல்லை ரூ.400-க்கும், செவ்வந்தி ரூ.150-க்கும் விற்பனையானது.

    நேற்று குண்டு மல்லி கிலோ ரூ.1,000-க்கும், சம்பங்கி ரூ150-க்கும், அரளி ரூ.180-க்கும், ரோஜா ரூ.250-க்கும், முல்லை ரூ.1,000-க்கும், செவ்வந்தி ரூ.250-க்கும் விற்பனையானது. பூக்களின் வரத்து குறைந்ததாலும், ஐப்பசி மாத வளர்பிறையையொட்டி கோவில் மற்றும் திருமண விசேஷங்கள் இருப்பதால் பூக்களின் விலை‌ கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    • விசேஷ நாட்களை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
    • பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லி, முல்லை, சம்பங்கி, செண்டு மல்லி, கோழி கொண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

    இங்கு விளையும் பூக்கள் விவசாயிகளால் நடத்தப் படும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்நிலையில் தற்போது ஆவணி மாதம் வளர்பிறை முகூர்த்த சீசன் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக விசேஷ நாட்களை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

    சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சம்பங்கி பூ ஒரு கிலோ ரூ.100-க்கு விற்ற நிலையில் நேற்று இரு மடங்கு உயர்ந்து ஒரு கிலோ ரூ.220-க்கு விற்பனையானது.

    இதேபோல் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.600-க்கும், முல்லைப் பூ ஒரு கிலோ ரூ.250-க்கும், கோழி கொண்டை ஒரு கிலோ ரூ.130-க்கும், செண்டு மல்லி ஒரு கிலோ ரூ.92-க்கும் விற்பனையானது.

    சம்பங்கி பூக்கள் இரு மடங்கு விலை உயர்ந்தாலும், மற்ற பூக்களுக்கும் நல்ல விலை கிடைத்ததால் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • சராசரியாக நாள் ஒன்றுக்கு 20டன் பூக்கள் விற்பனைக்கு வரும். ஆனால் இன்று 25டன் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
    • கடந்த வாரம் ரூ.500க்கு விற்பனையான மல்லிகை பூ இன்று கிலோ ரூ.3,500க்கு விற்பனை ஆகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பஸ் நிலை யம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான அறிஞர் அண்ணா பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, கள்ளிப்பட்டி, கலிக்க ம்பட்டி, பெருமாள் கோவி ல்பட்டி, சின்னாளபட்டி, செம்பட்டி, சிலுவத்தூர், அதிகாரிப்பட்டி உட்பட பல ஊர்களில் விவசாயிகள் விளைவிக்க கூடிய பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இங்கிருந்து தமிழகம் முழுவதும் மற்றும் கேரளா பாண்டிச்சேரி போன்ற வெளி மாநிலங்களுக்கும் வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்கிறார்கள்.

    தமிழகத்தில் நாளை ஆவணி மாத கடைசி மூகூர்த்தம் என்பதாலும் நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி என்பதாலும் பூக்களின் விலை அதிரடி யாக உயர்ந்துள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 20டன் பூக்கள் விற்பனைக்கு வரும். ஆனால் இன்று 25டன் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

    கடந்த வாரம் ரூ.500க்கு விற்பனையான மல்லிகை பூ இன்று கிலோ ரூ.3,500க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் கடந்த வாரம் ரூ.150 க்கு விற்பனையான கனகாம்ப ரம் தற்பொழுது ரூ.800க்கு விற்பனையாகிறது. ரூ.200க்கு விற்பனையான முல்லை பூ தற்பொழுது ரூ.800க்கு விற்பனை ஆகிறது. ரூ.250 க்கு விற்பனையான ஜாதிப்பூ தற்பொழுது ரூ.700க்கு விற்பனையாகிறது. அதேபோல் ரூ.80க்கு விற்பனையான அரளிப்பூ தற்பொழுது ரூ.200 க்கு விற்பனை ஆகிறது. ரூ.120க்கு விற்பனையான சம்பங்கி ரூ.400க்கும் விற்பனையாகிறது. ரூ.50 விற்பனையான பன்னீர் ரோஸ் தற்பொழுது ரூ.200 க்கு விற்பனை ஆகிறது. ரூ.30க்கு விற்பனையான செவ்வந்தி ரூ.100க்கு விற்பனையாகிறது. செண்டுமல்லி கிலோ ரூ.30 க்கும் வாடாமல்லி கிலோ ரூ.35க்கும் விற்பனை ஆகிறது.

