search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனல்மின் நிலைய என்ஜினீயர் வீட்டில் கொள்ளை - மர்நபர்களை பிடிக்க தனிப்படை வேட்டை
    X

    அனல்மின் நிலைய என்ஜினீயர் வீட்டில் கொள்ளை - மர்நபர்களை பிடிக்க தனிப்படை வேட்டை

    • மேட்டூரை அடுத்த தொட்டில்பட்டியில் உள்ளது. அங்கு அனல் மின் நிலைய உதவி செயற்பொறியாளரான சந்திரகலா குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

    மேட்டூர்:

    ேசலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையத்திற்கு சொந்தமான குடியிருப்பு மேட்டூரை அடுத்த தொட்டில்பட்டியில் உள்ளது. அங்கு அனல் மின் நிலைய உதவி செயற்பொறியாளரான சந்திரகலா குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு சேலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    நேற்று திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

    பீரோவில் இருந்த நகைகள், பணம் கொள்ளை போய் இருந்தது. இதுதொடர்பாக கருமலைக்கூடல் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று துப்பு துலக்கி வருகிறார்கள்.

    Next Story
    ×