search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சதுர்த்தி, முகூர்த்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
    X

    திண்டுக்கல் பூமார்க்கெட்டில் இன்று விற்பனைக்கு வந்த பூக்களை படத்தில் காணலாம்.

    விநாயகர் சதுர்த்தி, முகூர்த்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

    • சராசரியாக நாள் ஒன்றுக்கு 20டன் பூக்கள் விற்பனைக்கு வரும். ஆனால் இன்று 25டன் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
    • கடந்த வாரம் ரூ.500க்கு விற்பனையான மல்லிகை பூ இன்று கிலோ ரூ.3,500க்கு விற்பனை ஆகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பஸ் நிலை யம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான அறிஞர் அண்ணா பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, கள்ளிப்பட்டி, கலிக்க ம்பட்டி, பெருமாள் கோவி ல்பட்டி, சின்னாளபட்டி, செம்பட்டி, சிலுவத்தூர், அதிகாரிப்பட்டி உட்பட பல ஊர்களில் விவசாயிகள் விளைவிக்க கூடிய பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இங்கிருந்து தமிழகம் முழுவதும் மற்றும் கேரளா பாண்டிச்சேரி போன்ற வெளி மாநிலங்களுக்கும் வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்கிறார்கள்.

    தமிழகத்தில் நாளை ஆவணி மாத கடைசி மூகூர்த்தம் என்பதாலும் நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி என்பதாலும் பூக்களின் விலை அதிரடி யாக உயர்ந்துள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 20டன் பூக்கள் விற்பனைக்கு வரும். ஆனால் இன்று 25டன் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

    கடந்த வாரம் ரூ.500க்கு விற்பனையான மல்லிகை பூ இன்று கிலோ ரூ.3,500க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் கடந்த வாரம் ரூ.150 க்கு விற்பனையான கனகாம்ப ரம் தற்பொழுது ரூ.800க்கு விற்பனையாகிறது. ரூ.200க்கு விற்பனையான முல்லை பூ தற்பொழுது ரூ.800க்கு விற்பனை ஆகிறது. ரூ.250 க்கு விற்பனையான ஜாதிப்பூ தற்பொழுது ரூ.700க்கு விற்பனையாகிறது. அதேபோல் ரூ.80க்கு விற்பனையான அரளிப்பூ தற்பொழுது ரூ.200 க்கு விற்பனை ஆகிறது. ரூ.120க்கு விற்பனையான சம்பங்கி ரூ.400க்கும் விற்பனையாகிறது. ரூ.50 விற்பனையான பன்னீர் ரோஸ் தற்பொழுது ரூ.200 க்கு விற்பனை ஆகிறது. ரூ.30க்கு விற்பனையான செவ்வந்தி ரூ.100க்கு விற்பனையாகிறது. செண்டுமல்லி கிலோ ரூ.30 க்கும் வாடாமல்லி கிலோ ரூ.35க்கும் விற்பனை ஆகிறது.

    Next Story
    ×