search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "highwayman"

    • ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்
    • சென்னை மடிப்பாக்கத்தில் தங்கி கட்டிட பணி செய்தனர்

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் (வயது 34). இவரது உறவினர் சுமதி (32). இருவரும் சென்னை மடிப்பாக்கத்தில் தங்கி கட்டிட பணி செய்து வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் விக்கிரவாண்டி தனியார் கல்லுாரி அருகே வந்த போது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த மர்ம ஆசாமி சுமதி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் செயினை அறுத்துக் கொண்டு தப்பிவிட்டார். இது பற்றி விக்கிரவாண்டி போலீசில் சுமதி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து மற்றும் போலீசார் வழக்கு பதிந்து முகமூடி கொள்ளையனை தேடி வருகின்றனர்.

    • பெரியார் பஸ் நிலையம் அருகே ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறி செய்த சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வாளை காட்டி கண்ணனை மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்துச்சென்றனர்.

    மதுரை

    மதுரை திடீர்நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது45), ஆட்டோ டிரைவர். பெரியார் பஸ் நிலையம் அருகே இவர் நின்றிருந்தபோது சிறுவன் உள்பட 4 பேர் அங்கு வந்தனர். அவர்கள் வாளை காட்டி கண்ணனை மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்துச்சென்றனர். இதுகுறித்து திடீர் நகர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி பணத்தை பறித்துச்சென்ற திடீர் நகர் சதீஷ்குமார் (21), குடிசை மாற்று வாரிய குடியிருப்புசேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (21) ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகர் பத்ரு ஹரி (20), 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • மதுரையில் ரெயில்வே என்ஜினீயரிடம் வழிப்பறி செய்ா 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க கமிஷனர் உத்தரவிட்டார்.

    மதுரை

    மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 39). இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக உள்ளார். மதுரை ெரயில் நிலையத்தில் நடந்து வரும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த நிலையில் பிரேம்குமார் சம்பவத்தன்று இரவு வீட்டின் அருகே நடந்து சென்றபோது குடிபோதையில் இருந்த 3 வாலிபர்கள் அவரை வழி மறித்து தகராறு செய்தனர். அப்போது அவரது செல்போன் கீழே விழுந்து உடைந்தது.

    மேலும் அந்த வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். பிரேம்குமார் வேறு வழியின்றி அவர்களிடம் ஆயிரம் ரூபாயை ெகாடுத்தார். அதை வாங்கி கொண்டு அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    இது தொடர்பாக தல்லா குளம் போலீசில் பிரேம் குமார் புகார் கொடுத்தார். இந்த புகார் மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்தி ரன் நாயர் கவனத்திற்கு சென்றது. இதில் தொடர் புடைய குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க அவர் உத்தரவிட்டார்.

    அதன்படி மதுரை மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த், உதவி கமிஷனர் ஜெகன்நாதன் ஆகியோர் மேற்பார்வையில் தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தி, சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் பிரேம்குமாரிடம் வழிப்பறி செய்த வாலிபர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் வழிப்பறி செய்தவர்கள் பற்றிய விவரம் தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் முல்லை நகருக்கு சென்றனர். அங்கு நேருஜி தெருவில் பதுங்கி இருந்த 3 வாலிபர்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இதில் அவர்கள் முல்லை நகர், நேருஜி தெரு, சண்முக சுந்தரம் மகன் தினேஷ் குமார் என்ற மாணிக்கம் (22), அவரது சகோதரர் கணேசன் (24), செக்கானூ ரணி செந்தில்குமார் மகன் சந்துரு (19) என்பது தெரிய வந்தது. இதையடுத்து தல்லாகுளம் போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

    • மேலூர் அருகே லாரி டிரைவர் உள்பட 2 பேரிடம் கத்தியை காட்டி மர்மநபர்கள் வழிப்பறி செய்தனர்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் விஜயன் (வயது37). மினி லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று திருச்சியிலிருந்து மதுரைக்கு லாரியில் வந்து கொண்டிருந்தார். மேலூர் அருகே உள்ள தெற்குபட்டி நான்கு வழிச்சாலையில் விஜயன் லாரியை நிறுத்தி கீழே இறங்கினார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென விஜயனை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,840 மற்றும் வெள்ளி நகையையும் பறித்து கொண்டு தப்பினர். இதே போல் மேலூர் அருகே உள்ள சுண்ணாம்பூரை சேர்ந்தவர் முருக பெருமாள். இவர் மோட்டார் சைக்கிளில் மேலூர் நான்கு வழிச்சாலையில் வந்த போது மர்ம நபர்கள் மறித்து கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளை மறித்தனர். 2 சம்பவங்கள் தொடர்பாக மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×