என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிளகாய் பொடி"

    • துப்பட்டாவால் முகத்தை முழுவதுமாக மூடிய பெண் ஒருவர் நகைக்கடைக்கு வந்துள்ளார்.
    • இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலானது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நகைக்கடையில் மிளகாய் போடி தூய் நகையை திருட முயன்ற பெண்ணை கடைக்காரர் 20 முறை அறைந்த சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

    நவம்பர் 3 ஆம் தேதி அன்று நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலானது.

    துப்பட்டாவால் முகத்தை முழுவதுமாக மூடிய பெண் ஒருவர் நகைக்கடைக்கு வந்துள்ளார். அப்போது திடீரென கையில் மறைத்துவைத்திருந்த மிளகாய் பொடியை கடைக்காரர் மீது தூவி நகையை கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.

    மிளகாய் போடி கண்ணில் விழாததால் சுதாரித்துக்கொண்ட கடைக்காரர் அந்த பெண்ணை பலமுறை பலமாக ஆராய்ந்துள்ளார். அதாவது கிட்டத்தட்ட 25 வினாடிகளில் 20 முறை அப்பெண்ணை பளார் பளார் என்று அவர் அறைந்துள்ளார்.

    இது தொடர்பாக கடைக்காரர் புகார் கொடுத்த மறுத்த நிலையிலும், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருட முயன்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார்.
    • மேலும் வெந்த புண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூரம் டெல்லியில் நடந்துள்ளது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் மதங்கிர் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ் (28). தினேசுக்கு திருமணமாகி 8 ஆண்டு ஆகிறது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தது. 2 ஆண்டுக்கு முன் தினேஷ்மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். அப்போது போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே, தினேஷுக்கும், அவரது மனைவிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இந்நிலையில், அதிகாலை 3 மணி அளவில் ஊரே இரவின் அமைதியில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தபோது, 'அய்யோ, அம்மா' என்ற ஆணின் கதறல் சத்தம் அக்கம்பக்கத்தினர் தூக்கத்தைக் கலைத்தது.

    பலரும் எழுந்து ஓடிவந்தனர். வலியில் கதறித் துடிப்பது தினேஷ் என தெரிந்தது. வீடு உள்புறம் பூட்டப்பட்டிருக்க தினேஷ் கதறிக் கொண்டிருக்க, பலரும் கதவைத் தட்டினர்.

    சிறிது நேரத்துக்குப் பின் கதவு திறக்கப்பட்டது. தினேஷ் உடல் வெந்த நிலையில் கதறுவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

    சில நாள் சிகிச்சைக்குப் பின், பேசும் நிலைக்கு வந்த தினேஷ் அளித்த வாக்குமூலம் அவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

    'அன்று நானும், என் மகளும் தூங்கிக் கொண்டிருந்தோம். திடீரென்று என் உடல் முழுவதும் கடுமையான எரிச்சலான வலியை உணர்ந்து திடுக்கிட்டு கண்விழித்தேன். அருகில் என் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் என் உடலின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிக் கொண்டிருந்தாள். அத்துடன் நிறுத்தாமல் அந்த தீக்காயத்தில் மிளகாய் பொடியையும் அள்ளித் தூவினாள்.

    நான் வலி பொறுக்க முடியாமல் கதறினேன். 'வேண்டாம் வேண்டாம்' என்று கதறியபோது என் மனைவி, நீங்கள் கத்தினால் நான் இன்னும் எண்ணெய் ஊற்றுவேன் என்று மிரட்டினாள்' என்றார் தினேஷ்.

    மருத்துவமனை படுக்கையில் கிடந்தபடியே தன் மனைவி மீது போலீசில் புகார் அளித்தார் அவர். தினேஷின், மார்பு, முகம் மற்றும் கைகளில் ஆழமான தீக்காயங்கள் இருந்தது. தீவிர சிகிச்சைக்குப் பின் அவர் உடல்நலம் தேறி வருகிறார். தினேஷ் மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மிளகாய் பொடி-ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    மதுரை

    மதுரை அண்ணாநகர் போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் ரிங்ரோடு அம்மா திடல் பகுதியில் சென்றபோது சிலர் பதுங்கி இருப்பதை கண்டனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அவர்களை சோதனை செய்தபோது 2 கத்திகள், 2 கயிறுகள், 4 கைக்குட்டைகள் மற்றும் மிளகாய் பொடி பாக்கெட்டு கள் இருப்பது தெரியவந்தது.

    விசாரணையில், அவர்கள் கரும்பாலை நடுத்தெரு கிருஷ்ணன் மகன் கார்த்திக் என்ற லெப்ட் கார்த்திக் (வயது27), திருப்பதி (25), கரும்பாலை நாகராஜ் மகன் விக்னேஷ் என்ற விக்கி (26), அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் மகன் கனிஷ்கர் (26), விஸ்வநாதன் மகன் சரவணன் (26), திருப்பாலை ரெட்ரோஸ் தெருவை சேர்ந்த சின்னத்தம்பி மகன் அஜித்குமார் (33) என்று தெரியவந்தது.

    அவர்கள் குற்ற செயல்க ளில் ஈடுபட பதுங்கியி ருந்தது தெரியவந்ததால் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ×