என் மலர்
நீங்கள் தேடியது "audit report"
- என் மீது தனிப்பட்ட முறையில் பேரன்பு கொண்ட ரங்கராஜ் பாண்டே-க்கும் CBFC-க்கும் என்ன தொடர்பு.
- ஜிவி பிரகாஷ் நடிப்பில் அடங்காதே திரைப்படம் 8 ஆண்டுகளுக்கு பிறகு வெளியானது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ஜன நாயகன். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால், இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இதையடுத்து படத்திற்கு சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தது.
தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், 'ஜன நாயகன்' படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதேபோல பல படங்கள் தணிக்கை சான்றிதழ் காரணமாக் வெளியாவதில் கால தாமதம் ஆகிறது.
அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் அடங்காதே என்ற திரைப்படத்தை அறிமுக இயக்குநரான சண்முகம் முத்துசாமி இயக்கினார். இந்த படம் அதிரடி, காதல், அரசியல் சார்ந்த விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டுள்ளது. 2017-ம் ஆண்டு வெளியாக வேண்டிய இப்படம் சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்ட் 27, 2025-ல் வெளியானது.
இந்நிலையில் அடங்காதே திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கொடுக்காதது குறித்து அந்த படத்தின் இயக்குநர் சண்முகம் முத்துசாமி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில்,
என் மீது தனிப்பட்ட முறையில் பேரன்பு கொண்ட ரங்கராஜ் பாண்டே-க்கும் CBFC-க்கும் என்ன தொடர்பு என விவரம் அறிந்த பாஜக நண்பர்கள் சொல்ல முடியுமா…?
அடங்காதே திரைப்பட தணிக்கையில் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து சந்தேகம் எழுப்பியவர்களுக்கு பதில் தெரியுமா…?
திரைப்படங்களில் "ரங்கராஜன்" என்ற பெயரை பயன்படுத்த 2020 ஆண்டு முதல் மத்திய மாநில அரசுகள் தடை ஏதேனும் விதித்துள்ளதா… என அந்த பதிவில் கூறியிருந்தார்.
- திட்டத்தின் கீழ் தேர்ச்சி பெற்றவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.500 வரவு வைக்கப்படுகிறது.
- திறன் மேம்பாட்டுக் கழகத்திடம் இருந்து ரூ.12.16 கோடியை சம்பந்தப்பட்ட அமைச்சகம் திரும்ப பெற்றுள்ளது.
பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தில் 8 மாநிலங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சி.ஏ.ஜி. தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகத்தின்(சி.ஏ.ஜி.) தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:-
இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் பிரதமரின் கவுஷல் விகாஸ் யோஜனா என்கிற திட்டம் மாநிலங்களில் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தை தேசிய திறன் மேம்பாட்டுக்கழகம் மேற்பார்வை செய்து வருகிறது.
அசாம், பீகார், ஜார்கண்ட், மராட்டியம், கேரளா, ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 8 மாநிலங்களில் இந்த திட்டத்தில் நிதி முறைகேடு நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மோசமான நிதி மேலாண்மை, மாணவர் சேர்க்கையில் குளறுபடி நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தேர்ச்சி பெற்றவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.500 வரவு வைக்கப்படுகிறது.
95.90 லட்சம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் 90.66 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வங்கிக்கணக்குகளில் இந்த நிதி உதவி வரவு வைக்கப்படவில்லை. பலரின் வங்கி கணக்குகளில் 2 முறை மற்றும் அதற்கு மேலான தடவையும் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து திறன் மேம்பாட்டுக் கழகத்திடம் இருந்து ரூ.12.16 கோடியை சம்பந்தப்பட்ட அமைச்சகம் திரும்ப பெற்றுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒரு மாதம் நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- பட்டய கணக்காளர்கள், வரி ஆலோசகர்கள் அமைப்புகள் வலியுறுத்தி இருந்தன.
2025-26 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வரி தணிக்கை அறிக்கைகளை (TARs) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30 ஆக இருந்த காலக்கெடுவை அக்டோபர் 31, 2025 வரை ஒரு மாதம் நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பல்வேறு வட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு மற்றும் தொழில்நுட்ப கோளாறு ஆகியவற்றை காரணம் காட்டி அவகாசத்தை நீட்டிக்க பட்டய கணக்காளர்கள், வரி ஆலோசகர்கள் அமைப்புகள் வலியுறுத்தி இருந்தன.
மேலும் தணிக்கை அறிக்கை தாக்களுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க ராஜஸ்தான், கர்நாடக உயர் நீதிமன்றங்களும் உத்தரவிட்டிருந்தன. இதையடுத்து கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலூர்-திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 2015-2016-ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ரூ.100 கோடிக்கு முறைகேடு நடந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் 2003-2004-ம் கல்வி ஆண்டில் இருந்து கடந்த 13 ஆண்டுகளாக செலவு செய்யப்பட்ட ரூ.67.59 கோடிக்கான காரணங்கள் அறிக்கையில் தாக்கல் செய்யப்படவில்லை.
மேலும் 574 காரணங்களுக்காக செலவு செய்யப்பட்டுள்ள ரூ.36.62 கோடிக்கு சரியான கணக்குகள் இல்லை. ஆக மொத்தம் ரூ.100 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
உள்ளூர் நிதி தணிக்கை துறையின் மண்டல இணை இயக்குனர் ஸ்ரீனிவாசன் இதுகுறித்த அறிக்கையை பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் நிதி அதிகாரி (பொறுப்பு) வி.பருவழுதிக்கு கடந்த ஏப்ரல் 6-ந்தேதி அனுப்பினார்.
அதில் தேர்வு பணிக்காக பல்கலைக்கழக அதிகாரிகள் ரூ.31.42 கோடி முன்பணமாக எடுத்துள்ளனர். அதுதவிர மற்ற பணிக்காக ரூ.40.31 கோடி பணம் பெற்றுள்ளனர். அதற்காக ரூ.4.15 கோடி மற்றும் ரூ.71.74 கோடிக்கு ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் நிதிஅதிகாரி 2015-16-ம் ஆண்டில் ரூ.33.16 கோடி ஒதுக்கியுள்ளார். ஆசிரியர்கள் மற்றும் துறை தலைவர்கள் அவற்றை முன்பணமாக பெற்றுள் ளனர்.
ஆனால் ரூ.32.35 கோடி செலவு செய்ததற்கான ரசீதுகள் மற்றும் ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யவில்லை.
ஆசிரியர்கள் அல்லாத 22 பணியிடங்கள் மட்டுமே நிரப்ப பல்கலைக்கழகத்துக்கு அரசு அனுமதி அளித்தது. ஆனால் 35 இடங்கள் கூடுதலாக அதாவது 57 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதற்காக பணிநியமன கோப்பு மற்றும் நிறைவேற்றப்பட்ட சிண்டிகேட் தீர்மானம் போன்றவை தணிக்கையின் போது சமர்ப்பிக்கப்படவில்லை.
தணிக்கை அறிக்கையில் எழுப்பபட்ட மறுப்புகளுக்கு 2 மாதத்தில் பதில் அளிக்கும் படி தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பல் கலைக்கழகம் சார்பில் இதுவரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை.
உள்ளூர் தணிக்கை இன்ஸ்பெக்டர் கே.பிரேம்நாத் கடந்த ஆண்டு (2017) ஜூலை 10, ஜூலை 24 மற்றும் ஆகஸ்ட் 9 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு இதுகுறித்து எழுதினார். அவற்றுக்கு 3 நாட்களில் உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இதற்கும் பல்கலைக்கழகம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.#tamilnews






