என் மலர்
நீங்கள் தேடியது "திறன் மேம்பாட்டுப் பயிற்சி"
- திட்டத்தின் கீழ் தேர்ச்சி பெற்றவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.500 வரவு வைக்கப்படுகிறது.
- திறன் மேம்பாட்டுக் கழகத்திடம் இருந்து ரூ.12.16 கோடியை சம்பந்தப்பட்ட அமைச்சகம் திரும்ப பெற்றுள்ளது.
பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தில் 8 மாநிலங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சி.ஏ.ஜி. தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகத்தின்(சி.ஏ.ஜி.) தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:-
இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் பிரதமரின் கவுஷல் விகாஸ் யோஜனா என்கிற திட்டம் மாநிலங்களில் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தை தேசிய திறன் மேம்பாட்டுக்கழகம் மேற்பார்வை செய்து வருகிறது.
அசாம், பீகார், ஜார்கண்ட், மராட்டியம், கேரளா, ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 8 மாநிலங்களில் இந்த திட்டத்தில் நிதி முறைகேடு நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மோசமான நிதி மேலாண்மை, மாணவர் சேர்க்கையில் குளறுபடி நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தேர்ச்சி பெற்றவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.500 வரவு வைக்கப்படுகிறது.
95.90 லட்சம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் 90.66 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வங்கிக்கணக்குகளில் இந்த நிதி உதவி வரவு வைக்கப்படவில்லை. பலரின் வங்கி கணக்குகளில் 2 முறை மற்றும் அதற்கு மேலான தடவையும் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து திறன் மேம்பாட்டுக் கழகத்திடம் இருந்து ரூ.12.16 கோடியை சம்பந்தப்பட்ட அமைச்சகம் திரும்ப பெற்றுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தாளாளர், முன்னாள் எம்.பி. பெருமாள் தலைமை தாங்கினார்
- பெரியார் பல்கலைக் கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன் நினைவுப் பரிசு வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளி யில் செயல்படும் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெற்றது. கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் தாளாளர், முன்னாள் எம்.பி. பெருமாள் தலைமை தாங்கினார்.
கல்லூரி தலைவர், மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர் வள்ளி பெருமாள் முன்னிலை வகித்தார்.ஆரோக்ய பாரதி எனும் தன்னார்வ தொண்டு அமைப்பின் சார்பாக நடைபெற்ற இம்முகாமில், கல்லூரி முதல்வர், பெரியார் பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் எஸ் ஆறுமுகம் துவக்க உரை யாற்றினார்.
அவ்வமைப்பின் மாநில அமைப்பாளர் ராஜதுரை சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டார்.அவர் பேசும்போது, "கல்வி என்பது தனிமனித மேம் பாட்டுக்காக மட்டுமல்லா மல் நாட்டின் வளர்ச்சிக் காகவும் இருக்க வேண்டும்.திடமான சிந்தனைகள், தீவிரப் பயிற்சி, உயர்வான இலக்கு. இவைகளைக் கொண்டு முன்னேற பாடு படுங்கள் " என வாழ்த்தி னார்.
பெரியார் பல்கலைக் கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன் நினைவுப் பரிசு வழங்கினார். முகாமில் ஆரோக்ய பாரதி அமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் கெளதம், பேராசிரியர்கள் துறை தலைவர்கள், மாண வர்கள், நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.






