என் மலர்
நீங்கள் தேடியது "ஜித்து பத்வாரி"
- போதைப் பொருளை ஒழிக்க பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- போதைப் பொருள் வர்த்தகத்தில் மத்திய பிரதேசம் முந்திவிட்டது என்றார்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலத்தில் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.
அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மத்திய பிரதேச மாநில பெண்கள், நாட்டின் பிற பகுதிகளை விட அதிகமாக மது அருந்துகின்றனர். இதற்காக மத்திய பிரதேசத்துக்கு பதக்கம் அளிக்கவேண்டும்.
மத்திய பிரதேசத்தை வளமான மாநிலமாக மாற்ற கனவு காணும் பா.ஜ.க. தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
போதைப் பொருளை ஒழிக்க பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நமது சகோதரிகளும், மகள்களும் போதைப் பொருளை பயன்படுத்த தொடங்கி விட்டனர். போதைப் பொருள் பயன்பாட்டிலும் மத்திய பிரதேச பெண்கள்தான் முதலிடத்தில் உள்ளனர்.
போதைப் பொருள் வர்த்தகத்தில் பஞ்சாப் போன்ற மாநிலங்களை மத்திய பிரதேசம் முந்திவிட்டது என தெரிவித்தார்.
ஜிது பட்வாரியின் இந்தக் கருத்து அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜிது பட்வாரிக்கு முதல் மந்திரி மோகன் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜிது பட்வாரியின் கருத்து, பெண்களுக்கு எதிரான காங்கிரசின் குறுகிய மனப்பான்மையை காட்டுவதாகவும், இதற்காக காங்கிரஸ் தலைவர் கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- கமல்நாத் அந்த பதிவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
- ஜிது பத்வாரி உயர்கல்வி துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார்.
மத்திய பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைவராக ஜிது பத்வாரி நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவராக இருந்துவந்த கமல்நாத் அந்த பதிவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜிது பத்வாரி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரிடம் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியின் போது ஜிது பத்வாரி அம்மாநில உயர்கல்வி துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார்.

230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. 163 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. வெறும் 66 தொகுகதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியது.
தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைவராக ஜிது பத்வாரி நியமிக்கப்பட்டு இருப்பதை அடுத்து, அம்மாநிலத்தில் கட்சி ரீதியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






