என் மலர்
நீங்கள் தேடியது "தங்கம்"
- நேற்று சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலை நிலவரம்.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,370-க்கும், சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,960-க்கும் விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 125 ரூபாய்க்கும், கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
04-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360
03-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320
02-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320
01-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,200
31-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
04-08-2025- ஒரு கிராம் ரூ.123
03-08-2025- ஒரு கிராம் ரூ.123
02-08-2025- ஒரு கிராம் ரூ.123
01-08-2025- ஒரு கிராம் ரூ.123
31-07-2025- ஒரு கிராம் ரூ.125
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவில் திருவிழா நடைபெறும் நேரத்தில் அந்த பகுதியில் விடிய விடிய மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டு இருந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே உள்ள பெருங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 30). இவர்களுக்கு 1 குழந்தை உள்ளது. வினோத் மதுரையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கிருஷ்ண வேணியின் உறவினர் வீடு வள்ளியூர் அருகே உள்ள ஊத்தடி கிராமத்தில் உள்ளது. அங்கு அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் கிருஷ்ணவேணி அதனை பார்ப்பதற்காக பெருங்குடியில் இருந்து நேற்று தனது குழந்தையுடன் உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார்.
தொடர்ந்து இரவில் கோவிலுக்கு சென்று கொடை பார்த்துவிட்டு வீட்டின் முதல் மாடியில் குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்தார்.
இன்று அதிகாலையில் வீட்டுக்குள் ஏறி குதித்த மர்ம நபர் ஒருவர் கிருஷ்ண வேணியின் கழுத்தில் கிடந்த சுமார் 3 பவுன் தங்க நகையை பறிக்க முயன்றுள்ளார்.
தூங்கி கொண்டிருந்த கிருஷ்ணவேணி அதிர்ச்சியடைந்து தனது சங்கிலியை பிடித்துக்கொள்ள அதில் பாதி செயின் மர்ம நபரின் கையில் சிக்கியது.
உடனே மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். கிருஷ்ணவேணி கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். தொடர்ந்து வீட்டின் முதல் தளத்தில் இருந்த பீரோவில் கிருஷ்ண வேனி சுமார் 12 பவுன் நகை வைத்திருந்துள்ளார். அதையும் மர்ம நபர் திருடிக்கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கிருஷ்ணவேணி வள்ளியூர் போலீசில் தனது 15 பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடிச்சென்றது குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் திருவிழா நடைபெறும் நேரத்தில் அந்த பகுதியில் விடிய விடிய மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டு இருந்தது. இதன் காரணமாகவும், காற்றுக்காகவும் கிருஷ்ணவேணி வீட்டின் கதவை திறந்து வைத்துக்கொண்டு தூங்கி உள்ளார். இதனை மர்ம நபர் அறிந்து நகையை பறித்துச்சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே அந்த பகுதியில் உள்ளி சி.சி.டி.வி. காமிராக்களை இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்து துணிகர திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.65,480-க்கும் விற்பனையானது.
- கடந்த 4 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.65,720-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.65,480-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,195-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,560-க்கும் விற்பனையானது.
கடந்த 4 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
25-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,480
24-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,720
23-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,840
22-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,840
21-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,160
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
25-03-2025- ஒரு கிராம் ரூ.110
24-03-2025- ஒரு கிராம் ரூ.110
23-03-2025- ஒரு கிராம் ரூ.110
22-03-2025- ஒரு கிராம் ரூ.110
21-03-2025- ஒரு கிராம் ரூ.112
- தங்கம் விலை வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.46,640-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.46,640-க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.46,560-க்கும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,820-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கும் பார் வெள்ளி ரூ.78,000-க்கும் விற்பனையாகிறது.
- 11 நகை திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வந்தது.
- 2 கைப்பேசிகள், இரண்டு இரு சக்கர வாகனங்கள், இரு நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், நமண சமுத்திரம் மற்றும் அரிமளம் பகுதிகளில் நடைபெற்ற 11 திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 5 பேரை தனிப்படையினா் கைது செய்து, அவா்களிடமிருந்து தங்கம் மற்றும் வெளளிக் கட்டிகளைப் பறிமுதல் செய்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உட்கோட்டம் திருமயம், நமணசமுத்திரம் மற்றும் அரிமளம் பகுதிகளில் நடைபெற்ற 11 நகை திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணையில், அறந்தாங்கி எல்என்புரத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் தேவா (வயது58), சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கீழத்தெரு மீனாட்சி சுந்தரம் மகன் ஹரிஹரன் (44), ஆவுடையார்கோவில் முண்டகவயல் சமத்துவபுரத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் வெங்கடேஷ் (26), அறந்தாங்கி பூவைமாநகா் அலஞ்சரக்காடு கணபதி மகன் சொக்கலிங்கம் (54), கீரமங்கலம் வேப்பங்குடி மேற்கு செட்டித் தெருவைச் சோ்ந்த துரைராஜ் மகன் தங்கபாண்டியன் (46) ஆகிய 5 பேரையும் தனிப்படையினா் கைது செய்தனா்.
இவா்களிடமிருந்து 100 கிராம் எடை கொண்ட தங்கக் கட்டி, 5.750 கிலோ எடை கொண்ட வெள்ளிக் கட்டிகள், ரொக்கம் ரூ.1,500, 2 கைப்பேசிகள், இரண்டு இரு சக்கர வாகனங்கள், இரு நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனா். குற்றவாளிகளைக் கைது செய்த தனிப்படையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே நேரில் அழைத்துப் பாராட்டினார்.






