search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
    X

    பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டுபூக்களின் விலை கிடுகிடு உயர்வு

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம் ,சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, பேச்சிப்பாறை , வேட்டமங்க லம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லைப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    பூக்கள் பறிக்கும் தருவாய்க்கு வரும்போது விவசாயிகள் கூலி ஆட்கள் மூலம் பூக்களை பறிக்கின்ற னர். பின்னர் கோணிப்பை களில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபா ரிகளுக்கும், அருகில் செயல்பட்டு வரும் பூ ஏல மார்க்கெட்டிற்கும் தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர் . கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

    மேலும் தீபாவளி, கோவில் மற்றும் திருவிழா விசேஷங்கள் போன்ற காரணங்களால் பூ தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது.

    கடந்த வாரம் 300 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ குண்டு மல்லி தற்போது 500 ரூபாய்க்கும், கடந்த வாரம் 70 ரூபாய்க்கு விற்பனையான சம்பங்கி 160 ரூபாய்க்கும், 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி தற்போது 120 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

    இதே போல் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாம்பந்தி பூ 150 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லைப்பூ கிலோ 600 ரூபாய்க்கும் விற்பனையானது.

    தீபாவளியை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×