search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chilli powder"

    • மிளகாய் பொடி-ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    மதுரை

    மதுரை அண்ணாநகர் போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் ரிங்ரோடு அம்மா திடல் பகுதியில் சென்றபோது சிலர் பதுங்கி இருப்பதை கண்டனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அவர்களை சோதனை செய்தபோது 2 கத்திகள், 2 கயிறுகள், 4 கைக்குட்டைகள் மற்றும் மிளகாய் பொடி பாக்கெட்டு கள் இருப்பது தெரியவந்தது.

    விசாரணையில், அவர்கள் கரும்பாலை நடுத்தெரு கிருஷ்ணன் மகன் கார்த்திக் என்ற லெப்ட் கார்த்திக் (வயது27), திருப்பதி (25), கரும்பாலை நாகராஜ் மகன் விக்னேஷ் என்ற விக்கி (26), அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் மகன் கனிஷ்கர் (26), விஸ்வநாதன் மகன் சரவணன் (26), திருப்பாலை ரெட்ரோஸ் தெருவை சேர்ந்த சின்னத்தம்பி மகன் அஜித்குமார் (33) என்று தெரியவந்தது.

    அவர்கள் குற்ற செயல்க ளில் ஈடுபட பதுங்கியி ருந்தது தெரியவந்ததால் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் மங்கலம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட சென்றனர்.
    • போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்தியா விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அடுத்த மங்கலம் உருவையாறு சாவித்திரி நகரை சேர்ந்தவர் தனபால் வயது (22).

    கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி உருவையாறு மற்றும் நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு ஏற்பட்ட மோதலில் தனபால் தரப்பினர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்று கோர்டு உத்தரவின் பேரில் மங்கலம் போலீஸ் நிலையத்தில் காலையும் மாலையும் ஜாமினில் இரு வேளையும் கையெழுத்திட்டு வருகின்றனர்.

    தனபால் மற்றும் அவரது நண்பர் ஒரு மோட்டார் சைக்கிளில் மங்கலம் போலீஸ் நிலையத்தில் கையெ ழுத்திட சென்றனர்.பைக்கை தனபால் ஓட்ட பின்னால் மணிபாரதி மற்றும் வித்யாசாகர் இருவரும் அமர்ந்து வந்தனர்.

    அப்போது உருவையாறு அமுதசுரபி பார் அருகே வந்து கொண்டிருந்த போது அவர்களை நோக்கி எதிரே வந்த தினேஷ் மற்றும் சதீஷ் ஆகியோர் வழிமறித்து அவர்களது கண்களில் மிளகாய் பொடியை தூவி கொலை மிரட்டல் விடுத்தனர்.

     இதனால் அதிர்ச்சி யடைந்த தனபால் மற்ற அவர் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தனபால் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீதும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மங்களம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்தியா விசாரணை நடத்தி வருகிறார்.

    ×