    • சேலம் பூ மார்க்கெட்டுக்கு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
    • ஆயுத பூஜை மற்றும் விஜய தசமியையொட்டி கடந்த 22-ந் தேதி சேலம் மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ 700 ரூபாய்க்கு விற்பனையானது.

    சேலம்:

    சேலம் பூ மார்க்கெட்டுக்கு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த பூக்களை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    விலை உயர்வு

    ஆயுத பூஜை மற்றும் விஜய தசமியையொட்டி கடந்த 22-ந் தேதி சேலம் மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ 700 ரூபாய்க்கு விற்பனையானது. பின்னர் 23-ந் தேதி விலை குறைந்த நிலையில் நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

    இன்று விலை மீண்டும் அதிகரித்து 600 ரூபாயாக உயர்ந்தது. இதேபோல நேற்று 280 ரூபாய்க்கு விற்கப்பட்ட முல்லைப்பூ இன்று 400 ரூபாய்க்கும், ஜாதி மல்லிகை பூ நேற்று 260 விற்கப்பட்ட நிலையில் இன்று 280 ஆகவும் உயர்ந்தது.

    இதே போல காக்கட்டான் 60 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், அரளிப்பூ 120 ரூபாயிலிருந்து 160 ஆகவும் உயர்ந்தது. ஆனாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் பூக்களை வாங்கிச் சென்றனர்.

    முகூர்த்த நாள்

    வருகிற நாட்களில் முகூர்த்த நாள் மற்றும் கோவில் திருவிழாக்கள் இருப்பதாலும் இந்த பூக்கள் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டுபூக்களின் விலை கிடுகிடு உயர்வு

    வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம் ,சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, பேச்சிப்பாறை , வேட்டமங்க லம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லைப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    பூக்கள் பறிக்கும் தருவாய்க்கு வரும்போது விவசாயிகள் கூலி ஆட்கள் மூலம் பூக்களை பறிக்கின்ற னர். பின்னர் கோணிப்பை களில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபா ரிகளுக்கும், அருகில் செயல்பட்டு வரும் பூ ஏல மார்க்கெட்டிற்கும் தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர் . கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

    மேலும் தீபாவளி, கோவில் மற்றும் திருவிழா விசேஷங்கள் போன்ற காரணங்களால் பூ தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது.

    கடந்த வாரம் 300 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ குண்டு மல்லி தற்போது 500 ரூபாய்க்கும், கடந்த வாரம் 70 ரூபாய்க்கு விற்பனையான சம்பங்கி 160 ரூபாய்க்கும், 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி தற்போது 120 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

    இதே போல் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாம்பந்தி பூ 150 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லைப்பூ கிலோ 600 ரூபாய்க்கும் விற்பனையானது.

     தீபாவளியை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

    வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை ரூ.400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.20-க்கும், அரளி கிலோ ரூ.80-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லைப் பூ ரூ.500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.80-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும் ஏலம் போனது.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.800-க்கும், சம்பங்கி கிலோ ரூ.70-க்கும், அரளி கிலோ ரூ.200-க்கும், ரோஜா கிலோ ரூ.250-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.1000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.140-க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயர்வடைந்ததால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • ரோஜா மலர்கள் 100 ரூபாய்க்கும், சம்பங்கி 150 ரூபாய்க்கும், செவ்வந்தி 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
    • டிசம்பர் மாதம் முழுவதும் பனி காலம் என்பதால் மல்லிகை பூக்களின் மகசூல் பெருமளவில் குறையும்.

    மதுரை:

    இந்துக்களின் முக்கிய பண்டிகையான கார்த்திகை தீபத்திருநாள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துவார்கள். இதற்காக மதுரை மார்க்கெட்டுகளில் பூக்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் திரண்டு உள்ளனர்.

    மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் வணிக சந்தையில் வளாகத்தில் இன்று பூக்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர்.

