என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்
மிளகாய் பொடி தூவி வாலிபரை கொல்ல முயற்சி
- மோட்டார் சைக்கிளில் மங்கலம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட சென்றனர்.
- போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்தியா விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அடுத்த மங்கலம் உருவையாறு சாவித்திரி நகரை சேர்ந்தவர் தனபால் வயது (22).
கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி உருவையாறு மற்றும் நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு ஏற்பட்ட மோதலில் தனபால் தரப்பினர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்று கோர்டு உத்தரவின் பேரில் மங்கலம் போலீஸ் நிலையத்தில் காலையும் மாலையும் ஜாமினில் இரு வேளையும் கையெழுத்திட்டு வருகின்றனர்.
தனபால் மற்றும் அவரது நண்பர் ஒரு மோட்டார் சைக்கிளில் மங்கலம் போலீஸ் நிலையத்தில் கையெ ழுத்திட சென்றனர்.பைக்கை தனபால் ஓட்ட பின்னால் மணிபாரதி மற்றும் வித்யாசாகர் இருவரும் அமர்ந்து வந்தனர்.
அப்போது உருவையாறு அமுதசுரபி பார் அருகே வந்து கொண்டிருந்த போது அவர்களை நோக்கி எதிரே வந்த தினேஷ் மற்றும் சதீஷ் ஆகியோர் வழிமறித்து அவர்களது கண்களில் மிளகாய் பொடியை தூவி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதனால் அதிர்ச்சி யடைந்த தனபால் மற்ற அவர் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தனபால் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீதும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மங்களம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்தியா விசாரணை நடத்தி வருகிறார்.






