search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dharmapuri constituency"

    • சில வேட்பாளர்கள் மார்க்கெட்டுகளில் பூ மற்றும் காய்கறி, பழங்கள், இறைச்சி விற்பனை செய்தும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
    • ரோபோவை கோவையைச் சேர்ந்த சிவபிரித்தம் என்பவர் ஏஐ டெக்னாலாஜியுடன் வடிவமைத்துள்ளார்.

    தருமபுரி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பல்வேறு வகைகளில் நூதன பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் வாக்காளர்களை கவரும் வகையில் டீ போடுவது, புரோட்டா மற்றும் தோசை சுட்டு தருவது, ஆட்டோ ஓட்டுவது, விவசாய நிலங்களில் டிராக்டர் ஓட்டி வாக்கு சேகரிப்பது என்று விதவிதமான முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    சில வேட்பாளர்கள் மார்க்கெட்டுகளில் பூ மற்றும் காய்கறி, பழங்கள், இறைச்சி விற்பனை செய்தும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் தற்போது ரோபோக்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தருமபுரி டவுன் பஸ் நிலையத்தில் ஒரு ரோபோ அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு அம்மு என்று பெயர் சூட்டியுள்ளனர்.

    இந்த ரோபோவை கோவையைச் சேர்ந்த சிவபிரித்தம் என்பவர் ஏஐ டெக்னாலாஜியுடன் வடிவமைத்துள்ளார்.

    இந்த ரோபோவுக்கு அருகில் யாராவது சென்றால் அந்த ரோபோவின் கையில் உள்ள 'லேப்டாப்பில்' எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது உருவப்படங்களுடன் அ.தி.மு.க. அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை காட்சிப்படுத்துவதுடன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்குகிறது. மேலும், மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா, தே.மு.தி.க. நிறுவனரும், மறைந்த நடிகருமான விஜயகாந்த் ஆகியோர் பழைய பிரசார ஆடியோக்களையும் ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பது போலவும், குறிப்பிட்ட தூரம் மட்டும் நகரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், தருமபுரி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அசோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு அந்த ரோபோ பிரசாரமும் செய்கிறது.

    இதனை ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். குறிப்பாக மாணவ, மாணவிகள் அந்த ரோபோவிடம் சென்று 'செல்பி' எடுத்து செல்கின்றனர். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளும் ஆர்வத்துடன் அதன் அருகில் சென்று துண்டு பிரசுரங்களை எடுத்து செல்கின்றனர்.

    தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 4552 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
    தர்மபுரி:

    தர்மபுரி செட்டிக்கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் தர்மபுரி பாராளுமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அருர்(தனி) ஆகிய சட்டமன்ற இடைத்தேர்லுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன்.

    இந்த வாக்கு எண்ணிக்கை 23 சுற்றுக்களாக எண்ணப்படுகிறது.

    முதல் சுற்றில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:

    பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்-4552 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் டாக்டர் டிஎன்வி செ. செந்தில்குமார்-3868 வாக்குகளும், அ.ம.மு.க. வேட்பாளர் பி.பழனியப்பன்- 233 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

    இதில் அன்புமணி ராமதாஸ் 684 வாக்குகள் அதிகமாக பெற்று முன்னிலையில் உள்ளார்.
    கிருஷ்ணகிரி, தர்மபுரி எம்.பி. தொகுதியில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. #LokSabhaElections2019
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி, ஓசூர், போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர்.

    மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க சக்கர நாற்காலிகள் தயாராக இருந்தன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 1800 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானாலும் உடனடியாக சரிசெய்யப்பட்டு ஓட்டுப்பதிவு தொடங்கியது.

    சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லீம்கள் ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர்.

    தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 1787 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்தல் பணியில் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்களும், பாதுகாப்பு பணியில் 2606 போலீசாரும் ஈடுபட்டனர்.

    வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பெண்களும், ஆண்களும் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். மிக உயரமான வாக்குச்சாவடியாக பென்னாகரத்தை அடுத்த அலக்கட்டு, கோட்டூர்மலையில் அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு கழுதை மூலம் வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு செல்லப்பட்டு ஓட்டுப்பதிவு நடந்தது.

    பென்னாகரம் அடுத்த தாளக்குலம் வாக்குச்சாவடியில் காலை 6 மணிக்கே வாக்காளர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

    தர்மபுரியில் அதியமான் கோட்டை அரசு பள்ளிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் வாக்காளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் இன்று விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. கர்நாடக எல்லையில் உள்ள ஓசூர், தளி உள்ளிட்ட பகுதிகளில் தமிழ் மட்டும் அல்ல கன்னடத்திலும் வாக்குச் சீட்டு அச்சடிக்கப்பட்டு இருந்தது. காலை 9 மணி நிலவரப்படி 9 சதவீதம் ஓட்டு பதிவாகி இருந்தது.

    அரூர் மற்றும் பாப்பி ரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று இடைத் தேர்தல் நடந்தது. விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. #LokSabhaElections2019

    தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் மீண்டும் போட்டியிட்டால் வெற்றி பெற மாட்டார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். #KPAnbazhagan #AnbumaniRamadoss
    தருமபுரி:

    தருமபுரியில், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக அன்புமணி ராமதாசை தவறாக மக்கள் தேர்ந்தெடுத்து விட்டனர். ஒரு பொய்யை சொல்லிக் கொண்டே இருந்தால் அது உண்மையாகி விடும் என்று அவர் நினைக்கிறார்.

    கடந்த 2001-2006 வரை நான் அமைச்சராக இருந்தபோது தருமபுரி மாவட்டம் பின்தங்கிய மாவட்டமாக இருந்தது. அப்போது 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகளை கொண்டு வந்தவன் நான். எனது சொந்த பந்தம், கட்டிடம் கட்டுவதற்காக கல்லூரிகள் கொண்டுவரவில்லை.

    மாவட்ட மாணவர்களின் நலனுக்காகவே கல்லூரிகள் கொண்டுவரப்பட்டது. இதை அன்புமணி ராமதாஸ் கொச்சைப் படுத்தி பேசுகிறார். வரும் தேர்தலில் யாரை எதிர்த்தால் மக்கள் தன்னை திரும்பி பார்ப்பார்கள் என்று நினைத்து 4 ஆண்டு காலம் எந்த அக்கறையும் இல்லாமல் இருந்த அன்புமணி என்மீது குறை கூறுகிறார்.

    மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் நான் சென்றுள்ளேன். ஆனால் பல கிராமங்களுக்கு அன்புமணி நன்றி சொல்லக்கூட போகவில்லை. தொகுதி பக்கம் வராத நாடாளுமன்ற உறுப்பினர் எதை சொல்லுவது என்று தெரியாமல் உளறிக் கொண்டு இருக்கிறார்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், எனது குடும்பத்தினர் யாரையும் நிறுத்த மாட்டோம் என்றார். ஆனால் அவரது மகனையே எம்.பி.யாக்கி உள்ளார். உள்ளூரில் விலை போகாத அவர் தருமபுரியை நாடி வந்து இங்குள்ள மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார். அவர் நாயக்கன்கொட்டாய் சம்பவத்தை கையில் எடுத்துக்கொண்டதால் கடந்த எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்றார். வருகிற தேர்தலில் அவரை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. தருமபுரி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டாலும் அவரால் வெற்றி பெற முடியாது.

    தருமபுரி மாவட்டத்தில் 3 இடங்களில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. மொரப்பூர் ரெயில் பாதை திட்டத்திற்காக 17 முறை மத்திய அமைச்சரை சந்தித்தால் மட்டும் போதுமா? இவர் மக்களையே சந்திக்கவில்லை. இவருக்கு முன்பாக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தருமபுரி-மொரப்பூர் ரெயில் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கை தான் தற்போது முன்னேற்றம் அடைந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #KPAnbazhagan #AnbumaniRamadoss
    ×