    கார்த்திகை தீப திருநாளையொட்டி மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வழக்கமாக 400 முதல் 800 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த மல்லிகை பூக்கள் இன்று கிலோ 1,800 ரூபாயாக விலை உயர்ந்தது. இது தவிர பிச்சி பூக்கள் 800 ரூபாய்க்கும், முல்லை பூக்கள் 900 ரூபாய்க்கும் விற்கப்பட்டன. ரோஜா மலர்கள் 100 ரூபாய்க்கும், சம்பங்கி 150 ரூபாய்க்கும், செவ்வந்தி 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மற்ற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    இது தொடர்பாக வியாபாரிகள் கூறுகையில், தற்போது பூக்களின் வரத்து குறைவாக காணப்படுவதாலும் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு அதிக அளவில் பூக்களின் தேவை இருப்பதாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தற்போது பனி சீசன் தொடங்கியுள்ளதால் மல்லிகை பூக்களின் மகசூல் பெருமளவில் குறைந்துள்ளதால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    வழக்கமாக மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு தினமும் 50 டன்களுக்கு மேல் மல்லிகை பூக்கள் வரத்து இருந்த நிலையில் தற்போது அதன் வரத்து 30 டன்னாக குறைந்துள்ளது. இதன் காரணமாகவே விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    மேலும் இனி டிசம்பர் மாதம் முழுவதும் பனி காலம் என்பதால் மல்லிகை பூக்களின் மகசூல் பெருமளவில் குறையும். இதன் காரணமாக இதன் விலை ஏற்றம் தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மல்லிகை விலை அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் மற்ற பூக்களை ஆர்வத்துடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • இன்று 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பூ விற்பனைக்கு குவிந்துள்ளது.
    • அதிகாலை முதல் கோயம்பேடு பூ மார்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.

    போரூர்:

    கோயம்பேடு பூ மார்கெட்டுக்கு திருவள்ளூர், ஓசூர், சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மற்றும் ஆந்திர மாநிலம் கடப்பா, கர்னூல் ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் தினசரி விற்பனைக்கு வருகிறது. இன்று 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பூ விற்பனைக்கு குவிந்துள்ளது. பூக்கள் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

    நாளை வைகுண்ட ஏகாதசி பண்டிகை என்பதால் அதிகாலை முதல் கோயம்பேடு பூ மார்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.

    மல்லி ஒரு கிலோ ரூ.1800-க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும், முல்லை-ரூ.900, சாக்லேட் ரோஸ் ரூ.150, பன்னீர் ரோஸ்-ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ சாமந்திப்பூ ரூ.60 வரை மட்டுமே விற்கப்பட்ட நிலையில் இன்று அதன் விலை 2 மடங்காக அதிகரித்து ரூ.120 வரை விற்பனை ஆகிறது.

    இதுகுறித்து பூவியாபாரிகள் கூறும்போது, நாளை வைகுண்ட ஏகாதசி, வருகிற திங்கட்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனவே பூக்கள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது" என்றனர்.

    • பல மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.
    • மற்றும் மற்ற பூக்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கர்களில் மல்லிகைப்பூ உள்பட பல்வேறு பூக்களை சாகுபடி செய்து வருகிறார்கள்.

    தினமும் சுமார் 4 டன் முதல் 5 டன் மல்லிகை உள்பட பல பூக்கள் அறுவடை செய்யப்பட்டு சத்தியமங்கலம் பகுதியில் செயல்படும் பூ மார்க்கெ ட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.

    சத்தியமங்கலம் பூ மார்க் கெட்டில் இருந்து ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகள், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.

    மேலும் விஷேசம், திருவிழா நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்களின் விற்பனை அதிகரித்து காணப்படும். அதே போல் வெளி மாநில திருவிழா காலங்களிலும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகளவில் நடக்கும்.

    இதனால் விஷேசம் மற்றும் முகூர்த்த நாட்களில் 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.5 ஆயிரத்துக்கு மேல் விற்பனையாகும். இதே போல் சாதாரண நாட்களில் மல்லிகைப்பூ 1 கிலோ ரூ.500-க்கும் ஏலம் விற்பனையாகும்.

