என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chilli powder"

    • தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார்.
    • மேலும் வெந்த புண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூரம் டெல்லியில் நடந்துள்ளது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் மதங்கிர் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ் (28). தினேசுக்கு திருமணமாகி 8 ஆண்டு ஆகிறது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தது. 2 ஆண்டுக்கு முன் தினேஷ்மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். அப்போது போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே, தினேஷுக்கும், அவரது மனைவிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இந்நிலையில், அதிகாலை 3 மணி அளவில் ஊரே இரவின் அமைதியில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தபோது, 'அய்யோ, அம்மா' என்ற ஆணின் கதறல் சத்தம் அக்கம்பக்கத்தினர் தூக்கத்தைக் கலைத்தது.

    பலரும் எழுந்து ஓடிவந்தனர். வலியில் கதறித் துடிப்பது தினேஷ் என தெரிந்தது. வீடு உள்புறம் பூட்டப்பட்டிருக்க தினேஷ் கதறிக் கொண்டிருக்க, பலரும் கதவைத் தட்டினர்.

    சிறிது நேரத்துக்குப் பின் கதவு திறக்கப்பட்டது. தினேஷ் உடல் வெந்த நிலையில் கதறுவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

    சில நாள் சிகிச்சைக்குப் பின், பேசும் நிலைக்கு வந்த தினேஷ் அளித்த வாக்குமூலம் அவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

    'அன்று நானும், என் மகளும் தூங்கிக் கொண்டிருந்தோம். திடீரென்று என் உடல் முழுவதும் கடுமையான எரிச்சலான வலியை உணர்ந்து திடுக்கிட்டு கண்விழித்தேன். அருகில் என் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் என் உடலின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிக் கொண்டிருந்தாள். அத்துடன் நிறுத்தாமல் அந்த தீக்காயத்தில் மிளகாய் பொடியையும் அள்ளித் தூவினாள்.

    நான் வலி பொறுக்க முடியாமல் கதறினேன். 'வேண்டாம் வேண்டாம்' என்று கதறியபோது என் மனைவி, நீங்கள் கத்தினால் நான் இன்னும் எண்ணெய் ஊற்றுவேன் என்று மிரட்டினாள்' என்றார் தினேஷ்.

    மருத்துவமனை படுக்கையில் கிடந்தபடியே தன் மனைவி மீது போலீசில் புகார் அளித்தார் அவர். தினேஷின், மார்பு, முகம் மற்றும் கைகளில் ஆழமான தீக்காயங்கள் இருந்தது. தீவிர சிகிச்சைக்குப் பின் அவர் உடல்நலம் தேறி வருகிறார். தினேஷ் மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் மங்கலம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட சென்றனர்.
    • போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்தியா விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அடுத்த மங்கலம் உருவையாறு சாவித்திரி நகரை சேர்ந்தவர் தனபால் வயது (22).

    கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி உருவையாறு மற்றும் நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு ஏற்பட்ட மோதலில் தனபால் தரப்பினர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்று கோர்டு உத்தரவின் பேரில் மங்கலம் போலீஸ் நிலையத்தில் காலையும் மாலையும் ஜாமினில் இரு வேளையும் கையெழுத்திட்டு வருகின்றனர்.

    தனபால் மற்றும் அவரது நண்பர் ஒரு மோட்டார் சைக்கிளில் மங்கலம் போலீஸ் நிலையத்தில் கையெ ழுத்திட சென்றனர்.பைக்கை தனபால் ஓட்ட பின்னால் மணிபாரதி மற்றும் வித்யாசாகர் இருவரும் அமர்ந்து வந்தனர்.

    அப்போது உருவையாறு அமுதசுரபி பார் அருகே வந்து கொண்டிருந்த போது அவர்களை நோக்கி எதிரே வந்த தினேஷ் மற்றும் சதீஷ் ஆகியோர் வழிமறித்து அவர்களது கண்களில் மிளகாய் பொடியை தூவி கொலை மிரட்டல் விடுத்தனர்.

     இதனால் அதிர்ச்சி யடைந்த தனபால் மற்ற அவர் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தனபால் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீதும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மங்களம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்தியா விசாரணை நடத்தி வருகிறார்.

    • மிளகாய் பொடி-ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    மதுரை

    மதுரை அண்ணாநகர் போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் ரிங்ரோடு அம்மா திடல் பகுதியில் சென்றபோது சிலர் பதுங்கி இருப்பதை கண்டனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அவர்களை சோதனை செய்தபோது 2 கத்திகள், 2 கயிறுகள், 4 கைக்குட்டைகள் மற்றும் மிளகாய் பொடி பாக்கெட்டு கள் இருப்பது தெரியவந்தது.

    விசாரணையில், அவர்கள் கரும்பாலை நடுத்தெரு கிருஷ்ணன் மகன் கார்த்திக் என்ற லெப்ட் கார்த்திக் (வயது27), திருப்பதி (25), கரும்பாலை நாகராஜ் மகன் விக்னேஷ் என்ற விக்கி (26), அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் மகன் கனிஷ்கர் (26), விஸ்வநாதன் மகன் சரவணன் (26), திருப்பாலை ரெட்ரோஸ் தெருவை சேர்ந்த சின்னத்தம்பி மகன் அஜித்குமார் (33) என்று தெரியவந்தது.

    அவர்கள் குற்ற செயல்க ளில் ஈடுபட பதுங்கியி ருந்தது தெரியவந்ததால் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ×