என் மலர்tooltip icon

    இந்தியா

    மது அருந்துவதில் மத்தியபிரதேச பெண்கள் முதலிடம்: காங்கிரஸ் தலைவர் சர்ச்சை கருத்து
    X

    மது அருந்துவதில் மத்தியபிரதேச பெண்கள் முதலிடம்: காங்கிரஸ் தலைவர் சர்ச்சை கருத்து

    • போதைப் பொருளை ஒழிக்க பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • போதைப் பொருள் வர்த்தகத்தில் மத்திய பிரதேசம் முந்திவிட்டது என்றார்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.

    அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மத்திய பிரதேச மாநில பெண்கள், நாட்டின் பிற பகுதிகளை விட அதிகமாக மது அருந்துகின்றனர். இதற்காக மத்திய பிரதேசத்துக்கு பதக்கம் அளிக்கவேண்டும்.

    மத்திய பிரதேசத்தை வளமான மாநிலமாக மாற்ற கனவு காணும் பா.ஜ.க. தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

    போதைப் பொருளை ஒழிக்க பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நமது சகோதரிகளும், மகள்களும் போதைப் பொருளை பயன்படுத்த தொடங்கி விட்டனர். போதைப் பொருள் பயன்பாட்டிலும் மத்திய பிரதேச பெண்கள்தான் முதலிடத்தில் உள்ளனர்.

    போதைப் பொருள் வர்த்தகத்தில் பஞ்சாப் போன்ற மாநிலங்களை மத்திய பிரதேசம் முந்திவிட்டது என தெரிவித்தார்.

    ஜிது பட்வாரியின் இந்தக் கருத்து அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், ஜிது பட்வாரிக்கு முதல் மந்திரி மோகன் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜிது பட்வாரியின் கருத்து, பெண்களுக்கு எதிரான காங்கிரசின் குறுகிய மனப்பான்மையை காட்டுவதாகவும், இதற்காக காங்கிரஸ் தலைவர் கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×