    இந்த நிலையில் தற்போது தை மாதம் பிறந்ததால் முகூர்த்த நாட்கள் தொட ர்ந்து வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் கோவில் விழாக்களும் நடந்து வருகிறது. இதனால் மல்லிகை மற்றும் மற்ற பூக்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் ஈரோடு உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது. இதனால் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டாரத்தில் மல்லிகை உள்பட பூக்களின் அறுவடை குறைந்து வருகிறது. இதனால் தற்போது குறைந்த அளவே மல்லிப்பூக்கள் அறுவடை செய்யப்பட்டு சத்தியமங்கலம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இதனால் மல்லிகைப்பூ மற்றும் மற்ற பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு மல்லிகைப்பூ 1160-க்கும், முல்லை 600-க்கும் காக்காடா ரூ.550-க்கும் சாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், அரளி ரூ.120-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் பனி பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாகவும் தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதாலும் மல்லி கைபூக்களின் தேவை அதிகரித்தது. இதனால் மல்லிகைப்பூ விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் மல்லிகை ரூ.1900 உயர்ந்து ரூ.4,620-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் மல்லிகை பூக்களின் விலை ரூ.3,460 வரை உயர்ந்து உள்ளது.

    இதே போல் நேற்று முன்தினம் மல்லிகைப்பூ ரூ.2,160-க்கும், முல்லை ரூ.1,445-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம் போனது. ஆனால் நேற்றும் பூக்கள் விலை உயர்ந்து மல்லிகை ரூ.4,620-க்கும், கனகாம்பரம், ரூ.850-க்கும், முல்லை ரூ.2 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    சத்தியமங்கலம் மார்க்கெட்டுக்கு வரத்து குறைவு காரணமாக வியாபாரிகள் முன் கூட்டியே வந்து மல்லிகை பூக்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் உடனடியாக மல்லிகை பூக்கள் விற்பனை செய்யப்பட்டது.

    மேலும் ஈரோட்டில் உள்ள பூ மார்க்கெட்டுகளிலும் வரத்து குறைவு காரணமாக மல்லிகை மற்றும் மற்ற பூக்களின் விலை அதிகரித்தது.

    மேலும் வரும் நாட்களில் கோவில் விழாக்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் வருவதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் பூக்களை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • தினசரி 45-க்கும் அதிகமான வாகனங்களில் பூக்கள் விற்பனைக்கு வரும்.
    • மல்லி, சாக்லேட் ரோஸ் உள்ளிட்ட பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வழக்கமாக ஓசூர், சேலம், ஆந்திரா மாநிலம் கடப்பா, வேலூர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி 45-க்கும் அதிகமான வாகனங்களில் பூக்கள் விற்பனைக்கு வரும்.

    ஆனால் பரவலாக பெய்த மழை மற்றும் பனி காரணமாக தற்போது 30-க்கும் குறைவான வாகனங்களில் மட்டுமே கோயம்பேடு சந்தைக்கு பூக்கள் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக மல்லி, சாக்லேட் ரோஸ் உள்ளிட்ட பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.

    இதன் காரணமாக சாமந்தி, ரோஜா, மல்லி ஆகிய பூக்களின் விலை திடீரென அதிகரித்து உள்ளது. வரத்து குறைவால் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.2500 வரை விற்கப்படுகிறது.

    இதேபோல் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.100-க்கு விற்ற சாமந்தி பூ தற்போது ரூ.160-க்கும், கிலோ ரூ.160-க்கு விற்ற சாக்லேட் ரோஸ் ரூ.240-க்கும், கிலோ ரூ.100-க்கு விற்ற பன்னீர் ரோஸ் ரூ.160-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • நாளை மார்கழி அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி.
    • சேலம் மாவட்டம் முழுவதும் தற்போது பனியின் தாக்கம் அதிகளவில் உள்ளது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    நாளை (திங்கட்கிழமை) மார்கழி அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி ஆகும். மற்றும் ஆங்கில புத்தாண்டு இன்னும் சில நாட்களில் பிறக்க உள்ளது. இதனால் தேவை அதிகரித்துள்ளதால் சேலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

    இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டம் முழுவதும் தற்போது பனியின் தாக்கம் அதிகளவில் உள்ளது. பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், பூக்களின் விளைச்சல் பாதிக்கப்படுவது வழக்கம் ஆகும். இதனால் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு விவசாயிகளிடம் இருந்து பூக்கள் வரத்து குறைந்து விட்டது. இந்த நிலையில் அடுத்தடுத்து அமாவாசை, ஆங்கில புத்தாண்டு ஆகிய விசேஷ நாட்கள் வருவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. பூக்கள் வரத்தும் குறைவாக இருக்கிறது. இதன் காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது என்றனர்.

    ×