search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Krishnagiri constituency"

    • பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளா் என்.நரசிம்மனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
    • வேட்பாளா் வி.என்.வேணுகோபாலுக்கு ஆதரவாக இரவு 7 மணி அளவில் சாலை வாகன பிரசார பேரணியில் கலந்து கொள்கிறார்.

    சென்னை:

    மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், தமிழகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பிரசாரம் செய்கிறார்.

    கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி வரும் அவா் அங்குள்ள புதிய பஸ் நிலையத்தில் நாளை காலை 10.30 மணி அளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளா் என்.நரசிம்மனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

    மீண்டும் ஹெலிகாப்டரில் பெங்களூர் செல்லும் அவா் பின்னா் அங்கிருந்து சென்னை விமான நிலையம் வரவுள்ளாா். கிண்டியில் உள்ள லீமெரிடியன் ஓட்டலில் மாலை 3 மணி அளவில் பல்வேறு சமுதாய தலைவா்களுடன் கலந்துரையாடுகிறார்.

    தொடா்ந்து, ஹெலிகாப்டரில் திருவண்ணாமலைக்குச் செல்லும் அவா் பா.ஜ.க. வேட்பாளா் அஸ்வத்தாமனுக்கு ஆதரவாக மாலை 4 மணி அளவில் சாலை வாகன பிரசார பேரணியில் ஈடுபடுகிறார்.

    மீண்டும் சென்னைக்கு ஹெலிகாப்டரில் வரும் அவா், தாம்பரத்தில் த.மா.கா. வேட்பாளா் வி.என்.வேணுகோபாலுக்கு ஆதரவாக இரவு 7 மணி அளவில் சாலை வாகன பிரசார பேரணியில் கலந்து கொள்கிறார்.

    • நாடு முழுவதும், 27 லட்சம் கோடி ரூபாய், 44 கோடி மக்களுக்கு சென்றடைந்தது.
    • நிறைய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட நிறைய மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. வேட்பாளர் நரசிம்மன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வருகை தந்தார்.

    அப்போது அவர் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

    கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் கொளுத்தும் வெயில் என்று பாராமலும், வேலை நாட்களிலும் இந்த பிரசார கூட்டத்திற்கு மக்கள் திரண்டுள்ளனர். இதனை கண்டு பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இன்றைக்கு இரண்டு, மூன்று கருத்துக்களை தெரிவிக்க விரும்புகிறனே். மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற கோஷம் ஒலித்து வருகின்றன.

    எதிர்கட்சியாக காங்கிரஸ் கட்சியினர், தி.மு.க.வினர் பாராளுமன்றத்தில் கிருஷ்ணகிரியை பற்றியோ, ஓசூரை பற்றியோ என்ன கேள்விகளை எழுப்பினர்கள் என்று பெரிய கேள்விகுறியாக உள்ளது.

    நிறைய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட நிறைய மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. இதில் பி.எம். முத்ரா யோஜன திட்டத்தின் மூலம் ஏழை எளியோருக்கு சிறு,குறு தொழில்கள் தொடங்க வங்கி மூலம், எந்த ஒரு ஆவணமின்றி குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டுள்ளது.


    நாடு முழுவதும், 27 லட்சம் கோடி ரூபாய், 44 கோடி மக்களுக்கு சென்றடைந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் 5 ஆயிரம் 427 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. 6.34 லட்சம் பேருக்கு கடன் கிடைத்துள்ளது. அதேபோன்று ஸ்டார் அப்திட்டம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 465 பேருக்கு ரூ.60 கோடி கிடைத்துள்ளது. இதில் குறிப்பாக பெண்கள், எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவினரும் பயன் அடைந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் 2.75 லட்சம் பேரின் வீட்டிற்கு குழாய் மூலம் நேரடியாக குடிநீர் மூலம் விநியோக செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 11 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் நேரிடையாக வழங்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கும் திட்டம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறத்தில் 18,600 பேருக்கு பிரதமர் மோடி வீடு கட்டி கொடுத்துள்ளார். அதேபோல் மாவட்டத்தில் நகர்ப்புறத்தில் 7460 பேருக்கு பிரதமர் மோடியின் பெயரில் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு மூலம் ஒரு ரூபாய் செலவில்லாமல், எந்தவொரு ஆவணம் காட்டாமல் கேஷ் லெஸ் என்ற முறையில் இலவச சிகிச்சை அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 64 ஆயிரம் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 2.35 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்றுள்ளனர்.

    கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய அரசு சார்பில் தொழில் வளர்ச்சி அடைந்து உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் துறையில் தி.மு.க.வினர் வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். போதை பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் முதலமைச்சர் குடும்பத்துடன் தொடர்பில் இருந்துள்ளார்.

    முன்னதாக அவர் டெல்லியில் இருந்து பெங்களூரு விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் மூலம் வந்தார். அங்கிருந்து கார் மூலம் ஓசூரில் உள்ள பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். கூட்டத்தில் பா.ஜ.க., பா.ம.க., மற்றும் கூட்டணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தை முடித்துவிட்டு அவர் காரில் அங்கிருந்து புறப்பட்டு பெங்களூருவுக்கு சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தஞ்சாவூருக்கு புறப்பட்டார்.

    பாராளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 6,02,051 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    கிருஷ்ணகிரி:

    தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

    நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.

    கிருஷ்ணகிரி தொகுதியில் 15,26,348, மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 11,56,311 வாக்குகள் பதிவானது.

    கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார் 6,02,051 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமி 4,49,344 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதுசூதனன் 27,512, அமமுக வேட்பாளர் கணேசகுமார் 8,686, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் காரூண்யா சுப்பிரமணியம் 16,791 வாக்குகள் பெற்றுள்ளனர்.

    கிருஷ்ணகிரி, தர்மபுரி எம்.பி. தொகுதியில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. #LokSabhaElections2019
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி, ஓசூர், போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர்.

    மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க சக்கர நாற்காலிகள் தயாராக இருந்தன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 1800 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானாலும் உடனடியாக சரிசெய்யப்பட்டு ஓட்டுப்பதிவு தொடங்கியது.

    சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லீம்கள் ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர்.

    தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 1787 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்தல் பணியில் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்களும், பாதுகாப்பு பணியில் 2606 போலீசாரும் ஈடுபட்டனர்.

    வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பெண்களும், ஆண்களும் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். மிக உயரமான வாக்குச்சாவடியாக பென்னாகரத்தை அடுத்த அலக்கட்டு, கோட்டூர்மலையில் அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு கழுதை மூலம் வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு செல்லப்பட்டு ஓட்டுப்பதிவு நடந்தது.

    பென்னாகரம் அடுத்த தாளக்குலம் வாக்குச்சாவடியில் காலை 6 மணிக்கே வாக்காளர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

    தர்மபுரியில் அதியமான் கோட்டை அரசு பள்ளிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் வாக்காளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் இன்று விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. கர்நாடக எல்லையில் உள்ள ஓசூர், தளி உள்ளிட்ட பகுதிகளில் தமிழ் மட்டும் அல்ல கன்னடத்திலும் வாக்குச் சீட்டு அச்சடிக்கப்பட்டு இருந்தது. காலை 9 மணி நிலவரப்படி 9 சதவீதம் ஓட்டு பதிவாகி இருந்தது.

    அரூர் மற்றும் பாப்பி ரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று இடைத் தேர்தல் நடந்தது. விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. #LokSabhaElections2019

    ×